என் மலர்
நீங்கள் தேடியது "sucide"
- களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன்
- மனைவி பிரிந்து சென்றதால் நம்பிராஜன் விரக்தி அடைந்து விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது30). இவர் விவசாயி. இவருக்கும், மருதமுத்தூரை சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நம்பிராஜன் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும், அவரது மனைவி இந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் நம்பிராஜன் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த நம்பிராஜன் விஷம் குடித்தார். இதனால் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி.
- பவித்ரா பணத்தை எல்லாம் மது அருந்தவே செலவு செய்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என கண்டித்துள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முருகன் (வயது35). கூலி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.
இதனால் அவர் வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தவே செலவு செய்துள்ளார். கடந்த 18-ந்தேதி போதையில் வீட்டிற்கு வந்த முருகன், மனைவி பவித்ராவிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பவித்ரா பணத்தை எல்லாம் மது அருந்தவே செலவு செய்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என கண்டித்துள்ளார்.
எனினும் முருகன் வீட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார். அதன் பின்னர் சிதம்பரபுரம் வடக்கு கல்வாய் கரையில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி முருகன் இறந்தார். இதுபற்றி அவரது தந்தை கனகராஜ் (65) களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி.
- நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தச்ச நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊத்துக்குளி அருகே உள்ள சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்.
- கதவை உள்புறமாக சாத்திக்கொண்டு வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி அருகே உள்ள சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் தினந்தோறும் குடித்து விட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அவரது தங்கை தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட சண்டையில் வீட்டிற்குள் சென்ற ஜீவானந்தம் கதவை உள்புறமாக சாத்திக்கொண்டு வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவானந்தம் இறந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் செல்போன் கடை நடத்தி வந்தார்.
- நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் (வயது 32).
செல்போன் கடை
இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நி லையில் கடந்த 2 வருடங்க ளுக்கு முன் தனசிங்கின் மனைவி உடல்நிலை பாதிப்பால் இறந்துள்ளார்.
அதில் இருந்து தனசிங் மனமு டைந்த நிலையில் காணப் பட்டார். மேலும் அவர் கடைக்கும் சரியாக செல்லாமல், யாரி டமும் பேசாமல் இருந்துள் ளார்.
தற்கொலை
நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தனசிங் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 15 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலைகள் செய்து வந்துள்ளார்.
- மன வருத்தத்தில் இருந்து வந்த ரவிக்குமார் நேற்று நடுநாலுமூலைகிணறு, புதுக்காலனியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 46).
இவர் திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 15 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலைகள் செய்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த 8 மாதங்களாக திருச்செந்தூர் நகராட்சியில் இருந்து சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் நகராட்சி கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோரிடம் தனக்கு வர வேண்டிய பில் தொகையை பலமுறை கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்த ரவிக்குமார் நேற்று நடுநாலுமூலைகிணறு, புதுக்காலனியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் திருச்செந்தூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரவிக்குமார் மகன் சரவணபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார்.
- அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கோவை,
கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்ஷய் (வயது 27). வக்கீல். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த அனுதர்ஷினி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அனுதர்ஷினி தனது பெற்றோர் வீட்டில் தங்கி பி.எஸ்.சி படித்து வருகிறார். இந்நிலையில், அக்ஷயுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. செல்போனில் பேசும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அக்ஷய் விரக்தியடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (31). மாநகராட்சி ஒப்பந்த பணியாளர். இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 வழக்குகள் இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் ரத்தினபுரியில் பிரியாணி ஓட்டல் நடத்தி வந்தார். அதில் போதிய வருமானமில்லாமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மணிகண்டன் விரக்தி அடைந்த அவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே விஷம் குடித்து மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் விக்டோரியா. இவரது மனைவி அனிசியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதம் ஆகிறது.
- இந்நிலையில் பிரசாந்த் விக்டோரியா வீட்டில் இல்லாத நேரம் சேலையால் அனிசியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் விக்டோரியா. இவரது மனைவி அனிசியா(வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதம் ஆகிறது.
