search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98766"

    • பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அளவீடு செய்ய மறுத்தமைக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த விளாமுத்தூரை சேர்ந்தவா் விவசாயி சந்திரசேகர் (வயது 53). மாற்றுத்திறனாளியான இவர், நொச்சியம் கிராம எல்லையில் உள்ள ஏறத்தாழ 49 சென்ட் நிலத்தில் தனது மகன் சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார். இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிலம் அளப்பதற்குரிய கட்டணமும் செலுத்தியிருந்தார்.

    இதுதொடர்பாக சந்திரசேகர் நில அளவைத்துறையினரை பலமுறை நேரில் அணுகினார். ஆனால் அவரது மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராம மக்கள் சிலர் ஆட்சேபணை தெரிவிப்பதாக கூறி வட்ட துணை ஆய்வாளர், மனுதாரர் சந்திரசேகரின் நிலத்தை அளந்துகாட்டி, எல்லைக்கற்கள் நடாமல், அவரை அலையவிட்டுள்ளார். நில அளவைத்துறையினரின் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர், தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வட்ட துணை ஆய்வாளர், பெரம்பலூர் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நில அளவையர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். பெரம்பலூரில் சந்திரசேகரின் மனுவின் மீது உரிய தீர்வு காணாமல் சேவைக்குறைபாடு காரணமாக அவரை அலையவிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியமைக்காக வட்ட துணை ஆய்வாளர் ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அவரது நிலத்தை அளவீடு செய்து நான்கு புறத்திலும் எல்லைக்கல் நட்டுத்தரவேண்டும் என்றும், அதனை அறிக்கையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், மேலும் மற்ற எதிர்மனுதாரர்களான தாசில்தார் முதல் கலெக்டர் வரை அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தனர்.

    • கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டராக அருண் தம்பராஜ் நேற்று முன்தினம் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலை யில் இன்று காலை கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருள் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை யில் ஆய்வு கூட்டம் நடை பெற்றது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாநகராட்சியில் குடிநீர், சாலை, தூய்மை பணிகள், தெரு மின்விளக்கு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதி காரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு திட்டப் பணிகள் குறித்தும் அந்த பணி நடைபெறும் மாதங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு, தற்போது பணிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது சென்னையில் உள்ள சாலைகள் போல் கடலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். மக்களை கண் கவர கூடிய தெரு மின்விளக்குகள், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பார்க்கிங் வசதி, சாலைகளில் முகம் சுளிக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை உடனுக்கு டன் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை விரைந்து முடித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகை யில் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்படும் அனைத்து பணிகளையும் அந்தந்த கால அவகா சத்திற்குள் தரமாக கட்ட மைத்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களுக்கு உடனுக்குடன் அந்தந்த பணிகளுக்கான தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டும் இன்றி மாநகராட்சி முழுவதும் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேங்காத வகையில் துப்புரவு பணி யாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மையான மாநகராட்சி யாக வைத்திருக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் நடை பெறும் பணிகள் தொய்வு ஏற்படாத வகையி லும், பணிகள் காலதாம தமானால் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக் கொண்டார். இதில் மாநக ராட்சி கவுன்சிலர்கள், அனைத்துதுறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    • அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்ப டுவதாக தி.மு.க.நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.
    • 90 நாட்களுக்கு அந்த மதுபான பார் செயல்பட தடைவிதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் நால்ரோடு அருகே உள்ள தனியார் மதுபான பாரில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்ப டுவதாக தி.மு.க.நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாவட்ட கலால் துறை உதவி இயக்குனர் ராம்குமார், கோட்ட கலால் அலுவலர் ராகவி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், அந்த மதுபான பாரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அந்த பார் செயல்பட்டு வந்ததாகவும், அதில் உறுப்பினர்களைத் தவிர வேறு நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து 90 நாட்களுக்கு அந்த மதுபான பார் செயல்பட தடைவிதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  

    • கடலூர் உட்கோட்ட டி.எஸ்.பியாக கரிகால் பாரிசங்கர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
    • கடலூரில் விரைவில் புதிய போலீஸ் டி.எஸ்.பியாக பிரபு பதவி ஏற்க உள்ளார் .

    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபு ரிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு களை பணியிட மாறுதல் செய்து தமிழக டிஜிபி சைலே ந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் உட்கோட்ட டி.எஸ்.பியாக கரிகால் பாரிசங்கர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் டி.எஸ்.பி கரிகால் பாரிசங்கரை கோயம்புத்தூர் போட்ட னூர் பகுதிக்கு உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிட பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை உட்கோட்ட டி.எஸ்.பியாக இருந்து வந்த பிரபு கடலூர் டி.எஸ்.பியாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலூரில் விரைவில் புதிய போலீஸ் டி.எஸ்.பியாக பிரபு பதவி ஏற்க உள்ளார் என போலீஸ் அதிகாரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டன.

    • நகர ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமல், இரும்பு உருக்கு ஆலை ஊராட்சி பகுதியில் இயங்கி வந்துள்ளது.
    • தவறும் பட்சத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    பல்லடம் அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக, அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆலையின் எந்திர இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், நிரந்தரமாக மூட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். இச்சூழலில், நான்கு வாரத்துக்குள் ஆலையை அகற்றிக் கொள்ளுமாறு ஊராட்சி நிர்வாகம் உருக்கு ஆலைக்கு உத்தரவிட்டுள்ளது.

