என் மலர்
நீங்கள் தேடியது "tag 237612"
- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது.
- பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி தீமித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஞாயிற்று சந்தைதோப்பு தேவி திரவுபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 3 -ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது .
மகாபாரத கதை பாடப்பெற்று நேற்று படுகளம் திரவுபதை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு விரதம் இருந்த பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி நூற்றுக்கானக்கன பக்தர்கள் தீமித்தனர். பின்பு அம்பாள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் , உபயதாரர்கள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.
- பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம், சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவ தலங்களில் 39-வது திவ்யதேசமான, குமுதவல்லி தாயார் சமேத அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது.
குமுதவள்ளி தாயார் அவதரித்த இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.
முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.
- பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரிக்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாள் திருவீதியுலா நடக்கிறது.
திருவையாறு:
தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் இன்று நவராத்திரி உற்சவ விழா தொடங்குகிறது.
இன்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 4 ந்தேதி வரையில் நடக்கும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் பிரகாரத்தில் 2 பக்கமும் கொலுக் காட்சி வைக்கப்பட்டுள்ளது.
இக்கொலுவை பக்தர்களும் குழந்தைகளும் கண்டு களித்து வழிபடுகிறார்கள்.
மேலும் 'தினமும் மாலையில் ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறதுவேத சாஸ்திரிகளின் வேதபாரா யணம், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாரா யணம் நடக்கிறது.
அம்மன் பிரகார உலா நடக்கிறது.
5 ஆம் நாள் 30 ந்தேதி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனையும் மாலையில் பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரி க்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாரித் திருவீதி உலா வருகிறது. 2 ந்தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.
கொலு மண்டபத்தில் ஆன்மீக சான்றோரின் நவராத்திரி சொற்பொழிவுகளும் இன்னிசைக் கலை நிழ்ச்சிகளும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.
- தாயாருடன் பெருமாள் வீதியுலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
- பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தோப்புதுறை அபீஷ்ட வரதராஜ பெரு மாள் கோவிலின் ஆண்டுப்பெருவிழா கொடி இறக்கம், விடையாற்றியுடன் நிறைவடைந்தது.
இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டு துவங்கியது. நாள்தோறும் உபயதாரர் சார்பில் பல்லாக்கு சேவை, கருட சேவை, அனுமந்த வாகனம், யானை, இந்திர விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.
இதில் ஏராளமான பக்த ர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
- முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
- பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோவிலில் 65-வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது. கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
முன்னதாக, காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருவிழா தொடங்கி அன்று பகல் முழுவதும் பல்வேறு இறை வழிபாடுகளுக்கு பின் குளுந்தாளம்மன் தேர் திருவிழாவும் விடிய விடிய பலகலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
தொடர்ந்து, பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மறலாளிகள், நிர்வாக குழுவினர்கள் உள்பட தேத்தாகுடி கிராமமக்கள் செய்திருந்தனர்.
விழாவில், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.
- திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர்.
- அக்னி வார்க்கப்பட்டு ஆகம விதிமுறைகள்படி சகல சடங்கு, சம்பிரதாயங்களுடன் விநாயகருக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் அருளக்கூடியவர்.
இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் பிரமோற்சவத்தில் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது உண்மை.
இந்த ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 22ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினசரி சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது 4ம்நாள் நிகழ்வாக காலை வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், 5ம் நாள் நிகழ்ச்சியாக ஓலை சப்பரத்தில் ஸ்சுவாமி வீதியுலா நடைபெற்றது.
பிரமேற்சவத்தின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி தெட்சணாமூர்த்திக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து அக்னி வார்க்கப்பட்டு ஆகம விதிமுறைகள்படி சகல சடங்கு, சம்பிரதாயங்களுடன் சுவாமிக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபத்தில் திருமணம் தள்ளிபோகும் பெண்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விநாயகரை வணங்கி, மலர்மாலையும், மஞ்சள் கயறு அணிந்து கொண்டும் திருமண பிரார்த்தனை செய்து கொண்டனர்.
திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவ ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.
- திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும்.
- இந்நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் தந்து அருளக்கூடியவர் இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் பிரமேற்சவத்தில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது உண்மை.
இக்கோயில் ஞானபுரத்தில் கர்க மகரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கிற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமான உன்னதபுரம் என்கிற மெலட்டூரில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மெலட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மெலட்டூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அய்யர், கணேச அய்யர், சிவராம அய்யர் ஆகியோரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு வருடந்தோறும் விநாயகர் சதுர்த்திவிழா 10 நாட்கள் பிரமோற்சவமாக நடந்து வருகிறது.
