என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்"
- கருவேப்புலாம்பட்டி கிராமத்திற்கு தினசரி பஸ் சேவை வழங்கப்படும் என்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
- பணிமனை முற்றுகை போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருவேப்புலாம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஊருக்கு காலை மற்றும் மாலை என 2 வேளையும் பஸ்கள் இயக்கப்படடது. காலை வரும் பேருந்தில் அதிக கூட்டம் இருப்பதால் நாள்தோறும் பள்ளி , கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் மக்கள் அதில் பயணிக்காக முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
மேலும் மாலை நேரத்தில் வரும் பேருந்து கடந்து சில நாட்களாக முறையாக இயக்கப்படாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதால் இரவு நேரங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை பொன்னமராவதி பேருந்து பணிமனையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து தினசரி பஸ்களை இயக்க வலியுறுத்தி பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் பணிமனை மேலாளர் ஆகியோர் பொதுமக்களிடம் இனிவரும் காலங்களில் முறையாக பேருந்து இயக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
- தற்போது இந்த இடம் சாலை உயர–மாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது.
- இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது.
பேராவூரணி:
பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் மெயின் சாலையில் (முசிறி-சேதுபாவாசத்திரம்) மாசாகாடு என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது.
கடந்த 2013-14 ம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்போது இந்த இடம் சாலை உயரமாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது. இதனால் மழை பெய்தால் சாலையிலிருந்து மழை நீர் பஸ் நிறுத்ததிற்குள் புகுந்து விடுகிறது.
மேலும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மதுஅருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது. மதுவை அருந்திவிட்டு பாட்டில்களையும், குப்பைகளையும் இந்த பஸ் நிறுத்தத்தில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இந்த இடம் சுகாதாரமற்றதாகவும், குப்பைகளுடனும் காணப்படுவதால் பஸ்சில் செல்ல வரும் பெண்கள், பயணிகள் பஸ் நிறுத்தத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு–வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற டிரைவர் மீது வழக்கு
- பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை
கன்னியாகுமரி:
தமிழக அரசு மகளிர் பயன் பெறும் வகையில் இலவச பஸ் சேவையை இயக்கி வருகிறது. இந்த பஸ்சை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த பஸ்கள் நிறுத்தங்களில் நிற்பதில்லை, கண்டக்டர்கள், இலவச பய ணம் என்பதால் பெண்களை சரியாக மதிப்பதில்லை என பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பஸ்சில் ஏற முயன்றபோது ஆசிரியை ஒருவர் தவறி கீேழ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் சென்ற அரசு பஸ், திருவட்டார் அருகே உள்ள புலியிறங்கி பகுதி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் சென்று நின்றது. இதனால் ஓடி சென்று ஏற முயன்ற தனியார் பள்ளி ஆசிரியை மேரி கிளாட்லின், படிக்கட்டில் கால் வைத்த போது தவறி விழுந்து காயம் அடைந்தார்.
அவரை அந்த பகுதி யில் நின்ற மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் காயமடைந்த ஆசிரியை மேரி கிளாட்லின் ஆவேச மடைந்து இலவச பேருந்து நாங்கள் கேட்கவில்லை, பெரும்பாலான பேருந்துகள் பெண்கள் நின்றால் பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.
நிறுத்தத்தை தாண்டி நிறுத்திய பேருந்தில் ஏற முயன்ற போது தான் எனக்கு உடம்பு முழுவதும் காயமும் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் அங்கு நின்று அழுதபடி கூறினார். இது தொடர்பாக அவர் சம்மந்தப்பட்ட பணிமனை யிலும் புகார் அளித்தார்.
திருவட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட பஸ் திருவட்டார் பணிமனையை சேர்ந்தது என தெரியவந்தது. பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டாறு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சரியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்றும் தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளி கல்லூரிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்களும் காத்து நின்றால் பஸ்கள் வருவதில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வெகு தூரம் நடந்து சென்று மாற்று இடத்தில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆம்னி பஸ்சில் அழுகிய நிலையில் புரோக்கர் உடல் மீட்கப்பட்டது.
- பண்ருட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
திருச்சி:
திருச்சி பறவைகள் சாலை பகுதியில் தனியார் பஸ் கம்பெனி உள்ளது. இங்கு தினமும் பஸ்கள் நிறுத்தப்பட்டு பின்னர் வெளியூர் புறப்பட்டு செல்லும். இந்நிலையில் அந்த பஸ் கம்பெனியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பஸ் இயக்கப்படாமல் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்று சரி செய்யலாம் என்று அந்த பஸ் கம்பெனியின் ஊழியர்கள் பஸ்சை எடுத்துச் செல்ல முயன்றனர்.
அப்பொழுது பஸ் கதவை திறந்த பொழுது பஸ்சிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு 44 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக திருச்சி கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அழுகிய நிலையில் பஸ்சில் இறந்த நபர் வடிவேல் (வயது 44) இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் கடந்த பல வருட காலமாக திருச்சியில் பல்வேறு இடங்களில் தங்கி ஆம்னி பஸ் புரோக்கராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. மேலும் இவர் அடிக்கடி இங்கு வந்து பஸ்சில் ஏறி படுத்துவிட்டு காலை நேரத்தில் எழுந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலை சில நாட்களுக்கு முன்பு இரவில் பஸ்சில் படுத்திருந்த போது மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதை யடுத்து வடிவேல உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி பஸ்சில் புரோக்கர் ஒருவர் அழகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு பஞ்சாப் முதல்-மந்திரி பெர்வைஸ் எலாஹி உத்தரவு.
- இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் வருவதை கூட கணிக்கமுடியவில்லை.
