என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குச் சந்தை"

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவை சந்தித்தது. இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று உயர்ந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,087.39 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் படிப்படியாக சென்செக்ஸ் ஏறத்தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 77,082.51 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 77,747.46 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 317.93 புள்ளிகள் சரிந்து 77,606.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 10 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்ந்தது.

    நேற்று நிஃப்டி 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,433.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் நிஃப்டி ஏறுமுகமாக இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,412.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,646.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 105.10 புள்ளிகள் சரிந்து 23,591.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 15 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    • சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.
    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,966.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே சென்செக்ஸ் இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,194.22 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 78,167.87 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 728.93 புள்ளிகள் சரிந்து 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 6 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,685.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே நிஃப்டி இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,451.70 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,736.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 181.80 புள்ளிகள் சரிந்து 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 41 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 9 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 78,385.79 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,745.63 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 78,741.69 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்ந்து 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 10 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்வை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,658.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,762.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக நிஃப்டி இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,601.40 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,869.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 10.30 புள்ளிகள் உயர்ந்து 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 20 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    தொடர்ந்து 7 ஆவது நாளாக ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 0.04 சதவீதமும் நிஃப்டி 0.04 சதவீதமும் உயர்ந்து இன்று வர்த்தகம் ஆனது.

    • சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்தது.
    • நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்தது.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    இன்றைய நாள் முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 1.4 சதவீதமும் நிஃப்டி 1.32 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று மதியம் 1,007 புள்ளிகள் உயர்ந்து 76,456 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக சென்செக்ஸ் 899.02 புள்ளிகள் உயர்ந்து 76,348.06 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று மதியம் 309 புள்ளிகள் அதிகரித்து 23,216 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக நிஃப்டி 283.05 புள்ளிகள் உயர்ந்து 23,190.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1% உயர்ந்து வர்த்தகம் ஆனது. 

    • ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் உயர்வை சந்தித்தன.
    • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 74,169.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    இன்று குறைந்தபட்சமாக 74,480.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 75,385.76 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக 1,131.30 (1.53 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து 75,301.26 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 22,508.75 ஆக இருந்தது. இன்று காலை சுமார் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சடமாக 22,599.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 22,857.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக நிஃப்டி 22,834.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை 30 நிறுவன பங்குகளை முன்னணியாக கொண்டு செயல்படுகிறது. அதில் ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி பங்குகள் உயர்வை சந்தித்தன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.

    • அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் தான் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கணித்திருந்தன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜகவால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியிருந்தன.

    இதற்கிடையே ஜூன் 4 ஆம் தேதி அனைத்து கருதுகணிப்புகளையும் பொய்யாக்கி இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்றது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது. வட மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஆர்.ஜே.டி ஆகியவற்றின் தயவுடனேயே பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானதும் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. பங்குசந்தையில் முறைகேடு செய்யவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மீதும் இந்த குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்டுகிறது.

    எனவே செபி அமைப்பு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து ஆக்சிஸ் மை இந்தியா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

     

     தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது பதிலளித்துள்ள ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா, அனைத்து வகையான விசாரணைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துள்ள அவர் வருங்காலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது குழந்தைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 361 முதல் 401 இடங்களைக் கைப்பற்றும் என ஆக்சிஸ் மை இந்தியா கணித்தது.  முன்னதாக பிரதீப் குப்தா தேர்தல் ரிசல்ட் நாளன்று பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாததால் தொலைக்காட்சி விவாத மேடையில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
    • அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.

    சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

     இன்றைய சென்சக்ஸ் வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5.31 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.  மேலும் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.

    ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், தகவல்தொடர்பு , ஐடி உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி , எஸ்பிஐ வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவனம் உள்ளிட்ட சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 இல் உள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஏற்பட்ட 1.24% சரிவில் [1,017.23 புள்ளிகளில்] 538 புள்ளிகளைக் கொண்டுள்ளன. 

