என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூந்தமல்லி"

    • பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம்.
    • மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    மேலும், பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    அதன்படி, பூந்தமல்லி- போரூர் இடையே 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான 2ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மெட்ரோ ரெயில் 35- 40 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    • குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் போலீசாரும் , அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று பூந்தமல்லி அருகே போலீசார் வாகன சோதனையின் போது வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வானகத்தை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆனால் நசரத்பேட்டை சிக்னலில் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

    போலீசார் பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஒரு டன் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    குட்கா பொருட்களுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .

    பூந்தமல்லி:

    சென்னையை ஒட்டி அமைந்துள்ளது பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள். இங்கு பிரசித்திப் பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் தேவார பாடல் பெற்ற தலமான வேதபுரீஸ்வரர் கோவில்கள் உள்ளன. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை நகருக்கும், புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகிறார்கள். இதனால் பூந்தமல்லி, திருவேற்காடு பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த 2 பஸ்நிலையங்களும் தற்போது கட்டணம் இல்லாத இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வருவதிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பாரிமுனை, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதிக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பூந்தமல்லி பஸ்நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும். பஸ்நிலையத்தில் கட்டணம் கொடுத்து வாகனங்கள் நிறுத்த நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கார்களை பஸ்நிலையத்திற்கு உள்ளேயே கட்டணமின்றி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பஸ்நிலையம் முழுவதுமே வாகனம் நிறுத்தும் இடம் போல் காட்சி அளிக்கிறது. பயணிகள் பஸ்நிலையத்திற்கு சென்று வரவும், பஸ்கள் இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சில ஷேர் ஆட்டோக்கள் பஸ்நிலையத்தின் உள்ளேயே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனை கட்டுப்படுத்தி பஸ்நிலையத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதே நிலைதான் திருவேற்காடு பஸ்நிலையத்திலும் நீடிக்கிறது. திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 72 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பஸ்நிலையம் போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் விளங்குகிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காடு பேரூராட்சியாக இருந்த போது, இந்த பஸ் நிலையம் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் திருவேற்காடு நிலையத்தை சென்னை மாநகர போக்கு வரத்துக்கழகம் பராமரித்து வருகிறது. ஆனால் மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவேற்காடு பஸ்நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேற்கூரை பகுதிகளில் சிறுமழை பெய்தால் கூட மழைநீர் ஒழுகுகிறது. இங்கு போதிய மின் விளக்குகள் இல்லை.

    பஸ்நிலையத்தை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் மாற்றி விட்டனர். குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. இதேபோல் தான் பூந்தமல்லி பஸ்நிலையமும் காட்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார்.
    • கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மாலை பள்ளி முடிந்து மாணவி ஒருவர் அப்பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் . அப்போது மாணவியை பினதொடர்ந்து 3 வாலிபர்கள் வந்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள் மாணவியை கிண்டல் செய்தபடியும், தங்களிடம் பேசும்படியும் வற்புறுத்தினர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தட்டிக்கேட்டார். அவர் போதை கும்பலை எச்சரித்தார். இதனால் அந்த வாலிபருக்கும் போதை கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் மாணவி அங்கிருந்து அச்சத்துடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல் தங்களை தட்டி கேட்ட வாலிபரை பின்தொடர்ந்து அவரது வீடுவரை சென்று மிரட்டினர். மேலும் அங்கு நின்று ரகளையில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் போதை வாலிபர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

    இதையடுத்து 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர், வரமறுத்து அங்கிருந்து கண்காணிப்பு கேமரா கம்பத்தில் தனது தலையை மோதி ஆவேசம் ஆனார். பின்னர் ஒருவழியாக போதை வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் அழைத்து சென்றனர். விசாரணியில் பிடிபட்டவர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் ஷியாம், தீனா என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். நான் விரைவில் திரும்பி வருவேன், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தினந்தோறும் இந்த பகுதியில் போதை வாலிபர்கள் மாணவிகள் மற்றும் பெண்களை கிண்டல் செய்வது அதிகரித்து உள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்து அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கடந்த ஆண்டும் இதே பகுதியில், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விசாரணைக்காக சென்றபோது கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது.
    • ரசாயனங்கள் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் லாரிகள் மட்டும் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

    இதே பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் கேன்களில் தின்னர் என்ற ரசாயனம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்து ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலா ளர்கள் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது ஒரு கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ அதிக அளவில் பரவியதால் அருகில் இருந்த மற்றொரு லாரிக்கும் பரவியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    அந்த இடத்தின் அருகி லேயே வாகனங்கள் நிறுத்து மிடம் உள்ளது. அதில் கண்டெய்னர் லாரிகள் உள்பட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாகனங்களி லும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

    உடனடியாக அதிக அளவில் தீப்பற்றி எரிந்த லாரியை டிரைவர் சாமர்த்தியமாக வேகமாக ஓட்டி வந்து அருகில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். சிறிது நேரத் தில் அந்த லாரியில் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பூந்த மல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை , ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.

