search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.சி.ஐ.டி. போலீசார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • 12 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது.

    தேர்வுக்கு ஒரு நாள் முன்பு பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. இதே போல ஜார்க்கண்ட், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடை பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்குகளில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 12 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத் தாள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

    ஜார்க்கண்ட் பொகாரோ நகரை சேர்ந்த என்ஜினீயர் பங்கஜ் குமார் என்பவர் இந்த வினாத்தாள்களை திருடியதும் தெரியவந்தது. திருடிய வினாத்தாள்களை கசியவிட்டதில் ராஜூசிங் என்பவர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான என்ஜினீயர் பங்கஜ்குமார், ராஜூசிங் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கைதான பங்கஜ் குமார் கடந்த 2017-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தவர் ஆவார். இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டாக்டர்கள் 3 பேரும் 2021-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் அறைகளுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    அவர்களின் லேப்-டாப் மற்றும் மொபைல் போன் களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.
    • வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

    இவர் மீது கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் நிலமோசடி புகார் அளித்தார்.

    நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வரும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி, மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துக் விட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

    பின்னர் இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.

    கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் தாளப்பட்டி மணல்மேடு பகுதியில் உள்ல யுவராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் நிலமோசடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என சல்லடை போட்டு தேடினர். வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

    இந்த சோதனையில் திருச்சி நாமக்கல் சேலம் மாவட்டங்களை சேர்ந்த சி பி சி ஐ டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த சோதனை கரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாதேஷ், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உள்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாதேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 4 மாதங்களாக மெத்தனாலை வாங்கி விற்பனை செய்து வந்தேன் கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டை, சேஷசமுத்திரம், மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனால் வாங்கி சப்ளை செய்துள்ளேன். சென்னையில் உள்ள கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் ஆகியோரிடம் ஒரு பேரல் ரூ.11 ஆயிரம் என 19 பேரல் வாங்கினேன். ஒரு பேரலை 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்வேன்.

    முதல் கட்டமாக கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்து அது வெற்றி பெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனை அதிகரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தேன்.

    இதற்காக பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன். ஆனால் முதல் கட்டமே தோல்வியடைந்து கள்ளக்குறிச்சியில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.

    இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

    சேஷசமுத்திரத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். ஊர் முக்கியஸ்தர்கள் மத்தியில் சாராயம் விற்பனைக்கு ஏலம் விடப்படும். அந்த ஏலத்தை அதிக விலை கொடுத்து எடுத்து சாராய வியாபாரம் நடத்தி வந்தேன். அதன் படி கன்னுகுட்டி என்கிற கோவிந்தராஜுக்கும் பலமுறை சாராயம் சப்ளை செய்திருக்கிறேன்.

    இந்நிலையில் கோவிந்தராஜன் மது பிரியர்களின் ஆசையை நிறைவேற்ற என்னிடம் மெத்தனால் கேட்டதால் அவருக்கு சப்ளை செய்தேன். மீதி மெத்த னாலை சூளாங்குறிச்சி கண்ணனிடம் பதுக்கி வைத்திருக்க சொன்னேன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பு அறிந்ததும் பயத்தில் கண்ணனிடம் இருந்து மெத்தனாலை அழிக்குமாறு கூறினேன். அவரும் கீழே கொட்டி அழித்துவிட்டார். இவ்வாறு சின்னதுரை வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பல ஆண்டு களாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டுவந்தோம். அப்போது எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மது பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப போதையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மெத்தனாலை வாங்கி கலந்து சாராயம் விற்பனை செய்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. இதில் எங்கள் உறவினர்களும் இறந்துள்ளனர்.

    பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கண்பார்வையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமின் பெற்று வெளியே சென்றாலும், வழக்கு முடிந்து வீடு திரும்பினாலும் உறவினர்களின் முகத்தில் எப்படி விழிப்பது என்று நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

    இவர்களது வாக்கு மூலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோவில் பதிவு செய்து அதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர்.
    • அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக சிலரிடம் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் நண்பர்கள், அவர் சாவுக்கு முந்தைய 2 நாட்களில் சந்தித்தவர்களின் விபரங்கள் சேகரித்து அவர்களிடம் அவர்களது இருப்பிடத்திற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வரும் நிலையில் நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர். தோட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு டிரோன் காமிரா மூலமாக சோதனை செய்து அதில் தடயங்கள் ஏதும் கிடைக்குமா என ஆராய்ந்தனர்.

    ஆனாலும் இதுவரை உறுதியான முடிவை எடுக்க முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். அவரது மர்மச்சாவு வழக்கில் இதுவரை பல கோணங்களில் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அந்த விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×