என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special camp"

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம்.
    • தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.

    இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

    தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

    கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.

    அமெரிக்காவில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

    அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர்.

    ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும்.

    சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன் மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
    • மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    இதற்கான சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளவும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திற னாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினர்.

    இதில் ஒன்றிய துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தகரகுப்பம் முனியம்மாள் பிச்சாண்டி, வெங்குப்பட்டு ராமன், புலிவலம் நதியாமதன்குமார், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், விஏஓ ராஜகோபால், ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி மற்றும் சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடை பெற்றது.
    • முகாமில் வீடு, முதியோர் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் போன்ற கோரிக்கையாக 41 மனுக்களும், பஸ், ரெயில் பஸ்பாஸ் வசதி கேட்டு மேலும் சில மனுக்களும் அளிக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வரவேற்று பேசினார்.

    நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்பாநாயக்கன்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார் நத்தம், எத்திலோடு, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி கலந்து கொண்டனர்.

    முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்த அரசு மருத்துவ எலும்பு நிபுணர் டாக்டர்கள் பரிசோதனை செய்து பின்னர் சான்று வழங்காமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்யும் விதமாக உரிய ஆவணங்களோடு திண்டுக்கல் வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த மாற்றுத்திறனாளிகளின் சங்க மாநிலத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் சிலர் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.

    முகாமில் வீடு, முதியோர் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் போன்ற கோரிக்கையாக 41 மனுக்களும், பஸ், ரெயில் பஸ்பாஸ் வசதி கேட்டு மேலும் சில மனுக்களும் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களில் ஒரு சிலருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆறுமுகம், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மிருனாலினி, மண்டலத் துணை தாசில்தார்கள் சரவணன், மூர்த்தி, அபிராமி, வருவாய் ஆய்வாளர்கள் பிரியங்கா, அறிவழகன், பிரேமலதா, நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆற்றாங்கரை கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றாங்கரை கிராமத்தில் 2021-2022 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அரசின் சார்பில் கிராமத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கணவர் இல்லாத வயது முதிர்ந்த பெண்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரகுராமர், கால்நடை உதவி மருத்துவர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரசல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, மகளிர் திட்ட மேலாளர் அருள்செல்வி, வார்டு செயலாளர் லெனின், கிளை செயலாளர்கள் பிச்சை, சிங்கராஜ், கருப்பசாமி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் “நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் மூலம் பயிற்சி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
    • சிறப்பு முகாம் காலை 10மணிக்கு தொடங்கும்.

    திருப்பூர் :

    தமிழக அரசால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், 2021 மற்றும் 2021 -2022 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களில் கணிதம் மற்றும் வணிக கணிதத்தில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் 'Tech Bee"- Early Career Training Programமூலம் பயிற்சி அளித்து முழுநேர பணிவாய்ப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு கீழ்க்கண்ட பட்டியல் படி சிறப்பு முகாம் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது.வருகிற 7-ந்தேதி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, 8-ந்தேதி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9-ந்தேதி தாராபுரம் என்.சி.பி.நகரவை மேல்நிலைப்பள்ளி, 10-ந்தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10மணிக்கு முகாம் தொடங்கும். இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
    • கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ அலுவலகம் மூலம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒன்றிய மற்றும் மாநில அரசின் சுயவேலைவாய்ப்பிற்கான கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மானியத்துடன் கூடிய சிறு குறு தொழிற் கடன்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் தொழில் முனைவோருக்கான அரசின் கடனுதவி திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் குறித்த தொழில் விபரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 11-ந் தேதி தாராபுரம் , 14-ந் தேதி பல்லடம், 15-ந் தேதி உடுமலைப்பேட்டை, 16-ந் தேதி பொங்கலூர், 19-ந் தேதி அவிநாசி, 21-ந் தேதி மடத்துக்குளம், 23-ந் தேதி, வெள்ளகோவில், 24-ந் தேதி குண்டடம், 25-ந் தேதி காங்கேயம், 28-ந் தேதி ஊத்துக்குளி, 29-ந் தேதி மூலனூர், 30-ந் தேதி குடிமங்கலம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கடன் பெற விரும்புவோர் ஆதார் கார்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல், கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வர்த்தகப் பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயனடையும்படி மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்டர் சேவியர்துரைசிங், வார்டு உறுப்பினர் வயலட் அல்லேலுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு, கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை பற்றி பேசினார். முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக சரவணன், தோட்டக்கலைத்துறை பானுமதி, சமூக நலத்துறை சார்பாக கார்த்திகேயன், சுகாதாரத்துறை ஆனந்தன், கால்நடைத்துறை சஹானா மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.

    • முத்தனம்பட்டி புதூர் இந்து உதவிபெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • இந்த சிறப்பு முகாம் இன்று,26 மற்றும் 27-ந்ஆதேதி ஆகிய நாட்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே , முத்தனம்பட்டி புதூர் இந்து உதவிபெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது,

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2023-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி 9-ந்தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் 1.1.2023-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், தற்போது புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரம் சேர்ப்பதற்கு படிவம் 6பி-ம்,

    பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்டு விரும்புபவர்கள் படிவம் 8-ம் பூர்த்தி செய்து 8.12.2022 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் அல்லது அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம்.

    அதற்காக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு முகாம் இன்று,26 மற்றும் 27-ந்ஆதேதி ஆகிய நாட்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன. வாக்காளர்கள் விண்ணப்பத்தினை தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
    • கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக, மண்டலம் ஒன்றுக்கு 15 வார்டுகளாக செயல்பட்டு வருகிறது. 4 மண்டலங்களிலும் கீழ்கண்டவாறு சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.

    மேலும் எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம். இணையதள முகவரி Use Quick Payment" or Register & Login" to. https://tnurbanepay.tn.gov.in.

    இவற்றில் சொத்துவரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.92.16 கோடியும், காலியிட வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.7.82 கோடியும், தொழில் வரி இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.2.32 கோடியும், குடிநீர் கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.18.44 கோடியும். குத்தகை இனத்தில் 2022-23ம் ஆண்டுக்குநிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.8 கோடியும் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.5.14 கோடியும், பாதாள சாக்கடை கட்டண இனத்தில் 2022-23ம் ஆண்டுக்கு நிலுவை நடப்பு மொத்த கேட்பு ரூ.1.75 கோடியும் வசூல் நிலுவையாக உள்ளது.

    திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்தவும்.மேலும் 17.11.2022 அன்று அனைத்து மண்டலங்களிலும் நடக்கவிருக்கும் சிறப்பு முகாம்களில் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு அந்தந்த வாக்கு சாவடிகளில் முகாம் நடைபெற்றது.
    • தொடர்ந்து வருகிற 19,20 ஆகிய தேதிகளிலும் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாரமங்கலம்:

    தமிழக தேர்தல் ஆணையம் மூலமாக கடந்த 13,14 ஆகிய தேதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு அந்தந்த வாக்கு சாவடிகளில் முகாம் நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற 19,20 ஆகிய தேதிகளிலும் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தார–மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆரூர்பட்டி ஊராட்சியில் புதிதாக வீட்டு மனைகள் ஒதுக்கி தற்போது நரிகுறவர்கள் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கபட்டது. தற்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பேரில் நரிகுறவர்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு என்று வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    தேர்தல் துணை தாசில்தார் கருணாகரன் தலைமையில் நடந்த முகாமில் 110 வாக்காளர்களுக்கு முகவரி மாற்றம் செய்தும், புதிதாக 5 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அப்போது தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி கலை செல்வி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் காங்கேயன் நரிகுறவர் குடும்ப தலைவர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.
    • வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறையை சேர்ந்த தாசில்தார் தங்கவேல், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை உழவர் நலத்துறையை சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் சசிரேகா, வேளாண்மை அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பயிர் காப்பீடு செய்ய தேவையான அடங்கல் மற்றும்பிற ஆவணங்களை விவசாயிகள் பெற்று சோள பயிருக்கு பயிர் காப்பீடு செய்தனர். சிறு, குறு விவசாயி சான்று பெறவும் விண்ணப்பம் அளித்தனர்.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் அம்பாயிரநாதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.  

    ×