என் மலர்
நீங்கள் தேடியது "slug 94387"
- செந்தில்குமார் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
- போலீசார் சாதுர்யமாக செந்தில்குமாரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிங்கிகுளம், நவீன் நகரை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (வயது 43) என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு செந்தில்குமாரை பிடித்து, களக்காடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 42 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என அந்த பெண் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
- பாதிக்கப்பட்ட முதியவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 58 வயது முதியவர் ஒருவர் சித்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்தபோது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர், முதியவரிடம் நான் உங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தேன். உங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள். உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார்.
முதியவரும் அதனை நம்பினார். அதன்பின்னர் தொடர்ந்து 2 பேரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர்.
இந்த நிலையில் ஒருநாள் முதியவரை போனில் தொடர்பு கொண்ட இளம்பெண், நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாம் இருவரும் சந்தித்து பேசி ஜாலியாக இருக்கலாம் என கூறினார். நாம் எப்போது சந்திக்கலாம் என கேட்டிருக்கிறார். முதியவரும் பெண்ணின் பேச்சில் மயங்கி அவரை நேரில் சந்திப்பதற்கு ஆசை தெரிவித்தார்.
அதற்கு அந்த பெண் நீங்கள் என்னை சந்திக்க வரும் போது டிப்டாப் உடையணிந்தும், நகைகளை அணிந்தும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். எதற்கு என்று முதியவர் கேட்க, நீங்கள் டிப்டாப் உடையில் நகை அணிந்தால் மிகவும் அருமையாக இருக்கும் என ஆசை வார்த்தையை அள்ளி வீசினார்.
முதியவரும் இளம்பெண்ணின் வார்த்தைகளை அப்படியே கேட்டு கொண்டவராக, டிப்டாப் உடையணிந்து கொண்டார். மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் நகையையும் எடுத்து அணிந்து கொண்டு இளம்பெண்ணை பார்க்க போகும் ஆவலில் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
போகும் வழியில் செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் துடியலூர் சந்திப்பில் நிற்பதாக கூறினார். அங்கு சென்றதும் இளம்பெண்ணை, முதியவர் சந்தித்தார்.
பின்னர் இளம்பெண், முதியவரை கரட்டுமேடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு வாலிபர் இவர்களின் அருகே வந்தார். வந்த வேகத்தில் முதியவரை பார்த்து, நீ யார் எப்படி என் மனைவியுடன் பேசி கொண்டிருப்பாய் என கேட்டார்.
மேலும் முதியவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து இருக்குமாறு செல்போனில் புகைப்படமும் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
பணம் தராவிட்டால் இந்த புகைப்படத்தை உன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் பறித்து கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.
இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி நகையை பறித்த இளம்பெண் மற்றும் வாலிபரை தேடி வருகின்றனர்.
- இளவரசன் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
- போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருேக கெட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை. அவரது மகன் இளவரசன் (வயது17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த அய்யப்பன் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
- ஐதராபாத்தில் பதுங்கி இருந்த விக்னேஷ்குமார் மீண்டும் சென்னை திரும்பியதாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- விக்னேஷ்குமார், வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி பணம் பறித்து சென்றதாக புகார்கள் வந்தன.
போரூர்:
பிரபல தமிழ் சினிமா பட கவர்ச்சி நடிகை மாயா. இவர் சாலிகிராமம் புஷ்பா காலனியில் மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்(42). ரவுடியான இவர் மீது அடிதடி, போலீசை தாக்கியது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.
கடந்த மாதம் 18-ந்தேதி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த விக்னேஷ்குமார் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜகுமாரிடம் ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த விக்னேஷ்குமார் மீண்டும் சென்னை திரும்பியதாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
மேலும் அவர், வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி பணம் பறித்து சென்றதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் அருகே காரில் சென்ற விக்னேஷ்குமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது காரில் இருந்த பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான விக்னேஷ்குமார் மீது வழிப்பறி, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- அவினாசியை ரங்கா நகர் பகுதியை சேர்ந்த கவின் ராஜ் மற்றும் அவர் மனைவியிடம் இருந்து பணம் நகை மற்றும் செல்போன் பறித்து செல்லப்பட்டது
- புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து ரங்கா நகர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன் கவின் ராஜ் ( வயது 32) .இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவின் ராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா என்று கேட்டவாறு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். எனவே அவர் வீட்டிற்குள் சென்ற போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற ஒரு நபர் திடீரென தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில். வைத்து உன்னிடம் உள்ள பணம் நகைகளை எடுத்து கொடு என மிரட்டியுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி ஓடிவந்து அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று கதறியவாறு கெஞ்சியுள்ளார் .அவரையும் மற்றொரு நபர் தான் வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து மிரட்டியதுடன் அவர்களிடமிருந்து ரூ .10 ஆயிரம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
உடனே கவின் ராஜ் அங்கிருந்த காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது பைக்கில் சென்ற நபர்கள் வஞ்சிபாளையம் அருகே பைக்குடன் கீழே விழுந்து பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைந்துவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த வர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன். இவர் சேலம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகிறார்.
- இவர் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறி சப்-இன்ஸ்பெக்டர் கணவர்-குடும்பத்தினர் மீது புகார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த வர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன். இவர் சேலம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகி றார். இவரது மனைவி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இறந்தார்.
பின்னர் 2 மாதங்கள் கழித்து இவரது மகன் விபத்தில் இறந்து விட்டார். இந்த நிலையில் தனது ஒரே மகள் காயத்ரியை முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து குமரன் என்பவருக்கு 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர்.
