என் மலர்
நீங்கள் தேடியது "நியமனம்"
- அரசாணை 152 ஐ திரும்ப பெற வேண்டும்.
- அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலக வாயில் முன்பு மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள், ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாநில பொருளாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், சி மற்றும் டி பிரிவு உழியர்களுக்கான அரசு பணிகளை உருவாக்கவும் பதவி உயர்வு மற்றும் மாநகராட்சி நகராட்சி அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- காரைக்குடி தெற்கு நகர அ.ம.மு.க. செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
காரைக்குடி
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர அ.ம.மு.க. இரண்டாகப் பிரிக்கப்பட்டு காரைக்குடி தெற்கு நகர செயலாளராக, ரித்தீஷ் பஸ் உரிமையாளர் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 நகரச் செயலாளர்களும் மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாராபுரம் :
அ.தி.மு.க., ஓபிஎஸ் அணியில் தாராபுரத்தை சேர்ந்த டி. டி. காமராஜ் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம், உடுமலை மடத்துக்குளம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் பொறுப்பளாராக செயல்படுவார். மற்றொரு மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என அ.தி.மு.க. ஓபிஎஸ். அணியின் தலைமை அறிவித்து உள்ளது. புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஏற்று கொண்ட பின் டி.டி. காமராஜ் தாராபுரம் வந்தபோது புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தி.மு.க. மாநில மாணவரணி தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் இரா.ராஜீவ் காந்தி. சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான இவர் தி.மு.க.வின் மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இவருடைய கட்சி பணிகள் மிகச் சிறப்பாக இருந்து வந்துள்ளன. இவருடைய செயல்பாடுகள் குறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் ராஜீவ் காந்தியைப் பாராட்டி வாழ்த்தி பேசியுள்ளார்.
மாணவர் இயக்கங்களை ஒன்றிணைத்து செயல்பட க்கூடிய திறமை மிக்கவரான வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் கட்சி பணியை பாராட்டி தற்போது அவரை மாநில மாணரவணி தலைவராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து சென்னை யில் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரக்கூடிய ராஜீவ்காந்தி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் இல்லம் தோறும் இளைஞர் அணி என்ற திட்டத்தின் மூலம் இளைஞர் அணியில் சேரும் உறுப்பினர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை மூலம் தி.மு.க.வின் கொள்கை, வரலாற்று சாதனைகள் குறித்து மாவட்டங்கள் தோறும் நடத்தி வந்த திராவிட மாடல் நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டங்களில் கலந்துகொண்டு ராஜீவ்காந்தி பேசினார். மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று திராவிட ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.
மாநில மாணவரணி தலைவராக அறிவிக்க ப்பட்ட இரா.ராஜீவ் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இதுபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை வாழ்த்துக்களை பெற்றார்.
ராஜீவ் காந்தி கட்சியில் இணைந்த சில வருடங்களில் அவரது அயராது கட்சி பணி மூலம் தி.மு.க.வில் உயர்ந்த பதவி வழங்கியிருப்பது வரவேற்பு பெற்றுள்ளன. தி.மு.க.வின் மாநில மாணவரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு நேரிலும் மற்றும் வலைதளங்களிலும் பாராட்டுக்களும், வாழ்த்து க்களும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர்கள்-உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கான 5 நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதன் விவரம் வரு மாறு:-
* உணவு மற்றும் மேலாண்மைக்குழு தலைவர்-மச்சராஜா, உறுப்பினர்கள்- நர்மதா, நாகராஜன், வேல்ராணி (எ) உமா லட்சுமி.
* தொழில் மற்றும் தொழிலாளர் குழு தலைவர்-பாரதிதாசன், உறுப்பினர்கள்-சிவக்குமார், தமிழ்வாணன், மகாலட்சுமி.
* பொதுப்பணிக்குழு தலைவர்-வேல்முருகன், உறுப்பி னர்கள்-மகா லட்சுமி, கண்ணன், புவனா.
* கல்விக்குழு தலைவர்-சுபாசினி, உறுப்பினர்கள்-பாலச்சந்தர், பகவதி, மாலதி
இந்த 4 குழுக்களுக்கும் பதவி வழி உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மதுவிலக்கு உள்ளடங்கல் மற்றும் மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு தலைவர்- வசந்தி (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்), உறுப்பினர்கள்-இந்திரா, முத்துச்செல்வி, போஸ், பாரதிதாசன்.
- 4 ஆயிரம் பேரை புதிதாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.
- 2,331 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யும் பழைய அறிவிப்பு ரத்து.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிதாக 4 ஆயிரம் பேரை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்துச் செய்துள்ளது.
- அ.தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் நியமனம் செய்யப்பட்டார்.
- இவரை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தார்.
காரைக்குடி
ஓ.பன்னீர்செல்வம் அணியின் அ.தி.மு.க. மாநில இளைஞரணியின் இணைச் செயலாளராக காரைக்குடியை சேர்ந்த டாக்டர். திருஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் ஆகியோரது பரிந்துரையின் பேரில் இவரை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தார்.
இதையொட்டி திருஞானம் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திருஞானத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
- பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி நடந்தது.
மதுரை
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
மதுரை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர்களாக மூவேந்திரன், கண்ணன், கோசா பெருமாள், துணை தலைவர்களாக கோவிந்தமூர்த்தி, செல்வி, அரிச்சந்திரன், முத்துச்செல்வம், மஞ்சுளா, குப்பு, அனந்தஜெயம், மாவட்ட செயலாளர்களாக ஹரிகரபுத்திரன், சீதா, சித்ராதேவி, பொருளாளராக முத்துராம், அலுவலக செயலாளராக ஹரிகிரு ஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவராக சுரேஷ், விவசாய அணி மாவட்ட தலைவராக பூமி ராஜன், பட்டியல் அணி மாவட்ட தலைவராக வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
- திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
அனுப்பர்பாளையம்:
திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டுளளார். திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த இவர், திருமுருகன்பூண்டிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை (திங்கட்கிழமை) திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
- புதுக்கோட்டையில் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்
புதுக்கோட்டை:
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ரகோத்தமன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
- அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்
27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் slmombuds@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரை அறை
எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-636001 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
- சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.
- இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
சேலம்:
தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சேலம் மாநகர் காவல் துறையில், 12 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.
மீதி 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் பணியில் இணைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.