என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகழ்ச்சி"

    • சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

    கரூர்

    கரூர் பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளியில் கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 25-ந்தேதி வரை கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பசுபதிபாளையம் நகர்மன்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் உதவி திட்ட அலுவலர் சத்யபாமா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."

    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு குமாரபாளையத்தில் நடைபெற்று வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்ப டுத்துவது, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    குமாரபாளையம்:

    தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு குமாரபாளையத்தில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி குமாரபாளை யம் பாரதி நகரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட குழுவினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியா ளர்கள் இணைந்து வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல் பற்றியும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்ப டுத்துவது, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யபட்டது.

    இதில் கவுன்சிலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஜுல்பிகர் அலி, ஐயப்பன், கதிரேசன், விக்னேஷ், கந்தசாமி உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஒருமுறை பயன்படுத்தப்படும்

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆணைக்கிணங்க காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியினை முற்றிலும் நெகிழியில்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்சிக்கு வழியில்லாத ஒருமுறைபய ன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்புத் திட்டத்தினை முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் துவக்கி வைத்தார்.

    மேலும் பொதுமக்களிடம் நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தவிர்த்து மஞ்சள் பையினை பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நெகிழியினால் ஏற்படும் தீமைகள், அதனை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    சுவர்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் ஆட்டோ மூலம் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக், மெழுகு பூசப்பட்ட கப்புகள்,

    பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறுஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாகும் இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவை தவிர்த்து மஞ்சள் பையினை கையில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    பொதுமக்களை துணிப்பைகளை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 25,000 துணிப்பைகள் வழங்க வேண்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டேரியன் பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் டாக்டர்.கே.சீனிவாசன் இடம் செயல் அலுவலரால் கோரப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல்அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை தாங்கினார்.

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதாசுரேஷ் மற்றும்  துணைத்தலைவர் சி.சுதாசிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தினார். பேரூராட்சி

    மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன்,மணிவேல், விஜயா, ராஜ்குமார், தொட்டியம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர்

    பி.தங்கவேல், காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் கே.டி.செல்வராஜ்,தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி முன்னாள்துணைத்தலைவர் சிவசெல்வராஜ், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,ராம்குமார், வேல்முருகன், துவகுலசு மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலகபணியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்.

    • நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகர்கோவில்:

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 26-ந் தேதி அன்று உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, லூயிஸ், பரமேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    • அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "அரசியலமைப்பு தினம்" உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறை யையும் பேணி பாதுகாக்க வேண்டும் என உறுதி ெமாழி எடுத்துக் கொண்டனர்.

    மேற்படி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குனர் எஸ்விஆர் கிருஷ்ணன் (இயக்கம்), பொது மேலாளர்கள் நாகராஜன், (சக்தி), கலைச்செல்வன் (மனித வளம்) மற்றும் துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தலைமையில் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    • வீர வணக்க நிகழ்ச்சி நடந்தது
    • விசிக தெற்கு ஒன்றிய சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசிக தெற்கு ஒன்றிய சார்பாக மாவீரர் தினத்தை முன்னிட்டு வீர வணக்க நிகழ்ச்சி மற்றும் ஒன்றிய கலந்தாய் கூட்டம் வானதிரையின் பட்டினம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட அமைப்பாளர் செ.க. குமார் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்திற்கு முன்னிலையாளர்களாக மஞ்சுளா இளங்கோவன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பூமா கொளஞ்சியப்பன், ஒன்றிய துணை செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் சி. பி. ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் தலைமையில் சட்ட நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட உதவி திட்ட அலுவலர் பங்கேற்றார்

    பெரம்பலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது.

    பெரம்பலூர் ரோவர் மேல்நிலை பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கிவைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, கல்வி ஒருங்கிணைப் பாளர்கள் பாரதிதாசன், சுப்ரமணியன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஆகியோர் பேசினர். குழு நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு , நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாசிரியர்கள் துர்கா, ரூபி, மரகதம் ஆகியோர் முன்னின்று போட்டிகளை நடத்தினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் துர்கா நன்றி கூறினார்.

