என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா"

    • ஹேமந்த் சோரன் மனைவியை முதல் மந்திரி ஆக்குவதற்கு அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • 2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன் எனவும் குற்றம் சாட்டினார்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது சோரனின் மனைவி கல்பனாவை முதல் மந்திரி ஆக்குவதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணியான சீதா சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன். வளர்ந்து விட்ட தனது 2 மகள்களையும் ஹேமந்த் சோரன் கண்டு கொள்வதில்லை என சீதா சோரன் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே, சீதா சோரன் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் சீதா சோரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை பாஜகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
    • பல அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஒடிசாவில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    ஒடிசா மாநில ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதி வேட்பாளராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • லோயிஸ் மராண்டி ஹேமந்த் சோரனை தோற்கடித்தவர் ஆவார்.
    • ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்தவர் கட்சி மாறிய நிலையில், தற்போது 3 இணைந்துள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் பா.ஜ.க.-வின் முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் பல தலைவர்கள் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இது பா.ஜ.க.-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    லோயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் டுடு ஆகிய மூன்று பா.ஜ.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை ஹேமந்த் சோரன் வரவேற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த கேதார் ஹஸ்ரா மற்றும் ஏ.ஜே.எஸ்.யு. கட்சி தலைவர் உமாகந்த் ரஜக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கடந்த 18-ந்தேதி இணைந்த நிலையில் தற்போது இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.

    லோயிஸ் மராண்டி 2014 தேர்தலில் ஹேமந்த் சோரனை 5262 வாக்குகள் வித்தியாசத்தில் தும்கா தொகுதியில் தோற்கடித்தவர் ஆவார்.

    2019-ல் ஹேமந்த் சோரன் தும்கா தொகுதியில் 13,188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும், அந்த தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பர்ஹைத் தொகுதி எம்.எல்.ஏ.-வாக நீடித்தார். அவரது சகோதரர் பசந்த் சோரன் லோயிஸ் மராண்டியை 6842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மராண்டி மாநில தலைவருக்கு, தன்னைப் போன்ற அர்ப்பணிப்பு தொண்டர்கள் புறக்கணிக்கப்பு மற்றும் கட்சியில் உள்ள பிரிவினைவாதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கோட்டையான தும்காவில் 2014-ல் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குணால் சாரங்கி ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க.-வின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விலகிய பின், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.

    லக்ஷ்மண் டுடு 2014-ல் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ராம்தாஸ் சோரனை கட்ஷிலா தொகுதியில் 6403 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    இவர்களுடன் செரைக்கேலா, கணேஷ் மஹ்லி, பாஸ்கோ பெஸ்ரா, பாரி முர்மு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியில் இணைந்துள்ளனர்.

    ஜார்க்கண்ட்ல் அடுத்த மாதம் 13-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. நேற்று முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சுமார் 2.60 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

    • ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.
    • ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதியும் நடக்கிறது.

    தற்போது முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் சோரனின் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.

    தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அதேவேளையில் ஹேமந்த் சேரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கோழைத்தனமான ஆங்கிலேயர்களைப் போல் பின்னால் இருந்து தாக்குவது ஏன் என பா.ஜ.க.-வை ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறியதாவது:-

    உங்களுக்கு தைரியம் இருந்தால் முன்னால் இன்று மோதவும். கோழைத்தனமான ஆங்கிலேயர்களை போன்று பின்னால் இருந்து தாக்குவது ஏன்?.

    எனக்கு எதிராக சில நேரங்களில் அமலாக்கத்துறை, சில நேரங்களில் சிபிஐ, சில நேரங்களில் ஒரு அமைப்பு, சில நேரங்களில் வேறு யாரோ... என ஏவப்பட்டது. தற்போது என்னுடைய பெயரை களங்கப்படுத்த கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. விசித்திரமான நிலைமை.

    பா.ஜ.க. இதற்கு முன்னதாக 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது பள்ளிகளை மூடியது. ரேசன் கார்டுகளை ரத்து செய்தது. ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) தேர்வை நடத்தவில்லை. பா.ஜ.க. மத்தியில் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்து வருகிறது. ஜார்க்கண்டில் 5 வருடம் இருந்துள்ளது. அவர்களை டபுள் என்ஜின் அரசு என்று அழைத்துக் கொள்கிறார்கள். பிறகு ரகுபார் ஆட்சியில் யானை மட்டும் ஏன் ஐந்து வருடங்கள் பறந்தது?. ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?. ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.

    ஏன் ஐந்து வருடத்தில் ஒரு ஜே.பி.எஸ்.சி. தேர்வு கூட நடத்தப்படவில்லை?. வயது முதிர்ந்த பெண்கள் மற்றும் விதவைகள் உதவித்தொகை ஏன் உயர்த்தப்படவில்லை. ஐந்து வருடங்களில் ஏன் பெற முடியவில்லை? ஏன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்?. ஏன் இளைஞர்கள் சைக்கிள்கள் தயாரித்து வாழைப்பழம் விற்பனை செய் வலியுறுத்தப்பட்டது?.

    மீண்டும் தனது அரசு தேர்வு செய்யப்பட்டால் மக்களுக்காகவும் ஒவ்வொரு ஜார்க்கண்ட் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    இவ்வாறு ஹேமந்த் சோரன் விமர்சனத்தை வீசியுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 2.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி ஆண் வாக்காளர்களும், 1.29 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

    2020-ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், பா.ஜ.க. 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது.

    2014-ல் பா.ஜ.க. 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களிலு், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன.

    இதற்கிடையே, அம்மாநிலத்தின் பகூர் மாவட்டம் லிதிபரா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த தினேஷ் வில்லியம்ஸ் மராண்டி செயல்பட்டு வந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தினேஷ் வில்லியம்ஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.

    லிதிபரா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் தினேஷ் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பா.ஜ.க.வில் இணைந்துள்ள தினேஷுக்கு நடப்பு தேர்தலில் லிதிபரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 13-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இதையடுத்து, அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் மந்திரி ஹேமந்த் சோரனும், காங்கிரசும் தலைநகர் ராஞ்சியை கராச்சியாக மாற்ற விரும்புகின்றனர்.

    அதேபோல் தும்கா, தியோகர் மற்றும் சாஹிப்கஞ்ச் மாவட்டங்களை வங்காளதேசமாக மாற்ற விரும்புகிறார்கள். காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் எங்களைப் பிரிக்க நினைக்கின்றன.

    ஜார்க்கண்டில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, மக்கள் தங்கள் 'பாஹு-பேட்டி'யின் பாதுகாப்பிற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அவர்கள் 'ஓட்டு ஜிஹாத்' பற்றி பேசுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைப் பிரிப்பதே இவர்களின் அடிப்படை நோக்கம். இதை மக்கள் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • ஜார்க்கண்ட் தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • பாஜகவின் இந்த விளம்பர வீடியோவிற்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13 அன்று நடைபெற்றது.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி காலத்தில் இந்து குடும்பத்தின் வீட்டிற்குள் கும்பலாக நுழையும் முஸ்லிம் மக்கள் அந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்வது போல பாஜகவின் இந்த விளம்பர வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதாவது ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவி இந்துக்களுக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற பாஜகவின் வெறுப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    பாஜகவின் இந்த விளம்பர காணொளிக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

    பாஜகவின் இந்த விளம்பர வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம் மக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் பரப்புரை விளம்பரத்தை நீக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ×