என் மலர்
நீங்கள் தேடியது "Sweet"
- மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
- தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான டிஷ் சூரியகலா
`சந்திரகலா', `சூர்யகலா' என்ற இரண்டு பெயர்களை கேட்டதும் ஏதோ ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளின் பெயர் என்று தான் நாம் நினைப்போம். ஆனால், உண்மையிலேயே அவை ஒரு ஸ்வீட் பெயர் என்று சொன்னால் ஆச்சர்யம்தான். இந்த பதிவில் மிகவும் சுவையான சூரியகலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தஞ்சாவூரில், `பாம்பே ஸ்வீட்ஸ்' என்றாலே `சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட்ஸ்' என்கிற அளவுக்கு பிரபலமான டிஷ். தஞ்சாவூரின் அடையாளங்களை சொல்லும் பட்டியலில் புதுவரவு இந்த சூரியகலா ஸ்வீட் என்றால் அது மிகையாகாது.
தேவையான பொருட்கள்:
மைதாமாவு -ஒரு கப்
சர்க்கரை- ஒரு கப்
நெய்- 3 ஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
கோவா- ஒருகப்
முந்திரி, பாதாம்- உடைத்தது
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
கோவாவை பூரணமாக வைத்து செய்யக்கூடிய ஸ்வீட் வகையின் பெயர் தான் சூரியகலா. முதலில் பூரணம் தயார் செய்துகொள்ளலாம். அதற்கு ஒரு கப் இனிப்பாக இருக்கும் கோவாவை ஒரு பவுளில் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். அதில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் ஆகிய நட்ஸ் வகைகளை உடைத்து இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சூரியகலா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை 10 நிமிடம் முடிவைக்க வேண்டும்.
தயாரித்து வைத்த மைதாமாவு கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாக அதாவது பூரிக்கு உருட்டுவது போன்று உருட்டி அதனை சிறிய வட்ட வடிவில் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய சிறிய உருண்டைகளையும் வட்டமாக தட்டி அதன் ஒருபகுதியில் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்த கோவா கலவைகளை நடுவே வைத்து அதன் மேல் மற்றொரு தட்டையை வைக்க வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்ட வேண்டும். மற்றும் இதன் ஓரங்களை கைமுருக்கு உருட்டுவது போல நன்றாக மடித்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உருண்டைகளையும் சூரியகலாக்களாக வட்டமான வடிவில் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து இந்த சூரியகலாக்களை பொறித்து எடுக்க வேண்டும்.
ஜீரா தயார் செய்வதற்கு ஒரு வாணலியில் ஒரு கப் சர்க்கரை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். நாம் கையில் தொட்டு பார்த்தால் பிசுபிசுப்பாக இருக்கும் அளவுக்கு ஜீரா தயார் வேண்டும். கம்பி பதம் தேவையில்லை.
நாம் ஏற்கனவே எண்ணெயில் பொறித்து தயாராக வைத்துள்ள சூரியகலாக்களை அந்த ஜீராவில் சேர்க்க வேண்டும். நன்கு அந்த ஜீராவில் சூரியகலாக்களை புரட்டி எடுத்து 5 நிமிடத்திற்கு ஜீராவில் இருக்குமாறு அதனை வைக்க வேண்டும். ஜீரா முழுவதும் சூரியகலாவில் கலந்ததும் இதனை தனியாக எடுத்து வைக்கலாம். சுவையான சூரியகலா தயார்.
- பனீர் ஃபர்பியை பார்த்ததும் அதை வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டார்கள்
- எல்லா பண்டிகை நாட்களிலும் இந்த சுவீட் இல்லாமல் முழுமை பெறாது.
தேவையான பொருட்கள்
பனீர்-200 கிராம்
சர்க்கரை-200 கிராம்
முந்திரி, பாதாம்- ஒருகப்
பால்-1/2 லிட்டர்
பால்பவுடர்-100 கிராம்
செய்முறை
ஒரு மிக்சி ஜாரில் பனீரை போட்டு ஒரு முறைபொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு முந்திரியையும், பாதாம் பருப்பையும் ஒரு பிளேட்டில் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் காடாயை வைத்து காய்ந்ததும் அதில் 100 கிராம் பால்பவுடர் போட்டு அதில் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்க்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த பனீர், துருவிய பாதாம், முந்திரி கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டி இல்லமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையை சிறிது கெட்டிபதம் வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய்சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்த கலவையை ஒரு நெய் தடவிய பிளேட்டில் கொட்டி நன்றாக ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சுவையான பனீர் ஃபர்பி தயார். இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும்.
- ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும்.
தமிழர்களின் பண்பாடுகள் எல்லாம் தலைசிறந்த விருந்தோம்பல் என்பதும் ஒன்று. உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும். விருந்தளிக்கும் பொழுது சிறப்பாக எல்லா சுவைகளும் கலந்த விதத்தில் தலை வாழை இலைபோட்டு புன்னகையோடு விருந்தளித்தால் அறுசுவை உணவோடு அற்புதமான சாப்பாடு என்று சொல்வார்கள்.
அந்த ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும். இந்த ஆறு சுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது. ஆறுசுவையும் ஒரே காலத்தில் ஒரு சேரக்கிடைப்பது என்பது அரிது. எனவே அதற்கான காலங்கள் வரும் பொழுது அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொரு மனிதனும் உடல் நலத்தை பேணுவதற்கு அத்தியாவசியத்தேவை நல்ல சத்துள்ள உணவாகும். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவை. இவற்றை தேவைக்கேற்ப சாப்பிட்டால் தேகநலன் சீராகும்.
வருடத்தின் முதல் நாள், மாதத்தின் முதல் நாட்களில் முக்கியமாக சதுர்த்தி, பொங்கல் விழா எனப்படும் முக்கிய நாட்களில் பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கம். அதில் வெல்லத்தை சேர்த்து இனிப்பு சுவையை கூட்டிக் கொள்கின்றோம். அதேபோல மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று நமது இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காக உப்பு வாங்குவது வழக்கம். அதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகின்றோம்.
நமது உடம்பில் உள்ள எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. அதை சோடியம் குளோரைடு என்னும் உப்பின் மூலமாகப் பெறுகின்றோம்.
வருடப்பிறப்பு அன்று எல்லா சுவைகளும் கலந்த உணவை நம் முன்னோர்கள் வைப்பது வழக்கம். இனிப்பு, உப்பு, கசப்பு. கார்ப்பு. துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைக்கும் ஏற்ப சாம்பார். கூட்டு. பொரியல். அப்பளம், பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் இனிப்பு பச்சடி, வாழைப்பூ வடை என்றெல்லாம் வைத்து உணவு பரிமாறிய பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து விருந்தினரை கவனிப்பது வழக்கம். பாக்கில் துவர்ப்பு சத்தும் வெற்றிலை ஜீரண சக்தியையும், சுண்ணாம்பு கால்சியம் சத்தையும் கொடுக்கின்றது.
பொதுவாக வாழ்க்கை என்பது இன்பமும். துன்பமும், நன்மையும். தீமையும் கலந்து வருவதுதான். எந்த விழாவிற்கு சென்றாலும் முதலில் இனிப்புத் தான் கொடுப்பர். பிறந்தநாள் என்றாலும் திருமண நாள் என்றாலும், திருமணத்தில் தாலிகட்டும் நேரத்திலும் இனிப்பு வழங்குவதுதான் வழக்கம். இவ்வாறு விழா நாட்களில் இனிப்பை உட்கொண்டாலும் மற்ற நாட்களில் பிறகவைகளும் நமக்குத் தேவை. எப்படித்தான் இனிப்பு சுவை இருந்தாலும் கசப்பு சுவையும் நம் உடலுக்கு அவசியம் தேவை.
இன்பத்தை பார்க்கும் நாம் துன்பத் தையும் சமமாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக கரும்பு இனிப்பின் இருப்பிடம். வேம்பு கசப்பின் இருப்பிட மாகும். இதனால் தான் வருடப் பிறப்பன்று கசப்பாக இருந்தாலும் வேப்பம்பூ பச்சடியை சேர்க்கின்றோம்.
தை மாதம் இனிப்புச்சுவை தரும் கரும்பினையும் உண்கின்றோம். ஆடி மாதத்தில் அம்பிக்கையைக் கொண்டாட வேப்பிலை எடுத்துச்செல்வர். கூழ் காய்ச்சிக் கொடுப்பதில் வேப்பிலை தூவுவர். வேம்பு என்பது ஒரு கிருமி நாசினி. சர்வரோக நிவாரணி என்று கூடச் சொல்ல லாம். இதைத்தவிர நீரழிவு, புற்றுநோய் தடுப்பு. அம்மை நோய் தடுப்பு, மற்றும் நம் உடலில் உருவாகும் நச்சுக் களை அழிப்பதற்கும் பயன்படுகின்றது.
வீடுகளில் விருட்சங்களாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தெய்வீக மூலிகை வேம்பாகும். கரும்பிற்கும், வேம்பிற்கும் உள்ள சுவை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இரண்டும் சமநிலை வகிக்கின்றது.
உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறியுள்ளார். எனவே ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் சீரோடும். சிறப்போடும் ஒவ்வொருவரும் வாழமுடியும். எனவே அன்றாட வாழ்வில் அறுசுவை உணவால் ஆரோக்கிய வாழ்வை நாம் பெறவாம்.
- உணவு, இனிப்பு பொருட்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டு க்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்உள்ள உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளி ட்ட கடைகளுக்கு தஞ்சை மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.
இதில் தீபாவளிபண்டிகைக்கு தயாராகி வரும் இனிப்புகள் தரமானதாக உள்ளதா எனவும் அத்தோடு அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி யாகும் தேதிகள் கட்டாயம் குறிப்பிடப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்ட பத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பாக உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மற்றும் இனிப்பாக உரிமை யாளர்களிடத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள் மற்றும் சில விதிமுறைகள் வழங்கினர்.
