என் மலர்
நீங்கள் தேடியது "slug 97500"
- 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை
- காயமடைந்தவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இலவுவிளை பேழங்காட்டுவிளையை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த எழில் என்பவருக்கு நிதி நிறுவனம் மூலம் இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் எழில் முறையாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஏன் பணம் செலுத்தவில்லை என ஸ்டாலின் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எழில் விறகு கட்டையால் ஸ்டாலினை தாக்க பாய்ந்துள்ளார். அப்போது ஸ்டாலின் தந்தை ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் செல்வராஜ் (70) தடுக்க முயற்சித்துள்ளார்.ஆனால் எழில் ஆத்திரத்தில் செல்வராைஜ சரமாரியாக தாக்கி தலை மற்றும் கையில் காயம் ஏற்படுத்தி உள்ளார்.மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
காயமடைந்த செல்வ ராஜை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்துள்ள னர். செல்வராஜ் மனைவி ரோஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல செல்வ ராஜின் மூத்த மகன் சுனில் குமார் தந்தை செல்வராஜை தாக்கியது குறித்து ஏழிலின் வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டு கையிலிருந்த இரும்பு கம்பியால் வீட்டிலிருந்த டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் ஜன்னலை அடித்து உடைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
- சிறுமியை போலீஸ்காரர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் 13 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து கிடந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த அந்த சிறுமி தனக்கு உதவி செய்யும்படி அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு பலர் திரண்டனர். ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மாறாக, அந்த சிறுமியை செல்போனில் வீடியோ எடுப்பதிலும் புகைப்படம் எடுப்பதிலும் பிசியாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுமி தனது ரத்தக்கறை படிந்த கைகளை நீட்டி, உதவிக்காக அழைப்பதும், சுற்றி நிற்கும் ஆண்கள் அவளை வெவ்வேறு கோணங்களில் படம்பிடிப்பதில் மும்முரமாக இருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது. போலீசுக்கு தகவல் கொடுத்தாச்சா? என ஒரு குரல் கேட்கிறது. இன்னொருவர் காவல்துறை தலைவரின் போன் நம்பரை கேட்கிறார். ஆனால் அந்த சிறுமிக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தகவல் அறிந்து போலீசார் வரும் வரை அந்த சிறுமி வலியால் துடித்தபடி காத்திருந்தார். இதேபோல் அந்த சிறுமியை போலீஸ்காரர் தூக்கிக்கொண்டு ஓடி, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
விசாரணையில் அந்த சிறுமி, உண்டியல் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தும், ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியுடன் ஒரு வாலிபரும் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. எனவே, அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது உறுதி செய்யப்படும்.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
- இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
- ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துரைசாமி, வெங்கடேசன் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. மூத்த மகன் துரைசாமிக்கு சாதகமாக தாய் வள்ளியம்மாளும் இளைய மகன் வெங்கடேசனுக்கு சாதகமாக தந்தை ராமசாமி இருந்து வந்ததார். இந்நிலையில் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வள்ளியம்மாள் கணவர் ராமசாமியை அசிங்கமாக திட்டி தடியால் தாக்கி யதாக கூறப்படுகிறது.
இளைய மகன் வெங்கடே சனை அவரது அண்ணன் துரைசாமி மற்றும் துரைசாமி மனைவி அலமேலு ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கினர். இதனை பார்த்த துரைசாமியின் உறவினர் சுப்பிரமணி என்பவர் ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார். தலையில் காயம் ஏற்பட்ட ராமசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், வெங்கடேசன் சின்னசேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர்.இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்.
- 2 பேர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே பெத்தேல்புரம் குழிவிளையை சேர்ந்தவர் மரியதாஸ் (60).
இவரது மனைவி ஆன்லெட் புஷ்பம் (58). இவர் திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஆசிரியை தினமும் வேலைக்கு செல்ல குழிவிளை பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது அதே பகுதியை சேர்ந்த சுயம்பு மற்றும் வீரமணி ஆகியோர் கிண்டல் செய்வார்களாம். இதனால் அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தன்று மரியதாஸ் மனைவியுடன் காரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். குழிவிளையில் ஒரு கோவில் முன்பு செல்லும்போது சுயம்பு, வீரமணி அவரது காரை வழிமறித்தனர். மரியதாஸ் உடனே காரை வீட்டை நோக்கி ஓட்டினார்.
