என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியோர்"

    • ‘டெமன்ஷியா’ என்பது மூளை சம்பந்தப்பட்ட வியாதி ஆகும்.
    • இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும்.

    புதுடெல்லி :

    அமெரிக்காவில் உள்ள சுர்ரே பல்கலைக்கழகம், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ர் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர்.

    உலகிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு மாதிரி ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    இதற்காக 31 ஆயிரத்து 477 பேரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். இதில் கிடைத்த முடிவுகள், ஒரு மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, இந்தியாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோரில் 1 கோடியே 8 லட்சம் பேருக்கு 'டெமன்ஷியா' என்ற ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

    இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும். அதே சமயத்தில், அமெரிக்காவில் 8.8 சதவீதம் பேருக்கும், இங்கிலாந்தில் 9 சதவீதம் பேருக்கும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 8.5 முதல் 9 சதவீதம் பேருக்கும் இந்நோய் இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

    மேலும், 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 60 வயதை தாண்டியவர்களில் கணிசமானோருக்கு ஞாபகமறதி நோய் ஏற்படும் என்றும், அதாவது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 19.1 சதவீதம் பேருக்கு இந்நோய் ஏற்பட்டு இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.

    இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களிடையே பெண்கள், கல்வியறிவு இல்லாதவர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகியோருக்குத்தான் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    'டெமன்ஷியா' என்பது மூளை சம்பந்தப்பட்ட வியாதி ஆகும். இந்த நோய் வந்தவர்களுக்கு நினைவுத்திறன், சிந்திக்கும் திறன், கேள்விக்கு பதில் அளிக்கும் திறன், முடிவு எடுக்கும் திறன் ஆகியவை குறைந்து விடும். மொத்தத்தில், அன்றாட பணிகளை செய்வதற்கான திறன் கடுமையாக பாதிக்கப்படும்.

    • கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
    • இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

    இளமை காலத்தில் இனிக்கிற வாழ்க்கை பலருக்கு முதுமையில் கசப்பாகி விடுகிறது. அதுவும் தனிமையில் வாழும் போது தவிப்பாகி விடுகிறது. ஏனெனில் பரபரப்பான உலகில் பாச உணர்வுகள் உள்ளங்களில் இருந்தாலும் பிள்ளைகள் இல்லங்களில் சேர்ந்து வாழ்வதற்கான சூழல் இல்லை என்கிற நிலை.

    தனிமையில் தள்ளாடும்...

    இதனால் சிலர் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்பதும் காலத்தின் கட்டாயம் என்கின்றனர். ஆனால் வயதான பெற்றோர் பலர் முதியோர் இல்லத்துக்குள் செல்லாமல் தங்களது இல்லத்திலேயே தனிமையில் தள்ளாடும் வயது வரை காலத்தை தள்ளி விடுகின்றனர். எப்போதாவது வந்து செல்லும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நினைவுகளை தாங்கியபடி அவர்களின் பயணம் தொடர்கிறது.

    உதாரணமாக மாநகராட்சி அந்தஸ்தை பெற்ற கடலூரில் திரும்பிய பக்கமெல்லாம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் சுற்றித்திரிவதே சான்று. மேலும் வீடுகளில் தனிமையில் வாழ முடியாமல் தவிக்கும் பெரும்பாலான முதியோர் நகரில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் தங்கியுள்ளனர்.

    ஆரம்பத்தில் பிள்ளைகளுடன் இருக்கும் இவர்கள், வேலை விஷயமாக பிள்ளைகள் வீட்டை விட்டு செல்லும் போது முதுமை தம்பதிகள் தனிமையிலே வாழ்கின்றனர்.

    பாதுகாப்பு இல்லை

    உள்ளூர் என்றால் உறவினர்களின் உறவு இருக்கும். வெளியூர் என்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களின் பரிவை எப்போதும் எதிர்பார்க்க முடியாது அல்லவா. அவர்களுக்கும் பரபரப்பான வேலை இருப்பதால் முதுமையில் தனிமையை தவிர இனிமையை காண முடிவதில்லை. முதியவர்கள் தனிமையில் வசிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்களுடைய மகன் அல்லது மகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழும் போது முதியவர்கள் தனியாக வசிக்கும் நிலை ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், விபத்து அல்லது வேறு காரணங்களால் வாரிசுகளை இழந்த முதியோர்களும் தனிமையில் வசிக்கும் நிலை உருவாகிறது.

