என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்வம்"
- இப்போட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது
- 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது.
கடலூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி கடலூரில் நடைபெற்றது. இப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். இப் போ ட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் ஏராள மானவர்க ள்ஆர்வ முடன் கலந்து கொண்டனர்.
- ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன.
- ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது.
ஊட்டி,
ஊட்டியை அடுத்துள்ள பைகாரா அணையில் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே உள்ள இந்த அணையில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளில் ஏறிச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்ற னர்.
ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. பைக்காரா பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.
நிரம்பித் தளும்பி ரம்மியமாகக் காட்சியளிக்கும் பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முக்கூர்த்தி மலை உயரத்தில் இருந்து உருவாகும் பைகாரா நதி நீலகிரியின் மூடுபனி உயரங்களைத் துண்டித்து, பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்குச் செல்கிறது.
ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது. செங்குத்தான சரிவுகளில் பயணிக்கும்போது, பைகாரா அழகான நீர்வீழ்ச்சியாக மாறுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் படகு இல்லம் மூலம் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த ஏரி ஊட்டியில் சிறந்த படகு சவாரி வசதிகளைக் கொண்டுள்ளது. அமைதியான சூழல், வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் படகு சவாரி வசதிகளுடன், குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும்.
- ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது.
- ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உடுமலை:
உடுமலையில் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக, தக்காளி, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காய் இம்முறையில் சாகுபடி செய்யலாம். பாகற்காய் சாகுபடியில் பத்து அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 4 ஆயிரம் செடிகள் வரையும் நடவு செய்யலாம்.சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
- முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், முதலைக்குளம் கிராமத்திற்கு பாத்தியப்பட்டதும், பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டதுமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கடைசியில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடமும் முதலைக் குளம் கம்ப காமாட்சி, பதினெட்டாம்படி கருப்புசாமி கோவிலில் கிராம மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும், கண்மாயில் நேர்த்தி கடனாக பலவகையான மீன்குஞ்சுகள் வாங்கி விடுவது வழக்கம்.
அப்படி விடப்படும் மீன்களை வளர்ந்த ஒராண்டு பின்னர் ஊர் மக்கள் ஒன்று திரண்டு பிடிப்பார்கள். கோவில் பூசாரி பொன்ராம், 2 தேவர் வகையறா பங்காளிகள், கிராமமக்கள் முன்னிலையில் விவசாய பாசன கமிட்டி தலைவர் எம்பி.ராமன், மேற்பார்வையில் அதிகாலை 5 மணிக்கு கண்மாயின் கரையில் நின்று கிராம கமிட்டியினர் பட்டாசு வெடித்து வெள்ளை கொடி அசைக்க உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
- பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.
- வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடவளாகத்தில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
இந்த கல்லூரியில் சேர்வதற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பின் பேரில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. கல்லூரியில் பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பிஎஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று இருந்தது.
நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா இனிப்பு கொடுத்து வரவேற்றார்.
பேராசிரியர்கள் ஆகாஷ், பாலு, முருகானந்தம், பாலாஜி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் தேவிகலா ஆகியோரும் மாணவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளையும் ஒருங்கே அமர வைத்து கல்லூரி நடைமுறை மற்றும் நல்லொழுக்க அறிவுரைகள் கூறப்பட்டன.
மாணவ-மாணவிகள் தங்கள் பகுதியிலேயே கல்லூரி அமைவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
- 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
- 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது. இதில் 29 ஆயிரத்து 600 பூஸ்டர் தடுப்பூசி உட்பட 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இதற்கான பணியில் மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில், முந்தைய முகாமை ஒப்பிடுகையில் 33-வது முகாமில் கூடுதலாக 14 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்ட மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறது என்றனர்.
- ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல.
- சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.
