என் மலர்
நீங்கள் தேடியது "உலகக்கோப்பை 2023"
- ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற இருக்கிறது
- உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்ப்பு
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடுமா? என்பதே இன்னும் சந்தேகத்தில்தான் உள்ளது. குஜராத்தில் மோதுவது போன்ற அட்டவணைக்கு பாகிஸ்தான் தரப்பில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மன் நஜம் சேதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் இந்தியா செல்ல வேண்டுமென்றாலும், இந்தியா பாகிஸ்தான் வர வேண்டும் என்றாலும் இரண்டு நாடுகளுக்குரிய அரசாங்கம்தான் முடிவு எடுக்க முடியும்.
குஜராத் மைதானத்தில் மோத வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அகமதாபாத்தில் விளையாடுவது குறித்து எங்களிடம் கேள்வி கேட்க ஏதும் இல்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தானில்தான் நடைபெறுவதாக இருந்தது. இந்தியா அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் 13 போட்டிகளில 4 மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. மற்ற 9 போட்டிகள் இலங்கையில் நடத்தப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஆசியகோப்பை போட்டி குறித்து கூறுகையில் ''இந்தியா பாகிஸ்தான் வர மறுத்ததால் தீர்வுகாண ஹைபிரிட் முறையில் இரு நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் மேலும் சில போட்டிகள் நடத்த வாய்ப்பு இருந்தது. ஆனால், இங்கு விளையாடிய பின், இலங்கை செல்வது கடினம் என்பதால் போட்டி குறைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
- போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது.
- தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது.
இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியானது.
இந்நிலையில், உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுக்கான ஆன்விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
மேலும், பிசிசிஐ 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அனைத்து சங்கங்களிடமிருந்தும் டிக்கெட் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனைகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து பிசிசஐ கெளரவ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், " அட்டவணை மாற்றத்திற்காக மூன்று உறுப்பினர்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது. ஆட்டங்களுக்கு இடையே ஆறு நாட்கள் இடைவெளி இருந்தால், அதை 4-5 நாட்களாக குறைக்க முயற்சிக்கிறோம். 3-4 நாட்களில் இது தெளிவாகிவிடும். ஐசிசியுடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் நடக்கும்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி தொடர்பாக, நான் முன்பு கூறியது போல், சில உறுப்பினர் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
- 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
- 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
இஷான்கிஷன் 5-வது வரிசையில் இடம்பெற்றால் 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

4-வது வரிசையில் ஆடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் இடையே போட்டி இருக்கும். இஷான்கிஷன் பேட்ஸ்மேனாக களம் இறங்கினால் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார். ராகுலுக்கு சில கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது நல்லது.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
- நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.
ஆம்ஸ்டர்டாம்:
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற நெதர்லாந்து அணி தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.
நெதர்லாந்து அணி;- ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
- உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிங்டன்:
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-
நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.
- காயத்தால் விளையாடாமல் இருக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியில் இடம் பிடித்துள்ளார்
- வீரருக்கு அவரது குடும்பம்தான் முதல் ரசிகர் என்றால் மிகையாகாது
இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19-ந்தேதி தொடர் நடைபெற இருக்கிறது.
இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும், தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக வீரர்கள் அறிவிப்பு டுவிட்டர் மூலம் அறிவிக்கப்படும். அல்லது பத்திரிகையாளர் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போர்டால் அறிவிக்கப்படும்.
ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு, தங்களது அணி வீரர்கள் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. அவர்கள் சிறந்த ரசிகர்களால் அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள வீரர்கள் அவர்களும் குழந்தைகளின் மழலை குரல்களிலும், மனைவி மட்டும் இருப்பவர்கள் மனைவி மூலமாகவும், காதலி இருப்பவர்கள் அவர்கள் மூலமாகவும், மனைவி மற்றும் காதலி இல்லாத வீரர்கள் அவர்களின் பெற்றோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
- ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மும்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.
சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன.
- களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.
புதுடெல்லி:
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது.
அதைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து பிட்ச்சில் எப்படி சுழல்கிறது என்று பார்த்து விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அது எப்படி ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களின் கைகளிலிருந்து வருகிறது என்பதை பார்க்காமல் விளையாடியதே தோல்விக்கான காரணம் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன. குறிப்பாக ரஹ்மதுல்லா குர்பாஸ் திடமான இன்னிங்ஸ் விளையாடினார். இங்கிலாந்துக்கு இது மோசமான நாள்.
எப்போதுமே தரமான ஸ்பின்னர்கள் பந்து வீசும்போது பந்துகளை நீங்கள் அவர்களுடைய கைகளில் இருந்து வருவதை பார்க்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதனை செய்ய தவறினார்கள்.
மாறாக அவர்கள் அதை பந்து பிட்ச்சில் எப்படி சுழன்று வருகிறது என்று பார்த்து விளையாடினார்கள். அதுவே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை.
லக்னோ:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. எனவே முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராட உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக லஹிரு குமார இடம் பெற்றுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பதிரனா முதல் போட்டியில் 95 ரன்களும் 2-வது போட்டியில் 90 ரன்களையும் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலி, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இலங்கை: பாதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, கருணாரத்னே, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க.
- பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது.
தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர்.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மேலும், ரஜினி ஷிகர் தவானுடன் போட்டியை காணும் புகைப்படம் வரைலாகி வருகிறது.
- டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.
இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. இதில், முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் அவுட்டானார்.
முன்னதாக, லதம் டக் அவுட் ஆனார். பிலிப்ஸ் 41 ரன்களிலும், சாப்மான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
45.2 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. 28 பந்துக்கு 92 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் நியூலாந்து அணி இருந்தது.
மிட்செல் சான்ட்னர் மற்றும் சௌதீ ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், மிச்செல் சான்ட்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, சௌதீயுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். பெர்குசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
4 -வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றது.
- கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ நியமனம்.
- 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி அறிவிப்பு.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகிறது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3வது மற்றும் 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.