பின்னர் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா செய்தி யாளர்களிடத்தில் கூறுகை யில், ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதியை கட்டாயம்குறிப்பிட வேண்டும்.
இந்த நடை முறையை கட்டாயம் அனைத்து ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
- முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
முன்னதாக சங்க செயலாளர் ரோட்டரியன் சோமசுந்தரம் அனைவ ரையும் வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர்கள் ரோட்டரியன் அறிவழகன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரியன் வாசுதே வனின் பங்களி ப்புடன் சிறப்பாக கொண்டா டப்பட்ட விழாவில் சுமார் 30 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.
இதில் ரோட்டரியன் ஏ.ஆர்.ஜான், ரோட்டரியன் தனிகாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் வேதரத்தினம், ஆசிரியர் சுபாஷ், வார்டு உறுப்பினர் எழிலரசன், ஆசிரியர் வேதரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.
- ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தீபாவளி கொண்டாடினார்.
- அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.
தஞ்சாவூர்:
தீபாவளி திருநாளில் ஆதரவற்றோர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை மங்களபுரத்தில் உள்ள அதுல்லாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., அங்குள்ள அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.
முதியவர்கள், சிறுவர்களைப் போல் மத்தாப்புகளை கொளுத்தி உற்சாகமடைந்தனர்.
குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு , எம்.எல்.ஏ.வுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க பகுதி செயலாளர்கள் நீலகண்டன் (கீழவாசல்), சதாசிவம் (மருத்துவ கல்லூரி), மண்டல குழு தலைவர் கலையரசன், கவுன்சிலர்கள் ஆனந்த், அண்ணா.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 8 ஆண், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன.
- தீபாவளி பண்டிகைகளில் குழந்தை பிறந்தது தங்களுக்கு பரிசாக திகழ்கிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் கோர்ட்டு அருகில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கும்பகோணம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
அதன்படி தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் தினமும் சுகபிரசவமாகவும், அறுவை சிகிச்சையின் மூலமும் ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன.
அதன்படி தீபாவளி பண்டிகை நாளில் 8 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் சுக பிரசவமாக 6 குழந்தைகளும், அறுவை சிகிச்சை மூலம் 6 குழந்தைகளும் பிறந்துள்ளன.
குழந்தைகளும், தாய்மார்க ளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், தீபாவளி பண்டிகை பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் பெண்களுக்கு கையும் ஓடாது... காலும் ஓடாது... என்ன செய்வது என்று தெரியாமல் திணருவோம்... அப்போ நமக்கு ஈஸியா ஒரு ஸ்வீட் ரெடி பண்ணணும் தோணும். அப்போ இதை பண்ணுங்க... வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து மிகவும் சுவையாகவும், சுலபமாகவும் செய்ய கூடிய ரெஸிபி....
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
எண்ணெய் (அல்லது) நெய் தேவையான அளவு
ஏலக்காய் தூள்
செய்முறை:
முதலில் சர்க்கரை 1 கப் மற்றும் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கொதிக்க (5 நிமிடங்கள்) வைத்து பாகு தயாரித்து கொள்ளவும். இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ரவை + கோதுமை மாவு+ மைதா தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி பொரித்து எடுக்கவும்.
நாம் பொரித்து வைத்துள்ள பூரிகளை சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
சுவையான மால்புவா தயார்...
- கேரளா மட்டை அரிசி உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
- இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கேரளா மட்டை அரிசி - 1 கப்
பால் - 4 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரி, திராட்சை, பாதாம் - விருப்பத்திற்கேற்ப
நெய் - அரை டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
* கேரளா மட்டை அரிசியை நன்றாக கழுவி மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.
* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். அல்லது அடிபிடித்து விடும்.
* அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
* இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
* மேலே வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.
* இப்போது சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்…
குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்தும் இதை செய்யலாம்.
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
- ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.
புளியங்குடி:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து புளியங்குடியில் ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர் மூர்த்தி பாண்டியன் புளியங்குடி நகர நிர்வாகிகள் முருகன், துரைப்பாண்டியன், கணபதி, பம்பாய் மாடசாமி, மாரியப்பன், மகளிரணி மாவட்ட செயலாளர் சுவர்ணா, ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- காரைக்கால் மார்க்கத்திலிருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள புதிய வழித்தடத்தில் புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் இயக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மார்க்கத்தில் இருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.இந்த புதிய வழித்தடத்தை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, இடையாத்தாங்குடி, திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பஸ்சை வரவேற்றனர். இடையாத்தாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவகாமிஅன்பழகன், இடையாத்தங்குடி சுப்பிரமணியன், சேஷமூலை திருநாவுக்கரசு, விழுதியூர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் பேரூர் திமுக செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயக்கிய பஸ்சை வரவேற்றனர்.
இதில் புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் காரைக்கால் கிளை மேலாளர் அருள்ஜோதி, திருமருகல் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இந்திரா அருள்மணி, பெரியமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர்.
- மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் இயங்கி வரும் குருஞானசம்பந்தர் மிஷன் வி.தி.பி. நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர். தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் செயலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் தனராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.