என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைனில்"

    • ஆன்லைனில் ரூ.82 ஆயிரத்தை தொழிலாளி இழந்தார்
    • ரூ.1600 ரூபாய் முதலீடு செய்ய கேட்டுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் டிசிபிஎல் அபார்ட்மெண்டை சேர்ந்தவர் வசந்தவேல் (வயது 37). தொழிலாளியான இவருக்கு அமேசான் ஆன்லைன் இன்ஸ்வெண்ட்மெண்ட் என்ற பெயரில் வலைதள பதிவு ஒன்று வந்துள்ளது. அதனை அவர் திறந்து பார்த்துள்ளார். அப்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வாயிலாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் ரூ.1600 ரூபாய் முதலீடு செய்ய கேட்டுள்ளார்.

    வசந்தவேலும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பவே திரும்ப 2200 ரூபாயாக அவருக்கு கிடைத்துள்ளது. இதில் உற்சாகம் அடைந்த அவரிடம் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் கேட்டுக்கொண்டது போல 82 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்–டத்–தில் சுற்–றுலா சார்ந்த தொழில் புரி–வோர் இணை–ய–த–ளம் மூலம் பதிவு செய்ய வேண்–டும் என கட்–டா–ய–மாக்–கப்–பட்–டுள்–ளது.
    • இது–தொ–டர்–பாக கடந்த செப்–டம்–பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்–றுலா தினத்–தன்று சுற்–று–லாத்–துறை அமைச்–சர் மூலம் வழி–காட்டு நெறி–மு–றை–கள் வெளி–யி–டப்–பட்–டது.

    சேலம்:

    சேலம் மாவட்–டத்–தில் சுற்–றுலா சார்ந்த தொழில் புரி–வோர் இணை–ய–த–ளம் மூலம் பதிவு செய்ய வேண்–டும் என கட்–டா–ய–மாக்–கப்–பட்–டுள்–ளது. சுற்–று–லாத்–து–றை–யின் மூல–மாக பெட் அண்ட் பிரேக் பாஸ்ட் திட்–டம், ஹோம் ஸ்டே, சாகச சுற்–றுலா இயக்–கு–ப–வர்–கள், கேம்–பிங் இயக்–கு–ப–வர்–கள், கேர–வன் மூலம் சுற்–றுலா இயக்–கு–ப–வர்–கள், கேர–வன் பூங்கா இயக்–கு–ப–வர்–கள் உள்–ளிட்ட சுற்–றுலா சார்ந்த நிறு–வ–னங்–கள் அர–சாணை மற்–றும் சுற்–றுலா வழி–காட்டு நெறி–மு–றை–க–ளின்–படி பதிவு செய்–வது கட்–டா–ய–மாக்–கப்–பட்–டுள்–ளது.

    இது–தொ–டர்–பாக கடந்த செப்–டம்–பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்–றுலா தினத்–தன்று சுற்–று–லாத்–துறை அமைச்–சர் மூலம் வழி–காட்டு நெறி–மு–றை–கள் வெளி–யி–டப்–பட்–டது. எனவே, சேலம் மாவட்–டத்–தில் சுற்–றுலா சார்ந்த தொழில் புரி–வோர் அனை–வ–ரும் http://www/tntourismtors.com/ என்ற இணை–ய–த–ளத்–தில் மூல–மாக உரிய வழி–காட்டு நெறி–மு–றை–க–ளின்–படி அவ–சி–யம் பதிவு செய்–யு–மாறு தெரி–விக்–கப்–ப–டு–கிறது.

    மேலும், கூடு–தல் விவ–ரங்–க–ளுக்கு மாவட்ட சுற்–றுலா அலு–வ–லர், சுற்–றுலா அலு–வ–ல–கம், மாவட்ட கலெக்–டர் அலு–வ–லக வளா–கம், சேலம் என்ற முக–வ–ரி–யில் நேரில் வந்து கேட்டு பயன்–பெ–ற–லாம். இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்–டர் கார்–மே–கம் தெரிவித்து உள்ளார்.

