என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம்"
- சாராயம் குடித்த 6 பேருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
- கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வேம்பி மதுராபூரிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்தார். அதே ஊரை சேர்ந்த ராஜா (37), சுரேஷ்பாபு (36), பிரகாஷ் (38), காளிங்கராஜ் (47), பிரபு (35) ஆகியோருடன் சேர்ந்து சாராயத்தை குடித்துவிடடு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.
நள்ளிரவு நேரத்தில் சாராயம் குடித்த 6 பேருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இவர்களை அவரது குடும்பத்தார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் அருந்திய சாராயம், புதுவை-விழுப்புரம் எல்லையோர கிராமமான மதகடிப்பட்டில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த மேலும் 5 பேர் புதுவை மாநில சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் சாராய கடைகளுக்கான ஏலம் கடந்த ஒரு வாரமாக நடைபெறுகிறது. இதில் ஏலம் போன் கடைகளில் மட்டுமே சாராய விற்பனை நடைபெறுகிறது. மற்ற காடைகளில் சாராயம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதியில் எல்லையோரங்களில் சாராயம் மற்றும் மதுபான கடைகள் நடத்துவதற்கும் தடை விதித்து புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் இருந்து பாக்கெட் சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்தது யார்? இது கள்ளச்சாராயமா? மெத்தனால் கலந்த சாராயமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், விக்கிரவாண்டி பகுதியில் புதுவை மாநில சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை.
- ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன்படி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு இன்று நேரில் சென்ற அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜூன் மாதம் 23-ந்தேதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 65 பேர் உயிரிழந்தது தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு அண்ணாமலைதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அண்ணாமலை கூட்டு சதி செய்து எங்கோ ஒரு இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை கொண்டு வந்து கொடுத்ததாலேயே மக்கள் இறந்துள்ளனர் என்று சொல்லி இருந்தார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்து எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை. என் மீது எத்தனையோ பொய் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் கூறப்பட்டுள்ளன.
ஆனால் நான் யார் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லை தாண்டி சென்று விட்டது. 80 வயதை தாண்டிய அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வின் காலம் முழுமையாக முடிந்து விட்டது என்பதை தெரிந்த பிறகு அவரது வாயில் இருந்து அவதூறு மற்றும் பொய் பேச்சுகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன.
அதனுடைய வெளிப்பாடாகத்தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு நான்தான் காரணம் என்று குற்றம் சுமத்தி உள்ளார்.
இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளோம். இந்த பணத்தை அவரிடமிருந்து பெற்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக அங்கேயே ஒரு முகாம் அமைக்க உள்ளோம். அதுவே எங்கள் நோக்கம்.
எனவே இந்த வழக்கை கம்பீரமாக எடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம். ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்பப்படும். இந்த வழக்கை கடைசி வரை எடுத்துக் கொண்டு செல்வோம். இத்தனை ஆண்டுகளாக தி.மு.க.வை யாரும் எதிர்காமலேயே இருந்தனர். இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பப் போகிறோம்.
அவரிடமிருந்து பெறப் போகும் ரூ.1 கோடி பணத்தை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப் போவதாகவும் அபிடவிட் மனுவில் தெரிவித்து உள்ளோம்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி என்னைப் பார்த்து சின்னப் பையன் என கூறியிருந்தார். யார்-யாரையெல்லாமோ நான் சிறைக்கு அனுப்பி இருந்தேன். எனது கையில் ஜாதக ரேகை நன்றாக உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் என்ன செய்யப் போகிறேன் என்பதையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.
இந்த சின்ன பையன் ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை என்ன செய்யப்போகிறார்? என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் நாங்கள் விடப் போவது இல்லை. எல்லோரும் ஒதுங்கிப் போவதால்தான் பி.ஏ. படித்தவர்களை அவர் நாய் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஆணவத்தை தாண்டி அட்டூழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். டாஸ்மாக் மது விற்பனை பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். யாரெல்லாம் சாராய ஆலை வைத்துள்ளனர். முறையாக தயாரிக்கப்படுகிறதா? என்பது பற்றியெல்லாம் விசாரணை நடத்த வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சியினரே கேட்கிறார்கள். அது போன்ற ஒரு விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் செம்மேடு காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிக்கு சென்றபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகம்படும்படி கையில் வெள்ளை நிற கேனுடன் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசார் வருவதை கண்டதும் கேனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.
உடனே போலீசார் சுதாரித்து கொண்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், பென்னாகரம் அருகே மஞ்சாரஅள்ளியை அடுத்த டி.சோளப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது51) என்பவர் 10 லிட்டர் கேனில் கள்ளச்சாரயம் விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார்.
- கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் உள்பட 9 போலீசார் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய சாவு சம்பவத்தின் எதிரொலியாக புதிய போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட78 போலீசாரை பணியிடமாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அலெக்ஸ் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுருகன் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், உளுந்தூர்பேட்டை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருக்கோவிலூர் அமலாக்க மதுவிலக்கு பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 14 போலீசார், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த போலீசார், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் ஒரே நாளில் 5 சப்-இன்ஸ் பெக்டர்கள் உள்பட 78 போலீசாரை பணியிட மாற்றம் செய்திருப்பது சக போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 65 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கல்வராயன் மலையில் இருந்து நகர்ப்புறங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்துவதை தடுக்க, மலை அடிவார பகுதிகளில் புதிதாக 4 சோதனை சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுக்க, 100க்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பன்னிப்பாடி செல்லும் சாலை, வெள்ளி மலை செல்லும் சாலை, மூலக்காடு, சிறுவாச்சூர் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை சாவடியில் 4 போலீசார் வீதம் 16 பேலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
- அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை:
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். அதனால் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது. அவ்வாறு கருதவும் கூடாது.
தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக தொகை இழப்பீடு வழங்கப்படுகிறது? என்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு தெளிவுப்படுத்தவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ இல்லை.
அவர்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதை ஏற்க முடியாது. இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த இழப்பீட்டு தொகையை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியுமா? என்று அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
- ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
- போலீசார் அலங்குளம் விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராய வியாபாரிகளை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அருகே மண்மலை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை அறிந்த கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் கேரள மாநிலம் அலங்குளத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அலங்குளம் விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை போலீசார் கச்சிராயப்பாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் 110 லிட்டர் கள்ளசாராயத்தை வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.
- கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் தமிழக அரசு நிர்வாகத்தின் முழுமையான செயல் இழந்துள்ளதை காட்டுகிறது.
ஒரு ஆண்டுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் இதேபோல் சம்பவம் நடந்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உள்துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் கேட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு ஆதரவுடன் தமிழ்நாடு முழுதும் டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் குறைந்த விலை கள்ளச்சாராயத்தை மக்கள் நாடுவதால் இந்த மரணங்கள் நடந்துள்ளது.கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்புக்கு மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு நடவடிக்கைகளை கடுமையாக எடுக்க வேண்டும்.
அதை விடுத்து அடுத்த மாநில அரசுகள் மீதும் அண்டை மாநிலம் மீதும் பழி கூறி தப்பிக்க கூடாது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது மட்டும் போதாது. அவர்களது குடும்பத்திற்கு வேலை வாய்ப்பும் அளிக்க வேண்டும்.
கள்ளசாராய மரணங்களுக்கு தி.மு.க.வின் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாய் திறக்கவில்லை. நீட் விவகாரத்தை அரசியலாக்கி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாதேஷ், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உள்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாதேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கடந்த 4 மாதங்களாக மெத்தனாலை வாங்கி விற்பனை செய்து வந்தேன் கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டை, சேஷசமுத்திரம், மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனால் வாங்கி சப்ளை செய்துள்ளேன். சென்னையில் உள்ள கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் ஆகியோரிடம் ஒரு பேரல் ரூ.11 ஆயிரம் என 19 பேரல் வாங்கினேன். ஒரு பேரலை 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்வேன்.
முதல் கட்டமாக கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்து அது வெற்றி பெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனை அதிகரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தேன்.
இதற்காக பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன். ஆனால் முதல் கட்டமே தோல்வியடைந்து கள்ளக்குறிச்சியில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.
இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.
சேஷசமுத்திரத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது:-
நான் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். ஊர் முக்கியஸ்தர்கள் மத்தியில் சாராயம் விற்பனைக்கு ஏலம் விடப்படும். அந்த ஏலத்தை அதிக விலை கொடுத்து எடுத்து சாராய வியாபாரம் நடத்தி வந்தேன். அதன் படி கன்னுகுட்டி என்கிற கோவிந்தராஜுக்கும் பலமுறை சாராயம் சப்ளை செய்திருக்கிறேன்.
இந்நிலையில் கோவிந்தராஜன் மது பிரியர்களின் ஆசையை நிறைவேற்ற என்னிடம் மெத்தனால் கேட்டதால் அவருக்கு சப்ளை செய்தேன். மீதி மெத்த னாலை சூளாங்குறிச்சி கண்ணனிடம் பதுக்கி வைத்திருக்க சொன்னேன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பு அறிந்ததும் பயத்தில் கண்ணனிடம் இருந்து மெத்தனாலை அழிக்குமாறு கூறினேன். அவரும் கீழே கொட்டி அழித்துவிட்டார். இவ்வாறு சின்னதுரை வாக்குமூலம் அளித்துள்ளார்.
கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல ஆண்டு களாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டுவந்தோம். அப்போது எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மது பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப போதையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மெத்தனாலை வாங்கி கலந்து சாராயம் விற்பனை செய்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. இதில் எங்கள் உறவினர்களும் இறந்துள்ளனர்.
பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கண்பார்வையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமின் பெற்று வெளியே சென்றாலும், வழக்கு முடிந்து வீடு திரும்பினாலும் உறவினர்களின் முகத்தில் எப்படி விழிப்பது என்று நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
இவர்களது வாக்கு மூலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோவில் பதிவு செய்து அதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
- பண்ருட்டி அருகே பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
- பெட்ரோல் பங்க்-கிற்கு கீழ் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், பண்ருட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் மெத்தனால் பதுக்கி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-கிற்கு சீல் வைக்கப்பட்டது.
பெட்ரோல் பங்க்-கிற்கு கீழ் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் 5 பேரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
- குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
- தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மது டெட்ரா பேக்கில் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ரூ.140-க்கு விற்கப்படுவதால் கூலி வேலை செய்பவர்களால் அதை வாங்கி குடிக்க முடியாமல் கள்ளச்சாராயம் வாங்கி குடிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளில் குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
இது சம்பந்தமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 90 மில்லி மது டெட்ரா பாக்கெட்டுகள் விற்பனை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி மது டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
டெட்ரா பாக்கெட்டுகளில் விற்கப்படும் சிறிய அளவிலான மது வகைகள் எந்த அளவுக்கு அங்கு புழக்கத்தில் உள்ளது என்பது பற்றியும் விவரம் சேகரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மதுபானங்களை தீபாவளி முதல் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்