என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest"

    • கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.

    கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு குடியிருப்பில் இருந்து உயர்ரக கலப்பின கஞ்சா வைத்திருந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர்கள் காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா ஆகியோர் பிடிபட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கலால் துறையினர் கைது செய்தனர்.

    இயக்குனர்கள் இருவரும் சிக்கிய அடுக்குமாடி குடியிருப்பு மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக் குனருமான சமீர் தாஹிரின் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது கலால் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக கல்லாதுறை நோட்டீஸ் அனுப்பியது.

    அதன்படி கொச்சி கலால் துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். உயர்ரக கஞ்சா அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்படி வந்தது? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் இயக்குனர் சமீர் தாஹிரை கலால் துறையினர் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    உயர் ரக கஞ்சா சிக்கிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இம்தியாஸ் அகமதுவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது 2 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குல்காமை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே (வயது 23). என்பவர் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்தாக கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு தான் உதவியதை ஒப்புக்கொண்டார்.

    பின்னர் அந்த இடத்தை காண்பிப்பதாக அவர் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து நேற்று இம்தியாஸ் அகமது மக்ரேவை போலீசார் மற்றும் ராணுவ படையினருடன், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற இம்தியாஸ் அகமது மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால் அவர் நீந்த முயற்சித்தும் முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இம்தியாஸ் அகமது மக்ரேவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக மக்ரேவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை மறுத்த பாதுகாப்பு படையினர் இம்தியாஸ் அகமது மக்ரே ஆற்றில் குதித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    • கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
    • கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘ஆலப்புழா ஜிம்கானா’.

    கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு ஒட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு சென்ற போது அங்கிருந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில் தவறாக அணுகிய தாக நடிகை வின்சி புகார் கொடுத்தார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.

    இங்கு இன்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ கிராம் கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இயக்குநர்களுடன் இருந்த 3-வது நபர் ஷாகித் முகமது.இவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக கலால் துறை அதிகாரி ஓருவர் கூறுகையில், கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனைக்கு சென்றோம். அங்கிருந்த 3 பேரிடம் இருந்து கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.

    அவர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தொடர்ந்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    இயக்குநர் காலித் ரகு மான், அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார்.
    • வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார். பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ள போதிலும் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    47 வயதானவர். திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    அப்போது தனக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்றும் அவர் துணை நடிகையிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பி துணை நடிகையும் சகுமாருடன் பழகி இருக்கிறார்.

    அந்த துணை நடிகை கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலும் சுகுமார் அவரை ஏற்றுக் கொள்வதாகவே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து துணை நடிகை சுகுமாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

    அப்போது காதல் சுகுமார் துணை நடிகை இடம் தேவைப்படும் போதெல்லாம் நகை பணத்தை வாங்கியுள்ளார்.துணை நடிகையும் சுகுமாருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என எண்ணி நகை-பணத்தை கொடுத்துள்ளார்.

    இப்படி துணை நடிகை இடம் இருந்து நகை பணத்தை சுருட்டிய பிறகு காதல் சுகுமார் அவருடன் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் பின்னர் துணை நடிகை செல்போனில் அழைத்தாலும் காதல் சுகுமார் போனை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

    இதையடுத்து காதல் சுகுமார் பற்றி துணை நடிகை விசாரித்துள்ளார்.அப்போது காதல் சுகுமார் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் அவர் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை இது பற்றி வடபழனி போலீசில் புகார் அளித்தார்.கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது வடபழனி மகளிர் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக போலீஸ் கமிஷனர் அருண் துணை நடிகை அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாம்பலம் மகளிர் போலீசார் சுகுமார் மீது நம்பிக்கை மோசடி. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் தன்மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் சுகுமார் தலை மறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை தொடர்ந்து நடிகர் காதல் சுகுமார் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

    அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.

    • இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர்.
    • ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது.  

    இதையடுத்து இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இது குறித்து காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

    உடனே அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,அதற்கு முன் நான் ஊருக்கு சென்று பெற்றோரிடம் நமது காதல் விவகாரங்களை கூறி சம்மதம் பெற்று வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். காதலன் வந்து திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்த அந்த பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    ஊருக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை.செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போனையும் எடுப்பதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது காதலன் குறித்து விசாரித்த போது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். 

    மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17-ந் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் போலீசாரின் பஸ் மற்றும் பள்ளி பஸ் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர்

    இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சின்னசேலம் அருகே ஏரவார் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ், (வயது28), வேல்முருகன் (29) ஆகியோர் கலவரத்தின் போது போலீசாரின் வாகனத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    அதேபோல் கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த அவிஷ் ஸ்ரீ முகந்த் (20) பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 பேரையும் கைது செய்து, கள்ளக்குறிச்சி2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் நின்ற கொண்டிருந்த 3வாலிபர்களை பார்த்து, ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
    • 3பேரும் சேர்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்து ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்  .அப்போது அங்கு இருந்த 3 நபர்களும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றாயா என கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்   ஷாம் கோஷ்யுடன் இருந்த 2 பணியாளர்கள், 3 பேரை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 3 நபர்களில் ஒருவர், அவரது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து மேலும், 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து 3 தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார்கள்  இதில் ஷாம் கோஷை தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்தவர்கள் சிந்தனைச்செல்வன் (வயது 23), சதீஷ்குமார் (21), தர்மராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
    • வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.

    7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.

    இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.

    • சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • சதீஷ்குமார் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருபாலபந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு அந்தோணி முத்து உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாடாம் பூண்டி கூட்டுச்சாலை அருகே சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார் (வயது 35) மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 270 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில் மற்றும் மது பாட்டில் கடத்துவதற்கு பயன்படுத்திய டாட்டா ஏ.சி.வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இவரது கணவர் சாப்பிட்டு விட்டு இரவு வேலைக்கு சென்றார். இரவு 11 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த டிராவல்ஸ் டிரைவர் ரமேஷ் (வயது 32) என்பவர் இளம்பெண் வீட்டில் காலிங் பெல்லை அழுத்தினார். இதனை கேட்டு இளம்பெண் கதவை திறந்தார். அப்போது இளம்பெண் என்னவென்று கேட்டார். அதற்கு ரமேஷ் வீட்டிற்கு பாம்பு வந்துவிட்டது என கூறினார்.

    பின்னர் அவரது செல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து வீட்டை சுற்றி தேடுவது போல நடித்தார். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை அவர் உறுதி செய்தார். திடீரென டிரைவர் ரமேஷ் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்தார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

    அதன் பிறகு ரமேஷ் இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தார். ஆனால் இளம்பெண் வர மறுத்துவிட்டார். இளம்பெண் சத்தம் போடவே டிரைவர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    பின்னர் 10 நிமிடத்துக்கு பிறகு ரமேஷ் கதவு, ஜன்னலை தட்டியும், வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியும் தொல்லை கொடுத்தார். ஆனால் இளம்பெண் கதவை திறக்கவில்லை. அதன் பின்னர் அவர் அங்கு இருந்து சென்றார்.

    மறுநாள் காலையில் இளம்பெண் அவரது கணவர் வந்ததும் இது குறித்து கூறினார். பின்னர் இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.
    • செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு ஊராட்சி, மூலக்கழனி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு தீபாவளியையொட்டி உறவினரான திருநெல்வேலி மாவட்டம், திசையன் விளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) வந்து இருந்தார். கடந்த 14-ந் தேதி சந்திர சேகரனும், முத்துப்பாண்டியும் சேர்ந்து கடையில் இருந்த போது மதுகுடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்திரசேகரனை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    ×