search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்பானங்கள்"

    • சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள். அதே போல், இன்றைய காலத்தில் நம் வாழ்வோடு குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன என்றே கூறலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை.

    ஒருமுறை சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். ஆனால், இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்.

    சாப்பிட்டது செரிமாணம் ஆவதற்கு பலரும் குளிர்பானங்களை அருந்துவார்கள். சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், குளிர்பானங்களை அருந்தாமல் இருப்பது உடலுக்கு பல வழிகளில் நல்லது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

    குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் (பல் பற்சிப்பியை சேதப்படுத்துகிறது), அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (குழிவுகளை உண்டாக்குகிறது) மற்றும் அசெசல்பேம் பொட்டாசியம் (புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது) உள்ளது என்று வோக்கார்ட் மருத்துவமனையின் டாக்டர் அனிகேத் முல் கூறினார்.

    • பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    வாழப்பாடி:

    கோடைக்காலம் தொடங்கினாலே சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான மக்கள் புட்டியில் அடைத்து விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களை வாங்கி பருகுவதை விட, இயற்கை பழச்சாறு அருந்துவதையே விரும்புகின்றனர்.

    இதனால் கோடை காலத்தில் பழச்சாறு தயாரித்து அருந்துவதற்கேற்ற தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழங்களுக்கு இப்பகுதி மக்களிடையே ஆண்டுதோறும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    எனவே, திருவண்ணாமலை பகுதியில் அதிகளவில் விளைந்துள்ள முலாம் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வாழப்பாடி பகுதி கிராமங்களுக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து 4 கிலோ விலை ரூ.100 என விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த முலாம் பழங்களை மக்கள் விரும்பி வாங்கி பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாழப்பாடி பகுதி கிராமங்களில் முலாம் பழங்கள் அமோகமாக விற்பனையாவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு முலாம் பழம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
    • இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பா னங்கள் மற்றும் பழச்சாறு களை அருந்துகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகள் பரவலாக அதி கரித்துள்ளது. இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

    சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். குளிர்பா னங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொரு ட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக பயன்படுத் தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி நாளை உறுதிப்படுத்திட வேண்டும்.

    பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது. பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். எந்தவிதமான செயற்கை வண்ணங்களையும் இனிப்பு சுவை கூட்ட எவ்வித மான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது. பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை உணவு பாது காப்பு உரிமம் பெற்று பாது காப்பான நீரில் தயாரிக்கப் பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும்.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைக்களில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைக்களில் மட்டுமே வழங்க வேண்டும். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும்போது வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களின் வாய்ப்புறம் சீலிட்டு மூடி யிருத்தல், காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். இத்த கைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொது மக்களுக்கு தரமான, பாது காப்பான குளிர்பானங்கள், பழச்சாறுகளை வழங்க கடலூர் மாவட்ட நிர்வாகம் உணவு வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொது மக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு 04142-221081 அல்லது 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்க லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×