என் மலர்
நீங்கள் தேடியது "புள்ளிமான்"
- எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது.
- இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த வர்கள் மான்குட்டியை பிடித்தனர். .
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது. இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த வர்கள் மான்குட்டியை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் வந்து மான்குட்டியை ஆவலு டன் பார்த்து சென்றனர்.
பின்னர் மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த வனவர்கள் ரமேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் மான்குட்டியை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்து வமனைக்கு கொண்டு சென்று நேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த மான்குட்டி இன்று வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தண்ணீர் தேடி வந்தது
- வனத்துறையினர் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீர் மற்றும் இரைத்தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோளிங்கர் காப்புக்காட்டில் இருந்து வெளியில் வந்த புள்ளிமான், அப்பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது, அவ்வழியாக வந்த ெரயில் மோதி உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலமாக பிரேதப் பரிசோதனை முடித்து, அங்கேயே தீ வைத்து எரித்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலியில் சிக்கி புள்ளிமான் பலியானது.
- கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் இரை தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள நாய்கள் துரத்தின. இதனால் பயந்து ஓடிய புள்ளிமான் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி முள்ளு கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர்கள் புள்ளிமான் உடலை கைப்பற்றி கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.
- கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழந்தது
- மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் இருந்து பென்னக்கோணம் ரோட்டில் ஒரு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பி வேலியில் 5 மாத ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து ரஞ்சன்குடி எல்லைக்கு உட்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லெப்பைகுடிகாடு உதவி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மங்களம் காப்புக்காடு பகுதியில் அந்த மானின் உடல் புதைக்கப்பட்டது.
- வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
- புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இரை தேடி வந்தது. அந்த கண்மாய் வழியாக வந்து சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் காயமடைந்து பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் காயமடைந்து இறந்து கிடந்த புள்ளிமானை மீட்டு ரெட்டியபட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் முத்துச்செல்வி முன்னிலையில் புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் புள்ளிமானை அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
- நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் படுகாயமடைந்தது.
- மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது மலை பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிவாரப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
மலை அடிவாரமான தென்றல் நகர் அணைத்தலை பகுதியில் உள்ள தோப்புக்கு 12 வயதுடைய ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. அப்போது அப்பகுதி யில் சுற்றித்திரிந்த நாய்கள் மானை துரத்தி கடித்தது. இதை பார்த்த பிரபல தொழிலதிபர் குவைத்ராஜா நாய்களை விரட்டி விட்டு மானை காப்பாற்றினார்.
நாய்கள் கடித்து குதறியதில் மான் படுகாய மடைந்தது. இதுகுறித்து குவைத்ராஜா வனத் துறைக்கு தகவல் தெரிவித் தார். விரைந்து வந்த அவர்கள் புள்ளி மானை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் வனத்துறை அதிகாரிகளிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனவர் இளைய ராஜா கூறுகையில், காய மடைந்த மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் குணமாகிய பின் மானை வனப்பகுதியில் விடுவோம் என்றார்.
- கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
- பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் கொலையனூரில் உள்ள தமிழ்நாடு அரசு முந்திரி காட்டிற்கு அருகே உள்ளது. நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற ஜோதி அங்குள்ள பாழடைந்த கிணற்றில் புள்ளிமான் ஒன்று உயிருடன் கிடப்பதை கண்டார். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த 3 வயதுள்ள புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.
- வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
- கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்துக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தியுள்ளது. களைத்துப்போன இந்த மானை அதே பகுதியைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல், ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தும்பல் வனச்சரகர் விமல்ராஜ் தலைமையிலான வனத்துறையினர், பெலாப்பாடி கிராமத்திற்கு சென்று மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
மேலும் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.
அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாட மாட்டோம் என வனத்துறையினர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கிராம மக்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
- வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் அரூர் காப்புக்காடு புளியன்தோப்பு சரகத்தில் கடந்த 10-ந் தேதி கன்னிவலை களை கொண்டு புள்ளிமானை வேட்டையாடி தலைமறைவான சோலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவன் (வயது 48), கொளகம்பட்டி அடுத்த எருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள் ஆகிய 2 பேரும் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அல்லி முத்து என்பவர் மூலம் பாப்பாரப்பட்டி பகுதியில் மான்கறி விற்பனை செய்த்தற்காக பாலக்கோடு வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அல்லி முத்து என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மொரப்பூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவன் மற்றும் சேட்டு ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி கறியினை விற்ற குற்றத்திற்காக விசாரணைக்கு அழைத்தபோது விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.
இதைதொடர்ந்து அவர்களை பிடிக்க வனப் பாதுகாப்புப்படை மற்றும் வனச்சரக பணியாளர்கள் இணைந்து குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 25-ந் தேதி சிவனை கைது செய்து, மொரப்பூர் வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டு விசாரணை செய்ததில் அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர் சிவன் மீது வனக்குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுரைப்படி, அரூர் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆலோசனை படியும், சிவனை மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் ஆலயமணி, வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற ஆணைப்படி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
வாழப்பாடி:
வாழப்பாடியைச் சேர்ந்த ஆங்கில மருந்துக்கடை உரிமையாளர் முகமது இப்ராகிம். இவரது மகன்கள் ஷிஃபாக் அஹ்மத், அல்ஃபார் அஹ்மத் சிறுவர்களான இருவரும், 2 நாட்களுக்கு முன், பெற்றோருடன் காரில் நாமக்கல் பகுதியில் திருமணத்திற்கு சென்றனர்.
நாமக்கல் சுங்கச்சாவடி அடுத்த வேலக வுண்டம்பட்டி அருகே நெடு ஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்து சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் குட்டி ஓன்று அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் கால்கள் முறிந்து படுகாயமடைந்த நிலையில் சாலையிலேயே கிடந்துள்ளது.
இதனைக் கண்ட சிறுவர்கள் இருவரும், காரை நிறுத்தி புள்ளிமானை மீட்டு அவ்வழியாக சென்ற 108 அவரச சிகிச்சை வாகனத்தில் இருந்து மருந்துகளை கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புள்ளிமானை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் சிறுவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். புள்ளிமானை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றனர்.
- விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
- அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துரை, அகத்தியர் பீடம், ஊட்டி-குன்னூர் சாலை, கல்லார் காட்டேஜ் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானை, புள்ளிமான், சிறுத்தை, கடமான், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடியும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.அப்படி வரும் போது விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அந்த பகுதியில் மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதை விசாரிப்பதற்காக வந்த தாசில்தார் மாலதி பார்த்தார். உடனடியாக அவர் சம்பவம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, புள்ளிமானை கைப்பற்றினர். இந்த பகுதியில் 20-க்கும் ேமற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் நாய்கள் கடித்ததில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் நாய்கள் கடித்ததால் தான் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் 3 மான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது
- சாலையின் நடுவே இறந்து கிடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி சாலையில் பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 முதல் 5 வயது வரை மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று சம்பவ இடத்திலேயே பலியானது. சாலையின் நடுவே இறந்து கிடந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பின்னர் வனத்துறை பகுதியில் புதைத்தனர். சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சற்று கவனமாக வாகனத்தி ஓட்டி வன விலங்குகளை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.