என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை"

    • இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில்
    • “எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன்.

    சத்தீஸ்ரில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவர் உரிமையாளரால் கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தானை அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி என்ற இருவர் ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கரின் காப்ரபட்டியில் சோட்டு குர்ஜார் என்பவரின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சோட்டு குர்ஜார் மற்றும் அவரது உதவியாளர் முகேஷ் சர்மா ஆகியோர், அபிஷேக் மற்றும் வினோத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கினர்.

    இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அரைநிர்வாண நிலையில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுவது பதிவாகியுள்ளது.

    தாக்குதலிலிருந்து இருவரும் ராஜஸ்தானில் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பாதிக்கப்பட்ட வினோத் கூறுகையில், "எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன். அதை அவர் மறுத்ததால், நான் வேலையை விட்டு நிற்கேன் என்றதும், அவர் என்னை தாக்கத் தொடங்கினார்.என்னுடன் சேர்த்து வினோத்தையும் தாக்கினர்" என கூறினார்.

    இந்த சம்பவம்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.   

    • தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்
    • பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல.

    சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு அவர் கையாண்ட வழிமுறை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.

    இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட  சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார்.

    அவர் தனது பதிவில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் ஊழியர்களை சின்ன சின்ன விஷயங்களுக்காக பாராட்டுவதால் கூட பெரிய பெரிய மாற்றங்கள் நடக்கும். பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும் என்று நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏஞ்சலாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

    • சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
    • சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது.

    வேலை வாய்ப்புகள் அரிதான இக்காலத்தில் ஏரளமான சிறுதொழில் களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. லாபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். அதே போல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உங்கள் லாபமானது உங்கள் பொருள்களின் தரம், உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை, வாடிக்கையாளர்களை நீங்கள் நடத்தும் விதம், போன்றவற்றால் உங்களின் லாபம் அதிகரிக்கும்.

    சரி உங்களக்கு உங்கள் விருப்பமான சிறுதொழில் என்னவென்று தெரியவில்லையா.கீழ் கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

    உணவு பொருள் சிறுதொழில்:

    1.மசாலா பொடி தயாரிப்பு

    2.ஊறுகாய் தயாரிப்பு

    3.பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு

    4.ஜாம் தயாரிப்பு

    5.சிப்ஸ் தயாரிப்பு

    6.அப்பளம் மற்றும் வத்தல் தயாரிப்பு

    7.மிட்சேர் போன்ற சிற்றுண்டி தயாரிப்பு

    8.சிறு உணவகம்

    9.டீ கடை

    10.ஜூஸ் கடை

    11.சிற்றுண்டி விற்பனை கடை

    12.இட்லி மாவு மற்றும் தோசை மாவு தயாரிப்பு

    சிறு விற்பனை தொழில்கள்:

    13.ஆடைகள் விற்பனை (பெண்கள் ஜாக்கெட் துணி ,சேலை மற்றும் பெட்டிகோட் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யலாம்).

    14.சிறு பாத்திரங்கள் விற்பனை,

    15.அழகு சாதன பொருள்கள் விற்பனை

    16.கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை

    17.வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை

    18.பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை

    19.பழம் விற்பனை

    20.காய்கறி விற்பனை

    ஆபீஸ்களுக்கு எழுதுபொருள் விற்பனை

    பண்ணை சிறு தொழில்கள்:

    21.முயல் வளர்ப்பு

    22.கோழி மற்றும் காடை வளர்ப்பு

    23. தேனீ வளர்ப்பு

    24.ஆடு வளர்ப்பு (ஆரம்பத்தில் ஒரு ஜோடி வாங்கினால் நல்லது )

    மேற்கண்ட பண்ணை தொழில்கள் முறையான பயிற்சி பெற்ற பின் செய்தால் நல்லது. இது போன்ற பல தொழிகள் நம்மை சுற்றியுள்ளன. அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி. இரண்டாவது அந்த சிறுதொழிகளுக்கான மூலப்பொருள்கள் கிடைக்குமிடங்களை தெரிந்து கொள்வது .

    மூன்றாவது அந்த சிறுதொழில்களுக்கான கருவி முதலீடுகளை குறைத்தல். இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை உடனே வாங்கிவந்து விட கூடாது. ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும்.

    நான்காவது உங்கள் தொழில் மேம்பட தினமும் 5 முக்கிய வேலைகளை ஒவ்வொன் றாக செய்ய வேண்டும். முக்கியமற்ற வேலை களை பின்பு நேரம் இருந்தால் செய்யலாம்.

    ஐந்தாவது மனக்காட்சி படுத்துதல் உங்களால் இத்தொழிலை சாதிக்க முடியும் என நம்புவது. சுருக்கமான சொல்ல வேண்டுமானால் உங்களின் படைப்பு திறனை முடிவாகிவிடுதல். 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு நீங்கள் உங்கள் தொழிலில் அதிக பட்சமாக உங்கள் சாதிக்க முடிந்தால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும். உங்கள் நிறுவன கணக்கில் ஏராளமான பணம், கார் பங்களா, வெளிநாடு சுற்றுலா மற்றும் பண்ணை வீடு போன்றவற்றை மனக்காட்சி படுத்த வேண்டும்.

    • வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 39). இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லவில்லை. வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படு கிறது.

    இதில் மனமுடைந்த அவர் விஷம்குடித்து மந்தையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை மாவட்டம் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அவரது தம்பி முத்துப்பாண்டி கீழராஜ குலராமன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வருமானம் இல்லாததால் மனவிரக்தி
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்பம்மம் கொற்ற விளையை சேர்ந்தவர் ரெஜின் (வயது 29) திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.

    அங்கு வேலை சரியாக அமையாததால் சொந்த ஊரான மார்த்தாண்டத்திற்கு வந்து வெல்டிங் தொழில் செய்து வந்தார். அதிலும் போதிய வருமானம் இல்லாததால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்தி விட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.காலையில் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

    இதனையடுத்து அவரது தந்தை மாடியில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
    • தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

    செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

    தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.

    தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.

    சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.

    முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

    • வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • உலக காதுகேளாதோர் தினவிழா

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் சார்பில் உலக காதுகேளாதோர் தினவிழா தனியார் திருமண மகாலில் நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வரவேற்புரையை காதுகேளாதோர் சங்க சேர்மன் ஜெயகுமார் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க தலைவரும், தி.மு.க. நகரச்செயலாளருமான செந்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

    விழாவில் பள்ளிகள், கல்லூரிகளில் சைகைமொழி தெரிந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு அலுவலங்களில் சைகைமொழி பெயர்ப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7சதவீதமாக உயர்த்தி தரவேண்டும், ரூ.3000 முதல் 5000 வரை உதவி தொகை உயர்வு வேண்டும், சிறப்பு வீடுகள், மனைகள் இலவசமாக வழங்க வேண்டும், ஓட்டுனர் உரிம அட்டை வழங்கப்பட வேண்டும், கபடி போட்டியில் எஸ்டிஏடீ கபடி காதுகேளாதோர் அனுமதியை ஏற்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விழாவில் காது கேளாதோர் சங்க துணை சேர்மன் செல்வராஜ், திரைப்பட நடிகரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான சாத்தையா, அரசு வழக்கறிஞர் சிவா, முத்துரையான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் தீத்தப்பன், சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு, சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டுக் கழகம்தலைவர் பாலாஜி, மாவட்ட தலைவர் சிவக்குமார். முகமது தாகீர் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    • இன்று அதிகாலை வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • நிலுவைதொகை 2 தவணைகளில் வழங்கப்படுகிறது

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, அமைச்சர்கள் முன்னிலை யில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது ரூ.40 தினக்கூலி வழங்குவது, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதனை செயல்படுத்த அரசு ரப்பர் கழகம் முன்வரவில்லை. இதனால் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குமரி மாவட்ட த்தைப் பொறுத்த வரை, கீரிப்பாறை,மணலோடை, பரளியாறு, காளிகேசம், சிற்றாறு, மருதம்பாறை, குற்றியார், கோதையார் பகுதிகளில் அரசுக்கு 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

    இங்குள்ள 9 கோட்ட ங்களில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 30 நாட்கள் இரவு பகலாக போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி யில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் தின்கர்குமார், சேர்மன் கவுசல், பொது மேலாளர் குருசாமி ஆகியோர் முன்னி லையில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. தொழிற் சங்க நிர்வாகிகள் பால்ராஜ் (ஐ.என்.டி.யூ.சி), வல்சகுமார் (சி.ஐ.டி.யூ), சுகுமாரன் (தொ.மு.ச), மகேந்திரன் (அ.தி.மு.க.), இளங்கோவன் (ரப்பர் தோட்ட தொழிலாளர் பேரவை) ஆகியோர் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில் ரூ.40 தினக்கூலி வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

    மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடத்து வது எனவும் முடிவு செய்ய ப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தை தொழிலாளர் நல அதிகாரி முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகி கள் தரப்பில் வலியுறுத்த ப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஊதிய நிலுவைத் தொகையை எப்போது இருந்து வழங்கு வது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் இருந்து அதனை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. ஒருவழியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. வருகிற 15 மற்றும் 22-ந் தேதி என 2 தவணைகளில் ஊதிய நிலுவை தொகையை வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புவதென முடிவு செய்தனர். அதன்படி நாளை (7-ந் தேதி) அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப உள்ளனர்.

    • ராஜபாளையம் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மாங்குடியை சேர்ந்தவர் தாமோதரன். இவரிடம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தளவாய்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சப்-கலெக்டர் போல் நடித்து பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் தனது நண்பர் மாசிலாமணி என்ப வர் மூலமாக தாமோத ரனின் பேரன் சதீஷ்குமாருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தர வில்லை.

