search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயக்குமார் வழக்கு: சந்தேக நபர்களை மறைமுகமாக கண்காணிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்
    X

    ஜெயக்குமார் வழக்கு: சந்தேக நபர்களை மறைமுகமாக கண்காணிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்

    • நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர்.
    • அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக சிலரிடம் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் நண்பர்கள், அவர் சாவுக்கு முந்தைய 2 நாட்களில் சந்தித்தவர்களின் விபரங்கள் சேகரித்து அவர்களிடம் அவர்களது இருப்பிடத்திற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வரும் நிலையில் நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர். தோட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு டிரோன் காமிரா மூலமாக சோதனை செய்து அதில் தடயங்கள் ஏதும் கிடைக்குமா என ஆராய்ந்தனர்.

    ஆனாலும் இதுவரை உறுதியான முடிவை எடுக்க முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். அவரது மர்மச்சாவு வழக்கில் இதுவரை பல கோணங்களில் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அந்த விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×