என் மலர்
நீங்கள் தேடியது "கோமியம்"
- கோவில்களில் ஹோமம் வளர்க்கும் போது பசு கோமியம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது.
- பசு மோமியத்தில் நல்ல பாக்டீரியா மற்றும் நல்ல பூஞ்சைகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பசு மாட்டின் கோமியம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் துணை மருந்தாகவும், அரு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பஞ்சகவ்யம் என சொல்லப்படும் மருந்தில் பிரதானமாக பசு கோமியம், தயிர், வெண்ணெய் ஆகிய மூலப்பொருட்கள் இடம்பெறுகின்றன. மேலும் பதப்படுத்தப்பட்ட கோமியமும் தனியாக மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
அதேபோன்று கோவில்களில் ஹோமம் வளர்க்கும் போது பசு கோமியம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. அதில் நல்ல பாக்டீரியா மற்றும் நல்ல பூஞ்சைகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பண்டைக் காலத்தில் பசுக்களின் கோமியத்தை பதப்படுத்தாமல் மக்கள் நேரடியாக குடித்தனர். ஆனால் இப்போது அந்த முறை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் உயர்ந்த விலங்கு ஆராய்ச்சி அமைப்பான இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐவிஆர்ஐ) போஜ் ராஜ் சிங் தலைமையில் ஒரு ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதில், பசு கோமியம் மனிதர்களுக்கு தகுதியற்றது. சில பாக்டீரியாக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஆரோக்கியமான பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு பசுக்களை விட மிக உயர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். பசு, எருமைகள் மற்றும் மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளின் பகுப்பாய்வில், எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை பசுக்களை விட மிக உயர்ந்தது என்று கூறுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.காமராஜ் கூறும்போது, ஆரோக்கியமான பசுக்களின் கோமியத்தை நேரடியாக அருந்துவதால் எந்த பக்க விளைவும் ஏற்படுவதில்லை. மனம் ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு வாந்தி மட்டுமே வரும். வேறு எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஒருவரால் 15 மில்லி அல்லது 30 மில்லி அளவுக்கு மட்டுமே நேரடியாக கோமியத்தை அருந்த முடியும் என்றனர்.
ஆயுர்வேத மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்றளவும் கிராமப் புறங்களில் வீட்டு முற்றத்தில் சாணம் தெளிப்பதும், கோமியம் கலந்த சாணம் கொண்டு வீட்டை மொழுகவும் செய்கிறார்கள்.
கிருமிகளை கொல்லும் பாக்டீரியாக்கள் இதில் இருக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சுத்திகரிப்பு செய்த பசு மாட்டின் கோமியத்தை தினமும் அருந்தி வந்ததாக அவரே தெரிவித்துள்ளார். 99 வயது வரை அவர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறான ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றார்.
- பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியம் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார்.
- காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார்.
ராஜாஸ்தானில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு பாஜக எம்எல்ஏ கோமியம் [மாட்டின் சிறுநீர்] தெளித்து அதை குடிக்க வைத்து நடத்திய [சுத்தப்படுத்தும்] சடங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டால் காங்கிரசை சேர்ந்த ஜெய்ப்பூர் முனிசிபல் கவுன்சிலர் பதவி விலகிய நிலையில் அந்த பதவிக்கு பாஜகவை சேர்ந்த குசும் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மேயராக பதவியேற்றுக்கொள்ளும் விழா சமீபத்தில் நடந்துள்ளது.
இந்த அரசு விழாவுக்கு தலைமை தாங்கிய பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியத்தையும் கங்கை நீரையும் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார். அந்த சடங்கில், சமீபத்தில் பாஜக பக்கம் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து அதை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார். இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில் அங்கு நடந்த ஊழலை சுத்தப்படுத்தவே இந்த சடங்கை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்.
- பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரி பண்டிகையின் போது கர்பா நடன கொண்டாட்டத்தில் அனுமதிக்கும் முன் இந்துக்களுக்கு கோமியம் கொடுக்க வேண்டும் என்று அமைப்பாளர்களை வலியுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோமியம் குடிக்க செய்யும் முறை "ஆச்மான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை அறிவித்த பாஜக மாவட்டத் தலைவர் சிந்து வர்மா செய்தியாளர்களிடம் பேசும் போது, "சனாதன கலாச்சாரத்தில் ஆச்மன் நடைமுறைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. இதனால் அமைப்பாளர்களிடம் கர்பா பந்தல் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கும் முன் பக்தர்களுக்கு கோமியம் கொடுக்க அமைப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
மேலும், "ஆதார் கார்டை எடிட் செய்யலாம். எனினும், ஒருவர் இந்து என்றால், அவர் கர்பா நடன பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள். உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பசுக் காப்பகங்களின் அவலநிலை குறித்து பாஜக தலைவர்கள் மௌனம் சாதிப்பதாகவும், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்.
"கோமியம் ஆச்சர்ய கோரிக்கையை எழுப்புவதன் மூலம் பா.ஜ.க. பிளவுப்படுத்தும் அரசியல் செய்வதற்கு புதிய தந்திரமாக கையில் எடுத்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க. தலைவர்கள் பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு கோமியத்தை உறிஞ்சி சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருக்கிறது.
- பசுமாட்டின் கழிவுகள் தான் கோமியமாக வெளியேறுகிறது.
இந்தியாவில் ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களும் பெருகி வருகின்றன.
குறிப்பாக மாட்டு கோமியம் குடித்தால் உடல்நலனுக்கு நல்லது என்றும் பல நோய்களை மாட்டு கோமியம் குணப்படுத்தும் என்று அறிவியலுக்கு புறம்பான செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில், 'கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும்' என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
உடலின் கழிவுகள் தான் சிறுநீராக வெளியேறுகிறது. அவ்வகையில் பசுமாட்டின் கழிவுகள் தான் கோமியமாக வெளியேறுகிறது. கோமியம் குடித்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
- நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
- தான் பேசியது அறிவியல்படி தவறு என்று காமகோடி பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார்.
அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு, மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய. நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது.
மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் பேசிய அவர் கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகிடும் என்றார்.
- பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் கோ பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகிடும் என்றார்.
மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அறிவியலுக்கு புறம்பாக பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமக்கோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஐ.ஐ.டி. இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநரே போலி அறிவியலை பரப்புவது பொருத்தமற்றது," என்று குறிப்பிட்டுள்ளார்.
கோ பூஜை நிகழ்வில் பேசிய ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது."
"கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
- கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி இயக்குநர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, "முதலில் கோமியத்தை அவர் குடிக்கட்டும், அவர் குடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஐ.ஐ.டி போன்ற நிறுவனத்தின் இயக்குனர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது.
மாட்டு மூத்திரம் உடலுக்கு கேடு என அறிவியல் ரீதியாக சொல்லப்படும் இந்த காலத்தில், அறிவியல் ரீதியான நிறுவனத்தின் இயக்குனரே இப்படி சொல்லியிருப்பதற்கான காரணம் புரியவில்லை.
மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐஐடி இயக்குநர் ஆளுநர் போல மாறிவிட்டார் என தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் இந்தக் கருத்துக்கள் வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அதுவும் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிற தமிழக மக்கள், அறிவியல் ரீதியாக சிந்திக்க கூடியவர்கள், பகுத்தறிவு மிகுந்தவர்கள், ஐஐடி இயக்குனர் கூறி விட்டார் என்பதற்காக அதை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது தான் நடைமுறை உண்மை" என்று தெரிவித்தார்.
- அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
- கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு நேர்மறையான விளைவாக இந்த விவாதத்தை பார்க்கிறேன்
கோமியம் சர்ச்சை:
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது அரசியல் ரீதியாகவும், அறிவியல் வல்லுனர்களிடையேயும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

காமகோடி விளக்கம்:
இந்நிலையில் தனது கருத்து அறிவியல் ரீதியானதுதான் என்றும் அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் காமகோடி தெரிவித்துள்ளார்.