    அனுப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், தனியார் இரும்பு உருக்கு ஆலை நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள உத்தரவு கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நகர ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதி பெறாமல், இரும்பு உருக்கு ஆலை ஊராட்சி பகுதியில் இயங்கி வந்துள்ளது.ஊராட்சி சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவித விளக்கமும் அளிக்காமல், சம்பந்தம் இல்லாத பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற ஊரமைப்பு துறை மற்றும் ஊராட்சி சார்பில் கட்டுமானம் செய்வதற்காக வழங்கப்பட்ட உத்தரவு நகல்கள் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு தெரியப்படுத்தியும் எந்தவித ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

    எந்தவித அனுமதியும் பெறாமல் ஆலை இயங்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு ஊராட்சி கட்டட விதிகளின்படி, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆலையை நான்கு வாரத்துக்குள் சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் எந்த வித கட்டுமான பணிகள் மேற்கொள்ளாமலும், ஆலையை இயக்காமலும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி சமயபுரத்தில் லாட்ஜ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்
    • லால்குடி டி.எஸ்.பி.அஜய் தங்கம் உத்தரவு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் லால்குடி சமயபுரம் பகுதியை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர்களுடனான போலீசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், லாட்ஜிகளில் சிசிடிவி கேமிரா பொருத்திட வேண்டும். வருகை பதிவேட்டில் அடையாள அட்டை, ஸிராக்ஸ் காப்பி பெற வேண்டும். சந்தேக நபர்களாக தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபான விற்பனை, சூதாட்டம், விபச்சாரம், மசாஜ் போன்றவற்றை அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும். வாகன நிறுத்தம் இடம் உரிய வகையில் ஏற்படுத்திட வேண்டும். நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட வேண்டும். விடுதியில் தங்குவோர் பட்டியல் தினமும் காலை 7 மணிக்கு காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். காவல் நிலைய தொலைபேசி எண்கள் பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சமயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் செய்திருந்தார்.

    • பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    15வது நிதி குழு மானியத் திட்டத்தில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம், முதல்வரின் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்டுவது, பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை புனரமைப்பது, புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவது, பள்ளிகளில் புதிய சமையலறை கூடம் கட்டுதல் ஆகியற்றை வேகமாக முடிக்க வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.


    • பூங்கா அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
    • ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் பட்டணம் காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து சேதுபதி நகர் முதல் தெருவில் ரூ.23.24 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி உள்ளதை பார்வையிட்டு வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.சேதுபதி நகர் நீரேற்று நிலையம் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் புதிதாக நீடிப்பு செய்யும் பணி ரூ.23.19 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள உள்ளதையொட்டி அதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட இந்த பணியை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் பட்டணம் காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா பகுதிக்கு சென்று வெளிப்புற பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

    • 5 நாளில் 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாத துவக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகிய பாதிப்பு, கடந்த 4நாட்களாக இரட்டை இலக்கத்துக்கு மாறியுள்ளது.

    இதனால் 5 நாளில் 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை கண்காணி ப்பில் இருப்போரின் எண்ணிக்கை 90 ஐ எட்டியது. தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனை களை அதிகப்படுத்த மாவட்ட மருத்துவத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இனி 100 முதல், 150 பேருக்கு பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    • இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    தாராபுரம் :

    ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் பலர் ஆர்கானிக் எனும், இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இயற்கை உணவுப் பொருட்கள் என்ற பெயரில், போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு உணவுப்பொருள் நிஜமாகவே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய தெரியாத வாடிக்கையாளர்களே, இது போன்ற நிறுவனங்களின் இலக்கு.

    பொதுமக்கள் மீது சுமத்தப்படும் இந்த மோசடி வியாபாரத்தை தடுக்க கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண் துறையுடன் இணைந்து, 'ஆர்கானிக்' உணவுப் பொருட்களின் உற்பத்தி முறைகள், பரிசோதனை முறைகள், விற்பனை குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் ஆர்கானிக் பொருட்கள் வாங்கும் போது போலிகளை தவிர்க்க ஆர்கானிக் முத்திரை, உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு எண் லேபிளில் உள்ளதா என்பதை உறுதி செய்து பின்னரே வாங்க வேண்டும் என்றனர்.

    • யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
    • இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 ேபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆயுதப்படை போலீசார் யுவராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • நகர்ப்புற மைய டாக்டர்களின் நோட்டீஸ்க்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கடந்த 34 மாதங்களில் எத்தனை பிரசவங்கள் நடந்தன? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 592 பிரசவங்கள் மட்டுமே நடந்தது தெரிய வந்தது. அதே காலகட்டத்தில் சுமார் 14 ஆயிரத்து 291 கர்ப்பிணிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்து ரைக்கப்பட்டு உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையங் களில் குறைவான பிரசவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசார ணைக்கு உத்தரவிட்டனர்.

    அப்போது மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட கரிசல் குளம், தெற்குவாசல், வண்டியூர், விராட்டிபத்து, முனிச்சாலை, அனுப்பா னடி, பைக்காரா, திருப்பரங் குன்றம் ஆகிய 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் குறைவான பிரசவம் நடந்தது தெரிய வந்தது.

    எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார மையங்களின் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் "நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதற்காக குறைவான பிரசவம் நடந்து உள்ளது? இதற்கான விளக்கங்களை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை மாநக ராட்சி நகர்நல அலுவ லர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ×