search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற் சவ திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது.

    வைகாசி மாத பிரம்மோற் சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.கனகவல்லி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் பெருமாள் தேரில் எழுந்தருளினார். முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். திண்டிவனம் நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழக்கங்க ளுடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திண்டிவனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பாக பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் தீன தயாளன், மாவட்ட பொருளாளர் கே.வி.என். வெங்கடேசன், பி.ஆர்.எஸ். உரிமையாளர் ரங்க மன்னர், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமை யாளர் வெங்கடேசன் நிர்வாக அதிகாரி சூரிய நாராயணன், செயல் அலுவலகர் சிவசங்கர், ஒலக்கூர் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், கவுன்சிலர் லட்சுமி பிரபா மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் அருகே நொச்சியம் பூவாடையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய உற்சவ சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் மதியம் 12 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு மற்றும் சுவாமி குடிவிடுதலுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • உற்சவர்களுக்கு நறுமண திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    • தேருக்கு முன்னால் சிறுமிகள் கோலாட்டம் ஆடினர்.

    திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து மதியம் உற்சவர்களுக்கு நறுமண திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதேபோல் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேருக்கு முன்னால் சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

    தேரோட்டம் முடிந்ததும் உற்சவர்களுக்கு சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • சிலட்டூர் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தி கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • குரும்பலூரில் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் யானை, சிம்மம், ரிஷப வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், அக்னி மிதித்தல், பொங்கல் வழிபாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி, கே.புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பிரதான நான்கு வீதிகளின் வழியே இழுத்து வரப்பட்டு நேற்று மாலை நிலையை அடைந்தது. அதனைத்தொடர்ந்து பிராய்சித்த வழிபாடு நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் கிராம கரைக்காரர்கள் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராடுதல், விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் ேசாழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கேடயத்தில் எழுந்தருளிய அம்மன் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பக்தி கோஷம் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வந்த தேரை திரளாேனார் கண்டு தரிசனம் செய்தனர்.

    கடை வீதி, தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை சோழ வந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா மே மாதம் 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் முத்துமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். வழிநெடுகிலும் அம்மனுக்கு கஞ்சி காய்ச்சி படைத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் பால்குடம், வேல்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது
    • இன்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    விழாவில் மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்த போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக வைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் (மே) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 6-ந் தேதி வெள்ளி ரத புறப்பாடு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில்அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா,தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சௌரிராஜ பெருமாள்,பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவையொட்டி, வருகிற 6-ஆம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறு கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 6-ந்தேதி வெள்ளி ரத புறப்பாடு நடக்கிறது.
    • 7-ந்தேதி விடையாற்றி நடைபெறுகிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவுரிராஜபெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி வருகிற 6-ந்தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ந்தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • இன்று மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

    108 வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில் விளங்குகிறது.

    இக்கோவில் அருகே பெரியார் பஸ் நிலையம் அமைந்திருப்பதால், உள்ளூர், வெளியூர் என ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

    இக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூைஜகள் நடைபெற்றன. கோவிந்தா கோஷங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனர்.

    தேரடியில் இருந்து கிளம்பிய தேர் பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக வந்து, காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேரோடும் பாதையில் பக்தர்களுக்கு ஏராளமானோர் நீர்மோர், அன்னதானம் வழங்கினார்கள். நேற்று இரவு தங்க சிவிகையில் பெருமாள் எழுந்தருளி காட்சி அளித்தார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (5-ந்தேதி) கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள் அன்று இரவு வைகை ஆற்றங்கரையில் உள்ள ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந்தேதி கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் வெங்கலக்கடை தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் பெருமாள் கோவிலை வந்தடைகிறார். 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மதுரை

    மதுரை மத்தியில் அமைந்துள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான கூடலழகர்பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து சுவாமி-அம்பாள் காலையில் பல்லக்கிலும், இரவில் யானை, கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 8-ம் நாள் திருவிழாவான நேற்று பெருமாள் குதிரை வாக னத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் இன்று காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூைஜகள் நடைபெற்றன.

    கோவிந்தா கோஷங்கள் முழங்க 6.30 மணி அளவில் ேதரோட்டம் தொடங்கியது. பெண்கள், இளைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கா னோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திரு ப்பரங்குன்றம்சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியசையந்து வந்து கண்கொள்ளா காட்சி யாக இருந்து. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை 9 மணிக்குள் தேர் நிலையை வந்தடைந்தது. தேேராட்டத்தை முன்னிட்டு பெரியார் பஸ் நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று இரவு தங்க சிவிகையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். நாளை மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சிநடக்கிறது. 5-ந்தேதி கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள் அன்று இரவு வைகை ஆற்றாங்கரையில் உள்ள ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் 6-ந்தேதி கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் வெங்கலக்கடை தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்தி ரத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை திருமஞ்சன மாகி குதிரை வாகனத்தில் பெருமாள் கோவிலை வந்தடைகிறார். 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    ×