என் மலர்
நீங்கள் தேடியது "speech"
- அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என வலியுறுத்தல்
- இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில், பெரம்பலூர் நேரு இளையோர் மையம் சார் பில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன் றம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். இதனை போக்கு–வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-நம்முடைய வாழ்க்கை ஒரு சாதரண மனிதனின் வாழ்க்கையை போல முடிந்து விடாமல் நம்முடைய சமுதாயத்துக்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரு இளையோர் மையம் என்ற அமைப்பு ஏற்ப–டுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், இளை–ஞர்களை இணைத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையா–கும்.
தமிழ்நாடு ஜனநாயத்தை பாதுகாப்பதில் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. சொந்த தாய்மொழியை பாதுகாக்க போரிட்டவர்கள் நமது தமிழர்கள் ஆவார். பேசும் மொழி நமது அடையாளம் ஆகும். மகராஷ்ட்ராவில் இந்தி மொழியை பேசியதால், அவர்களது தாய்மொ–ழியான மராட்டிய மொழியை மறந்து, தமது அடையாளத்தை இழந் துள்ளனர். தற்போது அவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து, தாய் மொழிக்காக போராடி வரு–கின்றனர்.
எனவே நமது அடையாளத்தை இழக்கக்கூடாது. நமது மொழியை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழகத்தில் உயர்க்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் ஆகும். இதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள முதல்வர் கருணாநிதி ஆகியோர்களால் செயல்படுத்திய கல்வித் திட்டங் களே ஆகும். அவர்கள் வழியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். படித்த இளைஞர்கள் திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பை பெற வேண் டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.மாணவிகள் உயர்க்கல்வி படிக்கும் போது மாதம் ரூ.1,000 பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத் தையும் செயல்படுத்தியுள் ளார். இது போன்ற நடவடிக்கைகளால் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்றார்.நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசுகையில், இந்தியாவில் கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டதின் காரணமாக உயர்கல்வி படிப் போர்களின எண்ணிக்கை நாளுக்கு குறைந்து வருகிறது. இதுகுறித்து மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். படிக்கும் போதே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மாணவர்கள் ஆழமான கருத்தை உள்வாங்கி படிக்க வேண்டும். குறிப் பாக கல்வியில வேட்கை உருவாக்கிக் கொள்ளவேண்டும். கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்றார்.
- கூடுதலாக 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.
மதுரை
அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்களில் நடந்தது.
வாடிப்பட்டி, சோழ வந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் நீர்மோர் பந்தலை திறந்து, புதிய உறுப்பினர் படிவங்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்ஆர். பி.உதயகுமார் வழங்கி பேசியதாவது:-
மக்கள் சேவையில் முத்திரை பதிக்கும் வகையில் ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் தங்கள் பணியை
அ.தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. ஆளுங் கட்சியாக வந்தபோதும் கூட மக்கள் பணி செய்யாமல் தூங்குகிறது.
மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயமாக, 3-வது தலைமுறையாக எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு கிடைத்து ள்ளார். அம்மாவின் மறைவிற்கு பின்பு சுனாமி பேரலையாக அ.தி.மு.க. தத்தளித்த பொழுது, கலங்கரை விளக்கமாக இந்த இயக்கத்திற்கு கிடைத்தார், எடப்பாடியார்.
கடன் பெறமாட்டோம் என்று கூறி இரண்டே ஆண்டில் ரூ.1½ லட்சம் கடனை தமிழகத்திற்கு பெற்றுவிட்டார்கள். இந்த தி.மு.க. ஆட்சியின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தீவிர உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனை அம்மா 1½ லட்சம் தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். தற்போது எடப்பாடியார் 2 கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கி புதிய சாதனை படைப்பார்.
அதற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வறுமையை வெல்ல படிப்புதான் பேராயுதம் என பொன்.மாணிக்கவேல் பேசினார்.
- நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும்.
மதுரை
மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி பொன். மாணிக்க வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும். கல்லூரி பருவம் என்பது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து வைக்கும் முக்கியமான முதல் படி.
வறுமையை வெல்லும் வகையில் உங்களின் கற்றல் திறன் அமைய வேண்டும். அதற்கு படிப்புதான் பேராயுதம். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலையைப் பெற்றுக் கொண்டு அதில் திறமை களை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னே றுங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நாக ரத்தினம், செயலாளர் ஜெக தீசன், முதல்வர் ராஜேஷ் குமார், துணை முதல்வர் சித்ராதேவி மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தன்னம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார்.
- ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
மதுரை
மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு மூலம் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 710 நாளை எட்டியது.
