என் மலர்
நீங்கள் தேடியது "பணிச்சுமை"
- சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர்
- வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும்
ஆபீசில் வேலையின்போது அசதியில் தூங்கிய நபர் வேலையிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் அவருக்கு ரூ. 41.6 லட்சம் நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார்.
நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். வேலையின்போது தூங்கி கம்பெனியில் நெறிமுறைகளை அவர் மீறியதாக HR டிபார்ட்மென்ட் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அவருக்கு அனுப்பிய நோட்டீஸில், ஜாங், நீங்கள் 2004 இல் ஓபன் கான்டிராக்ட்டில் கையெழுத்துப்போட்டு நிறுவனத்தில் சேர்ந்தீர்கள்.
வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும். இதன் விளைவாக, தொழிற்சங்கத்தின் ஒப்புதலுடன், நிறுவனம் உங்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளது கூறப்பட்டிருந்ததது.
ஆனால் தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமற்ற செயல் என கூறி அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூ குய், ஜாங் வேலையிடத்தில் தூங்கியது நிறுவனத்திற்கு எந்த தீங்கு விளைவிக்கவில்லை, ஜாங்கின் அந்த நிறுவனத்துக்கு 20 வருடங்களாக உழைத்துள்ளார்.
அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே இது நியமற்றது என கூறிய நீதிபதி, ஜாங்கிற்கு 350,000 யுவான் [ரூ. 41.6 லட்சம்] இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.
- மீட்டிங்கள் அனைத்தும் நள்ளிரவு 2 மணிக்கு நடத்தப்படும் சூழ்நிலையே உள்ளது.
- ரூ. 30,000 க்கு அதிகமான விலையுள்ள செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது.
பிரபல மளிகை சாமான் மற்றும் காய்கறிகள் டெலிவரி நிறுவனமான ஜெப்டோ [Zepto] நிறுவனத்தின் சிஇஓ ஆதித் பாலிச்சா தனது நிறுவனத்தில் டாக்சிக் வொர்க் காலச்சாரம் இருப்பதை மறுத்துள்ளார். வேலை வாழ்க்கை சமநிலையை மறுக்கும் 84 மணிநேர வேலை நேர நடைமுறையை ஆதரித்து கிரப்ட்டைல் சிஇஓ தக்ஷ் குப்தாவின் பதிவை ஆதித் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த விவாதம் வெடித்துள்ளது.
ரெட்டிட் சமூக வலைதள பயனர் ஒருவர் தான் ஒரு வருடமாக வேலை செய்வதாகவும், அது "மிகவும் டாக்சிக் [ நச்சுத்] தன்மை வாய்த்த பணிச்சூழலை கொண்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். சிஇஓ ஆதித் மதியம் 2 மணிக்கு தான் தனது வேலைகளை தொடங்குகிறார்.

ஏனெனில் அவரால் காலையில் வேகமாக எழுந்திருக்க முடியவில்லை. இதனால் மீட்டிங்கள் அனைத்தும் நள்ளிரவு 2 மணிக்கு நடத்தப்படும் சூழ்நிலையே உள்ளது.மேலும் எந்த மீட்டிங்கும் சொன்ன நேரத்தில் நடப்பதில்லை. நேரம் மாற்றப்படுகிறது அல்லது தள்ளி வைக்கப்படுகிறது.
இதனால் ஊழியகர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஜெப்டோ இளைஞர்களை வேலைக்கு எடுக்க விரும்புகிறது, ஏனெனில் வயதானவர்கள் 14 மணி நேர் வேலையைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
ஜெப்டோ செயலியில் கஸ்டமர்களிடம் இருந்து பணம் பறிக்கும் பலவித மர்மமான செயல்முறைகள் உள்ளன. ரூ.30,000 க்கு அதிகமான விலையுள்ள செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது.

குறைந்த சம்பளத்தில் கிடைப்பதால் இளைஞர்களை வேலைக்கு எடுக்கின்றனர். மேலும் மார்ச் மாதத்தில் அதிக பணிநீக்கங்கள் [layoffs] நடக்கும் என்று அந்த முன்னாள் ஊழியர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சிஇஓ ஆதித், வேலை - வாழ்க்கை சமம்பாட்டுக்கு தான் எதிரானவன் இல்லை எனவும், மற்ற நிறுவங்களும் வேலை வாழ்க்கை சமநிலையை ஊழியர்களுக்கு வழங்கவேண்டும் என்றே தான் வலியுறுத்துவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அந்த வொர்க் லைப் பேலன்ஸ் பதிவு தன்னுடைய கருத்து இல்லை என்றும் கிரப்ட்டைல் சிஇஓ தக்ஷ் குப்தாவின் கருத்தையே தான் பதிவிட்டதாகவும் ஆதிக் தெரிவித்துள்ளார்.
- ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்
- இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள்
ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாகத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது.

நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஊழியர்களைக் கொத்தடிமைகளாக்க நாராயண மூர்த்தி வழி சொல்கிறார் என்று இணையவாசிகளும் ஐடி ஊழியர்களும் புலம்பித் தள்ளினர்.
இந்நிலையில் தனது 70 மணி நேர ஐடியாவுக்கு நாராயண மூர்த்தி விளக்கம் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவை முதல் இடத்திற்கு உயர்ந்த நமது இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள், அப்படியென்றால் 800 மில்லியன் பேர் இன்னும் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நமக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
- தனது தந்தைவழி உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.
- அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு இரவு 10 மணியளவில் 4 விரல்களையும் துண்டித்தேன்.
குஜராத்தின் சூரத்தில் 32 வயது நபர் ஒருவர் வேலை தொடர்பான மன அழுத்தத்தின் காரணமாக தனது இடது கையில் நான்கு விரல்களை துண்டித்துக்கொண்டதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
குஜராத்தில் வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக 32 வயது நபர் ஒருவர் தனது இடது கையில் உள்ள 4 விரல்களையும் வெட்டிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா [Mayur Tarapara]. தனது தந்தைவழி உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக இவர் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவரது இடதுகையின் விரல்கள் வெட்டப்பட்டது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நண்பர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் மயங்கி விழுந்ததிலிருந்து தனது விரல்களைக் காணவில்லை என்று மயூர் போலீசிடம் கூறியுள்ளார்.
சூனியம் செய்யும் நோக்கத்தில் விரல்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. ஆனால் போலீஸ் விசாரணையில் இவரின் வாகனம், தொலைப்பேசி, பணம் உள்ளிட்ட உடைமைகள் திருடப்படாமல் விரல்கள் மட்டும் வெட்டப்பட்டது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே மேலதிக விசாரணையில் மயூர் நடந்ததை ஒப்புக்கொண்டார்.
கடந்த வாரம் சிங்கன்பூரில் உள்ள சார் ரஸ்தா அருகே உள்ள கடையில் கூர்மையான கத்தியை வாங்கினேன். நான்கு நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு இரவு 10 மணியளவில் 4 விரல்களையும் துண்டித்தேன்.

ரத்தம் கசிவதை தடுக்க முழங்கையின் அருகே கயிறை இறுக்கமாகக் காட்டினேன், பின்னர் கத்தியையும் விரல்களையும் பையில் போட்டு தூக்கி எறிந்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தனது முதலாளி தனது தந்தையின் உறவினர் என்பதால் எனது குடும்பக் கடமைகள் காரணமாக வேலையில் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தேன்.

அங்கு வேலை செய்ய எனக்கு விரும்பவில்லை, அதை யாரிடமும் சொல்லும் தைரியம் தனக்கு இல்லை, எனவே விரலை வெட்டிக்கொண்டால் கணினியில் வேலை செய்ய முடியாது என்பதால் அவ்வாறு செய்தேன் என்று அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். மயூருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது.
- 8 மணி நேரம் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார்
- இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.
ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரபல முன்னணி சர்ச்சை தொழிலதிபர் கௌதம் அதானி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உங்கள் வேலை வாழ்க்கை சமநிலையை என்மீது திணிக்கக்கூடாது, எனது வேலை வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன்.
ஒருவர் தனது குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார், மற்றொருவர் 8 மணி நேரம் அவர்களுடன் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார். அது அவர்களின் சமநிலை. உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது நடக்காமல் இருக்கப்போவதில்லை.

மேலும் உங்கள் குழந்தைகளும், உங்களுக்கு குடும்ப மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகம் இல்லை என்று அறிந்து அதையே பின்பற்றும்.

உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகம் பிடித்திருக்கும். இதை தாண்டி ஒரு உலகம் நமக்கு இல்லை. யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.
- ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்
- பயணத்தையும் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.
பணி நேரம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்து L&T நிறுவன தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் பேசிய வீடியோ ஒன்று புயலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவர், "ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்" என்று கூறினார்.

ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, "இந்தியர்கள் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்," என்று கூறியது பேசு பொருளானது. இந்த வரிசையில், தற்போது L&T தலைவர் 90 மணி நேரம் பணியாற்றுவது குறித்து தெரிவித்த கருத்துக்கு பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா கருத்து தெரிவித்துள்ளார். "சாய்ஸ், கடின உழைப்பு மற்றும் மகிழ்ச்சி" என்ற தலைப்பில் எக்ஸ் இல் ஒரு நீண்ட பதிவில், ராதிகா குப்தா தனது பயணத்தையும் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதில், இப்போது வேலை நேரம் பற்றி பேசலாம். எனது முதல் வேலையின் போது எனது தொடர்ந்து நான்கு மாதங்கள் வாரத்திற்கு 100 மணிநேரம் வேலை செய்தேன்.
ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்தேன். ஒரு நாள் மட்டுமே விடுமுறை (ஞாயிறு அல்ல - ஞாயிற்றுக்கிழமை கிளையன்ட் தளத்தில் இருக்க வேண்டியதால் திங்கள்கிழமை விடுமுறை கிடைத்தது). 90% நேரம், நான் பரிதாபகரமாக இருந்தேன். நான் அலுவலக கழிவறைக்குச் சென்று அழுதேன். இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடின உழைப்பு மற்றும் அதன் பலன் என்பது எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதில் இல்லை என்று தெரிவித்தார்.