என் மலர்
நீங்கள் தேடியது "சட்டமன்றத் தேர்தல்"
- அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பால் பாஜக கலக்கத்தில் உள்ளது
- மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது ரூட்டை மாற்றியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.கடைசியாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றிய ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சியமைத்தது. 25 தொகுதிகளை பாஜகவும், 16 தொகுதிகளைக் காங்கிரசும் கைப்பற்றியிருந்தன.
இந்நிலையில் நடந்து முடித்த பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது, தற்போது நடந்த அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வெளிவந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் உள்ளிட்டவற்றால் பாஜக கலக்கத்தில் உள்ளது.
முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கியத் தலைவர் சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்தும் வெற்றி கிடைக்குமா என்பதில் சந்தேகத்துடன் உள்ள பாஜக வர உள்ள தேர்தலுக்கு இலவசங்களை அள்ளி வீசி வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை விமர்சித்து வந்த பாஜக தற்போது தங்கள் கொள்கையையும் தளர்த்தி ரூட்டை மாற்றியுள்ளது.
ஜார்கண்ட்டில் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே பாஜக முந்திக்கொண்டு வெளியிட்ட இலவச அறிவிப்பு வாக்குறுதிகள் கீழ்வருமாறு,
➼18 வயதுக்கு மேலான மகளிருக்கு மாதம் ரூ. 2100 வழங்கும் திட்டம்
➼1 சிலிண்டர் ரூ.500 க்கு வழங்கப்படும்
➼பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர்கள்
➼5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
➼போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை
➼வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம்
உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது.
- விவசாயிகள் பிரச்சனை, அக்னிவீர் திட்ட எதிர்ப்பு உள்ளிட்டவை அரியானா தேர்தலில் பெரிய தாக்கம் செலுத்தவில்லை
- மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது.
பாஜக தோல்வி
விவசாயிகள் பிரச்சனை, அக்னிவீர் திட்ட எதிர்ப்பு உள்ளிட்டவை அரியானாவில் நடந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக 90 க்கு 48 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதில் முக்கியமானது இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கள செயல்பாடு. கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அரியானாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 10 மக்களைவைத் தொகுதிகளில் 5 இடங்களில் பாஜகவும், 5 இடங்களில் இந்தியா கூட்டணியும் வென்றது. முன்னதாக 2019 தேர்தலில் 10 இடங்களிலும் பாஜக வென்ற இந்நிலையில் 2024 தேர்தல் பாஜகவுக்கு சறுக்களாக பார்க்கப்பட்டது.

உதவி நாடி சென்ற இடம்
இதில் சுதாரித்த பாஜக தங்கள் கொள்கை கூட்டாளியான ஆர்எஸ்எஸ் அமைப்பை நாடியது. அதன்படி அரியானாவில் பாஜகவுக்கு உள்ள மக்கள் ஆதரவு குறித்து ஆர்எஸ்எஸ் எடுத்த சர்வே, முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கு தலைமைக்கு ஆதரவு குறைந்ததை சுட்டிக்காட்டியது.
இதனால் கட்டார் நீக்கப்பட்டு கடந்த மார்ச்சில் நயாப் சிங் சைனி முதல்வர் ஆக்கப்பட்டார். இது, அடுத்த தேர்தலை மனதில் வைத்து பாஜக எடுத்துவைத்த முதல் அடி. அதன்பின் விவசாயப் பெருநிலமாக விளங்கும் அரியானாவில் கிராமங்களில் கட்சிக்கான ஆதரவை மீட்டெடுக்கும் பொறுப்பை ஆர்எஸ்எஎஸ் இடம் பாஜக ஒப்படைத்தது.
களத்தில் ஆர்எஸ்எஸ்
ஜூன் 5 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியில் பதவியேற்பு ஆரவாரங்கள் முடிந்தபின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து ஜூலை 29 ஆம் தேதி புது தில்லியில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் அருண் குமார், அரியானா பாஜக தலைவர் மோகன்லால் பர்தோலி, அப்போதைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் அடங்கிய முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது.
