search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம்"

    • கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்க தடை விதித்தனர்.
    • சாராயக் கடை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடை, 92 கள்ளுக்கடைகள் உள்ளன.

    புதுச்சேரி அரசு ஆரியப்பாளையம் சாராய வடிசாலையில் இருந்து சாராய கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்யப்படுகிறது. சாராயக்கடைக்கு தேவையான மொத்த சாராயத்தில், 180 மி.லி., கண்ணாடி பாட்டிலில் 50 சதவீதமும், கேன்களில் 50 சதவீத சாராயம் வழங்கப்படுகிறது.

    சாராய கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் கவரில் சாராயம் பார்சலில் கட்டி கொடுப்பர். இதுபோல் ஒரு நாளைக்கு மொத்தம் 25 ஆயிரம் லிட்டர் சாராயம் விற்பனையாகிறது.

    புதுச்சேரியில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்ட்ரா, டீ கப், ஸ்பூன் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

    சாராயம் குடித்து வீசும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மது கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆறு மற்றும் குளகரைகளில் குவிந்து ஆடுமாடுகள் மேய்வதும், நீர் நிலைகளில் மிதப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்க தடை விதித்தனர். இதையடுத்து சாராயக் கடை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தினர்.

    அதன்படி பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக சோள தட்டை மூலம் தயாரித்த எளிதில் மக்கக் கூடிய கவர்கள் மற்றும் கப்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதில் சாராயம் ஊற்றினால் கசியாது மேலும் எளிதிலும் உடையாது. மண்ணில் வீசினால் 4 நாட்களில் மக்கி விடும். கால்நடைகள் சாப்பிட்டாலும் பாதிப்பு வராது. இத்துடன், 3 கிலோ பொருட்களை தாங்கும் பை ஒன்றும், பிளாஸ்டி கப்பிற்கு மாற்றாக சோள தட்டையில் தயாரிக்கப்பட்ட கப்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு சாராயக்கடைகள் மற்றும் மது கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற ரமேஷை தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம் அருகே 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமர் மனைவி சின்னப்பிள்ளை(40) தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரை கண்ட சின்னப்பிள்ளை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சின்னப்பிள்ளையை தேடி வருகிறார்கள்.

    ×