பிரசாந்த் விக்டோரியா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 31-ந் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசாந்த் விக்டோரியா வீட்டில் இல்லாத நேரம் சேலையால் அனிசியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தென்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் முடிந்து ஓராண்டு ஆகாத நிலையில் அனிசியா தற்கொலை செய்து கொண்டுள்ளதால் தூத்துக்குடி தாசில்தார் கவுரவ்குமார் விசாரணை மேற்கொள்வார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
- சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரியை அடுத்த மேல் அனையட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் கணவர் இறந்த நிலையில் தனது 2 மகன்களான சஞ்சீவ் (வயது28) மற்றும் விஷ்ணு (வயது23) ஆகியோருடன் அதே பகுதியில் வாழந்து வருகிறார்.
வசந்தாவின் மூத்த மகனான சஞ்சீவ் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். விஷ்ணு கோவை பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். சஞ்சீவிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதால் அவர் வேலைக்கு சரியாக செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வசந்தா விழாவிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். வீட்டில் சஞ்சீவ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து காலை சஞ்சீவின் சகோதரரான விஷ்ணு கோவையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. பின்னர் விஷ்ணு வீட்டின் வெளியில் வைக்கப்படும் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது சைமயல் அறையில் இருந்து தண்ணீர் டிரம்மில் சஞ்சீவ் தலைகீழாக விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சீவ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக விஷ்ணு அவரது தாயார் வசந்தாவிற்கும் கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன், சஞ்சீவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அக்பர் அலி சமீபகாலமாக மல்லக்குளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
- அக்பர் அலியை தோட்டத்தில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வீட்டுக்கு அழைத்து வருமாறு அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மல்லக்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனது குடும்பத்தினருடன் கோவில்பட்டியில் தங்கியிருந்து பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அக்பர் அலி(வயது 19) படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.
சமீபகாலமாக இவர் மல்லக்குளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அவர் திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அக்பர் அலியை தோட்டத்தில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வீட்டுக்கு அழைத்து வருமாறு அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனை அக்பர் அலி செய்ய மறுத்து, வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அதனை அவரது பாட்டி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் ஊர் காவல் படை வீரர் ஆட்டோ ஓட்டி வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சந்திரன்(வயது 30).முன்னாள் ஊர் காவல் படை வீரரான இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில்ஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் தனது அறைக்குள் தூங்கச்சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் விட்டத்தில் கயிறால் தூக்கு போட்டு தொங்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சந்திரனின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணம் ஆன நாளில் இருந்தே மாரிராஜ் குடித்துவிட்டு வந்து ஜெயாதேவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- அவர் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சங்கரன்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சென்றுவந்தார்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலைபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி புவியாள். இவர்களது மகள் ஜெயாதேவி(வயது 22).
திருமணம்
இவருக்கும், சங்கரன் கோவில் அருகே அச்சம்பட்டி வடக்கு தெருவில் வசிக்கும் மாரிராஜ்(25) என்பவ ருக்கும் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணம் ஆன நாளில் இருந்தே மாரிராஜ் குடித்துவிட்டு வந்து ஜெயாதேவியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜெயாதேவி வீட்டில் இருந்தபோது, சமையில் அறையில் சிலிண்டரை திறந்துவிட்டு கதவை பூட்டிவிட்டு மாரிராஜ் வெளியே சென்றுவிட்டார்.
தற்கொலை
இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்த ஜெயாதேவியை உறவினர்கள் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படை த்தனர். அதன்பின்னர் அவர் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சங்கரன்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு சென்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக அவர் கூறிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அவர் தனது கணவர் மாரிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஜெயா தேவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.
விசாரணை
உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலைக்கு சென்ற ஜெயாதேவி அச்சம் பட்டியில் உள்ள கணவர் வீட்டுக்கு எதற்காக சென் றார்? என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.