என் மலர்
நீங்கள் தேடியது "சைபர் மோசடி"
- சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
- சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.50 கோடியை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82) மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா (79) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசாரை கண்டுபிடித்தனர்.
அக்கடிதத்தில் "இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள்ள யாரும் தேவையில்லை. யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை, அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீசார், "சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் டியோக்ஜெரோனை தொடர்பு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவரது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார்.
- சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றார்.
தென் மேற்கு டெல்லியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் சவிதா சர்மா. இவர் வங்கியில் மூத்த நிர்வாகியா பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று சவிதா பேஸ்புக் பக்கம் மூலம் ஒரு தாலி (உணவுத் தட்டு) வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையால் ஈர்க்கப்பட்டார். இந்த சலுகை பற்றி அறிந்துக் கொள்வதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்புக் கொண்டார்.
ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை. என்றாலும் சில மணி நேரத்திற்கு பிறகு சவிதாவிற்கு அழைப்பு வந்துள்ளது. சாகர் ரத்னா என்கிற பிரபல உணவகத்தில் இருந்து இலவச உணவுத் தட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த சலுகையை பெற லிங்க் உள்ளே நுழைந்து பதிவு செய்யவும் கூறியுள்ளனர்.

அதன்படி சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார். செல்போன் ஹேக் செய்யப்பட்டு அவரது கணக்கில் இருந்து முதலில் ரூ.40 ஆயிரமும், இன்னும் சில வினாடிகளில் மீண்டும் ரூ.50 ஆயிரம் எடுத்ததாக குறுச்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது கிரெடிட் கார்டு பயன்பாட்டை புகார் மூலம் ரத்து செய்துள்ளார்.
இதையடுத்து மே 2ம் தேதி அன்று, சவிதா சர்மா இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடி சலுகைகளின் வலை இணைப்புகள் வாட்ஸ்அப் மூலம் இன்னும் மக்களிடையே பரவி வருவதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றும் சர்மா கூறியுள்ளார்.
- அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்.
- தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது.
புதுடெல்லி :
மத்திய தொலைதொடர்பு மந்திரி அஷ்விணி வைஷ்ணவ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் செல்போனுக்கு வருகிற 'ஸ்பாம்' அழைப்பு (திரளானோருக்கு வணிக நோக்கில் விடுக்கிற அழைப்பு) 'சைபர்' மோசடி (இணையதள குற்றம்) தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது. தங்களுக்கு தெரிந்த, அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்" என கூறினார்.
மேலும் அவர், 'ஸ்பாம்' அழைப்புகள், 'சைபர்' மோசடிகள் போன்றவற்றைத் தடுப்பதற்காக தனது அமைச்சகம் 'சஞ்சார் சாதி' என்ற தளத்தை தொடங்கி இருப்பதாகவும், 40 லட்சத்துக்கும் மேலான தவறான 'சிம்' கார்டுகளும், 41 ஆயிரம் தவறான விற்பனை மைய ஏஜெண்டுகளும் கருப்பு பட்டியலிட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- அதை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல்.
- லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம்
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி வேலை இருப்பதாக கூறி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர் என்று சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, லாவோஸின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐடி நிறுவன போர்வையில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் பின்னணியில் இதுபோன்று இந்தியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டேட்டிங் செயலிகளில் பெண்களை போன்று புரொபைல் உருவாக்கி இந்தியாவில் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து அவர்களை கிரிப்டோ மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு இட்டுச் செல்வதே இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் வேலை.

அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல். இதுதொடர்பாக இந்தியத் தூதரகத்துக்குச் சிலர் தகவல் அளித்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 17 பேரை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
- டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் வானொலியில் உரை யாற்றி வருகிறார். இன்று 115-வது நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியா சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. இன்று மன் கி பாத்தில், தைரியமும் . தொலைநோக்கு பார்வையும் கொண்ட 2 பெரிய ஹீரோக்கள் பற்றி நான் விவாதிக்கிறேன். அவர்களின் 150-வது பிறந்தநாளை கொண்டாட நாடு முடிவு செய்துள்ளது.
சர்தார் படேலின் 150-வது பிறந்தநாள் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் நவம் பர் 15 முதல் தொடங்குகிறது. இந்த 2 பெரிய மனிதர்களுக்கும் வெவ்வேறு சவால்கள் இருந்தன, ஆனால் நாட்டின் ஒற்றுமை'தான் அவர்களின் பார்வையாக ஒரே மாதிரியாக இருந்தது.