    ஆனால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்த ரசாயனங்கள் முழுவதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீப்பற்றியதும் லாரியை டிரைவர் உடனடியாக சாலையோரம் கொண்டு வந்து நிறுத்தியதால் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

    தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை சர்வீஸ் சாலைக்கு ஓட்டி வந்தபோது லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயனத்தால் சாலை முழுவதும் சிறிது நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் படுகாயம்.
    • விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பூந்தமல்லியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.

    வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனடியாக வடிந்தது. வெள்ளம் வடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.

    ஆனால் புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னை பூந்தமல்லி பகுதிகளில் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி எம்.ஜி.ஆர். நகர், மேல்மா நகர், பிராட்டிஸ் சாலை, அம்மன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளை சுற்றி சாலையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை திருவேற்காடு ராஜீவ் நகர், ராஜாங்குப்பம், எஸ்.பி.நகர் குடியிருப்பு, கோலடி, நூம்பல், ஏழுமலை நகர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மாங்காடு சீனிவாசநகர், பத்மாவதி நகர், ஓம்சக்தி நகர், ஸ்ரீசக்ரா நகர் பகுதிகளில் தெருக்களில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், ஸ்டான்லி நகர், ராயபுரம் பனைமரத் தொட்டி, கல்மண்டபம் சாலை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் வைத்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். கோயம்பேடு ரெயில் நகரில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. சாலைக்கு மேலே ஒரு அடி அளவுக்கு தண்ணீர் செல்வதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.


    காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அருந்ததி பாளையம் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். இதையடுத்து மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முட்டளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    ஒவ்வொரு பருவமழையின் போதும் இங்கு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருப்பதாக கவலை தெரிவிக்கும் நோயாளிகள், இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    செங்கல்பட்டு அண்ணா நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் இன்னும் சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கியுள்ள நீரில் இருந்து பாம்பு, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னர். அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு மழை வெள்ள நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை வரை செல்லும் சாலையில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நந்தி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளம் காட்டாறு போல் சீறிப் பாய்கிறது. இதனால் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.

    • பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளரிடம் முறையிடலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
    • ஆவடி மாநராட்சி சுமார் 181.82 சதுர கிமீ. பரப்பளவில் அமையும்.

    ஆவடி:

    ஆவடி மாநகராட்சியின் எல்லை 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த நிலையில் ஆவடி மாநகராட்சியின் எல்லையை வரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி ஆவடி மாநகராட்சியுடன் பூந்தமல்லி. திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய 3 நகராட்சிகள் இணைகின்றன.

    இதேபோல் கருணாகரச்சேரி. நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானூர். அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, பாணவேடுதோட்டம், சென்னீர்குப்பம். நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரமேல், மேப்பூர் ஆகிய 17 கிராம ஊராட்சிகளும் சேருகின்றன.

    இதையடுத்து 3 நகராட்சிகள் மற்றும் 17 ஊராட்சிகளை இணைத்த பிறகு ஆவடி மாநராட்சி சுமார் 181.82 சதுர கிமீ. பரப்பளவில் அமையும்.


    இதில் பூந்ததவல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சிகள், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. பூந்தமல்லியில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை வருகிற 2026-ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. மற்றும் 100 வருட பழமையான அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவேற்காட்டில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ள பாரம்பரிய நகரமாகும்.

    திருநின்றவூர் நகராட்சியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் கோவில் மற்றும் பூந்தமல்லி, திருநின்றவூர். மோரை, வெள்ளலூர் பகுதிகளை இணைக்கும் வெளிவட்டச் சாலை(வண்டலூர் முதல் மாதவரம் வரை) அமைந்துள்ளது. இந்த 20 உள்ளாட்சி அமைப்புகளையும் ஆவடி மாநகராட்சியுடன் இணைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன் அடிப்படை வசதிகளும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் நகராட்சிகள், ஊராட்சிகளை மாநராட்சியுடன் இணைப்பது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளரிடம் முறையிடலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.

    • தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி வந்தது. லாரியை டிரைவர் முத்துப்பாண்டியன் ஓட்டினார்.

    அந்த லாரி வேலப்பன்சாவடி பாலத்தின் மீது ஏற முற்பட்ட போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.

    லாரி கீழே கவிழ்ந்ததில் அதில் இருந்த பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரிடிரைவர் முத்துப்பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் வரவ ழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவர் முத்துப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×