என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students"

    • சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2021- 22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமையன்று) சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகளில்் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும்் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாவர்கள் இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்் வழங்கப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிகள் 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியும்், கல்லூரி மாணவர்களுக்்்கான பேச்சு போட்டிகள் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியும் நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியா், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும்் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80198) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சகோ.பவுலின் தெரசாள் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி ஊழியர் ஞானசேகரன், ஆசிரியை எஸ்தர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

    சமூகப்பணித்துறை பேராசிரியர் வனிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என பாராட்டி பேசினார்.

    சமூகப்பணித்துறை தலைவர் முத்துக்குமார் வழிகாட்டுதல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    முன்னதாக பள்ளி ஆசிரியை ரோஸ்லின் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தை ஒருங்கிணைத்த கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகளான ஜோ, புவனா, தேவி, அலெக்ஸ், அசோக், வனஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் தெரசாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசு உதவி பெறும் பள்ளியான வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் ஏற்படுத்தியதன் மூலம் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    • மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
    • செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அநாகரீகமாக பதிலளிப்பது கண்டிக்கத்தக்கது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டையில் உள்ள கும்பகோணம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

    வட்டார கல்வி அலுவலர் மதியழகன் முன்னிலை வகித்தார். இதில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.3.29 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கி னார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    அரசியலில் நாகரீகம் அற்ற போக்கை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணா மலை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். கடலூரில் செய்தியா ளர்களை தரக்குறைவாக அநாகரீ கமாக பொதுவெளியில் பேசி உள்ளார்.

    செய்தியாளர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நாகரீகமாக பதில் அளிக்காமல் அநாகரீகமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கூடிய விரைவில் அண்ணா மலைக்கும் பா.ஜ.க.வுக்கும் உரிய பதிலடி மக்கள் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ். கே. முத்துச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் பாதுஷா, மாவட்ட நிர்வாகிகள் ஹிபாயதுல்லா, மைதீன், அப்துல் ரஹ்மான், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியை மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
    • பேரணி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நி லைப் பள்ளி, ரோட்டரி கிளப் ஆப் சீர்காழிடெம்பிள் டவுன் இணைந்துநாட்டு நலப்பணி திட்ட மாணவ ர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியை. மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

    முகாம் அலுவலர் முரளிதரன், ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள் சுப்பு சொர்ண பால், தங்க.ரவிச்சந்திரன், மலர்கண்ணன், பாலாஜி, முரளி, மோகனசுந்தரம், முன்னாள் செயலாளர்கள் வெங்கடாஜலபதி, விஜயன், குமார், சந்தோஷ் மற்றும் காவல்துறை, போக்குவரத்து காவல்த் துறையினர், கலந்துக் கொண்டனர். பேரணி சீர்காழி முக்கிய வீதி வழியாக சென்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவி திட்ட அலுவலர் மணிகண்டன் செய்தார். நிறைவில் சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் பிரபாகரன் நன்றிக் கூறினார்.

    • அமராபுரம் கிராமத்தில் நலப்பணித் திட்டம் மாணவர்களின் சார்பாக சிறப்பு முகாம் நடந்தது.
    • மாதவன்குறிச்சி ஊராட்சி தலைவர் சேர்மத்துரை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்களின் சார்பாக ஆண்டு சிறப்பு முகாம் மாதவன்குறிச்சி ஊராட்சி அமராபுரம் கிராமத்தில் நடந்தது.

    மாதவன்குறிச்சி ஊராட்சி தலைவர் சேர்மத்துரை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கருப்பசாமி, வார்டு உறுப்பினர் சுடலைவடிவு, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மைப்பணிகள், மரம் நடுதல், கால்நடை மருத்துவ முகாம் போன்றவை நடந்தது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் டேனியல் செய்திருந்தார்.

    • 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
    • அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல் மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்துகொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் தென்காசி வட்டம் சிவசைலம் கிராமத்தில் இயங்கி வரும் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று வரும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது ) முத்து மாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
    • சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்–கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டு–வரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது.

    இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது.

    இதனால் நகர் பகுதி முழுவதும் சாலைகள் சவுடு நிறைந்து இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட இந்த லாரிகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்படுகிறது.

    நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணில் சறுக்கி விழுந்து அடுத்தடுத்து விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

    எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்தவுடன் கேட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து பள்ளியை திறந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

    • 300 சாரணர், 300 சாரணியர்கள், 60 ஆசிரியர்கள், 40தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
    • கேம்புரி முகாம் குன்னூர், ஸ்டேன்லி பார்க் மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    காங்கயம் :

     பாரத சாரண சாரணியர் இயக்கம் தமிழ்நாடு சார்பில் மண்டல அளவிலான கேம்புரி முகாம் குன்னூர், ஸ்டேன்லி பார்க் மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.  இம்முகாமில் கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரிஎன ஐந்து மாவட்டங்களில் இருந்து 300 சாரணர், 300 சாரணியர்கள், 60 ஆசிரியர்கள், 40தன்னார்வலர்கள் பங்கேற்றனர். காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் சார்பில் 4 சாரணர்களும், 5சாரணியர்களும், சாரண ஆசிரியர் பொன்சங்கர்  கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி சாரணசாரணியர்கள் கண்காட்சி மற்றும் கயிற்றுக்கலையில் முதலிடமும், இசைக்குழுஅணிவகுப்பு, படை அணிவகுப்பு, கிராமிய உணவுத் திருவிழா, கலாச்சார உடைஅணிவகுப்பு, மற்றும் கிராமிய நடனம் ஆகிய போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றுஒட்டுமொத்த புள்ளி பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

    வெற்றி பெற்ற சாரண சாரணியர்களை பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,பொருளாளர் மோகனசுந்தரம், முதல்வர் சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். மேலும் பள்ளியின் தலைவர் கோபால்,  அகடமிக் டைரக்டர்சாவித்திரி சுப்பிரமணியம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டுதெரிவித்தனர்.

    • சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி டிரஸ்டி, தாளாளர், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    சுரண்டை:

    வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதில் கைப்பந்து போட்டியில் சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தொடர்ந்து கடந்த 21-ந்தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதிலும் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.இதன் மூலம் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் டிரஸ்டி, தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

    • பேருநது படியில் நின்று கொண்டு மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்கோரிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை, மாலை இருவேளையும் பேருந்து உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பள்ளி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படியில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு கூறியும், மாணவர்கள் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது ஆபத்தான பயணத்தை படிக்கட்டில் தொங்கியபடியே செல்கின்றனர்.

    இப்படி ஆபத்தை உணராமல் படியில் தொங்கி செல்வதால் தவறி விழுந்து விடுவார்களோ என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. நடத்துனர், ஓட்டுநர்களும் மாணவர்கள் நலன் கருதி பேருந்தை மெதுவாக பள்ளம் மேடு பார்த்து இயக்கிவருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏற்ப்படும் முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான 14-11-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் ) வருமாறு :- குழந்தைகள் தின விழா , ரோசாவின் ராசா ,ஜவகர்லால் நேருவின் தியாகங்கள் , நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு,இளைஞரின் வழிகாட்டி நேரு

    கல்லூரி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் வருமாறு :- இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு ,,நேரு கட்டமைத்த இந்தியா ,காந்தியும் நேருவும்*ந,ருவின் பஞ்சசீலக் கொள்கை ,உலக அமைதிக்கு நேருவின் தொண்டு , அமைதிப்புறா - நேரு.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    ×