இதில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. கிராம மக்களின் நம்பிக்கையை மீளப்பெறுவதே இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு. அதன்படி, உள்ளூர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களை மக்களிடையே நிறுவுவது என வேலையைத் தொடங்கியது ஆர்எஸ்எஸ். செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஊரக வாக்காளரைக் கவரும் திட்டம் தொடங்கப்பட்டது.
கிராமங்கள் - கூட்டங்கள்
இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 150 ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். கிராமப்புர சமூகங்களிடம் அதிகரித்து இருந்த பாஜவுக்கு எதிரான மனநிலையை மாற்றும் பணியில் அந்த குழு ஈடுபட்டது. மக்கள் முன் தோன்றி கைகட்டி ஆதரவு சேகரிப்பதை விட சிறந்த அரசியல் திட்டம் எதுவும் இல்லை என்று அரசியல் விமர்சகர் ராஜாத் சேத்தி ஆர்எஸ்எஸ்-ன் இந்த ஊரக மக்களை கவரும் திட்டம் குறித்து பேசியிருந்தார்.
செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து சுமார் 16,000 ஆர்எஸ்எஸ் சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் அரியானாவில் நடத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக இந்த சந்திப்புகள், நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரட்டப்பட்டனர். இங்கு பாஜக விரோத போக்கு காரணமாக இந்த ஆள் திரட்டுதலில் பாஜகவினரை விட ஆர்எஸ்எஸ் காரர்களே முக்கிய சக்தியாகச் செயல்பட்டனர்.

முகம்
அதிக வாக்கு வங்கி உள்ள உள்ளூர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதல் கைகொடுத்தது. புதிதாக ஆதரவு திரட்டுவதை விட விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவற்றால் மனக்கசப்பில் பாஜக ஆதரவிலிருந்து விலகியவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் விதமாகச் செயல்பட்டது ஆர்எஸ்எஸ். புதிதாக வந்த முதல்வர் நயாப் சிங்சையினியின் முகத்தை கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி நடந்தது. குறிப்பாக அவரின் சொந்த தொகுதியான லாட்வாவில் அவருக்கு எதிராக இருந்த மனநிலையை மாற்ற அதிக கவனம் செலுத்தப்பட்டது.
கிராமந்தோறும் பாஜக மீது அதிருப்தி தெரிவித்திருந்த சாதித் தலைவர்கள் , பஞ்சாயத்துத் தலைவர்களை முதல்வர் சைனி நேரடியாகச் சென்று சந்தித்தார் . அதிகம் உள்ள ஜாத் சமூகத்தினர், தலித்துகளின் வாக்கு வங்கிக்கு முக்கிய கவனம் தரப்பட்டது.
நம்பிக்கை
பாஜக அரசு மற்றும் மக்களுக்கிடையே இருந்த இடைவெளியை ஆர்எஸ்எஸ் நிரப்பியது. மடல்கள் தோறும், பஞ்சாயத்துகள் தோறும் பொது சவுபல் [chaupals] எனப்படும் அமைப்புகள் தோறும் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் வாக்கு வங்கியை உறுதி செய்தனர்.
முன்னதாக கூறியபடி செப்டம்பர் 1 முதல் 9 வரை ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைந்தது 90 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கிராமப்புற பகுதிகளில் 200 வரை அது அதிகரித்தது. பாஜகவின் நிர்வாகம் மற்றும் தலைமை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதில் ஆர்எஸ்எஸ் உயர் தலைவர்கள் தீவிரம் காட்டினர்.

முதல் வெற்றி
மக்களவைத் தேர்தலில் அமைதியாக இருந்த ஆர்எஸ்எஸ் அதில் பாஜக வாங்கிய அடியைப் பார்த்த பின் இந்த சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கியதால் கிடைத்த பலன், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமரான பிறகு தேசிய அளவில் பாஜக ஜெயிக்கும் முதல் தேர்தல் இதுவே என்பதாகும்.

