search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டப்பிரிவு 370"

    • உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தை கையில் எடுத்துள்ளது
    • நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    சிறப்பு அந்தஸ்து ரத்து 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

    இது காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையைத் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததையும் பார்க்க வேண்டி உள்ளது.

     

    சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு 

    இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீருக்கு முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    அரசியல் களம்

    இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

     

    தீர்மானம் 

    தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா பேசுகையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  

    • சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மோசமடைந்தது.
    • இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ம் ஆண்டு அகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கியது.

    சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு 4 வருடங்கள் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் முக்கியமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது நாட்டிற்கு வரலாறு கிடையாது. அது அவர்களுடைய கட்சியின் வரலாறு. நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் இந்து இந்தியாவை விரும்பினார்கள். ஆனால் நேரு, பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அந்த நேரத்தில் அதற்கு முடியாது எனத் தெரிவித்தார்கள்.

    இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை நம்பும் மதசார்பற்ற நாடு. காஷ்மீர்- தமிழ்நாடு அல்லது அசாம் அல்லது மகாராஷ்டிரா இடையிலான பொதுவானது என்ன? நாம் மற்றவர்கள் மொழியை கூட பேசவில்லை. ஒரே மாதிரியான கலாசார விசங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. நம்முடைய உணவு பழக்க வழக்கம் மாறுபட்டவை. மதம், ஜாதி, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பிரகாசமான, வலிமையான இந்தியாவைக் கொண்டுவருவதற்கு ஒன்றிணைக்கிறது.

    பாகிஸ்தான் முஸ்லிம் நாடானது. நாம் அவ்வாறு இல்லை. நாம் பல மதங்கள் கொண்ட நாடு. பன்மொழி நாடு, அப்படியே இருப்போம்.

    சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி 5 வருடங்கள் முடிவடைந்த நிலையில், 6-வது வருடம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உழைத்து அவர்களின் அபிலாஷைகளை வரும் காலங்களில் நிறைவேற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

    ரத்து செய்யப்பட்டதன் மூலம் வளர்ச்சியின் பலன்களை இழந்த பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பு கிடைத்ததுள்ளன.

    அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக ஆட்கொள்ளப்பட்ட ஊழலைத் தடுத்து நிறுத்துவதை உறுதி செய்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்.
    • காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் 370-வது சட்டப் பிரிவு அமலில் இருந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது.

    இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் அனுபவித்து வந்த சிறப்பு சட்ட சலுகைகள் பறிபோனது. இதற்கு காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    370-வது சட்டப்பிரிவை நீக்கியதோடு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு என்று யூனியன் பிரேதசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதை ஒடுக்குவதற்காக மத்திய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட 5-வது ஆண்டு தினமான இன்று (திங்கட்கிழமை) காஷ்மீரிலும் பஞ்சாப் மாநிலத்திலும் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படை சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் அவர்களது இந்திய ஆதர வாளர்களுடன் தொலைபேசியில் பேசியதை ஒட்டு கேட்டு உளவுப்படை இதை உறுதிப்படுத்தி உள்ளது.

    சர்வதேச உளவு அமைப்புகளும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக் கான சதி திட்டம் நடந்து வருவதாக இந்தியாவை எச்சரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பும், சோதனை யும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்காத வகையில் வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    • காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும்.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள்.

    பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் சோனிபட் கோஹனாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    2024 மக்களவை தேர்தல் ஒரு போர் போன்றது. ஒரு மக்கள் வளர்ச்சி, மறுபக்கம் வாக்கு ஜிஹாத். யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை அரியானா மக்களிடம் கேட்க விரும்புகிறேன். (சிறிது நேரம் காத்திருந்த மோடி, மோடி ஆட்சி என்று மக்கள் முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி) உங்கள் பதில் முடிவு செய்துள்ளது.

    காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும் என தைரியத்திற்கு பெயர்போன அரியானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தடையாக விளங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் மயானத்தில் புதைத்துவிட்டோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.

    • காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
    • பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம் அவர் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.

    1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?

    2) மோடிஜியால் ஒழிக்கப்பட்ட முத்தலாக் திட்டம் நல்லதா? கெட்டதா? நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா?

    3) மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா? கெட்டதா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

    4) முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்குப் பதிலாக, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    5) காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?

    இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

    • பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
    • அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.

    காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.

    ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.

    மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.

    அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார்.
    • பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றார்.

    அப்போது பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். தற்போது இன்று அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் வாய்ப்புகளை பெற்றுள்ளோம். மக்களுக்கு உண்மை தெரியும்... அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஜம்மு-காஷ்மீர் இது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த பரூக் அப்துல்லா "சட்டப்பிரிவு 370 மோசமானது என்றால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் எப்படி முன்னேற்றம் அடைந்தது.

    சட்டப்பிரிவு 370 இவ்வளவு மோசமாக இருந்தால், மாநிலங்களவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இரண்டு மாநிலங்களை ஒப்பிட்டு பேசியதை பிரதமர் மீண்டும் கேட்க விரும்புகிறேன். சட்டப்பிரிவு 370 அமலில் இருந்தபோதுதான் குலாம் நபி ஆசாத் குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையிலான வளர்ச்சி குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளார்.

    தற்போாது சட்டப்பிரிவு மற்றும் வாரிசு அரசியல் பொறுப்பு என்றால், எப்படி வளர்ச்சி அடைந்தோம்? இது மக்களுடைய ஆட்சி. முதலமைச்சருக்கான தேர்தலில் தோல்வி அடைந்தேன். ஆகவே, வாரிசு ஆட்சி எங்கே இருக்கிறது?. வாரிசு ஆட்சி என்பதை நான் பொதுவாகவே பாராளுமன்றத்தில் கேட்டுள்ளேன். ஒவ்வொரு முறை பேசும்போதும், பிரதமர் மோடி இதன்மீது குறிப்பிட்ட தாக்குதலை வைக்கிறார்" என்றார்.

    • மாநிலம் அரசு எடுக்கும் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.
    • மற்ற நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, வாழ்த்து தெரிவிக்கவும் உரிமை உண்டு.

    மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது. இந்த முடிவை மகாராஷ்டிரா மாநிலத்தில வேலைப்பார்த்து வந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஜாவித் அகமது விமர்சித்திருந்தார்.

    அவர் இது தொடர்பாக தனது வாட்ஸ்அப் பக்கத்தில் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதி ஜம்மு-காஷ்மீரின் கருப்பு தினம், ஆகஸ்டு 14 பாகிஸ்தான் சுதந்திர தின வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார்.

    இதனால் அவர் மீது மகாராஷ்டிர மாநில அரசு இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அப்போது உச்சநீதிமன்றம் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது மற்றும் மாநிலங்கள் எடுக்கும் முடிவை விமர்சனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதேபோல் மற்ற நாடுகள் அதனுடைய சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அந்த நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்துகள் கூறம் உரிமையும் உண்டு" எனத் தெரிவித்து ஜாவித் அகமதுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    • சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    • லடாக்கை மறுசீரமைப்பு செய்து யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்போது, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து சட்டம் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதி ஒப்பதல் வழங்கினார்.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது. மேலும், சட்டப்பிரிவு 370 தற்காலிகம்தான் எனத்தெரிவித்தது.

    இதற்கு ஆதரவு ஒருபக்கமும், எதிர்ப்பு ஒரு பக்கமும் இருந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாக அவருடைய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும், இம்ரான் கான் "சர்ச்சைக்குரிய மற்றும் சட்டவிரோத இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல தசாப்தங்களாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
    • லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. ஒரு தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்ற போதிலும் ஜம்மு- காஷ்மீர் தலைவர் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். ஆனால், இதே உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது எனத் தெரிவித்துள்ளனர். அது இன்னும் அப்படியே இருக்கிறதா? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். ஒருநாள் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதன்பின் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும்.

    70 ஆண்களுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் 200 ஆண்டுகளில் இது மீண்டும் கொண்டு வரப்படலாம். யாருக்கு தெரியும்" என்றார்.

    உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஐந்து பேரில் மூன்று பேர் ஒரே தீர்ப்பையும் மற்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார். ஒட்டுமொத்தமாக சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான். அதை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மற்றும் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் சடடமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. லடாக்கை யூனியன பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தனர்.

    • ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.
    • இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பாராளுமன்றம் எடுத்த முடிவை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.

    ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

    இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    ×