    இவ்வாறு வசிக்கும் முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை. கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர். என்னதான் மனதை இளமையாக வைத்திருந்தாலும், உடலை முதுமையில் இருந்து விலக்க முடிவதில்லையே. இதனால் முதுமை காலத்தில் பாதுகாப்புகள், தேவைகள், உதவிகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் என்று இருக்கத்தானே செய்யும்.

    இத்தகைய முதியோர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    பிறரை சார்ந்து வாழும் நிலை

    அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன்: அனைத்து துறைகளிலும் நாம் என்னதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒன்றுக்கு தீர்வுகண்டால் மற்றொரு பிரச்சினை முளைக்கின்றது. கடைசி காலத்தில் முதியவர்களை கவனிக்க யாருமில்லை என்ற நிலையே உள்ளது. பொதுவாக முதுமை காலத்தில் உடல் ரீதியான பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், காது கேளாமை, கண்புரை நோய், முதுகுவலி, கழுத்துவலி, மனசோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிதி பாதுகாப்பு இருப்பதில்லை. முதுமையில் வாட்டும் தனிமை பலரை உணர்ச்சி வசப்படுத்துகிறது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர். 20 சதவீத மக்களே சுகமாக கடைசிகாலத்தில் வாழ்வதாக அறியவருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் பலவீனமடைவதால், அவர்களது வேலையை அவர்களால் கவனித்து கொள்ள இயலாத நிலைமையில் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மூத்தோர் உடல் உறுதியுடன் இருக்கவும், மனரீதியான பிரச்சினையின்றி வாழவும் வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நிதிஆதாரம் வேண்டும். மேலும் முதியவர்களை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டும். மூத்தகுடிமக்கள் நாட்டின் வழிகாட்டிகள், அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள், இளைஞர்கள் அவர்களது அறிவுறைபடி செயல்பட வேண்டும். முதியவர்களை மதித்து மனிதாபிமானத்துடன் நடத்தி அவர்கள் மகிழ்ச்சியுற வாழவும், அவர்களது தனிமையை போக்கி முடிந்தபோதெல்லாம் அவர்களுக்காக சிறிதுநேரம் ஒதுக்கி அவர்களோடு செலவிடுவது நல்லது.

    குழந்தை போல் மாறும் முதியவர்கள்

    சிதம்பரம் முதியோர் இல்ல காப்பாளர் சுகுமார்: இன்றைய காலத்தில் பெரிய கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தனித்தனி குடும்பமாக பிரிந்து வாழ்கின்றனர். பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் பெற்றோருடன் வசிக்காமல் வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் பல முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் தங்கள் வாழ்நாட்களை தங்களது குழந்தைகளுக்காக உழைத்து விட்டு, கடைசி காலத்தில் தனக்கென்று பணம் சேர்த்து வைக்காமல் இருந்து விடுகின்றனர். 60 வயதுக்கு மேல் தங்களால் பணம் ஈட்ட முடியாத நிலையில் சிறு சிறு தேவைகளுக்கு மகனையோ, மகளையோ எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். வீடுகளில் முதியவர்கள் சிலர் குழந்தையின் குணத்தை போன்று மாறி விடுகின்றனர். இவர்களது சில செயல்களை மகன் அல்லது மகள்கள் பெரிய இடையூறாக நினைக்கிறார்கள். 60 வயதாகி விட்டாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் முதியவர்களை வாட்ட தொடங்கி விடுகிறது. மாத்திரை, மருந்துகள் மற்றும் சில்லறை தேவைகளுக்கு மகன் அல்லது மகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் ஏற்படும் சிறு சிறு மன உளைச்சல்களால் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வந்து விடுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் முதியவர்களிடம் அன்புடனும், அனுசரணையுடன் இருந்தாலே பெரும் பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

    பராமரிப்பில் வைப்பது சிறந்தது

    பெண்ணாடம் எறையூர் கலியன்: 82 வயதான நான் வீட்டில் தனிமையிலே வசிக்கிறேன். இளமையில் ஓடியாடி வேலை பார்த்து குடும்பத்தை கரை சேர்த்த, எங்களை கரை சேர்க்க யாரும் இருப்பதில்லை. இதனால் என்னை போன்ற பலர் முதுமையில் ஓய்வெடுக்க கூட முடியாமல், மனஅழுத்தத்திலேயே இருக்கின்றனர். வாழ்க்கையின் கடைசி கால கட்டம் தான் முதுமை. ஆனால் இந்த வாழ்க்கையில் பலரின் அன்பையும், ஆதரவையும் பெற வேண்டும் என்ற ஏக்கத்திலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. தனிமையில் இருப்பவர்கள் நம்மை பற்றி யாராவது விசாரிக்க வேண்டும், தமது அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். வெளியூர்களில் குடும்பத்துடன் இருக்கும் பிள்ளைகள் தங்களுடன் பேச மாட்டார்களா?, வீட்டுக்கு வந்து செல்லமாட்டார்களா? பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே? என முதுமையில் ஏங்கி தவிக்கின்றனர். எனவே முடிந்தவரை பெற்றோர்களையும், முதியவர்களையும் பராமரிப்பில் வைப்பது சிறந்தது.

    • தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
    • முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன.

    பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவையாலும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

    முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன. 4,5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும்.

    முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதியோருக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது போன்ற பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன, ஒருவேளை இந்த பாதிப்புகள் வந்தால் சிகிக்சை அளித்து விரைவாக முதியவர்களை உடல்நலம் பெற வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முறைகள் பற்றித்தான் இந்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒவ்ெவாரு ஆய்வு முடிவும் சாதகமான நிலையை எட்டும்போது, புதிய சிகிச்சைகள் மருத்துவ உலகில் அறிமுகம் ஆகிக்கொண்டிருகின்றன.

    • தியோர் காப்பக த்திற்கு திருப்பூர் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் வருகை
    • இந்த ஆண்டு நடைபெற்ற பணிகள் ரூ.25 லட்சம் மதிப்பில் காணொலி மூலம் நிர்வாகிகளுக்கு காண்பிக்க ப்பட்டது

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் நடத்தி வரும் முதியோர் காப்பக த்திற்கு திருப்பூர் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் வருகை தந்தார் .அப்போது காப்பகத்திற்கு ஐந்தரை லட்சம் மதிப்பில் உள்ள புதிய ஜெனரேட்டர் வாங்குவதற்கு சந்திரசேகர் மற்றும் ஜெகதீஷ் குமார் ஆகியோர் காசோலையை வழங்கினர்.

    இதில் கோபி அபி மருத்துவமனை செந்தில்நாதன் மற்றும் நாகராஜ் முதல்வர் மற்றும் ராமலிங்கம் வேளாண்மை பிரசிடெண்ட் மற்றும் வெங்கடேஷ் சிறுமுகை ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தினர். மற்றும் புளியம்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருப்பூரில் உருவாகி வரும் ரோட்டரி சங்கம் கேன்சர் சென்டருக்கு ரூ.7 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இதற்கு முன் தொகையாக இரண்டரை லட்சத்திற்கான காசோலையை ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர். மேற்படி இந்த ஆண்டு நடைபெற்ற பணிகள் ரூ.25 லட்சம் மதிப்பில் காணொலி மூலம் நிர்வாகிகளுக்கு காண்பிக்க ப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் தலைமை ஏற்றார். மற்றும் ஆர் சிவகுமார், தலைவர் மணிக்குமார் ,செயலாளர் மோகனசுந்தரம், பொருளாளர் சுப்பிர மணியம், சண்முகம் முன்னி லை வகித்தனர். மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும்.
    • நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியான சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உகந்த இடம் வயதானவர் ஒய்வு இல்லம். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத காரணத்தினாலும் தனிக்குடுத்தனங்கள் பெருகி உள்ள நிலையில் இடவசதி இன்மை, சௌகரியங்கள் இன்மை இது போன்ற பல தவிர்க்க முடியாத காரணத்தால் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கின்றனர்.

    பெரியவர்களும் தங்களுக்கு உள்ள சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தனக்கென்று ஒரு தனிமை தேவைப்படுவதாலும் தங்களது தனி உரிமைக்காகவும் சிலர் அமைதியான இது போன்ற சூழலில் வாழ விரும்புகின்றனர்.

    முதியவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓடி கொண்டே இருந்த சூழலில் தங்களது வயதான காலத்தில் அமைதியாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழும் சூழலை விரும்புகின்றனர். இவை அனைத்தும் இது போன்ற ஓய்வு இல்லங்கள் நிறைவேற்றுகின்றது.

    தற்போது பல கட்டட அமைப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் முதியவர்களுக்கு என தனித்தனியே வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. அவைகள் முதியவர்களின் வசதிக்கேற்ற மாதிரி முதியவர்களுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில் பலதரப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஓய்வு பெற்ற முதியவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள்.

    முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும். ஆனால் தனித்தனி சொந்த வீடுகள். முதியவர்கள் வயதான பின்பு ஓய்வு காலத்தில் அவரவர் சொந்த வீட்டில் சுதந்திரமாக பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழும் வண்ணம் இக்கட்டட அமைப்புகள் அமைகின்றன.

