என் மலர்
நீங்கள் தேடியது "stray dogs"
- கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது.
- முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க் கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.
எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.
எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
- வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
புதுச்சேரி:
புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு தெருவோர மற்றும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார். 60க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்களிடம் தடுப்பு ஊசி பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.
- தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது.
- சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக அங்குள்ள சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. சில நேரம் சாலையின் நடுவே சண்டையிட்டு அவ்வழியாக செல்லும் இருசகக்கர வாகனத்தில் விழுந்து அதில் வருபவர்களை பயமுறுத்துகிறது. மேலும் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது. இதில் சிலர் தவறி விழுந்து காயம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.
சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தெருவில் திரியும் நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசி.
- நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் வண்ணம் பூசவும் திட்டம்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் விட முடிவு செய்யப்படுகிறது.
தடுப்பூசி போடப்பட்டு பின்னர் அதே தெருவில்
தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
- விசாரணையில் மனிஷாவை தாக்கிய சோனு நாய்களைத் தாக்கியதும் தெரிந்தது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் ரகுபீர் நகரில் தெரு விலங்குகளை பராமரிக்கும் இளம்பெண் மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
மனிஷா கிட்டத்தட்ட 150 தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஒருவர் அவரை தாக்கினார். இச்சம்பவம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
மனிஷா இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதில், பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை எடுத்துக் காட்டினார். நாய்களைப் பாதுகாக்க முயன்றபோது தன்னைத் தாக்கியதையும் வெளிப்படுத்தினார். நாங்கள் மோசமாக அடிக்கப் பட்டோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, மனிஷாவின் தாயார் சோனு மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனிஷாவை தாக்கியது சோனு என்பதும், நாய்களை தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார்.
- வாலிபரை புதைத்த 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார். அதன்பின் தெரு நாய்களால் தோண்டி எடுக்கப்பட்ட வினோதம் நடைபெற்றுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் ரூப் கிஷோர் (24). கடந்த மாதம் 18-ம் தேதி அன்று ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்த தன்னை அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் என 4 பேர்தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துவிட்டார் எனக்கருதி அவர்களது பண்ணையில் கிஷோரை புதைத்தனர். கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டம் தோண்டத் தொடங்கியது.
அப்போது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு திடீரென சுயநினைவு திரும்பியது. இதனால் அங்கிருந்து எழுந்த அவர், அப்பகுதியில் இருந்து வெளியேறினார். உள்ளூர்வாசிகள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக கிஷோரின் தாய் கூறுகையில், 4 பேர் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர் என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது என்றும், தப்பிச்சென்ற 4 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.
நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவர், தெருநாய்களால் உயிர் பிழைத்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.
- தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது.
இந்த நிலையில் காங்கேயம் அடுத்த மறவம்பாளையம் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட செம்மண்குழி கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றுள்ளது.
இதில் நாய்களிடமிருந்து தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இன்று காலை பொன்னுசாமி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல தோட்டத்திற்கு சென்று பட்டியில் பார்த்தபோது ஆடுகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது கிணற்றுப் பக்கத்திலிருந்து ஆடுகளின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 35 ஆடுகளும், கிணற்றுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறுகளை கட்டி ஆடுகளை மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரை அதிகமாக குடித்ததால் 16 ஆடுகள் இறந்து விட்டது. இது தொடர்பாக காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவர் தோட்டத்தில் வளர்த்த வந்த 3 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றது. எனவே தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டான்.
படுகாயமடைந்த ஒன்றரை வயது சிறுவனான ஆயுஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இது போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. தெரு நாய்களால் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதால் சிறுவர்களை வெளியே விட பெற்றோர்கள் பயப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். மோராபாத் பகுதியில் கடந்த 5 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தெரு நாயால் தாக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோதிநகரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் நேற்று சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். #straydogs