என் மலர்
நீங்கள் தேடியது "விருது"
- 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.
- நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே பாரதப் பள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பபாய் (வயது 60) இவர் கடந்த 10 -ந்தேதி இப்பகுதி வழியாகப் பாயும் கோதையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்துச் செல் லப்பட்டார்.
இந்நிலையில் 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.
இதை யடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் (போக்கு வரத்து) செல்வ முருகேசன், தீ அணைப்பாளர்கள் ஜெக தீஸ், கோட்டை மணி, நிஜல்சன், மாரி செல்வம், கபில் சிங், பைஜூ மற்றும் படகு ஓட்டுனர் சுஜின் ஆகியோருக்கு நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் நா. விஜயகுமார் அங்கீகார விருது வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், மாவட்ட உதவி தீ அணைப்பு அலுவலர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
- திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
- ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி
திருச்சி
மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள தனியார் ஓட்டலில் சி.ஐ.ஐ. தங்கச்சங்கிலி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், அதன் முழுமையான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரவலுக்கு வலுவான விநியோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வாழை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வாழை வர்த்தகச் சுற்றுச்சூழலில் விநியோக சங்கிலி முலமாக செயல்பட்டதற்கும் ஒருங்கிணைந்த சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விருது வழங்கப்பட்டது.
இதனை மகாராஷ்டிரா மாநில கவர்னர் வழங்கி பேசுகையில், விவசாயத்தில் சிறந்த குளிர்பதன வசதிகள், உண்மையில் அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்கும், விவசாயிகளுக்கு சிறந்த வருமானம் மற்றும் நாட்டிற்கு செழிப்பை வழங்குவதற்கும் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
தேசிய மழைநீர் ஆணையம் மற்றும் விருதுக் குழுவின் நடுவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் தல்வாய், தொடர்ந்து வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு ஆகியவை வலுவான குளிர் சங்கிலி மற்றும் விரிவான இணைப்புகளுடன் கூடிய சிறந்த தளவாடங்கள் மூலமாக சாத்தியமாகும் என்று விளக்கினர்.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர், முனைவர் எஸ். உமா கூறுகையில், சுமார் ரூ.700 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள அளவிலேயே வளைகுடா நாடுகளுக்கு வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரியான கொள்கை, தரமான உற்பத்தி மற்றும் விரிவான விநியோகச் சங்கிலி இருப்பதன் மூலம், இந்த ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்குக்கு உயர்த்த வாய்ப்பு உள்ளது.
வாழை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வாழை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுக்கு இந்த மையம் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கி வருவதால் இந்த விருது அனைவருக்கும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என்றார்.
விழாவில் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள், நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைதல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய காலநிலை கண்டுபிடிப்புகள் குறித்த தொழில்நுட்ப அமர்வுகளும் நடத்தப்பட்டன.
- பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.
- இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு தொடக்க க்கல்வி துறை சார்பில் 2021-22-ம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான விருதுக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊரக ஒன்றியம், தோழகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார்.
இதனை தஞ்சாவூர் ஊரக ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் ரீட்டாமேரி, ஆசிரியர் சுமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த விருது பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர், சிறப்பு பணி அலுவலர் இல்லம் தேடி கல்வி மற்றும் பொது நூலக இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநில விருது வழங்கப்பட்டது
- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அடுத்த மஞ்ச பேட்டை அரசு பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, பள்ளி கல்வித்துறையின் சார்பில் சிறந்த பள்ளிக்கான விருதை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராவிடம் வழங்கினார்.
மஞ்ச பேட்டை நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய நடுத்தர மிக்க மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி வருவது, மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது, சுற்றுச்சூழல் மன்றம் கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல், ஸ்மார்ட் வகுப்பறை மூலம் மாணவர்களின் அறிவியல் கணித சமூக அறிவியல் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகிறார்கள்தலைமை ஆசிரியரின் தொடர் முயற்சியால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரமான குடிநீர், கணினி ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவை ஏற்படுத்தி உள்ளார்.
சிறப்பாக பணிபுரிந்து வருவதற்கு மாநில நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார். சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ள பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பொதுமக்களும், கல்வி அலுவலர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- பாக்யா பாராமெடிக்கல் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கொண்டாடும் நட்சத்திரம் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- நிறுவனர் ஜெயபாண்டி பேசினார்
கரூர்:
கரூர், கோவை சாலையில் உள்ள பாக்கியா கல்வி அறக்கட்டளை, பாக்யா பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளை கொண்டாடும் வகையில் நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணி, உடற்கல்வி ஆசிரியர் புலியூர் வீர.திருப்பதி, எஸ்போ ப்ரைட் பிரைவேட் லிமிடெட் சிவக்குமார், வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பாக்கியா கல்வி அறக்கட்டளை மற்றும் பாக்யா பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் ஜெயபாண்டி பேசுகையில், நீங்கள் மாற்று திறனாளிகள் அல்ல, உலகையே மாற்றும் திறனாளிகள். அங்கத்தில் குறை இருந்தாலும் அகத்தில் குறை இல்லாதவர்கள், உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் குறை இல்லாதவர்கள், குறை கண்டு கலங்காதவர்கள். வாய்ப்புகள் வழங்கினால் ஒளிருவார்கள். பரிசுகளும், பதக்கங்களும் பெறுவார்கள். பலரின் பாராட்டுக்கு உரியவர்கள் என்றார். முடிவில் வசந்தா செல்வகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியை நந்தகுமாரி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாக்கியா கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக அரசு தோ்ந்தெடுத்து ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கி வருகிறது.
