search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல்சீற்றம்"

    • 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.
    • முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் கண்டறியும் வகையில் 450 இடங்களில் இ.டபிள்யூ.எஸ். எனும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவிகளை அமைக்கும் பணிகளை பேரிடர் மேலாண்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    நெல்லை மாநகராட்சி மூலமாக கேபாசிட்டிஸ் என்னும் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் தாமிரபரணி, ராமநதி மற்றும் கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கினை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.

    தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படும் இந்த கருவிகள் விரைவில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவிகள் தாமிரபரணி, கடனா, ராமநதி வழித்தடங்களான கோபாலசமுத்திரம், கோவில்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆலடியூர், பொட்டல்புதூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், முறப்பநாடு, சேரன்மகாதேவி, கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் அமைகிறது.

    இதன் மூலம் ஆறுகளில் எவ்வளவு வெள்ளம் வரும்? எப்போது வரும்? என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    இந்த தகவல்கள் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, முக்கிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதில் சேரன்மகாதேவி மற்றும் கொக்கிரகுளத்தை தவிர மற்ற இடங்களில் கருவி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இந்த கருவியில் காமிரா, சென்சார் வசதி, சோலார் பேனல் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கருவிகள் அமைப்பது குறித்து கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை பேரலைகள் உயரமாக எழும்ப வாய்ப்பு இருப்ப தாலும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, இன்று கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அருகில் செல்லவோ, நடைபயிற்சி மேற்கொள்ளவோ வேண்டாம் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என கூறிஇருந்தார்.

    அதன்படி, இன்று பெரியதாழை கடற்கரை முதல் வேம்பார் வரையிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. திரேஸ்புரம், பெரியதாழையில் சுமார் 3,600 நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் இன்று வேலையில்லாமல் இருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையிலும் கடல் அலைகள் அதிக அளவில் எழும்பியதால் அந்த பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் சென்று வர கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர். 

    • மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
    • மீன் சந்தைகள் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே அரபிக்கடலோரம் அமைந்துள்ள கடற்கரை கிராமம் கோவளம். இங்கு மீனவர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன் பிடித் தொழிலாகும். இந்திய பெருங்கடல், வங்க கடல் ஆகிய கடல்களை விட அரபிக்கடல் எப்போதுமே சீற்றமாகவே காணப்படும். இதனால் கோவளம் கடற்கரை கிராமத்தைச்சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக பாதுகாப்பான மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் கோவளம் மீனவர்கள் நாடோடி போன்று ஊரு விட்டு ஊரு சென்று மீன் பிடிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. தற்போது நிலவிவரும் இந்த கடல் சீற்றம் காரணமாக கோவளம் மீனவர்கள் பக்கத்தில் உள்ள கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதிகளுக்கு சென்று மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரி கோவளம் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்து வருகிறது. இன்று2-வது நாளாக கோவளத்தில் கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கோவளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வதுநாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். கோவளம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கோவளத்தில் உள்ள மீன் சந்தைகள் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. கோவளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மீன் ஏலம் எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்கள் யாரும் கோவளத்துக்கு வரவில்லை.

    ×