என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராய வழக்கு"

    • தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார் என்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் பாலு (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மாலை மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பக்கத்து நிலத்துக்காரர் பாலுவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பாலுவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இத்தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்செ ன்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார். எனவே, அது தொடர்பான வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர்.

    இதையடுத்து போலீசார், வருவாயத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வருவாய்த் துறையினர் முன்னிலையில் பாலுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எவ்வாறு இறந்தார் என்று தெரிய வரும் என்பதால், சந்தேக மரண வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர், கடந்த 18, 19-ந் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவம னையில், 229 பேர் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால், நேற்று இரவு வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி மருத்துவமணையில் 40 பேர், சேலம் 11 பேர், விழுப்புரத்தில் 2 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சியில் 48 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 9 போர், விழுப்புரத்தில் 2 பேர், சேலத்தில் 19 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்த, 77 பேரை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    மதுரை:

    முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளது., பெருந்தலைவர் காமராஜர் சிலையை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் ரூ.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்.?

    சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்போது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்.?

    பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் இரு பெரும் ஆட்சியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான். அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம்.! ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.? குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர்.

    சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர் இதில் அ.தி.மு.க.வினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் 2-வது இடம் பெற்றோம். இது தொடர்பாக சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் ஆலோசனை தான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், இப்போது தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.! மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மோடிக்கு வாக்களித்தனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ரூ.. 8000 கோடிக்கு மேல் நிதியை வழங்கினோம். ஆனால் மதுரை மக்கள் ஏன் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடவில்லை என தான் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கேட்டார்.

    நாங்க என்ன காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா? நாங்களும் கூவி கூவித்தான் ஓட்டுக் கேட்டோம். வேகாத வெயிலில் சரவணனுக்காக ஓட்டு கேட்டோம், கழகத்தினர் பம்பரமாக வேலை பார்த்தார்கள். இதற்கு மேல் எப்படி வேலை பார்க்க முடியும்?

    குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்ற அடிப்படையில் மோடிக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். சிறுபான்மையினர் ராகுலை விரும்பினார்கள். இதற்கு இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்.

    மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தான் வாக்கு குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் இன்னும் எங்களை நம்பவில்லை"

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில் தான் ஏற்படும்., கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகின்றன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நாளை(நவ. 20) விசாரணைக்கு வருகின்றன. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழங்கியது

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.

    அதன்படி, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழங்கியது. அதில், கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். 

    • காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.
    • கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.

    மேலும் நீதிபதிகள் அளித்த உத்தரவு தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். தமிழக காவல்துறையின் தலையீடு இருக்கக்கூடாது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கவும் இவ்வழக்கில் தமிழக காவல்துறையினர் எவரும் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மூடிமறைக்க முயன்ற தமிழக அரசின் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். 

    • கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.
    • 2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். சில கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கோரியதை அரசியலாகத்தான் பார்க்க முடியும். கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை.

    2026-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை பிடிப்பதற்காக இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். முதலமைச்சரை பொருத்தமட்டில் மது விலக்கு வேண்டும் என்று கூறுகிறோம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூட்டணி கட்சிக்கு வருபவர்கள் சீட்டுகளையும் கேட்கிறார்கள், பணத்தையும் கேட்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்.

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

    உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு அளித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அதிமுக.

    நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, அஇஅதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் விடியா திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது!

    சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.
    • இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். எனவே தமிழக காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர்.
    • வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மு.க.ஸ்டாலினி-ன் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

    கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது.

    சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம்?

    கள்ளச்சாராய மரணங்களுக்கு திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்?

    உச்சநீதிமன்றத்தில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அதிமுக தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
    • தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது.

    இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்தும், ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் விஷ சாராய வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய காலதாமதம் ஆகும் என்றும், தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி வழக்கில் தமிழக காவல்துறை விசாரணையை முடித்துவிட்டது. சென்னை ஐகோர்ட் முடிவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை. சி.பி.ஐ. விசாரணையை நடத்தலாம் என தெரிவித்தனர்.

    • விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • வழக்கு விசாரணை ஜனவரி 6-ந்தேதி ஒத்திவைப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    தங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் அனைத்து வழக்குகளிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அப்போது எதன் அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர் இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதன் காரணமாக இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக பதில் அளித்தார்.

    இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது என்றால் மதுவிலக்கு போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனையடுத்து இந்த அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

    ×