என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்தரராஜன்"

    • விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
    • செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்று பேசுகிறார். எதுகை மோனையில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியில் அடிப்படையிலேயே மிக தீவிரமாக மக்கள் பணியாற்றி முன்னுக்கு வந்தனர்.

    விஜய் முதலில் தி.மு.க.வுக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். அந்த காலத்து நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று விஜய் படம் தெலுங்கானாவில் ஓஹோவென்று ஓடுகிறது. உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் போது குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் படத்திற்கு பல மொழிகள் வேண்டும். பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.

    எங்களை தி.மு.க.வின் பி அணி என்று விஜய் சொல்கிறார். தி.மு.க. சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் தி.மு.க.வின் பி அணி.

    பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் எனது வீட்டு அருகில் தான் சிறிய வீட்டில் இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை விரிவடைய விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.

    பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியும் இருப்பதாக கூறும் விஜய் தனது தயாரிப்பாளரை எதிர்த்து பேசி இருப்பாரா? உங்களுடைய டைரக்டரை எதிர்த்து பேசி இருப்பீர்களா?

    விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை ஒரு தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    • பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

    பா.ஜ.க. சார்பில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ரவி பச்சமுத்து, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், டிடிவி தினகரன், ஓபிஎஸ், ரவிந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்தார் விருந்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம், டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை ஒரு தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இங்கு இப்தார் நடந்தது ஒரு தொடக்கம். இதேமாதிரி எல்லோரும் உட்கார்ந்து அடுத்த ஆட்சியை அமைக்கப்போகிறோம் என்று அவர் கூறினார்.

    முன்னதாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் பற்றி புகார் தெரிவிக்க அ.தி.மு.க. தரப்பில் அமித்ஷாவிடம் நேரம் கேட்கப்பட்டது. அதன்பேரில் இந்த சந்திப்பு நடந்தது.

    பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக 2 கட்சிகளும் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    • போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்கள் பலர் கைது
    • போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது.

    அதற்கு போலீசார் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. ஆர்ப்பாட்டம் வேண்டுமானால் நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதையடுத்து எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.

    ஆனால் இப்போதைக்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. சில நாட்கள் கழித்து ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று போலீசார் கூறி அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதையடுத்து போலீஸ் தடையை மீறி சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று தமிழக பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க.வினர் இன்று முயன்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்று திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக சென்று டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக இன்று காலையிலேயே பா.ஜ.க. தொண்டர்கள் ராஜரத்தினம் மைதானத்துக்கு வர முயன்றனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்த வர முடியாதபடி போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


    இதேபோல் தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள்.

    மேலும் ராஜரத்தினம் மைதானம் அருகே பா.ஜ.க.வினர் வராமல் தடுப்பதற்காக அங்கு வரும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் அருகில் இன்று காலையிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதேபோல் ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் பின்னி சாலை சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    எழும்பூர் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வரும் சாலை, புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் வழியாக ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் சாலை ஆகிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


    தடையை மீறி போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை 9.45 மணி வரை பா.ஜ.க. தொண்டர்கள் யாரையும் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வர போலீசார் அனுமதிக்கவில்லை. வரும் வழியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் காலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

    இதேபோல் சென்னை முழுவதும் ஆங்காங்கே பா.ஜ.க.வினர் தடுத்தி நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணியில் ஒன்று கூடி போராட்டம் நடத்த புறப்பட்ட பா.ஜ.க.வினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சாலிகிராமத்திலும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அவர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வராமல் தடுப்பதற்காக அவரது வீட்டு முன்பு 15-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


    ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழக பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் வீடுகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீடு சென்னை பனையூரில் உள்ளது. அவர் போராட்டம் நடத்த வெளியே வராமல் தடுப்பதற்காக இன்று அதிகாலையிலேயே அவரது வீட்டு முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அவரது வீடு அருகே வந்த வாகனங்களையும் தடுத்து நிறுத்தினார்கள். இன்று காலை 11.00 மணியளவில் அண்ணாமலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    பா.ஜ.க. அறிவித்தது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட ஆயத்தமான அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத் தொடர்ந்து ராஜரத்னம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மற்றும் காவல் துறையினர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு சூழல் உருவானது.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.
    • போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

    தி.மு.க. அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்றைய போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு பா.ஜ.க.-வை சேர்ந்த மூத்த தலைவர்களின் இல்லங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும், பா.ஜ.க. தலைவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுத்து போலீசார் அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சென்னையில், பா.ஜ.க. தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில், இன்று (மார்ச் 17) சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

    பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

    ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

    தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களைச் சந்தித்தார்.
    • அப்போது பேசிய அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது பாராட்டத்தக்க செயல் என்றார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கோவையில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

    பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து.

    இதை ஆளுநராக இல்லாமல் கோவையின் மருமகளாய் கூறுகிறேன். கோவை மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு வரவேண்டும்.

