என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டானா புயல்"

    • மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 23-ந்தேதி வங்கக்கடலில் டானா புயல் உருவாக வாய்ப்புள்ளது.

    டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் வலுப்பெறும் டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
    • மேற்கு வங்காளத்திற்கு இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே தீவிரப் புயலாக வலுப்பெற்று அக். 25 அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டானா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    •தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    •தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    •கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் ரெயில்கள் நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    •சந்திரகாசியில் இருந்து எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரும் ரெயில் அக்.24ல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    •கோரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் ரெயில் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    •சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    •ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில், ஹெளரா - திருச்சி அதிவிரைவு ரெயில் உள்ளிட்ட 28 ரெயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • கடல் அலை வழக்கத்தைவிட அதிகமாக நுரை பொங்கியது.
    • ஜெல்லி மீன்கள், பாம்புகள் செத்து கரை ஒதுங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை கடலில் கடந்த 19-ந் தேதி இரவில் அலைகள் நீல நிறத்தில் காணப்பட்டது.

    மறுநாள் முதல் கடல் அலை பச்சை நிறத்தில் மாறியது. இது 2 நாட்கள் நீடித்தது. அப்போது லேசான துர்நாற்றமும் வீசியது. கடல் அலை வழக்கத்தைவிட அதிகமாக நுரை பொங்கியது. ஜெல்லி மீன்கள், பாம்புகள் செத்து கரை ஒதுங்கியது.

    இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கடல்நீரை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

    கடல்நீர் பச்சையாக மாற மைக்ரோ ஆல்கா நாட்டிலுக்கா என்ற கடல்பாசிதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் கடல் பழைய நிலைக்கு திரும்பியது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடினர். ஆனால் மாலையில் திடீரென சுமார் 30 அடி தூரத்துக்கு கடல் உள் வாங்கியது.

    நீலம், பச்சை நிறத்தில் கடல் அலை நிறம் மாறியதும், கடல் உள் வாங்கியதும் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    கடல் நீர் உள்வாங்கியது குறித்து நிபுணர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் பருவகால மாற்றத்தின்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.

    புயல் உருவாகும்போது ஒரு பகுதியில் கடல் உள் வாங்கியும், மற்றொரு பகுதியில் அதிக சீற்றத்துடனும் காணப்படும். வங்க கடலில் டானா புயல் உருவாகியுள்ளதால் புதுவையில் கடல் உள்வாங்கியிருக்கலாம். புயல் கரையை கடந்தவுடன் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்தனர்.

    • கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ந்தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், நாளை இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது.

    புவனேஸ்வர்:

    வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

    இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.

    டானா புயல் 24-ம் தேதி அதிகாலையில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    அதன்படி, 24-ம் தேதி மாலை 5 மணி முதல் 25-ம் தேதி காலை 9 மணி வரை புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்ப்படுகிறது.

    டானா புயல் நாளை நள்ளிரவில் ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையைக் கடக்கிறது. மேலும், 120 கி.மீ., வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்கத்தில் விமானம், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
    • அதிகனமழை பெய்யும் என்பதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது. கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த தீவிர புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று மாலை முதல் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. சுமார் 190 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்படுகின்றன.

    ஒடிசாவிலும் விமான சேவைகள் இன்று மாலை நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மணி நேரப்படி மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும், ஒடிசாவின் பரதிப்பில் இருந்து தென்கிழக்கே 330 கி.மீட்டர் தூரத்திலும், ஒடிசாவின் தமராவின் தெற்கு-தென்கிழக்கே 360 கி.மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவின் தெற்கு-தென்கிழக்கு 420 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

    • டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
    • தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது.

    கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    • புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ரெயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சில ரெயில்களும் ரத்து.
    • சென்ட்ரல் இருந்து காலை புறப்பட்டு புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான 'டானா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ரெயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சில ரெயில்கள் உள்பட 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே நேற்று முன்தினம் தெரிவித்தது. இந்த நிலையில், கூடுதலாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12830) இன்று (24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்ட்ரல் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12829) நாளை (25-ந் தேதி) ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடல் அலைகள் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
    • டானா புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மத்திய கிழக்கு வங்கக் கடல் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, கடந்த திங்கட் கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

    தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. அது நேற்று முன்தினம் காலை 5.30 மணி அளவில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெற்றது.