காயத்ரிக்கு 4 வயதில் சர்வின் என்ற மகன் உள்ளான். முத்துக்குமரன் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காயத்ரி கடந்த 3 ஆண்டுகளாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு காயத்ரியை அவரது கணவர் வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர். இதனிடையே காயத்ரி மீண்டும் கர்ப்பமானார். இதை அறிந்த அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு காயத்ரி மறுத்துள்ளார்்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் முத்துக்குமரன் காயத்ரியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மனு கொடுத்துள்ளார்.
மேலும் கணவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
- சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளனர்.
- அலறல் சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்டால் பிரச்சினை ஆகிவிடும் என்பதால் 2 மாணவர்களும் சிறுவனை மிரட்டி அனுப்பி உள்ளனர்.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்கள் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த சிறுவனை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அந்த 12 வயது சிறுவன் பயந்து போய் கத்தி உள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்டால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் 2 மாணவர்களும் சிறுவனை மிரட்டி அனுப்பி உள்ளனர். இதுகுறித்து அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்த னர். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். இதில் நடந்த சம்பவம் உண்மை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் அந்த 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
- பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.
ராஜபாளையம்
ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் முருகன் கோவில் தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ், கார்த்தி, சக்திவேல் உள்பட 4 பேர் பட்டாக்கத்தியை காட்டி அந்த வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் வந்த வாலிபரை கும்பல் மறித்தது. தொடர்ந்து அந்த பெண்ணை பொது இடத்தில் கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசினர். 4 பேரும் ஆயுதங்களை வைத்திருந்ததால் அப்பகுதி மக்கள் அவர்களை தட்டி கேட்க வில்லை.
பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து பொதுமக்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 4 ரவுடிகளை தேடி வருகிறார்.
ராஜபாளையம் அம்பலப்புலி பஜார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
- பயந்து போன மூதாட்டி பீரோவை காட்டியுள்ளார்.
பல்லடம் :
பல்லடம்,மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மனைவி வாணி (வயது 56). இவர் தனது மகன் மணிக்குமாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்நேற்று மணிக்குமார் வேலைக்கு சென்று விட்டார் .அப்போது வீட்டில் வாணி மட்டும் தனியாக இருந்துள்ளார். வீட்டின் கதவை சாத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த 30 வயது மதிக்கதக்க மர்ம நபர் வாணியை கத்தியை காட்டி மிரட்டி பணம் எங்கே வைத்துள்ளாய் என்று மிரட்டி கேட்டுள்ளார். இதனால் பயந்து போன வாணி பீரோவை காட்டியுள்ளார்.
பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 90 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வாணி மயக்கம் அடைந்து விட்டார். மாலை வீடு திரும்பிய மணிக்குமாரிடம் சம்பவம் பற்றி வாணி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல்லடம் போலீசில் வாணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையத்தில் வேளாங்கண்ணியை சேர்ந்த மாரியப்பன் (வயது 46) என்பவர் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் அவரது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 4 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று உள்ளார்.திருமண நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 7 கிராம் தங்ககம்மல் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
- போலீசார் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த சூழலில் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் கடந்த வாரம் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை போலீசார் துன்புறுத்துவதாகவும், உடநலம் பாதித்த அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதனை கண்டித்து இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேசிய இம்ரான்கான் அந்நாட்டின் பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக இஸ்லாமாபாத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர் இம்ரான்கான் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இம்ரான்கான் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால் இஸ்லாமாபாத்தில் உள்ள இம்ரான்கான் வீட்டின் முன்பு அவரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க இம்ரான்கான் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
- 2 முறை எப்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு.
- 3-வது முறையும் அவர் ஆஜராக மறுத்தால் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக அதனை விசாரிக்கும் எப்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் பதவி இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போதைய பிரதமர் ஷபாஷ் செரீப் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் நடந்த பொது கூட்டத்தில் இம்ரான் கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அரசை கண்டித்து ஆவேசமாக பேசினார். மேலும் அங்குள்ள தேர்தல் ஆணையம், தலைமை போலீஸ் அதிகாரி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து அவரது பேச்சை நேரடியாக டிவியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட அவரது உரையை தீவிர கண்காணிப்புக்கு பிறகே ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து உள்ளனர். பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவி வருகிறது.
இம்ரான்கான் ஒரு வேளை கைது செய்யபட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு இம்ரான்கான் வக்கீல்கள் மூலம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.
ஏற்கனவே இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப்கட்சி வெளிநாடுகளில் பெற்ற உதவியை குறைத்து காட்டியதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் இம்ரான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசஸ் அனுப்பப்பட்டது. ஆனால் 2 முறை எப்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகததால் அவர் மீ து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
3-வது முறையும் அவர் ஆஜராக மறுத்தால் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக அதனை விசாரிக்கும் எப்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுவும் இம்ரான் கானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
- செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்றார்
கரூர்:
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (43). விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் தோட்ட நிலங்கள் அருகருகே உள்ளது. இந்தநிலையில் ரமேஷ் தனது வீட்டின் அருகே சேகரித்து வைத்திருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளார். இந்த தீ லோகநாதன் வீட்டில் உள்ள வாழைமரம் மற்றும் மற்ற மரங்களில் பட்டு தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்தார்.இதனால் விசாரணைக்காக ரமேசை போலீசார் அழைத்துள்ளனர். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்த ரமேஷ் செம்பியநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள 200 அடி உயரம் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டாட்சியர் ராஜாமணி, பாலவிடுதி இன்ஸ்பெக்டர் யசோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரமேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, செல்போன் கோபுரத்தில் ஏறி ரமேசை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.