    இச்சம்பவத்திற்கு முன்பே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை முற்றிலும் ஆராய்ந்தது இதை போன்ற இடங்கள் எங்கும் இல்லை என்பதை தமிழக காவல் துறை உறுதிசெய்ய வேண்டும். கார் வெடிக்கும் வரை நமக்கு எப்படி தெரியாமல் போனது என ஆராய வேண்டும். இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குண்டு வெடித்து பா.ஜ.க. சொல்லிதான் மக்கள் பீதி அடைய வேண்டுமா?

    மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளைப் பார்த்து அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளனர். மற்றவர்களை குறை சொல்லாமல் என்ன குறை என பார்ப்பது நல்லது.

    ஜனநாயக நாட்டில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது போல் எதிர்ப்பை தெரிவிக்க இதுவும் ஒரு வழிமுறை.

    எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

    தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

    • புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி குறித்தும் விவாதித்தார்.
    • புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை தொடங்குவது குறித்தும் விவாதித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

    சந்திப்பின்போது, பல்கலைக்கழக ஒப்புதலுடன் புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போது உள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்வி தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது குறித்தும், புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி குறித்தும் விவாதித்தார்.

    புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை தொடங்குவது குறித்தும் விவாதித்தார். இதுதொடர்பான கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் அளித்துள்ளார்.

    துணைநிலை கவர்னரின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், மேலும் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
    • கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.

    புதுச்சேரி:

    தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    நேரு இளையோர் மையம் சார்பில், புதுவை காலாப்பட்டு பல்நோக்கு சமூக சேவை மையத்தில் அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளது.

    அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது.

    கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.

    கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல.

    சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ளது
    • ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

    ஐதராபாத்:

    தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்துள்ள நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியது. இது நாளுக்கு நாள் அதிகரித்து. மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. 

    இந்நிலையில், தனது தொலைபேசிகள் ஒட்டுக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்திருக்கிறார். முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து சொன்னதில் இருந்து தனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என்கிறார் தமிழிசை.

    மேலும் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது, தேவையில்லாமல் ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசுகின்றனர் என்றும் ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

    • இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
    • மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதனை மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது மகிழ்ச்சிக்கும், பணிக்கும் எல்லை இல்லை. திமிங்கலங்கள் இடையூறு செய்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் தமிழச்சி, தமிழ் குடிமகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். அதனால்தான் தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது. கருத்து சுதந்திரம் எனக்கும் இருக்கிறது என்பதை அனைத்து கட்சி சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஏழு பேர் விடுதலை என்பது நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு. இது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

    நீட் தேர்வு, 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற நீதிமன்ற தீர்ப்புகளை தமிழகத்தில் சிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தங்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் கொண்டாடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எல்லா கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றோம்.
    • அனைத்து கவர்னர்களும் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது. கவர்னர் தாமதம் தான் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது. கவர்னர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம்.

    சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களில் முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று கவர்னர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம், கவர்னருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்து இருக்கலாம். எனவே நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    கவர்னர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இப்போது கவனம் கவர்னர் பக்கம் திரும்பியுள்ளது. எல்லா கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றோம். இதில் விதிமீறல்கள் இல்லை.

    ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்வது என சில அரசியல்வாதிகள் கிளம்பியிருக்கிறார்கள்.

    அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருவர். அனைத்து கவர்னர்களும் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் கவர்னர்கள் உள்ளோம். ஆனால், கவர்னர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    • யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. மணக்குள விநாயகரை நாட்டின் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள். இந்த கோவிலுக்கு 1996ல் தொழிலதிபர் ஒருவர் யானையை பரிசாக அளித்தார். 5 வயதான பெண் யானைக்கு லட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். ஆனால் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது.

    இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பை பெற்றது. கோவில் வாசலில் நிற்கும் யானை லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகு போட்டோ எடுத்துக்கொள்வது, ஆசி பெறுவதும் வழக்கம். யானை லட்சுமிக்கு ஈஸ்வரன் கோவிலுக்கு பின்புறம் கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குதான் இரவில் யானை லட்சுமி ஓய்வெடுக்கும். வழக்கம்போல் நேற்று இரவும் யானை லட்சுமி கொட்டிலில் ஓய்வெடுத்தது.

    இன்று காலை 6.15 மணியளவில் நடைபயிற்சிக்கு பாகன் அழைத்துச்சென்றார். கல்வேபள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது.

    அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

    பின்னர் யானை லட்சுமி பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கால்நடைத்துறை டாக்டர்கள் வந்து யானை லட்சுமியை உடற்கூராய் செய்கிறார்கள். அதன்பின்னர் யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிழை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வார் யானை லட்சுமி. யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    • திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?
    • திராவிட மாடலுக்கு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை கூறினார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அதன்பின், கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு வந்தார்.

    வரும் வழியில் அவர் நெல்லை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும்.

    திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?

    திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×