    அவரவர் வசதிகளுக்கு ஏற்ப அவர்களின் பிள்ளைகளோ வயதானவர்களே கூட தங்களது ஓய்வு ஊதிய பணத்தை அதில் முதலீடு செய்து தனக்கென சொந்தம் ஆக்கிக் கொள்கிறார்கள். அங்குள்ள அனைத்து வீடுகளிலுமே முதியவர்கள் இருப்பதால் அதுவயதானவர்இல்லம் போன்ற ஒரு அமைப்பையே உருவாக்கி தருகிறது. அங்கு மருத்துவ வசதிகள் யோகாசன பயிற்சிகள் பூங்காக்கள் நடைபாதை மேடைகள் என பல வசதிகளும் அமைக்கப்படுகிறது.

    வயதானவர்கள் அவரவர் வீடுகளில் வசிப்பது போன்றே எந்த தொந்தரவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் அமைதியான பாதுகாப்பான முறையிலும் வீட்டு சூழலை உருவாக்கி தருகிறார்கள்.

    வயதானவர்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்பவும் கட்ட மைப்புகள் அமைக்கப்படுகின்றன. வீட்டில் குளியலறை வசதி படுக்கையறை சமையலறை என ஒவ்வொரு அறையிலும் வயதானவர்களின் வசதிகளுக்கு ஏற்ப கட்டட அமைப்புகள் உள்ளன.

    வயதானவர்களை கவனித்துக் கொள்ள பணியாளர்களும் அங்கே அமர்த்தப்படுகிறார்கள். 24 மணி நேரமும் மருத்துவ வசதிகளும் குடிநீர் வசதி என பல வசதிகளுடன் கட்டப்படுகிறது.

    வயதானவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் என அனைத்து பயிற்சிகளும் உள்ளேயே வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கூடங்கள் தோட்டங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கட்டமைப்பாகும்.

    வயதானவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதற்கான கட்டட அமைப்புகளும் அதற்குள்ளேயே உருவாக்கப்படுகிறது.

    பெரிய அடுக்குமாடி கட்டடங்களில் அனைவருக்கும் பொதுவான பூங்காக்கள் நடைபாதைகள் பயிற்சி மையங்கள் விளையாட்டு பொழுது போக்கு கூடங்கள் கோயில்கள் என்ற அனைத்தும் உள்ளடங்கிய கட்டட அமைப்புகள் போன்ற அமைப்பை ஒத்தவை தான் இந்த முதியோர் இல்ல கட்டட அமைப்புகளும்

    சிறந்த தொழில்நுட்ப கட்டட வல்லுனர்களால் பல அதிநவீன வசதிகளுடன் முதியவர்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கட்டடங்கள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி கட்டடங்கள் கட்டப்படுகிறது.

    அனைத்து வசதிகளும் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் அது நமக்கு என சொந்தமான இடம் இல்லை என்பது பலருக்கும் மன வருத்தத்தை உருவாக்குவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் இது மாதிரி வயதானவர் ஓய்வு இல்லங்கள் சொந்த வீடுகளில் வாழும் சூழல் மற்றும் மன அமைதியை தருகிறது.

    மன உற்சாகத்தை தருவதுடன் அயல்நாடுகளில் வேலை பார்க்கும் தங்களது பிள்ளைகள் பேரன் பேத்திகள் என்று வந்தாலும் தங்குவதற்கு வசதியாக இருக்கும். சொந்த வீடு என்பதால் தங்குவதற்கு தொந்தரவு இல்லாத சூழலையும் உருவாக்கி தரும்.

    அவர்களுக்கும் தாய் தந்தையருடன் சொந்த வீட்டிலேயே இருக்கலாம். பேரன் பேத்திகளுக்கும் இது என் தாத்தா பாட்டி வீடு என்று சுதந்திரமாக சுத்தி திரிவதற்கும் வசதியாக இருக்கும்.

    வயதானவர்கள் காலத்திற்குப் பின்பு அவர்களது பிள்ளைகள் இதே மாதிரி மகிழ்ச்சியாக தங்களது வயதான காலத்தை கழிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவர்களது மகன் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள் என்று பரம்பரையாக சொந்த வீட்டில் வசிக்கலாம்.

    இதுவும் சொந்த வீடு வாங்கி சொத்து சேர்ப்பதற்கான ஒரு அமைப்பு தான். ஆனால் வயதானவர்கள் ஒன்று கூடி வாழும் ஒரு சூழலில் சொந்தமாக சுதந்திரமாக அமைதியாக வாழும் ஒரு அமைப்பு.