இதில் ஆத்திரமடைந்த இருவரும் காரை துரத்தி கொண்டு பின்னால் சென்றனர். வீட்டு முன் நின்ற காரிலிருந்து ஆன்லெட் புஷ்பம் இறங்கும்போது அவரை பிடித்து இழுத்து தாக்கினர். இதை தடுத்த கணவர் மரியதாசிற்கும் அடி-உதை விழுந்தது.இதில் படுகாயமடைந்த ஆசிரியை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மரியதாஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சுயம்பு, வீரமணி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- சண்முக பிரியா அவருடன் வேலை பார்க்கும் மாரியம்மாளிடம் தகராறு குறித்து கூறி உள்ளார்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் துறையூர் மேட்டில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சண்முக பிரியா (34). இவர் ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்ட போது கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து சண்முக பிரியா அவருடன் வேலை பார்க்கும் மாரியம்மாளிடம் கூறி உள்ளார். மேலும் தன்னுடைய கணவரை தண்டிக்க வேண்டும் என கூறினார். பின்னர் இவர்கள் 2 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி படுகாயம் ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி மதுரையை சேர்ந்த 8 பேர் கொண்ட கூலிப்படையை ரூ.3 லட்சத்துக்கு பேசி முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று மணிகண்டன் தனது டிரைவர் கார்த்திக் என்பவருடன் தொழிற்சாலையில் இருந்தார். அப்போது வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அவர் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தார். அப்போது அதில் தொழிற்சாலைக்கு வெளியே சிலர் நிற்பது தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் வெளியே சென்று உங்களுக்கு யார் வேண்டும் என கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து 8 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து மணிகண்டன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டனின் மனைவி சண்முக பிரியா மாரியம்மாளுடன் சேர்ந்து ரூ.3 லட்சம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தனது கணவரை தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சண்முகபிரியா, மாரியம்மாள் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.
- வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரிஷ்குமார் (வயது23). இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் வசூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (19) மற்றும் முருகன் (33) ஆகியோர் சிப்காட் பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதாகி உள்ளதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றும் அரிஷ்குமாரை அழைத்துள்ளார்கள்.
பின்னர் ஏற்பட்ட தகராறில் சீனிவாசன், முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து அரிஷ்குமாரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- முத்துப்பாண்டி குடும்பத்தினருக்கும், வேல்ராணிக்கும் தகராறு இருந்து வருகிறது.
- சரவணன், ராஜம்மாள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது வீட்டு முன்புள்ள பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணி மகள் வேல்ராணிக்கும் தகராறு இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இது சம்பந்தமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டியின் மோட்டார்சைக்கிளை வேல்ராணியும், அவரது தங்கை ராஜலெட்சுமியும் அடித்து உடைத்து, சேதப்படுத்தினர். இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி ராஜம்மாள் களக்காடு போலீசில் புகார் செய்தார்.
சம்பவத்தன்று அந்த வழியாக வந்த முத்துபாண்டியின் மகன் சரவணனிடம் (வயது 27) வேல்ராணி, அவரது தங்கை ராஜலெட்சுமி, ராஜலெட்சுமி மகன் அஜெய்செல்வன் ஆகியோர் எங்களை பற்றி எப்படி போலீசில் புகார் செய்யலாம் என்று கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் தகராறை செல்போனில் படம் எடுத்தார். இதைப்பார்த்த வேல்ராணி உள்பட 3 பேரும் செல்போனை தட்டி விட்டதுடன் சரவணனை கம்பால் தாக்கினர். இதனை தடுக்க சென்ற சரவணனின் தாயார் ராஜம்மாளையும் (50) கீழே தள்ளி தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் காயம் அடைந்த சரவணன், அவரது தாயார் ராஜம்மாள் ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரவணன் பணகுடி பேரூராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேல்ராணி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.