    • 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    2023-2024-ஆம் கல்வி யாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போது

    மானது. விண்ணப்பிக்க வுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பித்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்ட

    ணம் மற்றும் ஆய்வுக்கட்ட ணம் RTGS, NEFT மூலம்

    செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவு களுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023. இதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறி

    வுரைகளை அறிந்துகொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ricsalem7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94990 55827 என்ற கைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார்.
    • காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார். அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

    அதன்பேரில் மதுரைக்குச் சென்று கார் விற்பனை நிறுவன உரிமை யாளர் சுதர்சன் என்பவரை சந்தித்துள்ளார். அவர் காட்டிய காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.

    அப்போது நடு வழியில் அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. இதுகுறித்து காரை விற்பனை செய்த வருக்கு தகவல் தெரி வித்தபோது, அவர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி காரை எடுத்துச் சென்று விட்டார். காரை வாங்கிய சேகரையும், அவருடன் இருந்த இருவரையும் நாமக்கல் செல்லுமாறும், காரை ரிப்பேர் செய்து, நாமக்கல்லில் கொண்டு வந்து கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனை நம்பி சேகரும் அவருடன் சென்றவர்களும் நாமக்கல் வந்துவிட்டனர்.

    காரை வாங்கிய சேகர் பலமுறை காரை விற்ற சுதர்சனை தொடர்பு கொண்ட போதிலும், அவர் காரை சரி செய்து திருப்பி வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த சேகர், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். கடந்த மாதம் விசாரணை முடிவுற்றிருந்த நிலையில், நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார்.

    அதில், பாதிக்கப்பட்ட சேகருக்கு அவர் செலுத்திய தொகை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்தை, 9 சதவீத வட்டி யுடனும், அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு ரூ. 1 லட்சமும், வழக்கின் செலவு தொகையாக ரூ.19 ஆயிரமும் காரை விற்பனை செய்த சுதர்சன் 4 வார காலத்துக்குள், சேகருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார்.
    • ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார். அப்போது, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தலைவர் கந்தசாமி தலைமையில், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், உபதலைவர் சின்னதம்பி , இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது பல இடங்களில் லாரிகள் இல்லாமலேயே ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர். எனவே ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
    • பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தி லுள்ள உணவு மற்றும் உறைவிட சுற்றுலாத்திட்டம் , சாகச சுற்றுலா இயக்கு பவர்கள், கூடார சுற்றுலா இயக்குபவர்கள் , கேரவேன் சுற்றுலா இயக்குபவர்கள், கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணைகள் மேற்குறிப்பிட்ட வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடு தல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.
    • வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ் நகர் அருகே உள்ள சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.

    எதிர்முனையில் இருந்த நபர், குறிப்பிட்ட லீங்கில் பணம் செலுத்திப்பூர்த்தி செய்தால், வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.

    ஆனால் அந்த நபர் கூறியபடி பணமும் வேலையும் கிடைக்கவிலலை. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகராஜ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஈரோட்டில் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் மிளகாவை மொத்த விலையில் வாங்குவதற்காக இணையதளம் உதவியை நாடியுள்ளார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த போன் நம்பருக்கு அந்த பெண் வியாபாரி போன் செய்துள்ளார்.

    அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் நிறுவனம் குஜராத்தில் உள்ளது என்றும் மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் வியாபாரி அவர்கள் கூறியபடி ஆயிரம் கிலோ பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் முன் தொகையாக ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-யை செலுத்தியுள்ளார்.

    அதன் பின்னர் அவர்கள் கூறியபடி அந்த பெண் வியாபாரிக்கு அவர்கள் பொருட்களை அனுப்பவில்லை.

    இது குறித்து அந்த பெண் வியாபாரிகள் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் - ஆப் என்று வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கை முதலில் முடக்கினர்.

    அதன் பின்னர் அவர் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தனர். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து மோசடியில் அவர் இழந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 பணத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த பெண் வியாபாரி நன்றி கூறி சென்றார்.

    ×