என் மலர்
நீங்கள் தேடியது "தொற்று"
- சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதி கரித்தும், குறைந்தும் என மாறி, மாறி நிலவி வருகிறது.
- நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதி கரித்தும், குறைந்தும் என மாறி, மாறி நிலவி வருகிறது. நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சேலம் மாநகராட்சியில் 11 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, வீரபாண்டி, தாரமங்கலம், மேச்சேர், கொளத்தூர், எடப்பாடி பகுதிகளில் 10 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி, பெத்த நாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதிகளில் 7 பேருக்கும், நகராட்சி பகுதி களில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கும் தொற்று உறுதி செயயப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இது வரை 1.30 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.28 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,762 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
- 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்தும், குறைந்தும், வருகிறது. அந்த வகையில் நேற்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 6 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, சேலம், தாரமங்கலம், எடப்பாடி பகுதி களில் 8 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி களில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சென்னை மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி உள்ளது.
- தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ–மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சேலம்:
சேலத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 36 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 15 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, தாரமங்கலம், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் 10 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் 8 பேருக்கும், நகராட்சிகளில் 3 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ–மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது ஆஸ்பத்திரி ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இன்றும் காய்ச்சல், தீராத சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் சிலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது ஆஸ்பத்திரி ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சியில் 11 பேர், வீரபாண்டி-4 பேர், கெங்கவல்லி-3 பேர், பனமரத்துப்பட்டி -2 பேர், மேட்டூர் நகராட்சி, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர்,கொளத்தூர், சங்ககிரி, ஓமலூர் தலா ஒருவர் என சேலம் மாவட்டத்தில் 26 பேர், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த தலா 8 பேர், சென்னை- 6 பேர், கரூர்-3 பேர், கிருஷ்ணகிரி-2 பேர், கள்ளக்குறிச்சி ஒருவர் என 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இன்றும் காய்ச்சல், தீராத சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் சிலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்த விபரம் இன்று மாலை சுகாதார துறை சார்பாக வெளியிடப்படும் அறிக்கையில் தெரியவரும்.
- சேலம் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
- இந்நிலையில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரத்தில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் தற்போது 447 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 984 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,483 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 27 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,483 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,763 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 186 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்தி ரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 384 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
- 22 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 22 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,360 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,672 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 154 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்துள்ளது
- அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட காசநோய் மையம் சார்பில் காசநோய் தொற்று கண்டறிவது குறித்த எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் எக்ஸ்-ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனங்களை வழங்கியுள்ளது. நமது மாவ ட்டத்திற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நடமாடும் நுண்க திர் வாகனத்தில் பொருத்த ப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி, மின் வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்-ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்-ரே-க்களை உடனு க்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில 10 எக்ஸ்-ரே எடுக்கும் திறன் கொண்டவை.
குமரி மாவட்ட நிர்வா கத்தால் நோய் ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றதால் கடந்த 10 ஆண்டுகளில் காச நோயாளிகளின் எண்ணி க்கை 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் காசநோய் தொற்று வகிதம் 20 சதவீகிதத்திற்கு மேல் குறைந்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்திய மானது.
இதனைப் பாராட்டும் விதமாக அரசு மற்றும் தனியார் மருத்து வர்கள், தனியார் மருந்தகங்கள் மற்றும் மருந்தக வணிகர்களின் செயல்பாடுகளைக் கவுரவிக்கும் விதமாக 35 நபர்களுக்கு பாரா ட்டுச் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நாகர் கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, துணை இயக்குனர் (காசநோய்) துரை, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, மருத்துவர்கள் பிரதீப், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- கொகோரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 40 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த தலா 2 பேர், சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 246 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மேலும் 246 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும், வாகனங்கள், அலுவலகங்களில் தணிக்கை செய்ய உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறையினர், போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மேலும் அனைவரும் முக கவசம் அணிவித்து சமூக இடை வெளியை கடை பிடித்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையிலேயே உள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. 13 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 183 ஆகும். இவர்களில் 67 ஆயிரத்து 533 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்து விட்ட நிலையில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்ல பொதுமக்களை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
- பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டு தனிமையிலே சிகிச்சை
- பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாவட்டம் முழுவதும் 991 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதில் 31 பேர் ஆண்கள், 39 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 4 குழந்தைகளும் அடங்கும்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகிறார்கள்.