search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94963"

    • மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.
    • தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

    இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.சில பள்ளிகளில், போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தான் துவங்கப்பட்டுள்ளன.

    பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள் விநியோகித்து கற்றல், கற்பித்தல் பணிகளை துவங்க வேண்டும். இதற்கு பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய, வட்டார கல்வி அலுவலர்கள், ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தெரி விக்கப்பட்டுள்ளது.

    இது குறித்துகல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டாலும், மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கின்றன. புதிய கல்வியாண்டை துவங்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.

    • ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி 3 நாட்கள் வழங்கப்பட்ட உள்ளது
    • சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருவாரூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகங்களில் முளைத்துள்ள புல், பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

    பள்ளியின் கட்டடம் மற்றும் கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகளை கண்காணித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள், கழிப்பிடம் மற்றும் கட்டிட சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளி திறப்பதை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்தும் பள்ளிகளுக்கும், புத்தகங்கள் குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி திறந்த அதே நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் பணி நடைபெற உள்ளதால் ஆசிரியர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்ச்சியும் மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அலு வலர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

    • பல கி.மீ. தொலைவில் உள்ள முத்துப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    எடையூர் சங்கேந்தி அம்மலூர் வர்த்தக சங்க தலைவர் மாதவன் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எடையூர் சங்கேந்தி பகுதியை சுற்றி பின்னத்தூர், உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம், செறுபனையூர், பாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை எடையூர், நாச்சிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியிலும், பாண்டியில் உள்ள உயர்நிலை பள்ளியிலும் படிக்க வைத்து வருகின்றனர்.

    ஆனால், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வாறு வேண்டுமேயானால், பல கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது.

    அவ்வாறு அங்கு சென்று படித்து வரும் மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எடையூர் கிராமத்தை மையமாக வைத்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
    • பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்ததி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

    1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்பட ல்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

    இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

    எனவே பள்ளிகள் திறப் பது மீண்டும் தள்ளி போகுமா? இல்லையா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    • உருக்கமான தகவல்கள்
    • கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    நாகர்கோவில், மே.31-

    நாகர்கோவில் மேலரா மன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்டெபின் (வயது 13).

    நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மாலையில் ஸ்டெபினும் அவரது சகோதரரும் வீட்டில் இருந்தனர். அப் போது ஸ்டெபினின் சகோ தரர் வெளியே விளையாட சென்றார். வீட்டில் ஸ்டெபின் மட்டும் இருந்தார். இந்த நிலையில் இரவு ஸ்டீபன் வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இளைய மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூத்த மகன் ஸ்டீபன் வீட்டுக்குள் இருப்பான் என அழைத்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    இதனைப் பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெபின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஸ்டெபின் தற்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அவரை விடுதி யில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு விடுதியில் சேர்ந்து படிக்க விருப்ப மில்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்க லாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    பலியான ஸ்டெபின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக் கிறது. பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.
    • தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல பள்ளியில் அமைந்துள்ள மின் சாதனங்கள், இணைப்புகள், மின் பணியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இருந்தால் அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு, கசிவு உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது.வகுப்பறைகள், மாணவர்களுக்கான இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்–தப்பட உள்ளது.
    • துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் குழந்தைகள் மாநகர பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிகளில் படித்து இடைநின்ற, படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் பேசும்போது, `பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அரசின் காலை உணவுத்திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதை சிறப்பாக செயல்–படுத்த வேண்டும். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 84 பேர் பள்ளி செல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவர்களின் தாய்மொழியை கற்றுக்கொடுக்கவும் ஆசிரியர்களை நியமிக்கலாம்' என்றார். இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பள்ளி திறப்பதற்குள் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 52.புதுக்குடி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் பழுதடைந்த வீடுகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக வீடு கட்டும் பணி, மேலபாலையூர் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி, 42.அன்னவாசல் ஊராட்சியில் ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சம்பா கட்டளை வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணி, எரவாஞ்சேரி மணவா ளநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பள்ளி திறப்பதற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாஸ்கர், சுவாமிநாதன் (ஊராட்சிகள்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • நம்புதாளையில் தொழிற்பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
    • இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை மேற்கு பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி தலைமையில் தொழிற்பயிற்சிப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், பாரூக், சித்தி விநாயகம், முத்துசாமி, தாளாளர் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேற்கு பள்ளி ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார். இங்கு பள்ளி படிப்பை முடித்த பலருக்கும் இந்த பள்ளி பயனுள்ளதாக இருக்கும் என்று எம்.பி. பேசினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ெதாகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன்-விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிப்பறை கட்டுவதற்கு ரூ.10 லட்சமும், கலையரங்கம் அமைப்பதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் அதனை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், மனோ கரன், ராதா பாண்டியராஜன், அஞ்சலிதேவி, ரத்தினம், அமுதா, காங்கிரஸ் நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
    • மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

    அவினாசி :

    சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. 1000 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது. அப்போது, சான்றிதழ்களை வழங்க பணம் வசூல் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

    இதுகுறித்து பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது, சேவூா் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் தனியாா் கடைகளில் சான்றிதழ்களை கலா் ஜெராக்ஸ் எடுப்பதற்காக மட்டுமே மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.100 வாங்கினோம். 25 மாணவா்கள் மட்டுமே சான்றிதழ் வாங்க வந்திருந்தனா். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனா். பின்னா் அதிகாரிகள் கூறியபடி மாணவா்களிடம் பெறப்பட்ட ரூ.100-ஐ அவா்களிடம் திரும்ப வழங்கி வருகிறோம் என்றனா்.

    • ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா பயிற்சி தொடங்கப்பட்டது.
    • கணித செயல்பாடுகள் உள்பட பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி இணைந்து நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பயிற்சி தொடங்கப்பட்டது.

    பயிற்சியில் திருத்து றைப்பூண்டி வட்டார வள மைய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா தலைமை தாங்கினார்.

    பயிற்சியில் ஆசிரியர் பாஸ்கர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் காகித மடிப்புகள், கணித செயல்பாடுகள் உள்பட பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

    விழாவில் கருத்தாளர்களாக வானவில் மன்றத்தை சேர்ந்த நித்யா, தமிழ் மொழி ஆகியோர் செயல்பட்டனர். இதில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் தேசிங்கு ராஜபுரம் ரேவதி, பாமணி பாலசுந்தரி, குணசீலி அருள்மணி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர்.

    ×