என் மலர்
நீங்கள் தேடியது "ஐநா"
- 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
- குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் காசாவுக்குள் வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது.
மார்ச் 2 முதல், எந்த மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் வாகனங்களும் காசாவிற்குள் நுழையவில்லை. 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. 21 ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையை சீர்குலைத்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்ட அமைப்பு, மூன்று வாரங்களுக்கும் மேலாக காசாவிற்கு புதிய பொருட்களை கொண்டு வர முடியவில்லை என்று கூறியுள்ளது. காசாவில் தற்போதுள்ள இருப்புக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருக்கும், இதனால் லட்சக்கணக்கானோர் கடுமையான பசியின் அபாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காசாவின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தடுப்பூசிகளும் மறுக்கப்படுகின்றன. இது சுகாதார நெருக்கடியை மோசமாக்குகிறது. UNRWA செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமா கூற்றுப்படி, "குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது."
மற்றொரு அடியாக, இஸ்ரேலின் மெகோரோட் நிறுவனம் காசாவின் 70% நீர் விநியோகத்தை துண்டித்தது. மீண்டும் நீர் வழங்கப்படாவிட்டால் ஒரு பேரழிவு தரும் நீர் நெருக்கடி ஏற்படும் என்று காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கு மத்தியில் இஸ்ரேலின் கொடிய வான்வழித் தாக்குதல்களால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குழந்தைகள் மீது எதிர்மறையான அதீத அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
- புத்த மடாலயத்தில் திரண்டிருந்த சுமார் 270 புத்தபிட்சுகளும் உயிரிழந்தனர்.
- கனரக உபகரணங்களின் பற்றாக்குறை மீட்பு நடவடிக்கைகளை மெதுவாக்கியுள்ளது.
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்க்கப்பட்ட வண்னம் உள்ளன.
இந்நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 3,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ரமலானையொட்டி நாடு முழுவதும் மசூதிகளில் பெருந்திரளாகத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்கள் சுமார் 700 பேரும், புத்த மடாலயத்தில் திரண்டிருந்த சுமார் 270 புத்தபிட்சுகளும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டில் பசி மற்றும் நோய் பரவல் மோசமடையக்கூடும் என்றும், மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதில் தடை ஏற்பட்டுள்ளதாவும் உதவி குழுக்களும், ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரித்துள்ளன.
குடிநீர் மற்றும் மின்சாரம் தடை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்கிகளில் சிக்கல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் நிவாரண பணிகளில் தொய்வை ஏற்படுத்தி வருகின்றன. கனரக உபகரணங்களின் பற்றாக்குறை மீட்பு நடவடிக்கைகளை மெதுவாக்கியுள்ளது.
- கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.
- ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.
ஜெனீவா:
சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.
அதில் ஜெனீவாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன. அவர் சில கருத்துகளையும் பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து உள்ளார்.
அதில் அவர், 'கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர்.
அவர்கள் கூறியதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
- தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.
- ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.
அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்றைய தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.

ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. இது உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிக பயங்கரமான தாக்குதல் ஆகும். குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷியாவின் வெடுகுண்டு தாக்குதலில் அணை உடைந்து, தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால் கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணத்தினால் வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சி.
- ஆபத்தான கடல் மற்றும் தரைவழியை பயன்படுத்துவதால் உயிரிழப்பு.
மெனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா நாடுகள் வழியாக உள்ள இடப்பெயர்வு பாதைகளை பயன்படுத்தி புலம்பெயர்வோர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக நிலை ஏற்படுவதாகவும், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,800 பேர் எனவும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
சஹாரா பாலைவனம் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளை கடந்து செல்ல முயற்சி மேற்கொள்ளும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.
இந்த ஆபத்தான பலி எண்ணிக்கை, மெனா பிராந்தியத்திற்குள்ளே உள்ள இடப்பெயர்வு பாதைகளிலும், அங்கிருந்து வெளியேறும் வழிகளிலும் புலம்பெயர்வோர்களுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்வதில் உடனடி கவனமும் ஒருங்கிணைந்த முயற்சிகளும் தேவை என்பதை காட்டுகிறது என்று அந்த அமைப்பிற்கான மத்தியகிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா மண்டல இயக்குனர் ஓத்மான் பெல்பீசி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை மேலும், "இந்த மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளவும் மேன்மேலும் ஏற்படக்கூடிய உயிர் இழப்புகளைத் தடுக்கவும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் அதிகரிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்துகிறது.
இதன்படி, 2021-ல் பதிவு செய்யப்பட்டதை விட இறப்பு எண்ணிக்கை 11% அதிகம் என்றும், 6 ஆண்டுகளுக்கு முன்பு 4255 ஆக இருந்தது. அதன்பின் தற்போதுதான் ஒரு வருடத்தில் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பலியானோர்களில் 92 சதவீதம் பேர் அடையானம் காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
மேற்கூறிய பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் கடல் வழிகளில், லெபனானில் இருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு புலம்பெயர்வுக்காக படகுகளில் பயணிப்போருக்கு ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இப்பிராந்தியத்தில் அதிக தரைவழி உயிரிழப்புகள் போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும், மேலும் அங்கு புலம்பெயர்வோருக்கு எதிராக வன்முறைகளும் அதிகரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
ஏமன் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பாதையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 795 பேரில் பெரும்பாலானோர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஏமனின் வடக்கு மாகாணமான சாதாவில் பெரும்பாலான இறப்புகளும், லிபியாவில் 117 இறப்புகளும், மற்றும் அண்டை நாடான அல்ஜீரியாவில் 54 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
- அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் திறந்துவிட முடிவு.
- ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவு நீரை சுத்திகரிக்கவேண்டி உள்ளது.
ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது.
அதேசமயம், அங்குள்ள அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை (கழிவுநீர்) சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
இதற்கிடையே ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி ஜப்பானுக்கு சென்றார். அவர் சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறும்போது, 'சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலப்பதற்கான திட்டங்களில் திருப்தி அடைந்தேன்' என்றார். இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை ஜப்பான் பெற்றுள்ளது. அதேவேளையில் இத்திட்டத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த அணுமின் நிலையத்திலிருந்து ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவு நீரை சுத்திகரித்து பசிபிக் பெருங்கடலில் திறந்து விட வேண்டி உள்ளது. இந்த செயல்முறையை முடிக்க 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி இன்றோடு 500-வது நாள் ஆகியுள்ளது
- உக்ரைன் இந்த போரில் 9 ஆயிரம் பொதுக்களை இழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. பின்னர் தனது ராணுவத்தின் துணையோடு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த ரஷிய- உக்ரைன் போர் உடனே முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்றோடு 500 நாட்கள் கடந்தும் நீடிக்கிறது.
படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் உள்ள ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் குடிமக்கள் பயங்கரமான எண்ணிக்கையில் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு நீண்ட போரில் இன்று நாம் மற்றொரு சோகமான மைல்கல்லை அடைந்திருக்கிறோம்" என்று அந்த அமைப்பின் துணைத்தலைவர் நோயல் கால்ஹவுன் (Noel Calhoun) கூறியிருக்கிறார்.
2023-ன் தொடக்கத்தில் சராசரி உயிரிழப்பு எண்ணிக்கை 2022-ஐ விட குறைவாக இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாகமீண்டும் ஏறத் தொடங்கியது. ஜூன் 27-ல், கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பின்பு மேற்கு நகரமான லிவிவ் நகர தாக்குதலில் கட்டிடங்களின் இடிபாடுகளில் 10-வதாக ஒரு உடலை கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலில் குறைந்தது 37 பேர் காயமடைந்திருந்தனர் எனக்கூறிய மேயர் ஆண்ட்ரி சடோவ்யி "படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனது நகரத்தில் உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல்" என்றும் கூறியிருந்தார்.
உலக பாரம்பரிய மாநாட்டின் மூலம் "பாதுகாக்கப்பட்ட பகுதி" என அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் சேதமடைந்ததாகவும் யுனெஸ்கோ (UNESCO) தெரிவித்துள்ளது.
பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், பொதுமக்களின் மின்சார மற்றும் தண்ணீர் தேவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
புச்சா மற்றும் மரியுபோல் நகரங்கள், கடந்த ஆண்டு ரஷிய அட்டூழியங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியது. அங்கு நடந்த படுகொலைகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் படங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ரஷியாவின் மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளை அதிகரித்தது.
நீண்டு கொண்டே செல்லும் இந்த போர், விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்.
- நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.
நியூயார்க்:
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.
ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:-
வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும். அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.
வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது.
வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார். வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
- தற்போது மேலும் ஒரு பள்ளிக்கூடத்தை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தனர்.
பெய்ரூட்:
பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையின்போது அவர்கள் 7 பள்ளிக்கூடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு பள்ளிக்கூடத்தை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தனர். இதற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. விவகார அலுவலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அந்த பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறுமாறு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.
- ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.
கார்டூம்:
சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.
அந்தவகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 லட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.
ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.
- ஐநா சபையில் துருக்கி பெயர் கடந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது
- முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலனை செய்யப்படும்
இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என அச்சிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில்
''துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்'' என்றார்.
இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும்.
- ஐ.நா. கூட்டத்தில் ரஷியா அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது
- எங்களுடைய அனைத்தையும், பார்ட்னர் நாடுகளால் கேட்கப்படுவது முக்கியம்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்களின் ஆதரவை ஜெலன்ஸ்கி நாடி வருகிறார். மேலும், ரஷியாவை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உறுதியான எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நேட்டோ படையில் சேர்ப்பதாக தெரிவித்து, அதன் மாநாட்டில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் விடப்பட்டது.
ஐ.நா. கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஐ.நா.வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை, எங்குடைய அனைத்து வார்த்தைகள், அனைத்து மெசேஜ்கள் என அனைத்தையும் எங்களுடைய பார்ட்னர்களால் கேட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இன்னும் ஐ.நா. அவையில் ரஷியா உறுப்பினர்கள் இருந்தால் அது பரிதாபத்திற்குரியது. ஆனால், இருக்கிறார்கள். ரஷிய பயங்கரவாதிகளுக்காக இங்கே இடம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கானது அல்ல. ஐ.நா. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.