கடவுள்
பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் சமீப காலமாக உரசல்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. மோடி தன்னை கடவுளின் நேரடி அவதாரமாக மட்டுமே முன்னிலைப் படுத்தியது ஆர்எஸ்எஸ் தலைவர்களைக் கோபப்படுத்தியிருந்தாலும் பாஜகவின் தாய் இயக்கமாக அதன் அதிகாரத்தை உறுதி செய்யவேண்டிய பொறுப்பையும் ஆர்எஸ்எஸ் உணர்ந்தே உள்ளது.
ஒருவரை முன்னிலைப் படுத்துவதன் மூலமாக அன்றி சத்தமில்லாமல் வேர்களில் கிராமங்களில் வீடுதோறும், சமூகங்கள் தோறும் கொள்கைகளைப் பரப்புவதன் மூலமே ஆதரவை அறுவடை செய்து அதன்மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது என்பதை இந்த தேர்தல் வெற்றி காட்டுகிறது.
- 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
- 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது.
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களை நடந்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தேர்தலை நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையைதேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது வெளியிடுகிறது
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
- எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கியது
- கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்
அஜித் பவருக்கு ஒர்க் அவுட் ஆன டைம்.. கடிகார சின்னத்தை பயன்படுத்த தடை இல்லை - உச்சநீதிமன்றம்
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவமபர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் மாகாயுதி [ பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரசை [என்சிபி] அவரது அண்ணன் மகன் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். 40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவு கொடுத்தனர். அஜித்பவாரின் ஆதரவாளர்கள் 9 பேருக்கு பா.ஜ.க., கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கி அவரது தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் சரத் பாவருக்கு வேறு சின்னம் ஒதுக்கி அவரது தலைமையிலான அணி தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) என்று அழைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவார் அணிக்குக் கொடுத்ததை எதிர்த்து சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அம்மனு நிலுவையில் இருக்கும் நிலையில் அதன் மீதான தீர்ப்பு வரும்வரை அஜித் பவாரின் கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபான்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு,வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை அஜித் பாவர் கடிகார சின்னத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.
மேலும் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கவே வழங்கப்பட்ட அறிவுறுதல்களின்படி கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் வாக்காளர்களைக் குழப்பி திசை திருப்பும் விதமான செயல்களில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
எனவே நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் அஜித் பவார் கடிகார சின்னத்தைப் பயன்படுத்த உள்ளதால் இந்த தீர்ப்பு சரத் பவாருக்கு பின்னடைவாக அமைத்துள்ளது. முன்னதாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அறிவிக்கப்பட்ட 38 பேரில் 26 பேர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர்.
- ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிட்டார்
- 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.
இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரீசில் இருந்து திரும்பிய சில தினங்களில் அவர் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அரியானா சட்டசபைத் தேர்தலில் அவருக்குக் காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது. ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியைப் பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அரியானா சட்டசபையில் இந்தியா ஜெர்சி அணிந்து வினேஷ் போகத் ஜூலானா தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
- பிரதமர் மோடியும் மகாராஷ்டிராவில் பிரச்சரம் செய்து வருகிறார்
- சுயமாக பேசத் தெரியாத அரசியல்வாதிகள் டெலிபிராம்டரை பார்த்து பேசுவது அரசியல் களத்தில் கேலிக்குள்ளாகும்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. களத்தில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரேவின் மகாவிகாஸ் அகாதி இந்தியா கூட்டணியும், பாஜக, அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே மகாயுதி கூட்டணி உள்ளன.
இரண்டு கூட்டணியில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியும் மகாராஷ்டிராவில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அருகில் இருப்பவர் கூறுவதை அப்படியே மைக்கில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
லாத்தூர் [Latur] கிராம புறநகரில் உள்ள அவுசா [Ausa] என்ற இடத்தில் பிரச்சாரம் செய்த ஏக்நாத் ஷிண்டே பக்கத்தில் இருக்கும் பாஜக பிரமுகர் அரசுத் திட்டங்களின் பெயர்களுடன் சொல்ல சொல்ல மைக்கில் அதை அப்படியே ஒப்பிக்கும் இந்த வீடியோவை எதிர்க்கட்சிகள் டிரண்ட் செய்து வருகின்றன.