இந்தநிலையில் எதிரெதிர் திசையில் இருந்து வந்த பஸ் ஒன்றொடொன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
ஒரு பஸ் பெஷாவரில் இருந்து கராச்சிக்கும், மற்றொரு பஸ் ராஜன்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு பஞ்சாப் முதல்-மந்திரி பெர்வைஸ் எலாஹி உத்தரவிட்டுள்ளார்.பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களின் சில பகுதிகள் தற்போது அடர்ந்த பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சிந்து நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்ற நெடுஞ்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அறிவுறுத்தி உள்ளது.
- சென்னை நகரில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
- மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை நகரில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தான் பயணம் செய்ய விரும்பும் பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த பஸ் எப்போது வரும் என்பதை அறிய 'சலோ' செயலி பயன் பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பஸ்களில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பஸ்களில் பயணம் செய்யும் ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பட்டனை அழுத்தலாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்களிலும், பஸ்களிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து இன்றும், நாளையும் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துகின்றன.
இந்த விழிப்புணர்வு பிரசாரம் சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக டெப்போக்களில் நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் அவசர பட்டன்களை எப்படி பயன்படுத்துவது, அரசு உதவி எண்களை எப்படி கையாள்வது என்பது பற்றி பெண்களுக்கு ஊக்குவிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்காக இந்த டெப்போக்களில் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் அவசர பட்டனின் அமைப்பு, அவை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி காண்பிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது தெரு நாடகமும் நடைபெற்றது. நாளையும் (30-ந்தேதி) இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.
- ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
- அரியலூருக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஆலத்தூர் தாலுகா, ரசுலாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் ஊரின் வழியாக ஓடும் மருதையாற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரின் மருதையாற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. அந்த பாலம் முன்பு மழையால் அடித்து செல்லப்பட்டதில் பலர் இறந்தனர். அவர்களின் நினைவாக ஒரு நினைவு தூண் அமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரியலூருக்கு காலையில் செல்ல கூடுதல் அரசு டவுன் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஊரில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
- 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்
- தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மிடாலத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராபின்சன் ஓட்டினார்.
இரணியல் அருகே மட விளாகம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி னார்கள். திடீரென அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸின் மீது வீசினார்கள்.
இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து டிரைவர் ராபின்சன் இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணை யில் குடிபோதையில் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.
- போலீசாருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்
- குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
கன்னியாகுமரி:
புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்களில் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
மேலும் வெளியூர்களில் தங்கி மீன்பிடித்த மீனவர் கள் பலரும் ஊருக்கு வந்துள்ளனர். இதை யடுத்து மாவட்டம் முழுவ தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு வடசேரி, தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தக்கலை பஸ் நிலையம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
நிகழ்ச்சி யில், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தக்கலை இனஸ் பெக்டர் நெப்போ லியன், வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு தெரு வீதிகளில் இளைஞர்கள், வாலிபர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி னார்கள். புத்தாணை் டையடுத்து இன்று காலையில் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலை மோதியது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.
மாத்தூர் தொட்டில் பாலம் குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
- விடுமுறை முடிந்து குடும்பத்துடன் ஊருக்குப் புறப்பட்டனர்
- முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
நாகர்கோவில்:
பள்ளிகளுக்கு விடப்பட்ட அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை போன்றவை காரணமாக வெளியூர்களில் வசிக்கும் பலரும், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தனர்.
அவர்களது வசதிக்காக சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தம் காரணமாக சென்னை, ேகாவை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.
அவர்களும் தொடர் விடுமுறையை பயன்படுத்தி குடும்பத்துடன் சொந்த ஊர் வந்து, உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை கொண்டாடினர். சுற்றுலா தலங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து விட்டதால், தாங்கள் வசிக்கும் ஊர்களுக்குச் செல்ல அனைவரும் நேற்று புறப்பட்டனர். இதனால், குமரி மாவட்ட ரெயில் நிலையங்கள், பஸ் நிலை யங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலில் இருந்து வெளியூர் செல்பவர்கள், வடசேரி பஸ் நிலையம் வந்ததால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.அதில் பயணம் செய்ய பலரும் முண்டியடித்து ஏறினர்.
இதேபோல் ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்தவர்களை விட, முன்பதிவு செய்யாத வர்கள் குடும்பத்துடன் திரண்டு வந்ததால் அவர்கள் அங்கும், இங்கும் இடம் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. இதனால் முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
- கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.
- போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு 31-ந் தேதி இரவு அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை ஆணையடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக ஐரேனிபுரம் ஜஸ்டின் பணியாற்றினார்.
இந்த பஸ், இரணியல் அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் சென்ற போது, இருளில் மறைந்திருந்த 2 பேர் பஸ் மீது கல் வீசி தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சுபாஷ் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
ஆனால் கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வருவதற்குள் கல் வீசிய மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் குறித்து இரணியல் போலீசில், பஸ் டிரைவர் சுபாஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேர் மது போதையில் தள்ளாடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே அவர்கள் தான் பஸ் மீது கல் வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் வில்லுக்குறி சடையப்பனார் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- கண்டக்டர் எடுத்து அதிகாரியிடம் ஒப்படைத்தார்
- தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம்
நாகர்கோவில்:
கருங்கல்லில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பஸ் நிலையத்திற்கு வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பயணிகள் சென்றனர். அப்போது கண்டக்டர் பஸ்ஸை விட்டு இறங்கிய போது பஸ்சுக்குள் தங்க மோதிரம் ஒன்று கிடந்தது.பஸ்சில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்த கண்டக்டர் இது குறித்து அந்த பகுதியில் நின்ற பயணிகளிடம் கேட்டார்.
அப்போது தங்க மோதிரம் யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து கண்டக்டர் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
பஸ்ஸில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்து ஒப்படைத்த கண்டக்டரின் நேர்மையை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.