என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடி"

    • செல்போன் பேசியதை கண்டித்ததால் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை வசந்தநகரை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (வயது 27). இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பாக காரை நிறுத்தியிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார். இதற்கு கோபிகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கல்வீசி தாக்கினார்.

    இதில் காரின் கண்ணாடி கள் உடைந்து நொறுங்கி யது. இது தொடர்பாக கோபி கிருஷ்ணன், சுப்பிரமணிய புரம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை அனுப்பானடி பகலவன் நகர், பூக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் எல்லீஸ் நகர், போடி லைனில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கம்பெனியின் கேட் முன்பாக போஸ்டரை ஒட்டினார். இதற்கு கண்ணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், கல் வீசி தாக்கினார். இதில் கம்பெனியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இது தொடர்பாக கண்ணன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கண்ட 2 சம்பவங்களிலும், ஒரே வாலிபர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் எல்லீஸ் நகர், போடி லைனைச் சேர்ந்த முத்து கருப்பன் என்பவரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்
    • தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மிடாலத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராபின்சன் ஓட்டினார்.

    இரணியல் அருகே மட விளாகம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி னார்கள். திடீரென அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸின் மீது வீசினார்கள்.

    இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டிரைவர் ராபின்சன் இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணை யில் குடிபோதையில் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    • கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே அமைகிறது
    • அமைச்சர் ஏ.வ.வேலு 22-ந்தேதி நேரில் ஆய்வு

     

    கன்னியாகுமரி, மே.9-

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று அவர்கள் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகுதளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படு கிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளி நாடு களில் அமைக் கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.

    இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி பாறை களின் திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவு களை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்திற்குள் பாலப் பணிகள் நிறைவடை யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு வருகிற 22-ந்தேதி கன்னியா குமரி வருகிறார். அவர் 2 நாட்கள் கன்னியா குமரியில் தங்கி இருந்து கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பது குறித்த இடத்தை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்ய இருப்பதாக தெரி கிறது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை யும் அவர் ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

    • அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது.

    திருப்பூர் :

    பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திகுமார் ஓட்டி சென்றார். பஸ் பல்லடம் அடுத்த சின்னிய கவுண்டன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளானது.

    மேலும் மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து டிரைவர் சக்திவேல் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வனத்துறையினருடன் இறந்த மயிலை மீட்டு சென்றனர். பின்னர் பயணிகளை வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    • அரியலூரில் பிளேடு கண்ணாடி துகள்களை விழுங்கிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது
    • திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர், சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சத்தியாவின் மகன் வல்லவராஜ்(வயது 25). இவரும், இவரது சகோதரர் தர்மராஜ்(23) மற்றும் நண்பர் குமார் ஆகியோர் அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டில் பூஜை செய்வதாகவும், செய்வினை எடுப்பதாகவும் கூறி, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விஜயகுமார் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லவராஜ், தர்மராஜ், குமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தர்மராஜ், குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இந்நிலையில் வல்லவராஜை வழக்கு விசாரணைக்காக அரியலூர் குற்றவியல் கோர்ட்டில் ேபாலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் ஆக்சா பிளேடு பாகங்கள் மற்றும் கண்ணாடி துகள்களை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றில் இரும்பு துண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
    • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

    மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.
    • இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது.

    விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் ராஜஸ்தானில் காரின் விண்ட்ஸகிரீனில் ஒட்டகம் ஒன்று மாட்டிக்கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் நடந்த இந்த சமபவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒட்டகம் காரின் முன்புற கண்ணாடியான விண்ட்ஸகிரீனில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் வலியில் துடிப்பது பதிவாகியுள்ளது. நொஹார் நோக்கி இரவு நேரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த நபர் ஒட்டகம் வழியில் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார்.

    இதனால் காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். வெகு நேரமாக வலியில் துடித்த ஒட்டகம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது. 

     

    • புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும்.
    • கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது.

    தற்போது பலரும் கணினியில் நீண்டநேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் கண் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் எதிலெல்லாம் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

    போதுமான அளவு தூக்கம்:

    கண் ஆரோக்கியத்துக்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டு. நாம் விழித்திருக்கும் போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது.

    போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள் கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்.

    பாதுகாப்பு கண்ணாடிகள்:

    நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும். அதேநேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாசின் லென்சுகள் 99 முதல் 100 சதவீதம், புற ஊதா ஏ, புற ஊதா பி கதிர்களை தடுக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

    கைகளால் கண்களை தேய்க்காதீர்கள்:

    கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும்போது அது சேதம் அடையும் வாய்ப்புள்ளது.

    வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி, துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவிவிட வேண்டும். இதன்மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.

    நீரேற்றம், உணவுமுறை:

    உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும். குறிப்பாக ஒமேகா 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.

    கணினி பார்க்கும் சரியான முறை:

    கணினி அல்லது மடிக்கணினி திரை. உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும் கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்ய வும். அதேநேரம், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினை வில் கொள்ளுங்கள்.

    கண்களின் பாதிப்பை தடுக்கும் விதிமுறை:

    கணினியில் பணிபுரியும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்தும்.

    இவை எல்லாவற்றுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

    • 4 மாதங்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை தயார் செய்து விட்டன.
    • விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    பார்வையற்றவர்களின் வசதிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் ஏஐ தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

    இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் எதிரே வருபவர்களைப் பற்றி சொல்வதைத் தவிர, வரும் வாகனங்களைப் பற்றி எச்சரித்து விபத்துகளில் இருந்து காக்கிறது. நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதற்கு இது வழிகாட்டுகிறது.

    பார்வையற்ற மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உதவியுடன் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி 4 மாதங்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை தயார் செய்து விட்டன.

    தற்போது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்த கண்ணாடிகள் கிடைக்கின்றன. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பி. வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கிய ரூ.900 மதிப்புள்ள தைராய்டு மற்றும் சர்க்கரை இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.

    இலவச மருத்துவ பரிசோதனை முகாமிற்கு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அன்வர் அலி வரவேற்றார்.

    பி.வி.எம். அறக்கட்டளை சேர்மன் அப்துல் ரசாக் அறிமுக உரை நிகழ்த்தினார். முகாமை முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பி.வி எம். அறக்கட்டளை தலைவர் மற்றும் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் முன்னாள் தலைவர் பக்கீர் முகமது, பொதுச்செயலாளர் ஹமீது, திட்ட இயக்குனர் சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவர் அல்தாப் உசேன் முன்னிலை வகித்தனர். செய்யது முகம்மது அறக்கட்டளை சேர்மன் சுல்தான் தொகுத்து வழங்கினார். இதில் ராமநாதபுரத்தில் முதன் முறையாக கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் கண்ணாடி தேவை என டாக்டர் பரிந்துரை செய்தவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

    சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் மற்றும் தைராய்டு சர்க்கரை பரிசோதனை செய்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன், டாக்டர் புரோஸ்கான், பொட்டகவயல் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹக்கீம், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகராட்சி தி.மு.க.கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காளி, ராமநாதன், எஸ்.டி.பி.ஐ, மாவட்ட பொருளாளர் நஜிமுதீன், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகி சீனி இப்ராஹிம், பா.ம.க, மாவட்ட செயலாளர் ஹக்கீம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ அணி தலைவர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர். முகமது கனி நன்றி கூறினார்.

    ×