    சம்பாதிக்கும் நாட்களிலேயே இது போன்ற வீடுகளை வாங்கி வைத்துக் கொள்வது பிற்காலத்தில் நமக்கும் நமது சந்ததியினருக்கும் உதவியாக இருக்கும். இதுவும் ஒருவித முதலீடு தான். பாதுகாப்பான முதலீடு. சொத்து சேர்ப்பதற்கான நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதிேயார்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கல்லல் சாந்தி ராணி முதியோர் இல்லத்தில் கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. நெடுஞ்செழி யன் தலைமை யில் முதியோர்களுக்கு கேக் மற்றும் பிரியாணி, வழங்கப்பட்டது. கல்லல் ஊராட்சி மன்ற தலைவரும், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவருமான சுப. வடிவேலு முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமச்சந்திரன் நீதிபதி, சந்திரசேகரன், மார்க்கண்டேயன், முகமது கனி, ஊராட்சி மன்ற தலைவர் உடையப்பா செல்வம், சேதுபதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் மாரி, முன்னாள் தலைவர் குழந்தைவேலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தார் கள். முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார். காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கு ரமேஷ் நன்றி கூறினார்.

    • சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.
    • இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு, சாமிநாதபுரம், அரிசி பாளையம், பள்ளப்பட்டி பகுதிகளில் அரசின் முதியோர் உதவித் தொகையை 1500 பேர் பெற்று வருகின்றனர்.

    இரு மாதங்களாக அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. நேற்று முதியோர் உதவித்தொகை பெறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து சத்திரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்கு கணக்கு புத்தகத்துடன் சென்ற, பயனாளிகளின் புத்த கங்களை சரிபார்த்த உஷா என்ற பெண் காசாளர், ஒவ்வொரு பயனாளிகளிடம் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார்.

    பணம் தராதவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதோடு, ஒரு மூதாட்டி 30 ரூபாய் வழங்கிய நிலையில் அவரிடம் நோட்டு சரி இல்லை எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை அங்கிருந்து இளைஞர்கள் வீடியோவாக பதிவிட்டு வெளியிட் டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே வங்கி ஊழியர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் சமூகநிலைத்துறை அதிகாரிகள் வங்கியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
    • முதியோர்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.

     திருப்பூர் :

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ந் தேதி முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்புத் தினம் அனைத்து கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் அனுசரிக்கப்பட வேண்டுமெனவும், மேலும் உறுதிமொழியினை அனுசரிக்கவும் ஆணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று மைய அலுவலக வளாகத்தில்முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்திய குடிமகன்-குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்லமுறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் , மனோ ரீதியாகவும் உடல்ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் ,அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன், பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், துணைஆணையர்கள் பாலசுப்ரமணியன், சுல்தானா, உதவி ஆணையர்(நிருவாகம்) சந்தன நாராயணன், உதவி ஆணையர் (பொ) (கணக்கு) தங்கவேல் ராஜன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    கொல்லங்கோடு, ஜூன்.17-

    தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    இதில் நவீன ரக வாகனங்களும், விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் இங்கு அதிகம் விற்பனை ஆகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இத்தகைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் அரசு அனும தித்து உள்ள அள வை விட அதிக ஒலி எழுப்பும் கருவி களை பொருத்தி வீதிகளிலும், சாலைகளி லும் வலம் வரு கிறார்கள்.

    குறிப்பாக கிராம புறங்களில் உள்ள சாலைகளில் இப்படி அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இருச்சக்கர வாகனங்களால் பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் இச்சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. இப்படி அதிக ஒலியுடன் வலம் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர், குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அதில் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்றியதோடு, அதனை ஓட்டி வந்தோருக்கு அபராதமும் விதித்தனர்.

    குளச்சல் பகுதியில் நேற்று சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல நாகர்கோ வில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்து வரு கிறது.

    ஆனால் கொல் லங்கோடு பகுதி யில் இன்னும் அதிக ஒலி எழுப் பியபடி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. இதனால் இங்கு சாலையில் நடந்து செல்லும் முதியோரும், பெண்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சில இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மிரண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்தது.

    எனவே இந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பேராபத்து ஏற்படும் முன்பு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அப்போது அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்திய குடிமகன், குடிமக்களாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் .

    மனரீதியாகவும், உடல்ரீ தியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மருத்துவமனை, வங்கி, பஸ் நிலையம் போன்ற இடங்களில் முதியோ ர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்வித த்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    ×