- பாராட்டுச் சான்றிதழை திருப்பூா் மாவட்ட கலெக்டரிடம் இருந்து வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி பெற்றுக் கொண்டாா்.
வெள்ளகோவில் :
மாநிலத்தில் அரசு மருத்துவ சேவைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சிகிச்சை உள்கட்டமைப்பு வசதிகள், உள் நோயாளிகள், புற நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, கா்ப்பிணிகள் பதிவு உள்ளிட்டவற்றை வைத்து சிறந்த அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக அரசு தோ்ந்தெடுத்து ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கி வருகிறது.
இதில் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் திருப்பூா் மாவட்டத்தில் முதலிடம் பெற்று அண்மையில் சென்னையில் நடைபெற்ற சுகாதாரத்துறை விழாவில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பாராட்டுச் சான்றிதழை திருப்பூா் மாவட்ட கலெக்டரிடம் இருந்து வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி பெற்றுக் கொண்டாா். சுகாதார நிலைய மருத்துவா்கள், இதர பணியாளா்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.
- அரியலூர் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்
அரியலூர்:
மஞ்சப்பை விருதுகள் பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிகநிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு(சிடி) பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க அடுத்த வருடம் மே 1ந் தேதி கடைசி தேதியாகும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக் செயல்படுத்திய நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 - வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.கீழ்க்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பேர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.சுற்றுச்சூ ழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்ழசூல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூ ழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்டங்களில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் மாநிலம் முழுவதும் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இன்னும் கூடுதல் விவரங்கள் பெற புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கபடும் என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்
- விருதுக்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வெளியிடப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற பேரவை விதிஎண்.110ன் கீழ் 2022-ம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம ஊராட்சி தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், இவ்வாண்டு முதல் மீண்டும் உத்தமர் காந்தி விருது மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தமர் காந்தி விருதுவழங்கி கவுரவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுக்கான விண்ணப்பங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வெளியிடப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
- முசிறி அரசு பள்ளியில் பயின்று அரசு பணியில் உள்ள முன்னாள் மாணவிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
- மேலும் 2021 - 2022 ம் ஆண்டு 10,11 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது
முசிறி:
முசிறி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து மருத்துவம், கல்வித்துறை, வேளாண் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் முன்னாள் மாணவிகள் 35 பேருக்கு சாதனையாளர்கள் விருந்தினை முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன், முசிறி கோட்டாட்சியர் மாதவன் ஆகியோர் பங்கேற்று வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் 2021 - 2022 ம் ஆண்டு 10,11 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து பள்ளியில் ஆசிரியர்களுக்களுக்கு பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் மகாலட்சுமி குணசேகரன் உலக தமிழ் சங்க செயலாளர் நித்யானந்தம், புரவலர் ரகுநாதன் மூலமாக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக பள்ளியின முதுகலை ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார், இந்நிகழ்ச்சியினை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் முசிறி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாலா ராமச்சந்திரன், முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர். முடிவில் பேராசிரியை ரங்கநாயகி அணைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
- அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள்- சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை ஆகும்.
திருப்பூர்:
சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டிற்கான விருது வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரால் 2022-23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, "சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டிற்கான விருது வழங்கப்படும்.
தனியார் ,பொதுத்துறை , கூட்டுத் துறை நிறுவனங்களைச் சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக (Corporate Social Responsibility Award) தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கப்படும். இவ்விருதானது 2022-ம்ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையும், நற்சான்றிதழும் கொண்ட இவ்விருது ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
தகுதிகள்:
பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு - அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருதினைப் பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள்நேரடியாகவோ, தங்களின்அறக்கட்டளைகள், தொண்டுநிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள்- சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை ஆகும்.
பரிசீலனைக்கான கூறுகள்:
மேற்கண்டநிறுவனங்களால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில்மேற்கொள்ளப்பட்ட பணிகளேவிருதுவழங்குவதற்கு அடிப்படையாகஎடுத்துக்கொள்ளப்படும். விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். மேலும் பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும்.கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்விருதுக்கு தேவையான விண்ணப்பம் www.tnrd.tn.gov.in. என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய இவ்விண்ணப்பம் இணையதளத்தில் செயல்பாட்டு நிலையில் இருக்கும். எனவே, தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதள வழி மட்டுமே தகுந்த ஆவணங்களுடன் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பான இவ்விருதினைப் பெற தகுதியான தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.
- விழாவில் இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.
சுவாமிமலை:
இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் சார்பில் விவேகானந்தா கலாம் பவுண்டேசன் மற்றும் கும்பகோணம் ரெட்கிராஸ் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் வழிகாட்டுதல் படி ரத்த தான முகாம் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் வரவேற்றார்.
நேருயுவகேந்தி ராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஸ்ரீராம கிருஷ்ணர் மடத்தலைவர் ஸ்ரீவிமூர்தானந்தா மஹரிஷி முன்னிலை வகித்தார்.
கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.
கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ வாழ்த்துரை வழங்கினார்.
கும்பகோணம் போர்டர் ஹால் நிர்வாகிகள் ராமமூர்த்தி, விஜயகுமார், ரவிராமன் கும்பகோணம் ரெட்கிராஸ் தொண்டர்கள் சிவக்குமார், சபாபதி கலந்து கொண்டனர்.
கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர்சிவந்தி, சலீம் ஆகியோர் முகாமில் ரத்த தான ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். இறுதியாக டாக்டர் சலீம் நன்றி கூறினார்.