    நேற்று அதிகாலை அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றது. இதனால் அது சக்தி வாய்ந்த புயலாக மாறியது. இந்த புயலுக்கு கத்தார் நாடு வழங்கிய டானா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி ஒடிசா மாநிலம் பார தீப்புக்கு தென்கிழக்கே சுமார் 300 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவிலும் டானா புயல் நகர்ந்தபடி உள்ளது. இது இன்று ஒடிசா வங்க கடலோர பகுதியை நெருங்கி செல்லும்.

    டானா புயல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி உள்ளது என்று வானிலை இலாகா கூறி உள்ளது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. டானா புயல் தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தபடி இருந்தது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

    டானா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒடிசா மாநிலம் பூரிக்கும் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் டானா புயல் கரையை கடக்கத் தொடங்கும் என்று இன்று காலை வானிலை இலாகா அறிவித்துள்ளது.


    நாளை அதிகாலை வரை புயல் கரையை கடந்தபடி இருக்கும். அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. கடல் அலைகள் 2 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை சீற்றமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    புயல் கரையை கடக்கும் போது சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    இதனால் டானா புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ஒடிசாவிலும், மேற்கு வங்காளத்திலும் புயல் நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஒடிசாவில் மட்டும் சுமார் 5000 ஆயிரம் புயல் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

    நிவாரண முகாம்களில் தங்குபவர்களுக்கு உணவு, உடை, மருந்து வசதிகள் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சுமார் 10 லட்சம் பேர் கடலோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    மேற்கு வங்காளத்தில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    டானா புயலின் தாக்கம் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் இருக்கும் என்பதால் சுமார் 1.14 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய ரெயில்வே சுமார் 200 ரெயில்களை ரத்து செய்துள்ளது.

    கிழக்கு மற்றும் தென் கிழக்கு ரெயில்வே நிர்வாகமும் ஏராளமான ரெயில்களை ரத்து செய்து இருக்கிறது.

    'டானா' புயல் காரணமாக அங்குல், புரி, நாயகர், கோர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திர பாரா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கான அபாயம் உள்ளதாக அரசு கண்டறிந்துள்ளது.

    இந்த 14 மாவட்டங்களில் முதன் மையாக கடலோரப் பகுதியில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.

    'டானா' புயலைக் கருத்தில் கொண்டு ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 மணி முதல் 15 மணி நேரத்துக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 56 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தவிர உள்ளூர் மீட்பு படையினரையும் ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்கள் தயார் நிலையில் வைத்துள்ளன.

    • முன்னெச்சரிக்கையாக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
    • புவனேஸ்வர் விமான நிலையத்தில் நேற்று மாலை இன்று காலை வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான டானா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதை அடுத்து மேற்கு வங்கம், ஒடிசாவில் மழை கொட்டியது.

    ஒடிசாவின் லசோர், பத்ரக், பிதர்கானியா, புரி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புயல் காரணமாக பல பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் ஒடிசாவின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஒடிசாவின் பிடர்கனிகா தேசிய பூங்கா-தாம்ரா துறைமுகம் இடையே புயல் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் காரணமாக, ஏற்கனவே 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், மேலும் 3 லட்சம் பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஒடிசாவில் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    புவனேஸ்வர் விமான நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேற்கு வங்கத்தில் கடற்கரையோரம் வசிக்கும் ஐந்து லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து செல்லும் விமானங்களின் சேவைகள் நேற்று மாலை 6:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை நிறுத்தப்பட்டன. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    • ஒடிசா- மேற்கு வங்கம் இடையே நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கியது.
    • ஒடிசாவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் உருவான டானா தீவிர புயல் நேற்று நள்ளிரவு கரையை கடக்க தொடங்கிய நிலையில், இன்று காலை கரையை கடந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கரையை கடந்து வலுவிழக்க இன்று மதியம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரெயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இன்று காலை 9 மணி வரை தற்காலிகமாக இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

    ஒடிசாவின் பிதா்கனிகா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் சமயத்தில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    ஒடிசாவின் பாலசோா், பத்ரக், பிதா்கனிகா, புரி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து சாலைகளின் குறுக்கே விழுந்தன.

    முன்னெச்சரிக்கையாக கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    டானா புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    ×