- 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்தனர். ஜீவிதா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
- ராஜகோபாலுக்கும், ஜீவிதாக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை:
கோவை கிணத்துக்க டவை அடுத்த சொக்கனூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 69). இவரது மகன் கார்த்திகேயன் (30). இவருக்கும் ஜீவிதா (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்தனர். ஜீவிதா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜீவிதா தனது தங்கை சத்தியா, அவரது கணவர் சக்திவேல், மற்றும் உறவினர் பாலன் ஆகியோருடன் கணவர் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த ராஜகோபால் வெளியே வந்து பார்த்தார். அப்போது ராஜகோபாலுக்கும், ஜீவிதாக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் சத்தத்தை கேட்டு கார்த்திகேயன் அங்கு வந்தார். அவரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜீவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜகோபால் மற்றும் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மர கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் பலத்த காயம் அடைந்த ராஜகோபால் மற்றும் கார்த்திகேயனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ராஜகோபால் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஜீவிதா, தங்கை சத்தியா, அவரது கணவர் சக்திவேல், மற்றும் உறவினர் பாலன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயமடைந்த பஸ் பயணி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே வெள்ளியாக்குளம் மேற்கு கரையை சேர்ந்தவர் ஹரிகுமார் (வயது 51).கூலித்தொழிலாளி.
19 வருடத்திற்கு முன் இவர் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் இடது கால் தொடை எலும்பில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அவரால் சரிவர நடக்க முடியாது. சம்பவத்தன்று இவர் குளச்சல் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல குளச்சலிருந்து திக்கணங்கோடு சென்ற மினி பஸ்சில் ஏறினார்.
மினி பஸ் டிரைவர் அவரை வெள்ளியாகுளம் நிறுத்தத்தில் இறக்கி விடாமல் குளவிளை நிறுத்தத்தில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் டிரைவருக்கும் ஹரிகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மினி பஸ் டிரைவர் , தொழிலாளி ஹரிகுமாரை தாக்கினாராம்.இதில் அவருக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஹரிகுமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து குளச்சல் போலீசார் மினி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காந்தபிரகாஷ் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
- காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கோவை
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் காந்தபிரகாஷ் (வயது 43). இவர் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டி செல்வி (33).
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காந்தபிரகாசிடம் ரூ.50 ஆயிரத்துக்கு வேர்க்கடலை வாங்கி உள்ளார். அதற்கான பணத்தை அவர் இதுவரை தரவில்லை என தெரிகிறது.
சம்பவத்தன்று பாண்டி செல்வி, வீராசாமியிடம் பணத்தை கேட்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை தருவதாக கூறினார்.
இதையடுத்து பாண்டி செல்வி வீடு திரும்பினார். சிறிது நேரம் கழித்து வீராசாமியின் மகன் டிரைவர் வேலை செய்து வரும் கார்த்தி (26)என்பவர் குடிபோதையில் காந்தபிரகாசின் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டு இருந்தார். சத்தத்தை கேட்டு பாண்டி செல்வி வெளியே வந்து கார்த்தியிடம் எதற்காக சத்தம் போட்டு கொண்டு இருக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் எதற்காக எனது வீட்டுக்கு வந்து பணம் கேட்டாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பாண்டி செல்வியை தாக்கினார். இதைகண்டு அதிர்ச்சி அைடந்த காந்தபிரகாஷ் ஓடி வந்து அவரை தடுத்தார். அப்போது அவரையும் அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கினார்.
கணவன்-மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பாண்டி செல்வி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
- இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஜ் கல்வி மையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் நேற்றைய பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் வருத்தமடைகிறோம். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
கல்வி இடங்களில் அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
- பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
கடந்த 18-ந்தேதி இரவு பொட்டியபுரம் அருகே ரவுடி கும்பல் ஒன்று சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (35) கண்டக்டர் பணியில் இருந்தார்.
பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த ரமேஷ் குமார், வேடியப்பன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் டிைரவர், கண்டக்டரை தாக்கியதாக பொட்டியபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் நவீன் (வயது 27), வேலு மகன் விஜய் (23), தங்கவேல் மகன் சின்னதுரை (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.