    • கடந்த வாரம் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு.
    • இன்று காலை சென்செக்ஸ் 1076 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    தீபாவளி பண்டிகை, அமெரிக்க அதிபர் தேர்தல், அதானி மீது அமெரிக்க குற்றச்சாட்டு ஆகியவற்றின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வரை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.

    கடந்த 21-ந்தேதி (வியாழக்கிழமை) 0.54 சதவீதம் குறைந்த மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 77,155 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    கடந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சுமார் 1,961 சென்செக்ஸ் புள்ளிகள் (2.54 சதவீதம்) உயர்ந்து மும்பை பங்குச்சந்தை 79117.11 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

    இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,076 புள்ளிகள் உயர்ந்து 80193.47 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இன்று காலை அதிகபட்சமாக செக்செக்ஸ் 80452.94 புள்ளிகளில் வர்த்தகமானது. தற்போது 10 மணியளவில் சென்செக்ஸ் 80248 புள்ளிகளில் வர்த்தகமானது.

     

    அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையிலும், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இரண்டு நாட்களாக பங்கு சந்தை உயர்ந்து காணப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    இரண்டு நாட்களில் சுமார் சென்செக்ஸ் சுமார் 3,200 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    லார்சன், எம் அண்டு எம், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளது.

    • மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது.
    • குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    30 நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,289.96 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை வர்த்தகம் 9.15 மணிக்கு சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது. சுமார் 10.30 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரியத் தொடங்கின. காலை 10.45 மணிக்கு சுமார் 1,200 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 80,082.82 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. அப்போது பாரதி ஏர்டெல் நிறுவன பங்கைத் தவிர மற்ற அனைத்து நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.

    சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்த சிறிது நேரத்த்தில் வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. மெல்லமெல்ல சரிவில் இருந்து மீண்ட வர்த்தகம், பின்னர் உயர்வை நோக்கி சென்றது. அதன்பின் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை. இறுதியாக 3.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 843.6 புள்ளிகள் உயர்ந்து 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், இந்தூஸ்இன்ட் பேங்க் (Indusind Bank) ஆகிய நிறுவன பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன.

    பாரதி ஏர்டெல் பங்கு 4.42 சதவீதம், ஐ.டி.சி. பங்கு 2.04 சதவீதம், இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு 19.3 சதவீதம் ஏற்றம் கண்டன.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 இன்று 219.60 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24548.70 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 24498.35 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.

    இன்று குறைந்த பட்சமாக 24180.80 புள்ளிகளிலும், அதிகபட்சமாசக 24,792.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    • இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது.
    • குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,133.12 புள்ளிகளுடன் வர்த்தகம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏதும் இல்லை. சரிவைத்தான் சந்தித்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,748.57 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய சென்செக்ஸ் புள்ளிகளுடன் 384.55 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்

    பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, இந்துஸ்தான்இந்த் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 100.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை மதியம் வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் நிஃப்டி 24,753.40 புள்ளிகளில் தொடங்கியது. இன்று நிஃப்டி அதிகபட்சமாக 24,781.25 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,601.75 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

     

    இறுதியாக நிஃப்டி 100.05 புள்ளிகள் குறைந்த நிஃப்டி 24,668.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்

    அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., விப்ரோ, ஓ.என்.ஜி.சி., டைட்டன், அதானி என்டர்பிரைசர்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.

    கோல் இந்தியா, டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைவ் இன்சூரன்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1.30 சதவீதம் சரிவை சந்தித்தது.
    • 30 நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 384.55 சரிந்து 81,748.57 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,511.81 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. நேற்றைய புள்ளிகளை விட இன்று சுமார் 237 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் தொடர்ந்து குறைந்து கொண்டே வர்த்தகம் ஆனது. இன்று அதிகபட்சமாக 81,613.63 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,612.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 80,684.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் குறைந்தது. இது 1.30 சதவீதம் ஆகும்.

    இதன்மூலம் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் 30 நிறுவன பங்குகளில் இன்று சரிவை சந்தித்தன.

    பாரதி ஏர்டெல், இந்துஸ்இந்த் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன பெயின்ட்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ×