search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக கூட்டணி"

    • சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உரை.
    • திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்.

    திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்.

    2024 தேர்தலில், ஒரு மாற்று சக்தியாக தமிழகத்தில் பாஜக நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது.

    திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது. தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும்.

    திமுக அரியணை உதயநிதி ஸ்டாலினுக்கு போகும்போது கவலரம் வெடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ரஜினிகாந்த் அவரது பாணியில் முதலமைச்சரிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

    மேலும், எனக்கு பாடம் எடுக்க நீங்கள் வர வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தவழ்ந்து காலில் விழுந்து முதலமைச்சரானவர் ஈபிஎஸ்.

    பிரதமர் மோடியை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்துக் கொள்ள ஆசைப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.
    • இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல்.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்ததை அடுத்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்தினார்.

    அதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தின்போது, 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் தோல்விக்கு கூட்டணி பலம் இல்லாததே காரணம் என நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கட்சியில் தற்போதைய நிலையே தொடரட்டும், புதிதாக யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியபோது எடப்பாடி பழனிசாமி அமைதியாக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும், எங்கெல்லாம் பிரச்சினை உள்ளதோ, அவைகளை சரி செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு, ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

    இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், இன்றைய கூட்டத்தில் பிரிந்த சென்ற தலைவர்களை இணைப்பது குறித்து பேசப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
    • இளைஞர் மிஹிர் ஷாம் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன்

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு  ஓட்டிய சொகுசு கார் இடித்து 2 இளம் ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம் பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியது. இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட கணவனும் மனைவியும் காரின் முன்புற பானட் பகுதியில் சிக்கினனர். அவர்கள் மீது மோதியதும் இளைஞர் அங்கிருந்து தப்பிக்க காரை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது சமாளித்துக்கொண்டு கணவர் தப்பிக்கவே, மனைவி காவேரி பானட்டில் சிக்கியபடி 100 மீட்டர் தொலைவுக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

    இதனால் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய அந்த இளைஞர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். 

    • பீகாரில் கடந்த அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
    • இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த 10 நாடிகளில் இடிந்த 6 வது பாலம் இதுவாகும். கனமழையால் பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்கஞ்ச் நகரின் பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு திடீரென கீறல்கள் விழுந்து ஒரு பகுதி கீழ் இறங்கியதால் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளுக்கு முன்புதான் பீகாரில் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது.
    • இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆற்றின்  தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் இடிந்து பாலத்தின்பகுதி தரைமட்டமாகியுள்ளது. இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    முன்னதாக நேற்று முந்தினம் வியாழக்கிழமைதான் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்த சம்பவங்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், நாளை பதவியேற்கும் பிரதமர் மோடியின் விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    "இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காது என யாரும் நினைக்க வேண்டாம். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்" என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்" என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களில் ஒருவர் கூட பாராளுமன்ற தேர்தலில் வென்று எம்.பி.யாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.
    • இந்த முறை 238 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 தொகுதிளுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டது.

    ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பாஜக-வுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் பலத்த அடி விழுந்துள்ளது.

    இதனால் மத்தியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. இப்படியே கடைசி சுற்று வரை சென்றால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

    கடந்த முறை பாஜக 303 தொகுதியில் தனித்து வெற்றி பெற்றிருந்தது. தற்போது 241 தொகுகளில்தான் முன்னணி பெற்றுள்ளது. இது பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (14) ஆகியவை பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

    அதேவேளையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 50 இடங்களை கூட தாண்டாது என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

    ஆனால் காங்கிரஸ் 99 இடங்களில் தற்போது முன்னிலை வகிக்கிறது. கடந்த முறையை விட தற்போது இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெறும் சூழ்நில உருவாகியுள்ளது.

    • நமது வெற்றியை யாராலும் ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது.
    • வட மாநிலங்களுக்கு இணையாக தென் மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு இருப்பதை அனைவரும் பார்க்கப் போகிறார்கள்.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி இடையே மும்முனை பலப்பரீட்சை நிலவியது. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் 19 தொகுதிகளில் பாரதிய ஜனதாவும் மற்ற தொகுதிகளில் அதன் தோழமை கட்சிகளும் போட்டியிட்டன.

    40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த தடவை தமிழகத்தில் பாரதிய ஜனதா மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலின் போது மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு தொகுதியிலும் பணம் செலவழிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தேர்தல் முடிந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதாவில் சர்ச்சை வெடித்தது. தொகுதிகளில் செலவு செய்ய வழங்கப்பட்ட பணத்தை முக்கிய நிர்வாகிகள் பலர் லட்சக்கணக்கில் பதுக்கி முறைகேடுகள் செய்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிட தலைவர்களும் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதற்காக சென்று விட்டார். தற்போது அவரது வெளிமாநில தேர்தல் பிரசார பயண திட்டம் நிறைவு பெற்று விட்டது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். மாநில பொறுப்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று தமிழகம் முழுவதிலும் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சென்னை வந்தனர்.