சுயமாக பேசத் தெரியாத அரசியல்வாதிகள் டெலிபிராம்டரை பார்த்து பேசுவது அரசியல் களத்தில் கேலிக்குள்ளாகும் விஷயமாக இருந்த நிலையில் தற்போது டெலிபிராம்டர் தொழில்நுட்பத்தையும் தாண்டி மனிதனை பிராம்டராக மகா முதல்வர் பயன்படுத்தியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
- ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
- இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாகின. இதில் தமிழகத்தில் திமுக, உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் தாக்கரே சிவசேனா, பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் என்சிஏ கூட்டணியை திணறடிக்கும் அளவுக்கு கணிசமான வெற்றியை பதிவு செய்தது. இதனால் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. மக்களவை தேர்தலுக்கு பின்னும் தொடரும் இந்தியா கூட்டணி சார்பில் உமர் அப்துல்லாவின் தேசியவாத காங்கிரஸ் காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இரண்டு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், கூட்டணியின் தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேம்நாத் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.
தற்போது வங்கதேச ஊடுருவல், அதிகரிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தனது அஸ்திரங்களை பயன்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. பழங்குடியின அடையாளம் என்பதை முன்னிறுத்தி ஹேமந்த் சோரன் பிரச்சாரம் செய்கிறார்.

இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ;லாலு பிரசாத் யாதவ் ஜார்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சாத்ரா [Chatra] தொகுதியில் நிற்கும் தனது கோதர்மா [Koderma] பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் லாலு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. எல்லோருக்கும் இந்தியா கூட்டணியை தெரிந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி என்று ஒன்றும் இல்லை, யார் நரேந்திர மோடி, பாஜகவை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பேசினார்.
- தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.
- மகாராஷ்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட பிரதேசம் என கூறினார்
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்களின்போது கையில் எடுக்கும் வழக்கமான அஸ்திரமான இந்துக்களே ஒன்றுபடுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யனாத் வாசகத்தை தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறது.
இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில நாட்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.

இந்நிலையில் பாஜகவின் இந்த வாசகம் குறித்து அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தற்போது விமர்சித்துள்ளார். சரத் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவுடன் சேர்ந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதிவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியிடம் பாஜக கூட்டணி அதிக இடங்களை இழந்ததால் கூட்டணியில் உள்ள அஜித் பவார் மீது அதிருப்தி எழுந்தது.

அதுமுதல் அவ்வப்போது அஜித் பவார் கூறி வரும் கருத்துக்கள் பாஜகவை மறைமுகமாக விமர்சிப்பதாக இருந்தன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனியார் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அஜித் பவார் பேட்டியளித்துள்ளார்.
அங்கு, batenge toh katenge' [ நாம் பிரித்திருந்தால் நம்மை வெட்டுவார்கள்] , ek hain toh safe hain [ ஒருவராக இருந்தால் ஆபத்து - இருவராக இருந்தால்தான் பாதுகாப்பு] எனவே இந்துக்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்ற செய்தித்தாள்களிலும் பிரசார மேடைகளிலும் பாஜக விளம்பரப்படுத்துவதைப் பற்றி அஜித் பாவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், நான் முதலில் இருந்தே அதை ஆதரிக்கவில்லை. பல முறை இதுபற்றி நான் கூறியிருக்கிறேன். மகாரஷ்டிராவில் இந்த வாசகங்கள் வேலைக்கு ஆகாது. உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பிற இடங்களில் வேண்டுமானால் இவை வேலை செய்யலாம் என்று தெரிவித்தார்.

முன்னதாக யோகி ஆதித்யநாத் கூறிய இந்த கோஷம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அஜித் பவார், மகாராஷ்டிரா சதிராபாத்தில் சிவாஜி மகாராஜ், ராஜார்ஷி சாஹு மகாராஜ், மகாத்மா பூலே ஆகியோரும் நிலம். எனவே மகாராஷ்டிராவை மற்ற மாநிலங்களுடன் நீங்கள் ஒப்பிட முடியாது, இங்குள்ள மக்கள் இதை விரும்பமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும் கடந்த வாரம் நடந்த பேரணியின்போது பேசிய அஜித் பவார், மகாராஷ்டிரா எப்போதும் மத நல்லிணக்கம் கொண்ட பிரதேசம் என கூறினார். ஒரு பக்கம் பாஜக இந்த கோஷங்களுக்கு செய்தித்தாள்களின் விளம்பரம் கொடுத்து ப்ரோமோஷன் செய்து வரும் நிலையில் மறுபுறம் இதற்கு கூட்டணியில் உள்ள கட்சித் தலைவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது.
- எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் பாஜக தேர்தல்களின்போது கையில் எடுக்கும் வழக்கமான அஸ்திரமான இந்துக்களே ஒன்றுபடுங்கள், தனித்தனியாகி இருந்தால் ஆபத்து என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முழக்கத்தை தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வருகிறது.
இது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டுபண்ணும் பிளவுவாத அரசியல் யுக்தி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சில நாட்கள் முன்னர் தூலேவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியும் இந்த கோஷத்தை எழுப்பினார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது சகோதரர்களான அமித் மற்றும் தீரஜ் தேஷ்முக்கிற்காக ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
லத்தூர் நகரம் தொகுதியில் அமித் தேஷ்முக்கும் லத்தூர் கிராமம் தொகுதியில் தீரஜ் தேஷ்முக்கும் போட்டியிடுகின்றனர்.
லத்தூர் கிராமம் தொகுதியில் போட்டியிடும் தீரஜ் தேஷ்முக்கிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ரித்தேஷ் தேஷ்முக், "உங்கள் மதம் ஆபத்தில் உள்ளது என்று வாக்குக் கேட்பவர்களின் கட்சிதான் உண்மையில் ஆபத்தில் உள்ளது. நேர்மையாக உழைப்பவர்கள் தர்மம் செய்கிறார்கள். வேலை செய்யாதவர்களுக்கு தான் மதம் தேவைப்படுகிறது. எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் முதலில் வளர்ச்சியை பற்றி பேசுங்கள்.
மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, அவர்களுக்கு வேலை வழங்குவது அரசின் பொறுப்பு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில், தீரஜ் 1.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் டெபாசிட் இழக்கும் வகையில் தீரஜ்க்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
- புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி பாஜகவுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி ஜார்கண்ட் பயணமாகியுள்ளார். பிரசாரம் முடிந்த பின்னர் ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுள்ளார்.
ஆனால் புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி ஜார்கண்டின் தியோகர் பகுதியில் பிரசாரம் செய்தார்
- ராகுல் காந்தியின் பிரசாரத்தை சீர்குலைக்க பாஜக முயன்றதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜார்கண்டில் பிரசாரம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரதிற்காக கோடா பகுதியில் இருந்து ராகுல் காந்தி கிளம்ப முற்பட்டார்.
ஆனால் அவரது ஹெலிகாப்டர் அங்கு பரப்பதற்கு வான் போக்குவரத்து கட்டுப்பாடு (ATC அறையிலிருந்து ஏர் கிளியரன்ஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி பிரசாரம் செல்வதில் 45 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது.
பிரதமர் மோடி ஜார்கண்டின் தியோகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ராகுல் காந்தியின் பிரசாரத்தை சீர்குலைக்கவே பாஜக வேண்டுமென்றே இதைச் செய்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்குக் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
- நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.
- பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜேஎம்எம்] மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.
முன்னிலை நிலவரம்
பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் ஜேஎம்எம் இந்தியா கூட்டணி 51 இடங்களிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திடீர் மாற்றம்
முன்னதாக பாஜகவின் என்டிஏ 41 இடங்கள், இந்தியா கூட்டணி 32 இடங்கள் முன்னிலை என்று இருந்த நிலையில் திடீரென டிரண்ட் மாறி இந்தியா கூட்டணி பெரும்பாண்மை இடங்களில் முன்னிலைக்கு வந்துள்ளது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கணிப்பு
ஜார்க்கண்டில் நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 47 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
என்டிடிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க. கூட்டணி 44 முதல் 53 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்களிலும், மற்றவை 5 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.