என் மலர்
நீங்கள் தேடியது "கிணறு"
- 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது.
- தீயணைப்பு நிலைய வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.
காங்கயம் :
காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் மயில் விழுந்துள்ளது. 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.
மீட்கப்பட்ட மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் ஊதியூா் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.
- பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் முருகன். இவரது விவசாய தோட்டத்தில் கிணறு உள்ளது.
இந்த கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதன், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வேலு ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள், தலைக்கவசம், வலைகள் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர்கள் 3 பேரும் கிணற்றில் இறங்கி சரளை கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலு காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே அங்கிருந்தவர்கள் வேலுவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து அங்கு வந்த சின்னகோவி லான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மஞ்சுநாதன் மனைவி சரண்யா(22) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன், வீரசிகாமணியை சேர்ந்த ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக வட மாவட்டங்களில் இருந்து கிணறு வெட்டும் பணிக்காக ஒவ்வொரு குழுவினராக வந்து இங்கு தங்கி அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிணறு ஆழப்படுத்தும் பணி உள்ளதா என கேட்டு அதை செய்து வருகின்றனர். அவர்களாகவே சென்று வேலை கேட்கும்போது வேலை கொடுப்பவர்கள் எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வேலை வழங்குவதாக கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை முறைப்படுத்தி கிணறு ஆழப்படுத்தும் வேலைக்கான பணிகளை செய்யும்போது முறையான அனுமதி மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா? என கவனித்து அதன் பின் அனுமதி வழங்கினால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
- மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி மாயமாகி இருப்பது தெரிந்தது.
திருவொற்றியூர்:
மணலிபுதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு சொந்தமான இடம் மணலி 200அடி சாலையோரம் சி.பி.சி.எல். தொழிற்சாலை மதில் சுவரையொட்டி உள்ளது.
அந்த இடத்தில் சுமார் 25 அடி ஆழத்தில் உறை கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த நிலையில் பெருமாள் தனது இடத்தை பார்க்க வந்தார்.
அப்போது அங்கு இருந்த கிணற்றை காணவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி தரையோடு தரையாக மாயமாகி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள், மாயமான தனது கிணற்றை கண்டு பிடித்து, பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று மாநகராட்சி மணலி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் மழைநீர் வடிகால்வாய் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தரையோடு தரையான கிணற்றை எப்படி மீட்பது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
- அர்ஜுன் காற்றின் வேகத்தால் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
- தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜா என்பவரது 50 அடி ஆழமுள்ள கிணற்றிற்குள் மருதப்பபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மகன் அர்ஜுன் (வயது13) என்பவர் தண்ணீர் குடித்துவிட்டு ஓரமாக நின்ற போது காற்றின் வேகத்தால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். கிணற்றில் விழுந்த சிறுவன் மோட்டார் பம்ப் செட்டினுடைய பைப்பை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டான். சிறுவனின் சத்தம் கேட்டு அங்கு சென்று மகாராஜா பார்த்த போது சிறுவன் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரிந்துள்ளது. உடனடியாக கிணற்றின் படிக்கட்டு சரியாக இல்லாத காரணத்தினால் உதவிக்காக கிணற்றுக்குள் கயிற்றை அனுப்பினார். அதனை பிடித்துக் கொண்டு சிறுவன் இருந்துள்ளார்.
தொடர்ந்து சங்கரன்கோவில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் விஜயசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். பின்னர் அவரது தாத்தாவிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டாார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
- சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது.
- மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
உடுமலை :
மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் ஆத்தூர் பகுதியில் சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. சுமார் 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றின் அருகில் மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
- மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகா ராஜன்(வயது55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேரள மாநிலம் வெங்கானூர் நெல்லியறதலை பகுதியில் வசித்து கூலி வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் முக்கோல பிச்சோட்டு கோணம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் வீட்டில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
இடிவு மண்ணை அகற்றி விட்டு, பழைய குழாயை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் அடிப்பகுதியில் நேற்று முன்தினம் மகாராஜன் இறங்கினார். அவருக்கு சற்று மேலே இருந்த இடத்தில் மணிகண்டன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் இடைப்பகுதியில் மண் இளக்கமும், தண்ணீர் சலசலப்பும் இருந்ததை கிணற்றின் மேலே நின்றவர்கள் உணர்ந்தனர்.
இதனால் கிணற்றுக்குள் இருந்த இருவரையும் மேலே வரும்படி கூறினர். இதையடுத்து மகாராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கயிறை பிடித்து கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் மண்சரிவு ஏற்பட்டது.
மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விழிஞ்சம், சாக்கை தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் விரைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மீண்டும் மண் சரிவு செய்யப்பட்டது.இதனால் மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மண் சரிவு ஏற்பட்ட கிணற்றில் கிணறு தரை மட்டத்தில் இருந்து 45 அடி ஆழம் வரை கிணற்றின் உள் விட்டம் 4 அடி ஆகும். அதற்கு கீழ் 45 அடி ஆழம் வரை உள் வட்டம் 3 அடியாகும். கிணற்றின் அடிப்பகுதியில் 20 அடி உயரத்தில் மண் சரிந்து விழுந்துள்ளது.
அதில் மகாராஜன் சிக்கி இருக்கலாம் என கருதப்பட்டு மீட்பு பணி துரிதப்பட்டுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் உள்ள தண்ணீர் மற்றும் சகதியை அகற்றப்பட்டு தொழிலாளி மகாராஜனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவரை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நீடித்தது. அவர் மண்சரிவில் சிக்கி இன்று காலையுடன் 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் அவரது கதி என்ன ஆனது? என்று அனைவர் மத்தியிலும் கவலை ஏற்பட்டது. இருந்த போதிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மகாராஜன் கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்பு படையினர் கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மகாராஜன் பிணமாக மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி மீட்பு குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
- பாபுராஜின் பிள்ளைகள் பள்ளி படித்து வரும் மாணவ-மாணவிகள் என்பதால் மண் அள்ளுதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை தந்தைக்கு உதவினர்.
- கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாபுராஜின் குடும்பத்தினர் தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காட்டையை சேர்ந்தவர் பாபுராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது வீடு உள்ள பகுதியை சேர்ந்தவர்கள், அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பாபுராஜின் குடும்பத்தினர் அங்கிருந்தே தண்ணீர் எடுத்தனர். இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பாபு ராஜின் குடும்பத்தினரின் தேவைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால் என்ன செய்வதென்று தவித்த அவர்கள் தங்களது வீட்டு வளாகத்தில், தாங்களாகவே கிணறு தோண்ட முடிவு செய்தனர். அதன்படி, பாபுராஜ் அந்த பணியை தொடங்கினார். அவருக்கு கிணறு தோண்ட அவருடைய மகன் சிவாஜித், மகள் சிவான்யா ஆகியோர் உதவி செய்தனர்.
தினமும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் சீக்கிரமாக வீட்டிற்கு பாபு ராஜ் வந்து விடுவார். பின்பு தனது பிள்ளைகளுடன் சேர்ந்து கிணறு தோண்டும் பணியில் இரவு வரை ஈடுபடுவார். பாபுராஜின் பிள்ளைகள் பள்ளி படித்து வரும் மாணவ-மாணவிகள் என்பதால் மண் அள்ளுதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை தந்தைக்கு உதவினர்.
இதனால் 9 அடி விட்டத்தில் 34 அடி ஆழ கிணற்றை 50 நாட்களில் தோண்டி முடித்தனர். 30 அடி ஆழம் தோண்டி முடிந்தபோது பாறைகள் இருந்ததால் பாபுராஜ் என்ன செய்வ தென்று திகைத்தார். பின்பு பாறை உடைக்கும் எந்திரத்தை வாடகைக்ககு வாங்கி உடைத்தார். 4 அடி வரை பாறையை உடைத்து எடுத்ததும் தண்ணீர் வந்தது.
இதையடுத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்தினர். கிணற்றில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியது. அதன் பிறகு அவர்களாகவே கிணற்றுக்கு தடுப்புச் சுவர் நேர்த்தியாக கட்டி முடித்தனர். தற்போது அந்த கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாபுராஜின் குடும்பத்தினர் தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
- வாலிபரை கொலை செய்து பிணம் கிணற்றில் வீசியுள்ளனர்.
- மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா?
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத் தான் புது கண்மாய் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பேண்ட் சட்டை அணிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலை அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து அழுகிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை மீட்டனர்.
அதன்பின் வாடிப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் முரு கேசன், மாயாண்டி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் கிரே கலர் பேண்டும், புளூ கலரில் வெள்ளை புள்ளி போட்ட முழுக்கை சட்டை யும் அணிந்திருந்தார். உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. முகம் முழுவதும் உப்பிய நிலையில் காணப்பட்டது.அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. கிணற்றை சுற்றி உள்ள பகுதியில் பேக், செல்போன் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? அல்லது காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துமணி விசாரித்து வருகிறார்.
- புளியம்பட்டியில் பாதுகாப்பு இன்றி கிணறு திறந்து கிடக்கிறது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டு, பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் நகராட்சி அலுவ லகம், கிராம நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. மேலும் மாணவ, மாணவி கள் அரசு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலை யாக இருக்கிறது. இந்த சாலை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை யாக உள்ளதால் இந்த ரோட்டில் எப்போது போக்கு வரத்து அதிகம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையையொட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஒரு கிணறு உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தில் இருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது. கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு வந்து, செல்ப வர்களும் மற்றும் பொது மக்கள் போக்கு வரத்து அதிகம் உள்ள இந்த சாலை என்பதால் இந்த கிணற்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மற்றும் விபத்துகள் நடக்காமல் இருக்க பாது காப்பு இன்றி திறந்து கிடக்கும் இந்த கிணற்றை இரும்பு கேட்டுகள் அமைத்து மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- நகராட்சி நிர்வாகம் திறந்து கிடந்த கிணற்றில் இருந்த கழிவுகளை சுத்தம் செய்தது.
- இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தி லிருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது.
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி தினசரி மார்க்கெ ட், பஸ் நிலையம் செல்லு ம் சாலை யின் அருகில் நகராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம் சார்பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவல கங்கள் இருப்பது குறிப்பிடத்த க்கது. இந்த வழியாக தினமும் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருக்கிறது. இந்த சாலை முற்றிலும் பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலை.
இந்த சாலையை யொட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பாது காப்பின்றி ஒரு கிணறு திறந்து கிடந்தது. இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தி லிருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது. மற்றும் இந்த கிணற்றில் குப்பை கழிவுகள் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் முதி யோர்கள் மற்றும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது என மக்கள் புகார் கூறினர். எனவே போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை என்பதால் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமலும் மற்றும் சுகாதாரக் கேடு ஆகாமலும் தடுத்தும் மற்றும் விபத்துகள் நடக்கா மல் இருக்க பாதுகாப்பு இன்றி திறந்து கிடக்கும் இந்த கிணற்றை இரும்பு கேட்டுகள் அமைத்து மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து சில நாட்களுக்கு முன்பு மாலை மலர் நாளிதழில் செய்தி வெளிவந்தது. இதை த்தொடர்ந்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் திறந்து கிடந்த கிணற்றில் இருந்த கழிவுகளை சுத்தம் செய்தது. இதை தொடர்து அந்த கிணற்றின் மேல் பகுதியில் புதிய இரும்பு கேட்டுகள் அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கிணற்றை மூடினர். பொது மக்களின் கோரி க்கைகளை ஏற்று உடனடி யாக கேட்டுகள் அமைத்து கிணற்றை சரி செய்து கொடு த்து நகராட்சி ஆணையாளர் மற்றும் அதி காரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர்.
- கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்துகரை அருகில் பயன்பாடு இல்லாத கிணறு உள்ளது.
அந்த கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து கடையநல்லூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் வீசப்பட்ட மூட்டையை வெளியில் எடுத்து கொண்டு வந்தனர். அதனை பிரித்து பார்த்த போது அதில் இருப்பது இளம் பெண்ணின் சடலம் என தெரியவந்தது. அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றில் அதிகளவில் டீசல் கொட்டியிருந்ததால் வெகுநேரம் தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது.
- கிணறு தீப்பிடித்து எரிந்ததை பார்க்க ஏதோ எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிவதைப்போன்று காணப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் சீரட்டமலை பகுதி வழியாக டீசல் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ரோட்டோரத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த லாரியில் 20ஆயிரம் லிட்டர் டீசல் இருந்துள்ளது. லாரி கவிழ்ந்ததில் டேங்கர் உடைந்து அதில்இருந்த டீசல் முழுவதும் வெளியே கொட்டியது. அது அந்த பகுதியில் இருந்த நிலப்பரப்பில் பாய்ந்தோடியது. மேலும் அங்குள்ள வீடுகளில் இருந்த கிணறுகளிலும் டீசல் கொட்டியது.
இந்நிலையில் பிஜூ என்பவர் தனது கிணற்று மோட்டாரை போட்டிருக்கிறார். அப்போது கிணற்றில் கொட்டிக்கிடந்த டீசல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தண்ணீருடன் கலந்திருந்த டீசல் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
கிணற்றில் அதிகளவில் டீசல் கொட்டியிருந்ததால் வெகுநேரம் தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. கிணறு தீப்பிடித்து எரிந்ததை பார்க்க ஏதோ எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிவதைப்போன்று காணப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெகுநேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.