    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியாக 66 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்கள் 8 பெரும் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கட்சி நிர்வாகம் நடந்து வருகிறது.

    இந்த நிர்வாகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் ஆலோசனை கூட்டத்துக்காக சென்னை வந்தனர்.

    மேலும் பாரதிய ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட 19 வேட்பாளர்கள், கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். இன்று காலை 9.30 மணிக்கு சென்னை அமைந்தகரையில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பா.ஜ.க. வேட்பாளர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், பால்கனகராஜ், வினோஜ் செல்வம், பொன் பாலகணபதி, மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமையப் போகிறது. அதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.

    காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மாய உலகிலும், கனவுகளிலும் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது கனவு ஜூன் 4-ந்தேதி தகர்ந்து விடும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெறுவதை 4-ந்தேதி பார்க்க போகிறீர்கள்.

    எனவே தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் அனைவரும் ஜூன் 4-ந்தேதி வெற்றி கொண்டாட்டத்துக்கு இப்போதே தயாராகுங்கள். ஒவ்வொரு ஊரிலும் பாரதிய ஜனதாவின் வெற்றி சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.

    ஒட்டு மொத்த இந்தியாவிலும் பல கட்சிகள் பிரதமர் மோடியை எதிர்க்கின்றன. ஆனால் பிரதமர் மோடி நாட்டு மக்களை நம்பி களத்தில் உள்ளார். நமது வெற்றியை யாராலும் ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது.

    காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தாங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இதுவரை சொல்ல இயலவில்லை. ஆனால் பாரதிய ஜனதாவை 400 தொகுதிகளில் வெற்றி பெற விட மாட்டோம் என்று மட்டுமே சொல்லி வருகி றார்கள்.

    சரி போகட்டும். நாங்கள் 399 இடங்களில் வெற்றி பெறுவோம்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவும் தோழமை கட்சிகளும் போட்டியிட்ட 39 தொகுதிகளில் பாரதிய ஜனதாவின் தொண்டர்கள் அயராது பாடுபட்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் சாதாரண அடிமட்ட தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை கடுமையாக உழைத்தார்கள்.

    அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு அவர்களுக்கான உழைப்பின் பலனை காணப் போகிறார்கள்.

    தற்போது வடக்கு, தெற்கு என்று பேசுகிறார்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு இந்த பிரிவினை இருக்காது. வட மாநிலங்களுக்கு இணையாக தென் மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு இருப்பதை அனைவரும் பார்க்கப் போகிறார்கள்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    மேலும் தேர்தலுக்கு பிறகு தமிழக பாரதிய ஜனதா எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார்.

    அண்ணாமலையை தொடர்ந்து தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்களும் பேசினார்கள். அப்போது பலரும் பெரும் கோட்ட பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். கட்சி பணிகளை திறம்பட செய்யும் வகையில் 66 மாவட்டங்களின் அமைப்பிலும் அதிரடி மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டன.

    ஏற்கனவே மாவட்ட அளவில் பா.ஜ.க. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் தொய்வு இருப்பதாக டெல்லி மேலிட தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாநில நிர்வாகிகள், பெரும் கோட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் அளவில் பலரை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்களை செய்ய அண்ணாமலைக்கு பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அதிகாரம் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
    • ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார்.

    தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து மத்திய மந்திரியாக இருந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் அனகா பள்ளி பாராளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் மற்றும் பெண்டுர்த்தி சட்டமன்ற ஜனசேனா கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் நடிகர் சிரஞ்சீவியை விஜயவாடாவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

    நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு நான் அரசியல் பேசுகிறேன். இதற்கு காரணம் ஆந்திராவில் எனது சகோதரர் பவண் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.


    எனது நண்பர் ரமேஷ் மற்றும் எனது ஆசியுடன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ரமேஷ்பாபு ஆகியோர் அனகா பள்ளி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.
    • சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

    கீழக்கரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆங்காங்கே பிரசாரத்தில் ருசிகரங்களுக்கும், பரபரப்புகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. கலகலவென்று பேசும் வேட்பாளர்கள், கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் வாக்காளர்கள் என சுவாரசியங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் ஓ.பி.எஸ். பிரசாரத்திலும் நடந்துள்ளது.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் நேற்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளான குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம், செம்படையார்குளம், கும்பரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது செம்படையார்குளம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோட்சூட் அணிந்தபடி டிப்டாப்பாக பிரசார களத்திற்குள் வந்தார். பின்னர் அவர் நான் துபாயிலிருந்து வருகிறேன் என ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து குரல் எழுப்பி, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.

    அதற்கு ஓபிஎஸ் "தம்பி துபாயா, முதல்ல அந்த கூலிங் கிளாஸ போடுங்க" என அவருடன் சிரித்து கொண்டே பேசினார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய, ஓ.பன்னீர்செல்வம் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், இப்பகுதியில் சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.

    ×