திருப்பூர்:
ரவுத்திரம் வாசகர் வட்டம் சார்பில், வாழ்வே ஒரு மந்திரம் நூல் அறிமுக விழா திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் இறைவன் இருப்பது எங்கே? எனும் தலைப்பில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசிய தாவது:-
ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. அவற்றை வேண்டுபவர் வேண்டுமென்ற நேரத்தில் திருப்பி தருவது தான் வாழ்க்கை. இரு கலைகளையும், நிலைகளையும் கொண்டது வாழ்க்கை. நாம் பிறந்தது முதல் பெற்றோரிடம் பெறுகிறோம். அவர்கள் வாழ கடைசியாக நம்மால் இயன்றதை தருகிறோம். தரவேண்டும். அதுவே அறம்.சாகும் வரை ஒருவர் பெற்றுக்கொண்டு மட்டுமே இருந்தால் அவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எண்ணம், செயலில் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். சாதி, மதம், இனத்தால் நம் பிரிந்து நிற்கிறோம். ஆனால்தமிழ் மொழியால் நாம் இணைந்திருக்கிறோம். அனைவரும் மனிதர் என்பதை உணர்ந்திருக்கிறோம். 700 கோடி மக்களை ஒன்றாக இணைப்பது மொழி.மதத்துக்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் மனிதனை பிரிக்கும். ஆன்மிகம் அரவணைக்கும். நம் அறிவை வளர்க்க, புத்தக வாசிப்பும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் நம்மை காண்பதும், நம்மில் காண்பதும் தான் ஆன்மிகம். ஆதி மனிதனுக்கு வியப்பும், அச்சமும் ஏற்பட்ட விடை காண முடியாத சில கேள்விகள் தோன்றின. அப்போது, நம்மை மீறியும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை அவனே எண்ணத்தோன்றினான். அதுவே வேதங்களாகவும், உபநிடதங்களாகவும் மாறி கடவுள் உருவாக அடித்தளமாக அமைந்தது. சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.
- நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
- ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.
திருப்பூர்:
வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்துக்கான (அக்டோபர் 21 - 23)ெரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
திருப்பூரில் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க, வடமாநிலத்தினர் அதிக அளவு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க வடமாநிலத்தினர் அதிக ஆர்வம் காட்டினர்.ராஜ்கோட், பாட்னா, ஜெய்ப்பூர், அகமாதபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். வட மாநிலங்களுக்குப் பயணிக்கும் நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. அதே நேரம் நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் செல்வதற்கான 30 சதவீத இடங்கள் கூட இன்னமும் நிரம்பவில்லை.தமிழகத்திற்குள்ளான ெரயில் டிக்கெட் முன்பதிவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடந்த, 23ந்தேதி, 1,011 பேர் டிக்கெட் முன்பதிவுக்கு வந்தனர். ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது என்றனர்.
- சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
- நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது.பி.ஏ.பி., மண்டல பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பருத்தி சாகுபடியை விவசாயிகள் கைவிடத்துவங்கினர்.கடந்த 2000ம் ஆண்டுக்குப்பிறகு, பருத்தி சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டு, மக்காச்சோள சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.
பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், கடந்த 2008ல் நூற்பாலை நிர்வாகத்தினர் ஒப்பந்த சாகுபடி முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளித்தனர்.அந்த ஆண்டு பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 100 ஏக்கர் பரப்பு வரை பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.பின்னர், மிக நீண்ட இழை பருத்தி மற்றும் நீண்ட இழை பருத்தி ரகங்களுக்கு நல்ல விலை கிடைக்க தொடங்கியது.இது விவசாயிகளை பருத்தி சாகுபடியை நோக்கி திரும்ப செய்தது.கடந்த 2009ல் உடுமலை பகுதியில் பரவலாக 200 நாட்கள் வயதுடைய மிக நீண்ட இழை பருத்தி, 150 நாட்கள் வயதுடைய நீண்ட இழை பருத்தி ரகம் பயிரிடப்பட்டு ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்தது.
மிக நீண்ட இழை பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு 9 ஆயிரம் ரூபாயும், நீண்ட இழை பருத்தி 6 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது. நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.கடந்தாண்டு பருத்தி சாகுபடி பரப்பு குறைவாகவே இருந்தது. ஆனால்அனைத்து ரக பருத்திக்கும் நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வம் பருத்தி சாகுபடிக்கு அதிகரித்துள்ளது.காரிப் பருவம் மற்றும் வரும் ஆகஸ்டு மாதத்தில் துவங்கும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கும், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வேளாண்துறை வாயிலாக பருத்தி சாகுபடிக்கு ஊக்கமளிக்க வேண்டும்.இதனால் பருத்தி வரத்து அதிகரித்து நூற்பாலைகளின் தேவையில் நிலவும் பற்றாக்குறையை சிறிது சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.