என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soldiers killed"

    • 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
    • 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.

    மேலும், கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ, அழைத்து செல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கெச் மாவட்டத்தின் புலேடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர். இதில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.
    • இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர்.

    கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தின் ரோந்து பணியின்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கூடுதல் படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

    இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் ரோந்து சென்ற ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதுடன், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

    • சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
    • ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.

    மேற்கு வங்காள மாநிலம் பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த பீட்டர், அரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபேதார் கே தங்கபாண்டி ஆகியோர் அடங்குவர் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அனைத்து ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.

    • ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
    • ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.

    கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர். 

    வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

    • இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
    • மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.

    இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
    • சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.

    இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    இந்நிலையில், வீரர்கள் இரண்டு பேரின் உடல்களை அமைச்சர் டேங் ராம் வெர்மா தோளில் சுமந்தபடி சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜம்மு காஷ்மீரில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது.
    • அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல்.
    • 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் 9 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

    வேனில் சென்று கொண்டிருந்தபோது நக்சல்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், வாகனத்தில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.

    நிலத்தில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    • பிஜப்பூரில் பாதுகாப்பு வீரர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
    • மார்ச் 2026-க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படையினர் 8 பேர் உயிரிழந்தனர்.

    நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இச்சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    "பிஜப்பூரில் பாதுகாப்பு வீரர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது. ஆனால் நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று உறுதியளிக்கிறேன். மார்ச் 2026-க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்".

    இவ்வாறு அமித்ஷா தனது 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளார்.

    இது கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்காரில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    திருப்பதி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    தலைமைக்கான தகுதிகளில் முக்கியமான தகுதி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்னும் குறிப்புடன் எனது பேச்சை தொடங்குகிறேன். அவ்வகையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என மத்திய அரசு அளித்திருந்த அந்த வாக்குறுதியை மத்தியில் அமையப்போகும் காங்கிரஸ் அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாங்கள் இந்த மாநிலத்தில் ஆட்சி செய்கிறோமா, இல்லையா? என்பது முக்கியமில்லை. ஆனால், இந்த நாட்டின் பிரதமரால் முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதியும் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இந்த நாட்டில் உள்ள நூறு கோடிக்கும் அதிகமான மக்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாக பார்க்க வேண்டும்.

    ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் அந்த நாடே பேசுவதாக அர்த்தம் கொள்ள வேண்டும். எனவே, மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் பலமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

    ‏மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என்னும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    ஆந்திராவுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிறைவேறாத பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை, மேக் இன் இந்தியா, ஸ்டிராட் அப் இந்தியா என பொய்மேல் பொய்யாக நாங்கள் சொல்ல மாட்டோம்.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், மத்தியபிரசேதம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சி அமைத்த இரண்டே நாட்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். 

    அதேபோல், ஆந்திர மக்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்புக்காக நிச்சயமாக சிறப்பு மாநில அந்தஸ்தை நாங்கள் அளித்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ளது நவ்ஷேரா பகுதி. இங்குள்ள லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #MilitantsAttack
    ×