என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 229890"

    பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் பேட்டை மகாமாரியம்மன், பாண்டமங்கலம் மகாமாரியம்மன், பகவதி அம்மன், சேளூர் மாரியம்மன்,கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வைகாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சனி பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர், அக் 23-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல், பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் மற்றும் வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    • பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது
    • இந்தியாவின் ‘நம்பர்-1 டீலரான ‘வசந்த் அன் கோ’ நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் 'நம்பர்-1 டீலரான 'வசந்த் அன் கோ' நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது. இந்த நிலையில் 'வசந்த் அன் கோ' தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்ப னையை தொடங்கியுள்ளது.

    இந்த விற்பனையில். அனைத்து முன்னணி வீட்டு உபயோக பொருட்களும் மிக குறைந்த விலையில், எளிய தவணை முறை வசதி யுடன் கிடைக்கும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்க ளுக்கு பரிசு போட்டி மூலம் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா 1 பவுன் வீதம் 100 பவுன் தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

    32 'இன்ச்' எல்.இ.டிடிவி.. 'பிரிட்ஜ்', 'வாஷிங் மெஷின்' ஆகிய ரூ.49 ஆயிரத்து 140 மதிப்புள்ள 3 பொருட்கள் தள்ளுபடி விலையில் ரூ.29 ஆயிரத்து 990-க்கு கிடைக் கும். 32 'இன்ச்' எச்.டி. 'ஸ்மார்ட்' டி.வி. உடன் 32 ''இன்ச்' எச்.டி. எல்.இ.டி டி வி.யை ரூ.10 ஆயிரத்து 990 க்கு வாங்கலாம். 32 'இன்ச்' எல்.இ.டி. டி.வி. சிறப்பு விலையாக ரூ.8 ஆயிரத்து

    990-க்கு கிடைக்கும். இதனை மாத தவணையாக ரூ.749 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    1.5 டன் 4 ஸ்டார் 'ஸ்பிலிட்' 'ஏ.சி.' சிறப்பு விலையாக ரூ.35 ஆயிரத்து 990-க்கு வாங்கலாம். மாத தவணை யாகரூ.3.ஆயிரத்து 83 செலுத் தியும் பெறலாம். 7 கிலோ 'பிரண்ட் லோடு' 'வாஷிங் மெஷின்' சிறப்பு விலையாக ரூ.32 ஆயிரத்து 990-க்கு பெறலாம். 'பிரஷர் 'குக்கர்' மற்றும் 'அயர்ன் 'பாக்ஸ்' ரூ.1,111 மட்டும் கொடுத்து வாங்கலாம். கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கியாஸ் அடுப்பு போன்றவைகளும் எளிய தவணை முறை வசதியுடன் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் 'ஸ்மார்ட் போன்' வாங்கு பவர்களுக்கு 'புளுடூத் ஹெட் செட்', 'பவர் பேங்', 'ஹெட் போன்' போன்றவற்றில் ஏதாவது ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

    பழைய செல்போன் எந்த நிலையில் இருந்தாலும் ரூ.750-ல் இருந்து 'எக்சேஞ்ச்' செய்துகொள்ளலாம். ரூ.55 செலுத்தி 55 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.65 செலுத்தி 65 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.75 செலுத்தி 75 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.85 செலுத்தி 85 'இன்ச்' எல்.இ.டி.டி.வி.களை தவணை முறையில் வாங்க லாம். ரூ.20 ஆயிரத்துக்கு மேல் 'பர்னிச்சர்' வாங்கி னால் உடனடி தள்ளுபடி யாக ரூ.2 ஆயிரம் கிடைக் கும். 'கிரெடிட்', 'டெபிட்' கார்டுகளுக்கு 'கேஷ் பேக்' மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட சலுகை வழங்கப்படும்.

    முன்பணம் இல்லாமல் குறிப்பிட்ட ஏ.சி., எல்.இ.டி. 'டி.வி., 'பிரிட்ஜ்', 'வாஷிங் 'மெஷின்', 'வாட்டர் பியூரி பையர்', 'மைக்ரோவேவ் 'ஓவன்', செல்போன், 'டிஸ் வாஷர்', 'ஏர் பியூரிபையர்', 'ஏர் கூலர், 'ஹோம் தியேட்டர்' எடுத்துச்செல்லலாம். வட்டி இல்லாமல் ஏராளமான தவணைமுறை வசதிகள், 36 மாதம் வரை வட்டியில்லா தவணை முறை வசதி ஆகியவையும் வழங்கப்படும்.

    எங்களின் 45 ஆண்டு கால அனுபவம் மற்றும் நற்பெயர் காரணமாக கொள்முதலில் எங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்களே தக்க வைத்துக்கொள்ளாமல் அவற்றின் பெரும் பகுதியை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை வழக்க மாக கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே எங்களிடம் எப்போதும் மிக குறைந்த விலை சாத்தியமாக உள்ளது.

    மேற்கண்ட தகவல் 'வசந்த் அன் கோ' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத சதுர்த்தியை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வழக்கமாக நடராஜப் பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதற்கு அடுத்து புரட்டாசி மாதம் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

    அதன்படி விஸ்வநாதர் கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு நேற்று மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜப் பெருமான் சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    • நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்த பாலையூர் கிராமத்தில் உள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    புரட்டாசி மாத 2-வது பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்.

    • நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில், கொப்பளம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    விஜயதசமி நாளை முன்னிட்டு ப‌.வேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு கொலு மேடை அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
    • சிறப்பு ரெயில்களை திருநெல்வேலியுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    நாகர்கோவில்:

    ஆயுத பூஜை, பொங்கல், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் இயக்க ப்படும் சிறப்பு ரெயில்கள் குமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாக ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. சிறப்பு ரெயில்கள் மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் சங்கம் தெரிவிக்கிறது.

    மேலும் ரெயில்களை நாகர்கோவில் வரை இயக்க முடியாததற்கு முக்கிய காரணம் நாகர்கோவில் ரெயில் நிலையம் இட நெருக்கடி பிரச்சினையால் சிக்கி இருப்பது தான் என்றும் கூறுகின்றனர்.

    இது தொடர்பாக பயணி கள் நல சங்கத்தினர் கூறு கையில், நாகர்கோவி லிருந்து அதிக அளவிலான ரெயில்கள் கேரளா வழியாக, அதாவது திருவனந்த புரம் மார்க்கம் இயங்கு கின்றன. இதனால் தான் இட நெருக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.

    இதை தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து ரெயில்வே நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு சிறப்பு ரெயில்களை திருநெல்வேலி யுடன் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய இட நெருக்கடியை குறைப்பதன் ஒரு பகுதியாக சென்னை - கொல்லம் அனந்தபுரி ரெயில், வருகிற 20-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுன் நிலையம் வழியாக இயக்கப்பட இருக்கின்றது. மேலும் ஒரு சில ரெயில் களை, குறிப்பாக பயணி கள் ரெயில்களை நாகர் கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்கி னால் நாகர்கோவில் சந்திப்பு நிலைய இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும் என்ற ஆலோசனையும் ரெயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு இயக்கும் போது தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை உள்ளது போன்று, பகல் நேரத்தில் திருநெல்வேலிக்கும் அதிக அளவில் பயணிகள் ரெயில் சேவை வசதி கிடைக்கும்.

    திருவனந்தபுரத்திலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்ப ட்டு நாகர்கோவிலுக்கு 8.45 மணிக்கு வந்து சேரும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுன் வழி யாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரெயில் தான் நாகர்கோவில் விட்டு விட்டு கோட்டயம் ரெயி லாக மதியம் புறப்பட்டு செல்கிறது.

    திருநெல்வேலி யிலிருந்து கோட்டயம் ரெயில், நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் போது காலை 8.45 மணி முதல் மதியம் 1 மணி வரை தினசரி ஒரு நடை மேடை காலியாக கிடைக்கும். காலையில் நடை மேடை காலியாக இருந்தால் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் ஒரு சில சிறப்பு ரெயில்களை நாகர் கோவிலிருந்து இயக்க முடியும்.