இந்த பண்டிகை காலத்தில், ஆத்மநிர்பர் பாரதத்தின் இந்த பிரச்சாரத்தை நாம் அனைவரும் வலுப்படுத்துவோம். இந்தியாவை நாம் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவது மட்டுமின்றி, புதுமைகளின் உலகளாவிய சக்தியாக நம் நாட்டை நிலைநிறுத்த வேண்டும்.
இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அசல் இந்திய உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன. அனிமேஷன் துறை இன்று மற்ற தொழில்களுக்கு பலம் கொடுக்கும் ஒரு தொழிலாக உருவாகியுள்ளது.
உலக அனிமேஷன் தினம் அக்டோ பர் 28 அன்று (நாளை) கொண்டாடப்படும். உலக ளாவிய அனிமேஷன் அதிகார மையமாக இந்தியாவை மாற்ற நாம் உறுதி அளிக்க வேண்டும்.
தன்னம்பிக்கை என்பது நமது கொள்கையாக மட்டும் மாறவில்லை. அதுவே நமது ஆர்வமாகவும் மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சில சிக்கலான தொழில்நுட்பங்கள் உருவாகின்றன என்று யாராவது சொன்னால் பலர் அதை நம்பமாட்டார்கள். பலர் அதை கிண்டல் செய்வார்கள்.
ஆனால் இன்று அதே மக்கள் நாட்டின் வெற்றியைக் கண்டு வியக்கிறார்கள். தன்னிறைவு பெற்ற இந்தியா, அனைத்து துறைக ளிலும் அதிசயங்களைச் செய்து வருகிறது.
ஒரு காலத்தில் செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை அதிகம் வாங்கும் நாடாக இருந்த இந்தியா இன்று 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
விண்வெளி தொழில்நுட்பத்தில், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.
சைபர் மோசடி விவகாரத்தை சமாளிக்க மாநிலங்களுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. இதுபோன்ற குற்றத்தை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
- ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டனர்
- தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கை வெளியிடப்பட்டது
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.
மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவை சைபர் எதிரியாகவும் கனடா அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையில், தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது. இந்த அறிக்கையானது கனேடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.
- தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார்
- மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறினார்.
இந்தியா முழுமைக்கும் செல்போன் போலி அழைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் கவனமாக இருக்க எவ்வாறு அறிவுறுத்தினாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்வதையே வேலைவாய்ப்பாகச் சிலர் கருதி முழு நேரமும் அதில் ஈடுபட்டு வருகின்றனர். நான் போலீஸ் அதிகாரி பேசுகிறேன், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் கொடுத்தால் உங்களை இந்த சிக்கலில் இருந்து காப்பற்றுகிறேன் என்று கூறியும் மோசடிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் வழக்கம்போல போலீஸ் உடை அணிந்து வீடியோ கால் மூலம் மோசடி செய்யலாம் என்று நினைத்த நபர் தவறுதலாக மோசடிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் செல் அலுவலகத்துக்கே வீடியோ கால் போட்டுள்ளார். திருச்சூர் கேரள சைபர் செல் அதிகாரி ஒருவருக்கு வீடியோ கால் வந்துள்ளது.
அதை அவர் தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார். எதிர் பக்கம் இருந்த போலீஸ் உடையணிந்த மோசடி காரர் வழக்கம்போல பேசியுள்ளார். தனது கேமரா வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார், ஆனால் மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறியதால் சைபர் போலீஸ் தனது கேமராவை ஆன் செய்தார்.
அதன் பின்னரே தான் வசமாக சிக்கியதை மோசடிக்காரர் உணர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சைபர் போலீஸ், இந்த வேலையை செய்யாதீர்கள், என்னிடம் உங்களின் முகவரி, நீங்கள் உள்ள இடம் என அனைத்தும் தெரியும், இது சைபர் செல், இந்த [மோசடி] வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்வதே உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார். அவர் பேசியது அனைத்தும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்ட நிலையில் அதை திருச்சூர் சைபர் போலீஸ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 1,77,000 வியூஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.
- துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது.
- போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்ததும் மோசடி செய்ய முயன்ற நபர் அழைப்பை துண்டித்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு நேற்று மதியம் ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,11,930 சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக உங்கள் மீது மும்பை காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் உங்களிடம் இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று கூறி அந்த நபர் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்து உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இத்தகைய சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை துணைக் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்.
- உங்கள் பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளோம்
- வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர்.
டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை குறிவைக்கின்றனர். அவர்களின் வலையில் விழுந்த பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் இந்த மோசடி கும்பலிடம் குஜராத்தை சேர்ந்த 90 வயது முதியவர் 1 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

முதியவரின் பெயரில் மும்பையில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதியவரின் வங்கி கணக்கு மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.
மேலும் முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக கூறி, 15 நாட்களுக்கு அவர் யாரையும் தொடர்பு கொள்ள விடாமல் செய்துள்ளனர். முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர். முதியவரின் குடும்பத்தினர் விஷயம் அறிந்து போலீசில் புகார் அழித்ததை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
46 டெபிட் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், 28 சிம் கார்டுகள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பலுடன் சேர்ந்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளது. இதுபோல பல்வேறு டிஜிட்டல் கைது மோசடி கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி வீடியோ காலில் ஆடைகளை கழற்ற கட்டப்படுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. மும்பையில் போரிவலி கிழக்கு பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வீடியோ காலில் தொடர்புகொண்ட மோசடி நபர்கள் தங்களை டெல்லி காவல்துறையினரைப் போல் காட்டிக்கொண்டு அந்த பெண் மீது பண மோசடி வழக்கு போடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர். மேலும் உடலை சோதனை செய்யவேண்டும் என்று கூறி வீடியோ காலிலேயே ஆடைகளை கழற்ற வற்புறுத்தியுள்ளனர். மோசடியை உணர்ந்த பெண் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
- வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக என்று தெரிவித்தார்.
டிஜிட்டல் கைது மோசடியால் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்சில் சேர்ந்த அரசு கெஸ்ட் ஆசிரியர் ரேஷ்மா பாண்டே [35 வயது] கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விஷம் அருந்தி உயிரிழந்தார்.
ஆசிரியை அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி இணைய மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் கைது செய்யபோவதாக அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ரஸ்னா தாக்கூர் தெரிவித்தார்.
மோசடிக்காரர்கள் அவரிடம் பணம் கேட்டனர். அவர் விஷத்தை உட்கொண்ட பிறகு, அவரது உறவினர்கள் அவரை ரேவாவில் உள்ள சஞ்சய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் மைத்துனர் வினோத் பாண்டே கூறுகையில், சைபர் மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 22,000 மற்றும் ரூ. 5,500 தொகையை ஆசிரியை பரிமாற்றம் செய்ததாகக் கூறினார். மேலும் பணத்தை செலுத்தாவிட்டால் டிஜிட்டல் கைது செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர், இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக தெரிவித்தார்.
சைபர் மோசடி, டிஜிட்டல் கைது மற்றும் பிற வகையான இணைய மோசடிகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியை தற்கொலை சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது
- அனைத்திந்திய கருத்தரித்தல் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி நடந்துள்ளது.
- ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தினர்.
அனைத்திந்திய கர்ப்பமாகும் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி செய்யும் கும்பலை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
பீகாரின் நவாடா மாவட்டத்தின் நர்டிகஞ்ச்சில் உள்ள கஹுவாரா கிராமத்துக்கு அருகே ஒரு கிடங்கில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் சைபர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் என மூன்று பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், குற்றவாளிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
திருமணமான குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கும் சேவை, 'ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.
இந்த கும்பல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளது. இதுவரை ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை போலீசார் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் கூறுகையில், மோசடி செய்பவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டனர். பேஸ்புக் விளம்பரங்களையும் வெளியிட்டனர்.
பான் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற பல ஆவணங்களையும், பதிவு என்ற பெயரில் நபரின் செல்ஃபியையும் கேட்பார்கள்.
குழந்தை பெற முடியாத பெண்களை வெற்றிகரமாக கருவூட்டுவதுதான் வேலை. அதில் வெற்றி பெற்றால் ரூ. 10 லட்சம், தவறினாலும் ரூ.50,000 தருவதாக பொய்யான உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.500 முதல் ரூ.20,000 வரை வசூலித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 ஸ்மார்ட்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிலுருந்து வாட்ஸ்அப் சாட்கள், ஏமாந்தவர்கள் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் தெரிவித்தது. கடந்த ஆண்டும் பீகாரில் இதே கான்சப்டில் செயல்பட்ட மற்றொரு சைபர் மோசடி கும்பல் சிக்கியது குறிப்பிடத்தக்கது.