இதையொட்டி மதுரை சொக்கிகுளம் ஜே.சி அரங்கில் கொடை யாளர்களுக்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது. டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா முன்னிலை வகித்தார்.
எஸ்.வி.எஸ். கடலை மாவு நிறுவன நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 பேருக்கு அட்சய சேவா ரத்னா விருதை வழங்கினார்.
டாக்டர் உஷா கிம், மின்வாரிய முன்னாள் கூடுதல் தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல். முன்னாள் உதவி பொது மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, காந்தி பொட்டல் சிலை பராமரிப்பு கமிட்டி தலைவர் சாமிக் காளை, நானோ சொல்யூ ஷன்ஸ் நிர்வாக இயக்குநர் முகமது உமர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் இளங்கோவன், அமுதா அக்சயா டிரஸ்ட் நிர்வாகி அமுத லட்சுமி, ஆச்சார்யா எஜுகேஷன் நிர்வாக இயக்குனர் கண்ணன், எஸ்.எஸ். காலனி செல்வி கிளினிக் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன். சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஆன்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ரத்தினவேல்சுவாமி, எஸ்.வி.எஸ். கடலை மாவு நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர், உசிலம்பட்டி தமிழ் ஒளி தொலைக்காட்சி நிறுவனர் தமிழரசன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் நாகரத்தினம், மதுரை பாண்டியன் ரோட்டரி சங்க செயலாளர் சலீம் உள்பட 15 பேர் அட்சய சேவா ரத்னா விருதை பெற்றனர்.
விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:-
உங்களைச் சுற்றி உங்களை தாழ்வாக கருது பவர்களை விட உங்களை ஊக்கப்படுத்தும் நல்லவர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கு இரு சந்தர்ப் பங்களில் வேகம் வர வேண்டும். ஒன்று உங்களை குட்டுகிற போது மற்றொன்று தட்டிக் கொடுக்கும் போது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் வேகம் வராவிட்டால் மனிதன் சாதிப்பது கடினம்.
தன்னம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சுக்காற்று. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே வரவேண்டும். குழந்தைகளுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை இளமையிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
- இந்த கோவிலின் அருகில் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
- சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளதால் மாணவர்களும் பயன் அடைவர்.
கோவை,
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் சட்டசபையில் பேசியதாவது:-
கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. மருதமலை முருகன் கோவில் ஏழாவது படைவீடு என அழைக்கப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.எனவே பக்தர்களின் நலன் கருதி இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இந்த கோவிலின் அருகில் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
அந்த இடத்தில் சுற்றுலா தலம் அமைத்தால் பக்தர்கள் மற்றும் மக்ககள் பயன் அடைவார்கள்.
இதுதவிர சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளதால் மாணவர்களும் பயன் அடைவர்.
எனவே சுற்றுலாத்துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் கருத்துக்களை பெற்று மருதமலையை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
அவருக்கு பதில் அளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
மருதமலை முருகன் கோவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், மருதமலை வனப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வனத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலைய துறையின் தடையின்மை சான்று மற்றும் கோவை கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு மற்றும் கருத்துரு பெறப்படுமாயின், சுற்றுலா துறை நிதிநிலைமைக்கு ஏற்ப பரீசலிக்கப்படும்.
மேலும் சுற்றுலாத்துறை எந்த ஓர் இடத்தையும் சுற்றுலா தலமாக அறிவிப்பதில்லை.
அந்த இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மற்றும் தேவைகள் அடிப்படையிலேயே பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா இடங்களை மேம்படுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் படி 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள்படி தொடர்பு டையத்துறை வாயிலாக அந்த இடம் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அந்த துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் எங்கள் துறைக்கு அனுப்பட்டால், அதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று சுற்றுலா துறை நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் பாசிச கூட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
- வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசினார்.
மதுரை
மதுரை மாவட்டம் மேலூரில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மனிதநேயம் தளைத்தோ ங்க, மத நல்லிணக்கம் செழித்திட, அறம், நெறி தொடர்ந்திட உலகம் முழுவதும் உள்ள இஸ்லா மிய பெருமக்கள் ரமலான் நோன்பை கடைபிடித்து வருகிறார்கள்.
இன்றைய உலகத்தில் இந்திய ஒன்றியம் தான் குடியரசு இந்தியா என்று டாக்டர் அம்பேத்கர் பிரக டனம் செய்தார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை ஏற்படுத்தினார்கள்.
மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், கடவுளின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டின் அரசிய லமைப்பு சட்டத்தை செல்லாக் காசாக மாற்ற நினைக்கிறது. அரசியல மைப்பு சட்டத்தை தகர்த்தெ றிய துடிக்கிறது. இந்த பாசிச வாதிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
அமைதி பூங்காவாக திகழும் தமிழ் மண் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வளர்த்த பொதுவுடமை மண்ணாக தமிழ்நாடு பக்குவப்பட்டு உள்ளது. திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச ஆர். எஸ். எஸ். கூட்டம் மத நல்லிண க்கத்தை சீர்குலைக்க விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட நினைக்கிறார்கள். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக மரபுகளுக்கு மாறாக செயல்படும் மத்திய பாஜக அரசை வருகிற பொதுத் தேர்தலில் விரட்டி அடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம்,
- அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கோவை,
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன்ச ம்பத்தின் 58-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது. கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, திருமுருகன் மற்றும் மலுமிச்சம் பட்டி பாபுஜி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:-
கோவையில் அ.தி.மு.க. கொண்ட வந்த திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்ததும் அதை உயர்த்தி உள்ளனர். நீட் தேர்வை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதுதொடர்பாக பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. குடும்ப அரசியல் செய்து வருகிறது. மோடி சமூகத்தை அவதூறாக பேசியதால் ராகுல்காந்தியின் பதவி பறிபோனது. பொய்யான வரலாறுகளை கூறுபவர்கள் தி.மு.க.வினர்.
கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்து அமைப்புகளும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும். அதில் கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக வருவாக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக மோடி ஆட்சியை பிடிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நல்லாம்பாளையத்தில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டம் தோறும் நடத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம், மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம். பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் மாதம் மேற்கொள்ள உள்ள நடைபயணத்துக்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு அளித்து கலந்து கொள்ளும்.
மதம் மாறியவர்களுக்கு அரசு சாதி சான்றிதழ் வழங்குவதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது
- 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கோவை வேளாண் அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரமான விதை உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறித்து உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் முனைவர்.குமாரவடிவேலு தலைமையில் நடைபெற்றது.
முகாமில் தேசிய விதை கழகத்தின் மண்டல மேலாளர் செல்வேந்திரன்,கோவை விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் பேசும்போது, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலமாக விவசாயிகள் உற்பத்தியை பெருக்கலாம். விதை நேர்த்திகள் செய்வதன் மூலமாக தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த முகாமில் தேசிய விதை கழகத்தின் மேலாளர் சிந்துஜா அனைவரையும் வரவேற்றார். இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
- மதுரையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், அதலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்றைக்கு அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, 1½ கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளாலும், அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர் எடப்பாடியார் தான்.
இதை உறுதி செய்கின்ற வகையில், தோழமையில் இருக்கிற தேசிய கட்சியான பா.ஜ.க உள்துறை அமைச்சரை எடப்பாடியார் சந்தித்துள்ளார். இது 1½ கோடி தொண்டர்களுடைய மனதில் புதிய உற்சா கத்தையும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.
எடப்பாடியார் மீண்டும் முதல்- அமைச்சராக தமிழகத்தில் வரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு வாராத வந்த மாமனியாக, வரப்பிரசாதமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது.
இன்றைக்கு நடைபெறுகிற தி.மு.க. அரசு கையாலாகாத அரசாக, நிர்வாக குளறுபடியில் இருக்கிற அரசாக, ஒட்டு மொத்த குளறுபடியினுடைய அடையாளமாக இருக்கிறது. 12 மணி நேர வேலை என்று சட்டம் இயற்றி அதை நிறைவேற்றிய மசோதாவை நிறுத்தி வைக்கின்றார். இப்படி பல்வேறு குளறு படிகளில் கல்யாண மண்ட பங்களில் மது விற்பனை செய்வோம் என்று ஒரு உத்தரவு போடுகிறார்கள். மக்கள் கொதித்து போராட்ட களத்துக்கு வந்த பிறகு அதை வாபஸ் வாங்கு கிறார்கள்.
சர்வதேச விளையாட்டு மைதானங்களில் மதுபானம் அருந்தலாம் என்கிற ஒரு உத்தரவு பிறகு கோர்ட்டு தடை விதித்த பிறகு அதை நிறுத்தி வைக்கிறார்கள். தி.மு.க. அரசுக்கு முடிவுரை எழுதுகிற வகையில் தான் எடப்பாடியார் பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா வை சந்தித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றி வேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,
- எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில் திருவாருர் மாவட்ட கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி ராபியம்மாள் அகமது மொய்தீன் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ராபியம்மாள் கல்லூரி செயலாளர் பெரோஷா முன்னிலை வகித்தார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றும் போது:-
அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மாணவர்கள் அதை பயன்படுத்தி மேல்படிப்புகள் படிக்க வேண்டும் என்றார்.