    இதுதொடர்பாக தாமோ தரன் கேட்டபோது, அவரை யும், அவரது பேரனையும் கொலை செய்து விடுவதாக செந்தில்குமாரும், மாசிலா மணியும் மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக ராஜபாளையம் குற்றவியல் நீதி மன்றத்தில் தாமோதரன் வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்குமார், மாசிலாமணி மீது தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டம் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டது
    • விவசாயத் தொழிலாளர் சங்க ேகாரிக்கை மாநாடு

    பெரம்பலூர்:

    அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வீசிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலையரசி, மாவட்ட பொருளாளர் காமராஜ்,மாவட்ட துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, முழுமையான கூலியை வழங்க வேண்டும். நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள்.
    • இன்முகத்துடன் பேசுங்கள்.

    தொழில்துறையில் வெற்றி பெற சில வழிமுறைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.

    உழைக்க தயாராகுங்கள்

    வேலை கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். உழைப்பை எறும்பிடம் கற்றுக்கொள்ளலாம். அது தன் எடையை விட மிக அதிக எடையை தூக்கி கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுவதே உழைப்புக்கு உதாரணம். நாளைய தேவைக்கு இன்றே அது களத்தில் இறங்கி விட்டது. நீ மட்டும் உழைக்க தயங்குவது ஏன்? சோம்பலை உதறி தள்ளு. எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள். அந்த உழைப்பு நிச்சயம் உங்களை சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டும்.

    இன்முகத்துடன் பேசுங்கள்

    தொழிலை நடத்துபவர்கள் தன்னிடம் பணிபுரியும் வேலைக்காரர்களிடமும், நுகர்வோர்களிடமும் இன்முகத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் கடினமான வேலை என்றாலும் அதை துச்சமாக மதித்து வேலைக்காரர்கள் கூடுதல் நேரமும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். சிடுமூஞ்சியுடன் பேசினால் எதிர்பார்த்த வேலை நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது.

    நுகர்வோரும் நம்முடைய இன்முக பேச்சில் மகிழ்ந்து கூடுதல் பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு உண்டு. இன்முகத்துடன் பேசுங்கள். அது உங்கள் மதிப்பை தானாக மற்றவர்களிடம் இருந்து உயர்த்தி காட்டும்.

    நேரம் தவறாமை

    தொழில் செய்பவர்கள் நேரம் தவறாமல் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய விரும்பும் பொருட்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்தால் தான் மீண்டும் ஆர்டர் கிடைக்கும். அது போல் நேரம் தவறாமல் பணிக்கு செல்ல கற்று கொள்ள வேண்டும். சூரியன் ஒருநாள் நேரம் தவறி உதித்தால் நிலைமை என்னவாகும். சிந்தித்து செயல்படுங்கள். நேரத்துடன் உழையுங்கள்.

    முயற்சியை கைவிடாதீர்கள்

    முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கேற்ப முயற்சி செய்தால் தான் எந்த துறையிலும் சாதிக்க முடியும். ஆதலால் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். தோல்வி கிடைக்கிறதே என்று செய்ய முயன்ற தொழிலில் பின்வாங்கினால் நிச்சயம் சாதிக்க முடியாது.

    அந்த தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். பின்னர் தோல்வி தவிர்ப்பது எப்படி என்று உழையுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். கரையை தொடமுடியவில்லை என்று எப்போதும் அலைகள் தன் முயற்சியை கைவிடுவதில்லை. என்றாவது ஒருநாள் சுனாமி, பேரலைகளுடன் அது கரையை எட்டும்.

    திட்டமிடுதல் அவசியம்

    ஒருவர் தொழில்முனைவராக வர வேண்டும் என்றால் அதற்கு திட்டமிடுதல் அவசியமாகும். நாம் மேற்கொள்ள இருக்கும் தொழிலில் வெற்றி பெற முடியுமா? அந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் பெறலாமா? என்று ஆராய்ந்து திட்டமிட்டு தொழிலை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிடாமல் செய்த காரியம் தோல்வியில் தான் முடியும். எனவே நீங்கள் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது நமக்கு சரிப்பட்டு வருமா என்று ஆராய்ந்து, அந்த தொழிலை மேற்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த தொழிலில் வெற்றியை பெற முடியும்.

    விளம்பர யுக்தி

    இன்றைய போட்டி உலகில் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் உங்கள் நிறுவனத்தை அவசியம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரக்கூடிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். விளம்பரம் இல்லையெனில் உங்கள் பொருட்களின் தன்மை பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    பெரிய, பெரிய நிறுவனங்கள் மக்களிடம் மிகவும் பரிட்சம் ஆன பிறகும் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி வருவதே அது தங்கள் நிறுவனம் மக்கள் மனதை விட்டு அகன்று விடக்கூடாது என்பதற்காக தான். ஆதலால் நீங்கள் எந்த தொழிலை ஆரம்பித்தாலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எளிதில் மக்கள் மனதில் புரியும்படி விளம்பரம் செய்யுங்கள். அதன் மூலம் உற்பத்தி பொருட்கள் அதிகரித்து அதிக லாபம் கொட்டும்.

    இதுபோல் இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.

    • விருதுநகரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
    • பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை (20-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

    இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளார்கள்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×