இந்த நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும்.
தவிர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7வது நாள் நடைபெறும் விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக அரிதான நிகழ்ச்சியாகும்.
அன்றைய தினம் காலையில் தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு சித்திபுத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும் இது தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்
இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து தரிசித்து பிரார்த்தனை செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4ம்நாள் காலை சுவாமி வெள்ளி பல்லக்கிலும், 5ம் நாள் ஓலை சப்பரத்திலும் வீதியுலா நடைபெற உள்ளது.
7ம் நிகழ்ச்சியாக 28ம்தேதி காலை 9.30 மணியளவில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவமும், 30ம்தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது.
- முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றுமுதல் நாள் முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம், அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.
- கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் திருக்கயிலாய காட்சி திருவிழா மற்றும் ஆடி தீர்த்தவாரி விழாவினை திருக்கைலாய ஸ்ரீகந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.
ரிஷப வாகன புறப்பாட்டில் தஞ்சாவூர் கரந்தை, பழைய திருவையாறு ரோடு வேதவல்லி அம்மை உடன்மர் நாக நாகேஸ்வரர் கோவில், அன்னகாமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கரந்தை செல்லியம்மன் கோயில், வடக்கு வாசல் வடபத்ரகாளி, கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.
இந்நிகழ்ச்சியில் சிதநந்தீஸ்வரர் சுவாமிகள் திருக்கோயில் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், துணைத் தலைவர் டாக்டர் பழனி குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன் ,அன்ன காமாட்சி அம்மன் நிர்வாக டிரஸ்ட் நாக நாரேஸ்வரர் வழிபாட்டு குழுவினர் தர்மரக்ஷண சமாதி உள்ளிகள், சமூக நல அமைப்பு, தஞ்சை பெருவுடையார் சிவகங்கை கூட்டம் ஆகிய அமைப்பினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ண்டனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
- பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பனங்குடியில் செல்வமகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஜூலை 28-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து 2-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. 3-ம் தேதி பனங்குடி சிவன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பாடு, அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக் காப்பு, உதிர்வாய் துடைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
- ஆடிப்பூர அம்மனுக்கு வளையலங்காரம் ஆராதனை மற்றும் வெள்ளிப்படிச் சட்டத்தில் வீதிஉலா நடந்தது.
- கயிலை வாத்திய இசை முழக்கங்களுடன் அம்மன்கோவில் வெளிப்பிர–காரத்தில் பக்தர்கள் ஏழுமுறை வலம் வந்து வழிபட்டார்கள்.
திருவையாறு:
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆடிப்பூர அம்மனுக்கு வளையலங்காரம் ஆராதனை மற்றும் வெள்ளிப்படிச் சட்டத்தில் வீதிஉலா நடந்தது. இரவு சப்த பிரதட்சணம் நடந்தது.
இதில் ஆடிப்பூர அம்மன் முன்னே வர, சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் திருமுறைகள் பாடியவாறும், வேத விற்பன்னர்கள் வேதபா ராயணம் பாடியவாறும். தவில், நாதஸ்வரவித்வா ன்களின் மேள தாள இசையுடனும், கயிலை வாத்திய இசை முழக்கங்க ளுடனும் பரதநாட்டியம், ஆன்மீக இன்னிசை பாடல்க ளுடனும் அம்மன்கோயில் வெளிப்பிர–காரத்தில் பக்தர்கள் ஏழுமுறை வலம் வந்து வழிபட்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.
- ஆடிப்பூர நாயகி ஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.
- திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்தவாரியும், வீதியுலாவும் நடைபெற்றது.
திருவையாறு:
தருமையா தீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளில் நேற்று பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடைபெற்றது.
10-ம் நாளான இன்று ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறம்வளர்த்த நாயகி உடனாகிய அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த அம்மன் ஆடிப்பூர நாயகி ஸ்ரீஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.இதையடுத்து திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்த வாரியும், திருவீதி உலாவும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்றிரவு சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் திருமுறைகள் பாடியவாறும், தவில், நாதஸ்வர இசையுடனும், கயிலை வாத்திய இசை முழக்குடனும், பரதநாட்டியக் கலை இசை நிகழ்ச்சியுடனும் அம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் ஏழு முறை சுற்றி வரும் சப்தப்பிரதட்சணம் நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.