தாட்கோ தலைவர் மதிவா ணன் வாழ்த்துரையாற்றும் போது:-
பேச்சுதிறன் என்பது சிறுவயது முதலே தொடங்க வேண்டும், எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார்.
தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் பரிசு வழங்கினர்.
பேச்சுப்போட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஹாஜாகனி போட்டியின் நோக்கம் குறித்து பேசினார்.
ராபியம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், போட்டி நடுவர்களாக கோமல் தமிழமுதன், அறிவழகன், அமானுல்லா, அஸ்வின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.
தமிழ் வழி பேச்சுப்போட்டியில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவியும், ஆங்கில வழி பேச்சு போட்டியில் ராபியம்மாள் கல்லூரி மாணவியும் முதல் இடத்தை பிடித்து ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகை வென்றனர் .
முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.
- மாற்றுக் கட்சியினரை கவர்ந்த பிரதமர் மோடியின் மனதின் குரல்.
- திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
மதுரை
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமாரின் வன்னி வேலம்பட்டி கிராமத்தில் பிரதமர் மோடியின்
100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதனை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் சுப்பலா புரம் சென்றார். அங்கு திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளி தாஸ், மண்டல் தலைவர் சாமி ரங்கையா, துணை தலைவர் அய்யனார் கண்ணன், பொதுச் செயலாளர் கருப்பசாமி, நிர்வாகிகள் செல்வம், திருப்பதி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மேற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்பட 320 இடங்களில் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது .
- உண்மையை உரக்க சொன்னதற்காக அவரை மக்கள் பாராட்ட வேண்டும்
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை
மதுரை பெத்தானியா புரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன் தலைமையில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், மாநகர் மாவட்ட செய லா ளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசிய தாவது:-
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. இதனால்தான் இப்போது புதிதாக லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஆர்வத்துடன் இணைத்து வருகிறார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது வேற பேச்சு.
ரஜினிகாந்த் படம் போல் மீசை வச்ச ரஜினி, மீசை இல்லாத ரஜினி என்பது போல் தி.மு.க. செயல்படும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல பேசு வார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது அப்படியே மாறிவிடுவார்கள். முதல்வருக்கு உழைப்பவர் களின் கஷ்டம் தெரியுமா? நோகாமல் முதலமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவருக்கு தொழிலாளு ருடைய வலி எப்படி தெரியும்?
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்.தி.மு.க. கூட்டணி கட்சிகளே இந்த சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பிறகு அதனை வாபஸ் வாங்கியுள்ளார். நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லிய முதல்வர் இப்போது வாபஸ் பெற்று விட்டதாக கூறியுள்ளார்.
உழைக்கும் தொழி லாளர் களை ஏமாற்று வதற்காக சிவப்பு சட்டை அணிந்து மே தின கூட்டத்திற்கு வருகிறார். தொழி லாளர் களுக்கு எதுவும் செய்யாமல் கம்யூனிஸ்டுகள் தி.மு.க. வுடன் ஒட்டிக்கொள் கிறார்கள். எதற்கு? எல்லாம் பணத்திற்காகதான். கடந்த தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் பெற்றவர்கள், அடுத்த முறை 50 கோடி ரூபாய் எதிர் பார்த்து தான் தி.மு.க.விடம் அடிபணிந்து சேவகம் செய்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் பேசிய ஊழல் ஆடியோ தான் தற்போது ஹைலைட்டாக உள்ளது.உதயநிதியும்,சபரீசனும் 31ஆயிரம் கோடி ரூபாய் குவித்துள்ளதாக நம்ம நிதியமைச்சர் தெளிவாக பேசியுள்ளார். அவர் மதுரைக்காரர், வீரமானவர், உண்மையை உரக்க சொன்ன நிதி அமைச்சர் தியாக ராஜனை மக்கள் பாராட்ட வேண்டும்.
மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் கட்டப்பட்டு ள்ளது. வேறெதுவும் மதுரைக்கு செய்ய வில்லை. எந்த திட்டங்களும் கொண்டுவர வில்லை. தி.மு.க. வெட்டக் கூடிய ரிப்பன் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களில் செயல் படுத்தப்பட்டது தான்.
கோவைக்கு, சிறப்பு நிதி ஒதுக்கிய நிதி அமைச்சர் நம்ம மதுரைக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று தெரிய வில்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஏக்கம் தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவை பாட்டாளி தொழிலாளர் வர்க்கம் வீட்டுக்கு அனுப்பும் பணியை நிச்சயம் செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், அண்ணாதுரை, பரவை ராஜா, அண்ணாநகர் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், மல்லன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.