என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"
- சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர்.
- கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ பட்டதாரி ஆவார்.
இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, கண்ணகியை மூங்கில் துறைப்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், பெண்ணின் செயலால் கவுரவம் கெட்டு விட்டது என்று 2003-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங் குடிகாட்டில் உள்ள மயானத்திற்கு இழுத்து சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்து, பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்திய போலீசார் பின்னர் இரு குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்த நிலையில், 2003-ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
பின்னர் பல ஆண்டு களாக கடலூர் கோர்ட்டில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளி கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.
இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீசாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.
ஆனால் கடலூர் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, 2022-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மேலும் குற்றவாளிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
- பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
- பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது.
சென்னை:
சென்னையில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கடந்த 2015-ம் ஆண்டு 12 வயது சிறுமியும், அவரது பெற்றோரும் வாடகைக்கு வசித்து வந்தனர். அப்போது வீட்டு உரிமையாளரின் மருமகன் அப்பாஸ் அலி (வயது 41) அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அப்பாஸ் அலி, அந்த சிறுமியை சென்னையில் இருந்து கடத்தி சென்றார். சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
மேலும் பல்வேறு இடங்களுக்கும் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அப்பாஸ் அலி மட்டும் சென்னை திரும்பினார்.
இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை தேடினார்கள். 2 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அப்பாஸ் அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அப்பாஸ் அலி, அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதனால் சிறுமியும், அவரது பெற்றோரும் அங்கிருந்து தலைமறைவானார்கள். அவர்கள் தென் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.
அதன்பிறகும் அப்பாஸ் அலி, சிறுமி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதையடுத்து தாயும், மகளும் அங்கிருந்து வேறொரு கிராமத்துக்கு சென்றனர். பாதுகாப்பு கருதி அங்கு தங்களின் பெயர், விவரங்களை மாற்றி வாழத் தொடங்கினார்கள். பின்னர் ஒவ்வொரு ஊராக குடிபெயந்தனர்.
அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு உதவி செய்யவும், ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை. மேலும் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கும் செல்லவில்லை. தாயும், மகளும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். சுமார் 10 ஆண்டும் காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.
இது ஒருபுறம் இருக்க எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் போலீசார், தாயையும், மகளையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. 10 ஆண்டுகளாக அவர்களை தேடிய நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாயும், சிறுமியும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது. வழக்கு விசாரணையின் போது அவர், நீதிபதியிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தார். அப்பாஸ் அலி செய்த கொடுமையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடைய கல்வியும் பறிபோனது, என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அப்பாஸ் அலி சீரழித்து விட்டார் என்று கூறி அந்த பெண் கதறி அழுதார்.
அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மாதம் முதல் வாரத்தில் அப்பாஸ் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். அப்பாஸ் அலிக்கு தற்போது 51 வயது ஆகிறது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை 'ஒரு கும்பல்' உயிருடன் எரித்து கொலை செய்தது.
- முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரது மகன்களை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் கிராமத்தில் கடந்த 1999 ஜனவரி 21, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொலை செய்தது.
சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திர ஹெம்பிராம், தாரா சிங் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளி மகேந்திர ஹெம்பிராம் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நன்னடத்தை அடிப்படையில் மகேந்திர ஹெம்பிராம் தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 50 வயதாகும் மகேந்திர ஹெம்பிராம், சிறையில் இருந்து வெளிவந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றம் தொடர்பான ஒரு சம்பவத்தில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறையில் கழித்தேன்" என்று தெரிவித்தார்.
விடுதலை பெற்ற மகேந்திர ஹெம்பிராம்- ஐ வலதுசாரி இந்து முன்னணி அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் மாலை மரியாதையுடன் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றது.

- மற்றொரு நோயாளியை இறக்கிவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தினார்
- கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்றது.
கேரளாவில் 2020இல் கோவிட் தொற்று பாதித்த 19 வயது பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று சமயமான 2020 இல் செப்டம்பர் 5 ஆம் தேதி பத்தினம்திட்டா மாவட்டத்தின் அடூர் பொது மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள அர்ச்சனா மருத்துவமனை கோவிட் சிறப்பு வார்டுக்கு தொற்று பாதித்த 19 வயது பெண் ஆம்புலன்சில் மற்றொரு நோயாளியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
மற்றொரு நோயாளியை பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தி 19 வயது பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின் அப்பெண்ணை கொண்டு சேர்க்கவேண்டிய பந்தளம் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பியோடினார்.

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்ததை மருத்துவமனை ஊழியர்களிடமும் பெற்றோரிடமும் முறையிட்டார். இதைத்தொடர்ந்து வழங்கப்பட புகாரில், அடுத்த நாளே அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் நௌபல் (Noufal) கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று அவர் குற்றவாளி என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
- திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் அருகேயுள்ள பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட்(எ) செந்தமிழ்ச்செல்வன்(வயது 31) பரோட்டா மாஸ்டரான இவர், கடந்த 4.7.2021 அன்று தனது உறவினர் மகளான 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இது குறித்து புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் செந்தமிழ்ச்செல்வனை ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்தமிழ்ச்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார்.
- கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி வினோதினியுடன் கடற்கரைக்கு சென்றிருந்த என்ஜினீயர் கதிரவன் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நானும், கணவர் கதிரவனும் கண்ணை கட்டிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.
கணவரின் கண்ணை கட்டி விளையாடியபோது வழிப்பறி கொள்ளையர்கள் அவரை தாக்கியதுடன் எனது தாலி செயினையும் பறித்துச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.
வினோதினியின் செயல்பாடுகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கதிரவனை, வினோதினிக்கு தெரிந்த நபரே வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
அந்த நபர் வினோதினியின் காதலனான அந்தோனி ஜெகன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு வினோதினி வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலமானது.
இதுதொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் வினோதினியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்பது தெரியவந்தது. வினோதினியும், அந்தோனி ஜெகனும் காதலித்து வந்த நிலையில் கதிரவன், வினோதினியை திருமணம் செய்துள்ளார். இவரது ஊர் தூத்துக்குடி ஆகும். காதலன் அந்தோனி ஜெகன் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர்.
திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார். அப்போதுதான் கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வினோதினி, அந்தோனி ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் திருவான்மியூர் போலீசார் கேமரா காட்சி ஆவணங்களை முறையாக தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாலியல் தொல்லை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
- மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் என்ற தினேஷ்குமார் (வயது 19). இவர் 18 வயது மாற்றுத் திறனாளி பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பம் தரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள தினேஷ்குமார் மறுத்துள்ளார். இதனிடையே, அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷ்குமார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
- லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றபின் காணவில்லை.
- கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. ஒரு மாதத்திற்கு மேல் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரி கேரள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லிதுவேனிய பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையில் அவரது உடல் கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை வெளிநாட்டு பெண்ணின் சகோதரி அடையாளம் காட்டினார்.
பின்னர் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தினர்.இதில் அந்த பகுதியை சேர்ந்த உதயன் (வயது 27), உமேஷ் (31) ஆகியோரை பிடித்தனர்.
இவர்களில் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். இன்னொருவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இருவரும் வெளிநாட்டு பெண்ணை சம்பவ தினத்தன்று மாங்குரோவ் காட்டுக்கு கடத்தி சென்று போதை மருந்து கொடுத்துள்ளனர். பின்னர் அவரை வலுகட்டாயமாக கற்பழித்து உள்ளனர். அப்போது நடந்த தகராறில் இருவரும் அந்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு உடலை மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு திருவனந்தபுரம் முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் கைதான உதயன், உமேஷ் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விபரத்தை இன்று அறிவிப்பதாக கூறி இருந்தது. அதன்படி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பு கூறினார்.
மேலும் இருவரும் தலா ரூ.ஒரு லட்சத்து 65 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அதனை பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையை கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி லிதுவேனியாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார். இதற்காக லிதுவேனியா தூதரகம் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் நடக்கும் விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க அனுமதித்திருப்பது இதுவே முதல் முறை எனக்கூறப்படுகிறது.
- லட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார்.
- சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக, 3 மாதம் சிறை, 500 ரூபாய் அபராதம், தாக்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த துடுக்கனஹள்ளி முத்தூரான் கொட்டாயை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). இவரது கணவர் திருப்பதி. இவர் கடந்த, 2016-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இவரது குடும்ப சொத்துக்களை திருப்பதியின் அண்ணன் கோவிந்தசாமி (55) பராமரித்து வந்தார். சொத்து பிரிப்பதில் லட்சுமியுடன் அவருக்கு பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் கோவிந்தசாமி அவரது மகன் சக்தி பராசக்தி (29), மருமகள் சித்ரா (26) ஆகியோர் லட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார்.
இது குறித்து கே.ஆர்.பி., அணை போலீசார் வழக்கு பதிந்த நிலையில் கோவிந்தசாமி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சுதா தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தசாமி அவரது மகன் சக்தி பராசக்தி ஆகியோருக்கு பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காக, மூன்று மாத சிறை, 500 ரூபாய் அபராதம், ஆயுதங்களால் தாக்கிய குற்றத்திற்காக, 2 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் கொலை குற்றத்திற்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்தார்.
சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக, 3 மாதம் சிறை, 500 ரூபாய் அபராதம், தாக்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் இவர்கள் மூவரும் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தர விட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.
- வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
- பாலியல் வன்கொடுமை வழக்கில்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த கோடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வகணபதி (22). கூலித் தொழிலாளியான இவர், 12 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெய ங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், செல்வகணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளி க்கப்பட்டது. இதில் குற்றவாளி செல்வக ணபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து செல்வகணபதி திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார்.
- கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 5 பேர் தவிர 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார், பெரியவிளை, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் விஜிகுமார் (வயது 26).
இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரியவிளையை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண் குமார் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை ஆனார்கள்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ், பெரியவிளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண்குமார் உட்பட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். இதில் இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரிய விளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மீதமுள்ள 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷுக்கு கொலை முயற்சி வழக்குக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழிமறித்து தாக்குதல் குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார்.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.
- நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.