கோமியம் விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அரசியல் சர்ச்சை குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த காமகோடி சிரித்துக் கொண்டே கையை அசைத்து, "நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. இது முற்றிலும் அறிவியல் பூர்வமானது. சில பண்டிகைகளின் போது நானும் பஞ்சகவ்யத்தை சாப்பிட்டுள்ளேன்.
பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புவேன்"
கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு நேர்மறையான விளைவாக இந்த விவாதத்தை பார்க்கிறேன் என்று கூறினார்.
மேலும் ஐஐடி மெட்ராஸ் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த காமகோடி, "ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தால், இதை ஐஐடியில் ஆய்வு செய்யலாம். எங்களிடம் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத் துறை உள்ளது. ஆனால், ஆனால் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?
இதற்கிடையே காமகோடி கருத்துக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்கள் கோமியத்தை குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வு முடிவுகள் காமகோடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கோமியம் ஆபத்தானது என்ற ஆராய்ச்சி குறித்து தெரியாது என காமகோடி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர்.
- ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்.
சென்னை:
மாட்டு கோமியம் குடிப்பது நல்லது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. பலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
* கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள்.
* மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர். மாட்டின் கோமியம் மருந்து என்றால் எதிர்க்கிறார்கள்.
* விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசினார்.
- ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.
மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக, "ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது" என்று மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கோமியம் சர்ச்சை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம். மாட்டு பால் குடிக்கிறவன் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் உயர்ந்த சாதி. இது தான் இந்த நாட்டின் கட்டமைப்பு. உலகத்திலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கபடுகிறது" என்று தெரிவித்தார்.
- கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என்று தமிழிசை கூறினார்
- ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.
மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள். மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர். மாட்டின் கோமியம் மருந்து என்றால் எதிர்க்கிறார்கள். ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது. விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து புத்தக விழாவில் பேசிய தமிழிசை, "மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட மருந்தாக மாட்டு சிறுநீரை குடிக்க வேண்டும் என்று கூறியவுடன் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிகிறார்கள். சங்க இலக்கியத்தில் கூட மாட்டுச்சாணம் பூசப்பட்ட முற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். மார்கழி மாதத்தில் மாட்டுச்சாணியில் தான் பூசணிபூவை வைத்து அலங்கரிக்கிறோம்.
ஆக மாட்டுச்சாணத்தை நீங்கள் பூசும்போது.. மாட்டின் சிறுநீருக்கு அமிர்த நீர் என்று பெயர். அப்படி என்றால் உயிருக்கான நீர் என்று பொருள். நான் ஒரு அலோபதி டாக்டர். ஒரு அலோபதி டாக்டர் கோமியத்தை பற்றி பேசுகிறேன் என்றால்.. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றால் நான் பேசியிருக்க மாட்டேன்.
வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்தால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. விஞ்ஞானபூர்வமாக மாட்டின் சிறுநீர், அமிர்தநீர் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது. இதை சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.
- மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? என தமிழிசை கேள்வி
மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய காமகோடி, "பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை , "மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட மருந்தாக மாட்டு சிறுநீரை குடிக்க வேண்டும் என்று கூறியவுடன் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிகிறார்கள்.
மாட்டின் சிறுநீருக்கு அமிர்த நீர் என்று பெயர். அப்படி என்றால் உயிருக்கான நீர் என்று பொருள். நான் ஒரு அலோபதி டாக்டர். ஒரு அல்லோபதி டாக்டர் கோமியத்தை பற்றி பேசுகிறேன் என்றால், விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றால் நான் பேசியிருக்க மாட்டேன்.
ஆயுர்வேதத்தில் மாட்டின் சிறுநீரை 'அமிர்தநீர்' என்று சொல்கிறார்கள். இதை சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கோமியம் குறித்து டாக்டர் தமிழிசை பேசியதை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.
இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.