என் மலர்
நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"
- விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சாலையில் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் நேற்று மாலை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து நின்று கொண்டிருந்த ராகுல் டிராவிட் பயணித்த கார் மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய டிராவிட் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரின் தொலைபேசி எண் மற்றும் ஆட்டோ எண்ணை டிராவிட் பதிவு செய்துக்கொண்டார். சிறிது நேரம் வாக்குவாதம் செய்துவிட்டு டிராவிட் அங்கிருந்து புறப்பட்டார். இதனை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. டிராவிட் தனது காரை ஓட்டிச் சென்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பொறுமையின் சிகரமாக அறியப்படும் ராகுல் டிராவிட் சாலையில் வாக்குவாதம் செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- நீஹர் சச்தேவா என்ற அந்த பெண்ணுக்கு அலோபீசியா என்ற குறைபாடு உள்ளது.
- பயனர்கள் பலரும் நீஹரின் தன்னம்பிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.
பொதுவாகவே பெண்கள் தங்களை அழுகுபடுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அதுவும் மணப்பெண் என்றால் பிரமிக்க வைக்கும் அலங்காரம் இருக்க பல்வேறு விஷயங்களை செய்வார்கள். இதற்காக பிரத்யே ஆடை, நகை என அனைத்தும் அழகாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும் வகையில் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் இந்திய மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்த கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. அமெரிக்க வாழ் இந்தியரான நீஹர் சச்தேவா என்ற அந்த பெண்ணுக்கு அலோபீசியா என்ற குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில பகுதிகள் அல்லது அனைத்து பகுதிகளில் இருந்தும் முடி உதிர்தல் ஏற்படுமாம். இதனை ஸ்பாட் வழுக்கை என்றும் அழைக்கின்றனர்.
அலோபீசியா பாதிப்பு காரணமாக நீஹர் சச்தேவாவுக்கு வழுக்கை ஏற்பட்ட நிலையில் அவர் தனது திருமணத்தின் போது வழுக்கையை மறைக்க முயற்சி செய்யவில்லை. மாறாக மிகவும் தன்னம்பிக்கையுடன் வழுக்கை தலையுடனே திருமணம் செய்தார். அதேநேரம், சிவப்பு நிற லெஹங்கா ஆடையில், அழகான நகை அணிந்து சென்ற அவரை, அவரது வருங்கால கணவர் அருண் கணபதி கரம்பிடித்து திருமணம் செய்த காட்சிகள் காண்போரை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் நீஹரின் தன்னம்பிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.
- கேக்கை வாங்கிய காதலி ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார்.
- அவரது வாயில் ஏதே வித்தியாசமாக கடிபடுவதை உணர்ந்தார்.
காதலர்கள் தங்கள் துணையின் மனம் கவர்வதற்காக வித்தியாசமான வழிகளை கையாள்வார்கள். அந்த வகையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கேக் ஒன்றை தயாரித்து அதற்குள் தங்க மோதிரம் ஒன்றையும் வைத்துள்ளார். பின்னர் காதலியை வீட்டிற்கு வரவழைத்து கேக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய காதலி ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது வாயில் ஏதே வித்தியாசமாக கடிபடுவதை உணர்ந்தார்.
பின்னர் சுதாரித்து கொண்டு அதை வெளியே எடுத்து பார்த்த போது தான், தனது காதலர் இன்ப அதிர்ச்சியாக கேக்கில் மோதிரத்தை மறைத்து வைத்தது தெரிய வந்தது. இதனால் அவரது காதல் முன்மொழிவு நிகழ்ச்சி கலகலப்பாக இருந்ததாக கூறி வாலிபர் இந்த சம்பவத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அது வைரலாக பரவியது.
- வீடியோவில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் மீன் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் ஆட்டோ டிரைவரின் ஆர்வத்தை பலரும் பாராட்டினர்.
நகர பகுதிகள் முதல் கிராமப்பகுதிகள் வரை போக்குவரத்துக்கு ஆட்டோ சவாரியை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சில ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரங்கள் செய்வது, ஆட்டோவிலேயே ஏராளமான புத்தகங்கள் வைத்து நூலகம் போன்று அமைப்பது போன்ற செயல்களால் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புனேவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் மீன்தொட்டி மற்றும் ஸ்பீக்கர்கள், டிஸ்கோ விளக்குகளால் அலங்காரம் செய்துள்ள காட்சிகள் உள்ளது.
வீடியோவில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் மீன் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது. அதில் வண்ண மீன்கள் நீந்தி செல்கின்றன. ஆட்டோ முழுவதும் டிஸ்கோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீன் தொட்டிகளுக்கு மேல் சிறிய ஸ்பீக்கர்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில் ஆட்டோ டிரைவரின் ஆர்வத்தை பலரும் பாராட்டினர்.
- AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயிலில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
- டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் கட்டணம் செலுத்தாமல் நிலையத்தின் வெளியேறும் AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயில் கதவில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மெட்ரோ நிலையத்தின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
அதன் விளக்கத்தில், இந்த வீடியோ பிப்ரவரி 13 அன்று ஜமா மசூதி மெட்ரோ நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது.
பிப்ரவரி 13 ஆம் தேதி மாலையில், ஜமா மசூதி மெட்ரோ நிலையத்தில் பயணிகளின் கூட்டம் திடீரென அதிகரித்ததால் சிலர் வெளியேறும் வாயிலில் குதித்து கடக்க முயன்றனர்.
இதனால் அங்கு பயணிகளிடையே தற்காலிகமான சலசலப்பு நிலவியது. அவர்களை சமாளிக்க பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் போதுமான அளவு இருந்தனர்.
நிலைமை ஒருபோதும் கட்டுப்பாட்டை மீறவில்லை. வாயில்களில் திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக சில பயணிகளின் தற்காலிக எதிர்வினையே இது. விரைவில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.
- போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளையுடன் இந்நிகழ்வு நிறைவடைய உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட மக்களிடையே போட்டி நிலவுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்தால் சங்கமத்திற்குச் சென்று குளிக்க முடியாதவர்கள், அங்கிருந்து கொண்டு வரும் தண்ணீரைத் தெளித்து அல்லது வீட்டில் உள்ள தண்ணீரில் கலந்து குளிப்பதன் மூலம் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் கும்பமேளாவில் புனித நீராட பிரயாக்ராஜ் சென்ற இடத்தில் தன் கணவருக்கு வீடியோ-கால் செய்து, போனை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
கணவனால் கும்பமேளாவிற்கு வரமுடியாத காரணத்தால், அப்பெண் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே வைரலானது. இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். கமன்ட் செக்ஷனில் பலர் பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர்.
- இந்த வீடியோவை பகிர்ந்து கடைசியில் பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.
- அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த IIFA திரைப்பட விருது விழாவில் அம்மாநில பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்டனர். இதைக் கேட்டதும் முதல்வர் சிரித்துக் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவர் சொன்னார்.
இதைப் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் இந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வழியாக பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாசாரா, மோடி ஒரு தலைவர் அல்ல, ஒரு நடிகர் என்று நாங்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம்.
தாமதமாக இருந்தாலும், பாஜக அரசாங்கத்தின் முதலமைச்சர்கள் கூட மோடி ஒரு நடிகர், மக்கள் தலைவர் அல்ல என்று கூறத் தொடங்கியுள்ளனர். அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர் என்று விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.