என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் வெடிகுண்டு"
- கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்தது தெரியவந்தது.
- செல்போனில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த 3 பேர் சமூக வலைதளமான யூ-டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவில் பெட்ரோல் குண்டுகளை சுவற்றில் வீசி அவர்கள் வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் பின்னணியில் ஒரு பாடல் அதில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
இது தொடர்பாக வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வள்ளியூர் கீழ தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (25), சரவணன் (19) என்பதும் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும், அவன் தப்பி ஓடியதும் தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்தது தெரியவந்தது.
பின்னர் தாங்கள் தயாரித்த பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அப்போது தான் போலீசில் சிக்கி உள்ளனர்.
அவர்களது செல்போனில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
- பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
தேர்தல் நாள் அன்று ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேச கூட்டணியில் உள்ள ஜனசேனா, பா.ஜ.க கட்சியினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
தேர்தல் முடிந்த பின்னரும் பல்நாடு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வன்முறையை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வன்முறை ஏற்படும் இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- கைது செய்யப்பட்டவர் மீது 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை:
கோவை செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரர்களாக பணியாற்றி வரும் செல்வகுமார் மற்றும் பிரசாந்த் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசார் நிற்பதை பார்த்ததும், வாலிபர் அங்கிருந்து வாகனத்தை திருப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் 2 பேரும் ஓடி சென்று, அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். பின்னர் இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள். எங்களை பார்த்ததும் ஏன் வாகனத்தை திருப்பினீர்கள் என கேட்டு விசாரித்தனர். அவர் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
இதையடுத்து போலீஸ்காரர்கள், அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
அப்போது அதில், 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான போலீசார், அந்த வாலிபரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சுந்தராபுரம் அடுத்த மைல்கல் பகுதியை சேர்ந்த நாசர் என்பது தெரியவந்தது.
இவர் தெலுங்கு பாளையம் பிரிவு ரோட்டில், அலுவலகம் நடத்தி வரும் பா.ஜ.க பிரமுகரான மணிகண்டன் என்பவரிடம் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மணிகண்டனிடம், நாசர் கடனாக ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் மீது ஆத்திரம் அடைந்த அவர், அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
நேற்றிரவு, கரும்புக்கடை ஆசாத் நகரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நாசர் மது அருந்தியதும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர், மணிகண்டனை பழிவாங்க அவரது அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான நாசர் மீது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, கரும்புக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வழக்கு, விஸ்வரூபம் படம் வெளியான போது குனியமுத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.