    இதே போல் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கயல்விழி தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன் முன்னிலையிலும், எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் தலைமையிலும், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைவாணன், ஜனனி ஆகியோர் முன்னிலையி லும்,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையிலும்,

    பள்ளியின் தலைமையாசிரியை திருமலைச்செல்வி முன்னிலையிலும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் ராணிபரிமளா, மகேஸ்வரி மற்றும் தனவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
    • சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் நீட் மற்றும் ஐ.ஐ.டி.க்கான பயிற்சி வகுப்பு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. அரசன் மாடல் பள்ளியும், தனியார் நிறுவனமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பள்ளி தாளாளர் அசோகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அறிவரசு, தனியார் நிறுவன அதிகாரிகள் தினேஷ்குமார், ரவி, சுப்பிரமணியன், சிவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த ஒப்பந்தம் மூலம் இனி வரும் காலங்களில் அரசன் மாடல் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், சிவகாசி மற்றும் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    • பொது மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தரம் பிரித்து வழங்குவதற்காக

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நகர்ப்புற தூய்மைப்படுத்தி திட்டம் மட்டும் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு 2 வழங்கப்பட்டு அதன் மூலம் வீட்டில் இருக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வைப்பதற்கு கூடை வழங்கினார்கள்.

    நகராட்சி முழுவதும் உள்ள வீடுகளில் குப்பைகளை தனித்தனியாக வைத்திருந்தால், துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் குப்பை கூடைகள் கூடைகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை தாங்கினார். மற்றும் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலையில் வைத்தனர். ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் ஆர் முருகன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முன்னாள் தலைவர்கள் குமணன் செந்தில்வேல் விஜயகுமார் கிருபாநிதி மற்றும் உறுப்பினர்கள் கார்த்தி செந்தில் வேல் சிலம்பு செல்வன் சிவகார்த்திகேயன் சரவணன் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது
    • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் குறித்து

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெகடர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவிக்கையில், இன்று ஆண்டிமடம் பேருந்து நிலையம், மீன்சுருட்டி பேருந்துநிலையம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் தா.பழூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியிகள் நடைபெறுகிறது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் தெரிந்து பயன்பெற வேண்டும் என்றார்.

    பின்னர், அவர் அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466 வது ஆண்டு கந்துாரி விழா, கடந்த 24 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் அரைக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து கடந்த2 ம் தேதி சந்தனக்கூடு விழாவும், 3:ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது.

    இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவின் கடைசி நாளான நேற்று கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவுப் பெற்றது. இந்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 400 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி மீனவ கிராமங்களில் இருந்து எடுத்துவரப்படும் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பழம், இனிப்பு மலர்களை பட்டினச்சேரி கிராம மீனவ பஞ்சாயத்தர்கள் தாம்பூலத்தில் வைத்து மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அவர்களை அவர்களை நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்து வரக்கூடாது என்றும் துவா ஓதப்பட்டது. நாகூர் ஆண்டவர் காலடியில் மலர்கள் தூவி ஆயிரந்தோனி என மீனவ மக்கள் பிரார்தனை செய்தனர்.

    இது குறித்து நாகூர் தர்கா நிர்வாகி கூறும் போது நாகூர் ஆண்டவரை முதன்முதலாக நாகூருக்கு வரவழைத்து தங்குவதற்கு இடம் கொடுத்து அரவணைத்தது மீனவ மக்கள் என்றும் அதனை போற்றும் விதமாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெறுவதாக தெரிவித்தார். நாகூர் தர்காவில் இந்து முறைப்படி மீனவ மக்கள் தாம்பூல சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனையில் ஈடுப்பட்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுத்தும் விதமாகவும் இருந்தது அனைவரும் மத்தியிலும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
    • நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகே, நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பைக்குகளை வைத்து அந்தரத்தில் பறந்தும், ஒற்றை சக்கரத்தில் பைக்கை தூக்கி வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கைகளை விட்டபடியே பைக்கை ஒட்டியும் சாகசம் செய்தனர். இதற்கு பார்வையாளர்களாக செல்லுபவர்களுக்கு ரூ.500 நுழைவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்த சாகச நிகழ்ச்சிக்கு காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு முதலில் காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட இடத்தில் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆனால் இதுபோன்ற எவ்வித நிபந்தனைகளையும் கடைப்பிடிக்காமல் இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    ×