    2-வது கோரிக்கையாக திருநெல்வேலியில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 8.10 மணிக்கு வரும் பயணிகள் ரெயிலையும், நாகர்கோவிலில் இருந்து 7.55 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி -கொச்சுவேலி என நாகர் கோவில் டவுன் வழியாக இயக்கலாம்.

    திருவனந்தபுரத்திலிருந்து மாலையில் புறப்படும் பயணிகள் ரெயிலையும் நாகர்கோவிலில் இருந்து மாலையில் திருநெல்வேலி புறப்படும் பயணிகள் ரெயி லையும் இணைத்து ஒரே ரெயிலாக திருவனந்தபுரம் - திருநெல்வேலி பயணி கள் ரெயில் என்று இயக்க வேண்டும்.

    கொச்சுவேலியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் பயணிகள் ரெயிலை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்தும் மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு 6.20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு பயணிகள் ரெயில்களை மாற்றம் செய்து இயக்கும் போது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யம் இட நெருக்கடி பிரச்சினைகளிலிருந்து விடிவு பெற்று விடும்.

    இவ்வாறு இடநெருக்கடி பிரச்சினை இல்லாமல் இருந்தால் நாகர்கோவிலுக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் சிறப்பு ரெயில்களை அதிக அளவில் இயக்கலாம் என்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகளவில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

    இதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலின் தன்மை பொறுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சாதாரண காய்ச்சல் என்றால் மருந்து மாத்திரை கொடுக்கப்படும். தொடர் காய்ச்சல் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

    அப்போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு என்ன வகையான காய்ச்சல் என கண்டறியப்படும். இதேபோல் பள்ளிகளுக்கு என்று தனியாக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் மாணவ ர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று சோதனை செய்வார்கள்.

    இவ்வறாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 196 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். 

    • கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ,ஆரதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடை–பெற்றது. கபிலர்மலையில் ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில்‌ உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோயில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோயில்,நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி,பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடை–பெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ஆவணி மாத வளர்பிறை சதுர்தசியினை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் ஆவணி மாத வளர்பிறை சதுர்தசியினை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கைலாய வாத்தியம் முழக்கத்துடன் தேவாரம் ,திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட18 வகையான வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 1 மணி அளவில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப் பட்டது.

    விழா ஏற்பாட்டினை திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகி சிவ. ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரமத்தி வேலூர் சிவனடியார்கள் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    • ஓணம் பண்டிகையைaயொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.
    • இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

    சேலம்:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு ெரயில்வே நிர்வாகம் சேலம் வழியாக சிறப்பு ெரயில்களை இயக்குகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.

    அதன்படி மங்களூரு- தாம்பரம் சிறப்பு ெரயில் (வண்டி எண்-06050) வருகிற 11-ந் தேதி மங்களூருவில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

    பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ராகி, திணை, சாமை,ஆரியம் ஆகிய சிறுதானியங்கள் விளைகின்றன.
    • அவற்றை வைத்து உணவு பொருட்கள் தயாரித்து அதனை மெருகூட்டி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த பயிற்சி ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ராகி, திணை, சாமை,ஆரியம் ஆகிய சிறுதானியங்கள் விளைகின்றன. அவற்றை வைத்து உணவு பொருட்கள் தயாரித்து அதனை மெருகூட்டி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்த பயிற்சி ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

    சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் ஏற்காடு சுய உதவி குழு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் மலை கிராம மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சாமை கேக், ராகி நூடுல்ஸ்,தினை அல்வா, வரகு பொங்கல் பலவகை சிறு தானிய முறுக்கு மற்றும் பல உணவு பொருட்கள் செய்வது எப்படி என்றும் அதை சந்தைப்படுத்துவது எப்படி? அவை ஒரு சிறிய தொழிலாக செய்ய விரும்பினால் உணவு பாதுகாப்பு துறை மூலமாக வழங்கப்படும் சான்றிதழ் பெறுவது எப்படி என்றும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி தலைமை ஆசிரியை அரிமா, ஏற்காடு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஜெய்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏற்காட்டில் விளைய கூடிய பீன்ஸ் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இது வரை செய்யப்பட்ட ஆய்வில் பீன்ஸில் அதிபடியான புரத சத்து, பல வகையான வைட்டமின் இருப்பதாக கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

    ×